அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் எது என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (அந்தக் கேள்வியை) மூன்று முறை கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள்.
அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோர்க்கு மாறுசெய்தல்" என்று கூறினார்கள். (முன்னர்) சாய்ந்திருந்த அவர்கள் (நிமிர்ந்து) அமர்ந்து, "அறிந்துகொள்ளுங்கள்! பொய்ப் பேச்சும் தான்" என்று கூறினார்கள்.
அவர்கள் அதைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார்கள். எந்தளவிற்கென்றால், "அவர் மௌனமாகியிருக்கக் கூடாதா?" என்று நான் (எனக்குள்) சொல்லும் அளவுக்கு (அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்).