இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

749ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا فُلَيْحٌ، قَالَ حَدَّثَنَا هِلاَلُ بْنُ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّى لَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ رَقَا الْمِنْبَرَ، فَأَشَارَ بِيَدَيْهِ قِبَلَ قِبْلَةِ الْمَسْجِدِ ثُمَّ قَالَ ‏ ‏ لَقَدْ رَأَيْتُ الآنَ مُنْذُ صَلَّيْتُ لَكُمُ الصَّلاَةَ الْجَنَّةَ وَالنَّارَ مُمَثَّلَتَيْنِ فِي قِبْلَةِ هَذَا الْجِدَارِ، فَلَمْ أَرَ كَالْيَوْمِ فِي الْخَيْرِ وَالشَّرِّ ‏ ‏ ثَلاَثًا‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பர் மீது ஏறினார்கள். பள்ளிவாசலின் கிப்லாவை நோக்கித் தமது இரு கைகளாலும் சைகை செய்தார்கள். பிறகு, "நான் உங்களுக்குத் தொழுகை தொழுவித்தபோது, இந்தச் சுவரின் திசையில் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டும் சித்தரிக்கப்பட்டிருப்பதை இப்போது கண்டேன். நன்மையிலும் தீமையிலும் இன்றைய நாளைப் போன்று நான் (வேறெதையும்) கண்டதில்லை" என்று கூறினார்கள். (இதை மூன்று முறை கூறினார்கள்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح