இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் (தமது நற்செயல்களைப் பிறர்) கேள்விப்பட வேண்டுமென (புகழுக்காக) விரும்புகிறாரோ, அல்லாஹ்வும் (அவரது உள்ளீடற்ற தன்மையை அல்லது இழிவை) பிறர் கேள்விப்படும்படிச் செய்வான். யார் (தமது நற்செயல்களைப் பிறர்) பார்க்க வேண்டுமென (புகழுக்காக) விரும்புகிறாரோ, அல்லாஹ்வும் (அவரது உள்ளீடற்ற தன்மையை அல்லது இழிவை) பிறர் பார்க்கும்படிச் செய்வான்."
ஜுன்துப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் (தம் நற்செயல்களைப் பிறர்) கேள்விப்படும்படிச் செய்கிறாரோ, அல்லாஹ்வும் அவரைப் பற்றி (அவரது இழிவைக்) கேள்விப்படும்படிச் செய்வான். மேலும் எவர் (பிறர்) பார்க்கும்படிச் செய்கிறாரோ, அல்லாஹ்வும் அவரை (அவரது கபடத்தைப்) பார்க்கும்படிச் செய்வான்."
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا عِيسَى بْنُ الْمُخْتَارِ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ مَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللَّهُ بِهِ وَمَنْ يُرَاءِ يُرَاءِ اللَّهُ بِهِ .
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் (தமது நற்செயல்களைப்) பிறர் கேட்க வேண்டுமென்பதற்காகச் செய்கிறாரோ, அல்லாஹ் அவரைப் பற்றி (மக்களுக்குக்) கேட்கும்படி செய்துவிடுவான் (அதாவது, அவரது உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்தி விடுவான்). யார் (தமது நற்செயல்களைப்) பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காகச் செய்கிறாரோ, அல்லாஹ் அவரைக் காண்பித்து விடுவான் (அதாவது, அவரது உள்நோக்கங்களையும் எண்ணங்களையும் மக்களுக்குத் தெரியப்படுத்தி விடுவான்).”
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ، عَنْ سُفْيَانَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَنْ يُرَاءِ يُرَاءِ اللَّهُ بِهِ وَمَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللَّهُ بِهِ .
ஜுன்துப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“யார் (தமது செயல்களை) பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்கிறாரோ, அல்லாஹ் அவனை (அவனது உண்மையான நோக்கங்களை) வெளிக்காட்டி விடுவான். மேலும், யார் (தமது செயல்களை) பிறர் கேட்க வேண்டும் என்பதற்காகச் செய்கிறாரோ, அல்லாஹ் அவனுடைய (உள்நோக்கத்தை) பிறர் கேட்கும்படி செய்துவிடுவான்.”
وعن جُندب بن عبد الله بن سفيان رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم : "من سمَّع سمَّع الله به، ومن يرائي الله يرائي به" ((متفق عليه)). ((رواه مسلم أيضًا من رواية ابن عباس رضي الله عنه)).
"سمَّع" بتشديد الميم، ومعناه: أظهر عمله للناس رياء " سمَّع الله به" أي فضحه يوم القيامة، ومعنى: " من راءى" أي: من أظهر للناس العمل الصالح ليعظم عندهم "راءى الله به" أي: أظهر سريرته على رءوس الخلائق.
ஜுன்துப் பின் அப்துல்லாஹ் பின் சுஃப்யான் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் (தம் நற்செயல்களைப் பற்றிப் பிறர்) கேள்விப்படச் செய்கிறாரோ, அல்லாஹ்வும் அவரைப் பற்றி (அவரது குறைகளை மறுமையில்) கேள்விப்படச் செய்வான். யார் (பிறருக்குக்) காட்டுவதற்காகச் செயல்படுகிறாரோ, அல்லாஹ்வும் அவரை (அவரது உள்ளக்கிடக்கையை மறுமையில் பிறருக்குக்) காட்டிக்கொடுத்து விடுவான்."