இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2863ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ ثَوْرٍ، عَنْ
أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِنَّ الْعَرَقَ يَوْمَ الْقِيَامَةِ
لَيَذْهَبُ فِي الأَرْضِ سَبْعِينَ بَاعًا وَإِنَّهُ لَيَبْلُغُ إِلَى أَفْوَاهِ النَّاسِ أَوْ إِلَى آذَانِهِمْ ‏ ‏ ‏.‏ يَشُكُّ
ثَوْرٌ أَيَّهُمَا قَالَ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் வியர்வையானது பூமியில் எழுபது முழம் (ஆழத்திற்குச்) செல்லும். மேலும் அது (மனிதர்களின்) வாய்கள் வரை அல்லது அவர்களின் காதுகள் வரை எட்டிவிடும்."

(இவ்விரண்டில்) எதை (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள் என்பதில் தவ்ர் சந்தேகிக்கிறார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح