அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனது ஹவ்ழ் (தடாகம்) ஒரு மாதப் பயணத் தொலைவுடையது. அதன் (நான்கு) மூலைகளும் சமமானவை. அதன் நீர் வெள்ளியை விட வெண்மையானது. அதன் நறுமணம் கஸ்தூரியை விடச் சிறந்தது. அதன் குவளைகள் வானத்து நட்சத்திரங்களைப் போன்றவை. அதிலிருந்து பருகுபவர் அதன் பிறகு ஒருபோதும் தாகமடைய மாட்டார்."
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக நான் ஹவ்ழ் (தடாகத்தின்) மீது இருப்பேன். என்னை வந்தடைவதற்கு முன்னதாகச் சில மனிதர்கள் (தடுத்து) எடுக்கப்படுவார்கள். அப்போது நான், 'என் இறைவா! (அவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் உம்மத்தைச் சேர்ந்தவர்கள்' என்று கூறுவேன். அதற்கு, 'உங்களுக்குப் பின்னால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களுக்குப் பின்னால் அவர்கள் தம் குதிகால்கள் மீது (மார்க்கத்தைவிட்டு) திரும்பிச் செல்பவர்களாகவே இருந்தார்கள்' என்று கூறப்படும்."
(அறிவிப்பாளர்) இப்னு அபீ முலைக்கா அவர்கள் (பின்வருமாறு) கூறுபவர்களாக இருந்தார்கள்:
"அல்லாஹும்ம இன்னா நஊது பிக்க அன் நர்ஜிஅ அலா அஃகாபினா அவ் அன் நுஃப்தன அன் தீனினா"
(பொருள்: இறைவா! நாங்கள் எங்கள் குதிகால்களின் மீது திரும்பிச் செல்வதிலிருந்தோ அல்லது எங்கள் மார்க்கத்தில் நாங்கள் குழப்பத்திற்குள்ளாக்கப்படுவதிலிருந்தோ உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்).