ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர், தாம் இறந்த பிறகு தம்முடைய அடிமைக்கு விடுதலை (வழங்கப்படும் என்று) அறிவித்தார். ஆனால் அவரிடம் அந்த (அடிமை)யைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இருக்கவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் (அந்த அடிமையை) விற்குமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் அவர் எழுநூறு அல்லது தொளாயிரம் (திர்ஹங்களுக்கு) விற்கப்பட்டார்.