இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1329ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ زَنَيَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا قَرِيبًا مِنْ مَوْضِعِ الْجَنَائِزِ عِنْدَ الْمَسْجِدِ‏.‏
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யூதர்கள், தங்களில் விபச்சாரம் புரிந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அவ்விருவருக்கும் (கல்லெறி தண்டனை வழங்குமாறு) நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆகவே, பள்ளிவாசலுக்கு அருகில் ஜனாஸா தொழுகை நடத்தும் இடத்திற்கு அருகே அவ்விருவரும் கல்லெறியப்பட்டார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح