அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: '(அல்லாஹ்வின் பாதையில் போராடும்) முஜாஹித்தின் உவமையாவது - அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர் யார் என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் - (தொடர்ந்து) நோன்பு நோற்று, கியாம் (இரவு வணக்கம்) தொழும் ஒருவரைப் போன்றதாகும். (தன் பாதையில் போராடும்) முஜாஹித்துக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொண்டான்; ஒன்று, அவனது உயிரைக் கைப்பற்றி அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்; அல்லது, அவன் பெற்ற நற்கூலி அல்லது போர்ச்செல்வங்களுடன் அவனைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டு வருவான்.'"