இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1877 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ،
عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَا
مِنْ أَحَدٍ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَأَنَّ لَهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَىْءٍ غَيْرُ الشَّهِيدِ
فَإِنَّهُ يَتَمَنَّى أَنْ يَرْجِعَ فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ ‏ ‏ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“சொர்க்கத்தில் நுழைந்த எவரும், உலகத்திலுள்ள அனைத்தும் தனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்பமாட்டார்; உயிர்த்தியாகியைத் (ஷஹீத்) தவிர! அவர் (தனக்குக் கிடைத்த) கண்ணியத்தைக் காண்பதனால், மீண்டும் உலகிற்குத் திரும்பி வந்து பத்து முறை கொல்லப்படுவதை விரும்புவார்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1311ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏"‏ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما على الأرض من شيء إلا الشهيد، يتمنى أن يرجع إلى الدنيا فيقتل عشر مرات لما يرى من الكرامة”
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சுவனத்தில் நுழையும் எவரும், இவ்வுலகில் உள்ள அனைத்தும் தமக்குக் கிடைத்தாலும் கூட, உலகிற்குத் திரும்பி வர விரும்பமாட்டார்; ஒரு ஷஹீதைத் (இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவரைத்) தவிர. அவர் (அங்கு) காணும் கண்ணியத்தின் காரணமாக, உலகிற்குத் திரும்பி வந்து பத்து முறை கொல்லப்பட வேண்டும் என்று விரும்புவார்.”