وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ أَنَسًا، أَخْبَرَهُ
أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ شَكَوَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
الْقَمْلَ فَرَخَّصَ لَهُمَا فِي قُمُصِ الْحَرِيرِ فِي غَزَاةٍ لَهُمَا .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்களும் ஸுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேன்கள் குறித்து முறையிட்டார்கள். அதனால், அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் பட்டுச் சட்டைகளை அணிந்துகொள்ள அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் அஸ்ஸுபைர் பின் அல்-அவ்வாம் (ரழி) அவர்களும் தாங்கள் பங்கெடுத்த ஒரு போரின்போது பேன் தொல்லையைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். எனவே, அவர்கள் (ஸல்) பட்டுச் சட்டைகளை அணிய அவர்களுக்கு அனுமதித்தார்கள் (ஏனெனில், பட்டு ஆடைகள் பேன்களை விரட்டவோ அல்லது அவை ஒட்டிக்கொள்வதைத் தடுக்கவோ உதவும்). அவர் (அனஸ் (ரழி)) கூறினார்கள்: "நான் அவர்கள் அவற்றை அணிந்திருப்பதைப் பார்த்தேன்."