சஃத் பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "நிச்சயமாக, நீ அல்லாஹ்வுடைய திருமுகத்தை நாடிச் செலவு செய்யும் எந்தச் செலவிற்கும் கூலி கொடுக்கப்படுவாய்; உன் மனைவியின் வாயில் நீ வைக்கும் ஒரு கவளம் உணவாக இருந்தாலும் சரியே (அதற்கும் கூலி உண்டு)."