وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم: أي الإسلام خير؟ قال: تطعم الطعام، وتقرأ السلام على من عرفت ومن لم تعرف . ((متفق عليه)).
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாத்தில் எந்தச் செயல் சிறந்தது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.