இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2661ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، سُلَيْمَانُ بْنُ دَاوُدَ وَأَفْهَمَنِي بَعْضَهُ أَحْمَدُ حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنِ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِنْهُ، قَالَ الزُّهْرِيُّ، وَكُلُّهُمْ حَدَّثَنِي طَائِفَةً مِنْ حَدِيثِهَا وَبَعْضُهُمْ أَوْعَى مِنْ بَعْضٍ، وَأَثْبَتُ لَهُ اقْتِصَاصًا، وَقَدْ وَعَيْتُ عَنْ كُلِّ وَاحِدٍ مِنْهُمُ الْحَدِيثَ الَّذِي حَدَّثَنِي عَنْ عَائِشَةَ، وَبَعْضُ حَدِيثِهِمْ يُصَدِّقُ بَعْضًا‏.‏ زَعَمُوا أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ سَفَرًا أَقْرَعَ بَيْنَ أَزْوَاجِهِ، فَأَيَّتُهُنَّ خَرَجَ سَهْمُهَا خَرَجَ بِهَا مَعَهُ، فَأَقْرَعَ بَيْنَنَا فِي غَزَاةٍ غَزَاهَا فَخَرَجَ سَهْمِي، فَخَرَجْتُ مَعَهُ بَعْدَ مَا أُنْزِلَ الْحِجَابُ، فَأَنَا أُحْمَلُ فِي هَوْدَجٍ وَأُنْزَلُ فِيهِ، فَسِرْنَا حَتَّى إِذَا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ غَزْوَتِهِ تِلْكَ، وَقَفَلَ وَدَنَوْنَا مِنَ الْمَدِينَةِ، آذَنَ لَيْلَةً بِالرَّحِيلِ، فَقُمْتُ حِينَ آذَنُوا بِالرَّحِيلِ، فَمَشَيْتُ حَتَّى جَاوَزْتُ الْجَيْشَ، فَلَمَّا قَضَيْتُ شَأْنِي أَقْبَلْتُ إِلَى الرَّحْلِ، فَلَمَسْتُ صَدْرِي، فَإِذَا عِقْدٌ لِي مِنْ جَزْعِ أَظْفَارٍ قَدِ انْقَطَعَ، فَرَجَعْتُ فَالْتَمَسْتُ عِقْدِي، فَحَبَسَنِي ابْتِغَاؤُهُ، فَأَقْبَلَ الَّذِينَ يَرْحَلُونَ لِي، فَاحْتَمَلُوا هَوْدَجِي فَرَحَلُوهُ عَلَى بَعِيرِي الَّذِي كُنْتُ أَرْكَبُ، وَهُمْ يَحْسِبُونَ أَنِّي فِيهِ، وَكَانَ النِّسَاءُ إِذْ ذَاكَ خِفَافًا لَمْ يَثْقُلْنَ وَلَمْ يَغْشَهُنَّ اللَّحْمُ، وَإِنَّمَا يَأْكُلْنَ الْعُلْقَةَ مِنَ الطَّعَامِ، فَلَمْ يَسْتَنْكِرِ الْقَوْمُ حِينَ رَفَعُوهُ ثِقَلَ الْهَوْدَجِ فَاحْتَمَلُوهُ وَكُنْتُ جَارِيَةً حَدِيثَةَ السِّنِّ، فَبَعَثُوا الْجَمَلَ وَسَارُوا، فَوَجَدْتُ عِقْدِي بَعْدَ مَا اسْتَمَرَّ الْجَيْشُ، فَجِئْتُ مَنْزِلَهُمْ وَلَيْسَ فِيهِ أَحَدٌ، فَأَمَمْتُ مَنْزِلِي الَّذِي كُنْتُ بِهِ فَظَنَنْتُ أَنَّهُمْ سَيَفْقِدُونِي فَيَرْجِعُونَ إِلَىَّ، فَبَيْنَا أَنَا جَالِسَةٌ غَلَبَتْنِي عَيْنَاىَ فَنِمْتُ، وَكَانَ صَفْوَانُ بْنُ الْمُعَطَّلِ السُّلَمِيُّ ثُمَّ الذَّكْوَانِيُّ مِنْ وَرَاءِ الْجَيْشِ، فَأَصْبَحَ عِنْدَ مَنْزِلِي فَرَأَى سَوَادَ إِنْسَانٍ نَائِمٍ فَأَتَانِي، وَكَانَ يَرَانِي قَبْلَ الْحِجَابِ فَاسْتَيْقَظْتُ بِاسْتِرْجَاعِهِ حِينَ أَنَاخَ رَاحِلَتَهُ، فَوَطِئَ يَدَهَا فَرَكِبْتُهَا فَانْطَلَقَ يَقُودُ بِي الرَّاحِلَةَ، حَتَّى أَتَيْنَا الْجَيْشَ بَعْدَ مَا نَزَلُوا مُعَرِّسِينَ فِي نَحْرِ الظَّهِيرَةِ، فَهَلَكَ مَنْ هَلَكَ، وَكَانَ الَّذِي تَوَلَّى الإِفْكَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ، فَقَدِمْنَا الْمَدِينَةَ فَاشْتَكَيْتُ بِهَا شَهْرًا، يُفِيضُونَ مِنْ قَوْلِ أَصْحَابِ الإِفْكِ، وَيَرِيبُنِي فِي وَجَعِي أَنِّي لاَ أَرَى مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم اللُّطْفَ الَّذِي كُنْتُ أَرَى مِنْهُ حِينَ أَمْرَضُ، إِنَّمَا يَدْخُلُ فَيُسَلِّمُ ثُمَّ يَقُولُ ‏"‏ كَيْفَ تِيكُمْ ‏"‏‏.‏ لاَ أَشْعُرُ بِشَىْءٍ مِنْ ذَلِكَ حَتَّى نَقَهْتُ، فَخَرَجْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ قِبَلَ الْمَنَاصِعِ مُتَبَرَّزُنَا، لاَ نَخْرُجُ إِلاَّ لَيْلاً إِلَى لَيْلٍ، وَذَلِكَ قَبْلَ أَنْ نَتَّخِذَ الْكُنُفَ قَرِيبًا مِنْ بُيُوتِنَا، وَأَمْرُنَا أَمْرُ الْعَرَبِ الأُوَلِ فِي الْبَرِّيَّةِ أَوْ فِي التَّنَزُّهِ، فَأَقْبَلْتُ أَنَا وَأُمُّ مِسْطَحٍ بِنْتُ أَبِي رُهْمٍ نَمْشِي، فَعَثُرَتْ فِي مِرْطِهَا فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ، فَقُلْتُ لَهَا بِئْسَ مَا قُلْتِ، أَتَسُبِّينَ رَجُلاً شَهِدَ بَدْرًا فَقَالَتْ يَا هَنْتَاهْ أَلَمْ تَسْمَعِي مَا قَالُوا فَأَخْبَرَتْنِي بِقَوْلِ أَهْلِ الإِفْكِ، فَازْدَدْتُ مَرَضًا إِلَى مَرَضِي، فَلَمَّا رَجَعْتُ إِلَى بَيْتِي دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمَ فَقَالَ ‏"‏ كَيْفَ تِيكُمْ ‏"‏‏.‏ فَقُلْتُ ائْذَنْ لِي إِلَى أَبَوَىَّ‏.‏ قَالَتْ وَأَنَا حِينَئِذٍ أُرِيدُ أَنْ أَسْتَيْقِنَ الْخَبَرَ مِنْ قِبَلِهِمَا، فَأَذِنَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُ أَبَوَىَّ فَقُلْتُ لأُمِّي مَا يَتَحَدَّثُ بِهِ النَّاسُ فَقَالَتْ يَا بُنَيَّةُ هَوِّنِي عَلَى نَفْسِكِ الشَّأْنَ، فَوَاللَّهِ لَقَلَّمَا كَانَتِ امْرَأَةٌ قَطُّ وَضِيئَةٌ عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا وَلَهَا ضَرَائِرُ إِلاَّ أَكْثَرْنَ عَلَيْهَا‏.‏ فَقُلْتُ سُبْحَانَ اللَّهِ وَلَقَدْ يَتَحَدَّثُ النَّاسُ بِهَذَا قَالَتْ فَبِتُّ تِلْكَ اللَّيْلَةَ حَتَّى أَصْبَحْتُ لاَ يَرْقَأُ لِي دَمْعٌ وَلاَ أَكْتَحِلُ بِنَوْمٍ، ثُمَّ أَصْبَحْتُ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَأُسَامَةَ بْنَ زَيْدٍ حِينَ اسْتَلْبَثَ الْوَحْىُ، يَسْتَشِيرُهُمَا فِي فِرَاقِ أَهْلِهِ، فَأَمَّا أُسَامَةُ فَأَشَارَ عَلَيْهِ بِالَّذِي يَعْلَمُ فِي نَفْسِهِ مِنَ الْوُدِّ لَهُمْ، فَقَالَ أُسَامَةُ أَهْلُكَ يَا رَسُولَ اللَّهِ وَلاَ نَعْلَمُ وَاللَّهِ إِلاَّ خَيْرًا، وَأَمَّا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ يُضَيِّقِ اللَّهُ عَلَيْكَ وَالنِّسَاءُ سِوَاهَا كَثِيرٌ، وَسَلِ الْجَارِيَةَ تَصْدُقْكَ‏.‏ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَرِيرَةَ فَقَالَ ‏"‏ يَا بَرِيرَةُ هَلْ رَأَيْتِ فِيهَا شَيْئًا يَرِيبُكِ ‏"‏‏.‏ فَقَالَتْ بَرِيرَةُ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، إِنْ رَأَيْتُ مِنْهَا أَمْرًا أَغْمِصُهُ عَلَيْهَا أَكْثَرَ مِنْ أَنَّهَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ تَنَامُ عَنِ الْعَجِينَ فَتَأْتِي الدَّاجِنُ فَتَأْكُلُهُ‏.‏ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ يَوْمِهِ، فَاسْتَعْذَرَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ ابْنِ سَلُولَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ يَعْذِرُنِي مِنْ رَجُلٍ بَلَغَنِي أَذَاهُ فِي أَهْلِي، فَوَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي إِلاَّ خَيْرًا، وَقَدْ ذَكَرُوا رَجُلاً مَا عَلِمْتُ عَلَيْهِ إِلاَّ خَيْرًا، وَمَا كَانَ يَدْخُلُ عَلَى أَهْلِي إِلاَّ مَعِي ‏"‏‏.‏ فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَنَا وَاللَّهِ أَعْذِرُكَ مِنْهُ، إِنْ كَانَ مِنَ الأَوْسِ ضَرَبْنَا عُنُقَهُ، وَإِنْ كَانَ مِنْ إِخْوَانِنَا مِنَ الْخَزْرَجِ أَمَرْتَنَا فَفَعَلْنَا فِيهِ أَمْرَكَ‏.‏ فَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ وَهُوَ سَيِّدُ الْخَزْرَجِ، وَكَانَ قَبْلَ ذَلِكَ رَجُلاً صَالِحًا وَلَكِنِ احْتَمَلَتْهُ الْحَمِيَّةُ فَقَالَ كَذَبْتَ لَعَمْرُ اللَّهِ، لاَ تَقْتُلُهُ وَلاَ تَقْدِرُ عَلَى ذَلِكَ، فَقَامَ أُسَيْدُ بْنُ الْحُضَيْرِ فَقَالَ كَذَبْتَ لَعَمْرُ اللَّهِ، وَاللَّهِ لَنَقْتُلَنَّهُ، فَإِنَّكَ مُنَافِقٌ تُجَادِلُ عَنِ الْمُنَافِقِينَ‏.‏ فَثَارَ الْحَيَّانِ الأَوْسُ وَالْخَزْرَجُ حَتَّى هَمُّوا، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ فَنَزَلَ فَخَفَّضَهُمْ حَتَّى سَكَتُوا وَسَكَتَ، وَبَكَيْتُ يَوْمِي لاَ يَرْقَأُ لِي دَمْعٌ وَلاَ أَكْتَحِلُ بِنَوْمٍ، فَأَصْبَحَ عِنْدِي أَبَوَاىَ، قَدْ بَكَيْتُ لَيْلَتَيْنِ وَيَوْمًا حَتَّى أَظُنُّ أَنَّ الْبُكَاءَ فَالِقٌ كَبِدِي ـ قَالَتْ ـ فَبَيْنَا هُمَا جَالِسَانِ عِنْدِي وَأَنَا أَبْكِي إِذِ اسْتَأْذَنَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ فَأَذِنْتُ لَهَا، فَجَلَسَتْ تَبْكِي مَعِي، فَبَيْنَا نَحْنُ كَذَلِكَ إِذْ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَجَلَسَ، وَلَمْ يَجْلِسْ عِنْدِي مِنْ يَوْمِ قِيلَ فِيَّ مَا قِيلَ قَبْلَهَا، وَقَدْ مَكُثَ شَهْرًا لاَ يُوحَى إِلَيْهِ فِي شَأْنِي شَىْءٌ ـ قَالَتْ ـ فَتَشَهَّدَ ثُمَّ قَالَ ‏"‏ يَا عَائِشَةُ فَإِنَّهُ بَلَغَنِي عَنْكِ كَذَا وَكَذَا، فَإِنْ كُنْتِ بَرِيئَةً فَسَيُبَرِّئُكِ اللَّهُ، وَإِنْ كُنْتِ أَلْمَمْتِ فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ، فَإِنَّ الْعَبْدَ إِذَا اعْتَرَفَ بِذَنْبِهِ ثُمَّ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ ‏"‏‏.‏ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَقَالَتَهُ قَلَصَ دَمْعِي حَتَّى مَا أُحِسُّ مِنْهُ قَطْرَةً وَقُلْتُ لأَبِي أَجِبْ عَنِّي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ قَالَ وَاللَّهِ مَا أَدْرِي مَا أَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَقُلْتُ لأُمِّي أَجِيبِي عَنِّي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِيمَا قَالَ‏.‏ قَالَتْ وَاللَّهِ مَا أَدْرِي مَا أَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ قَالَتْ وَأَنَا جَارِيَةٌ حَدِيثَةُ السِّنِّ لاَ أَقْرَأُ كَثِيرًا مِنَ الْقُرْآنِ فَقُلْتُ إِنِّي وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ أَنَّكُمْ سَمِعْتُمْ مَا يَتَحَدَّثُ بِهِ النَّاسُ، وَوَقَرَ فِي أَنْفُسِكُمْ وَصَدَّقْتُمْ بِهِ، وَلَئِنْ قُلْتُ لَكُمْ إِنِّي بَرِيئَةٌ‏.‏ وَاللَّهُ يَعْلَمُ إِنِّي لَبَرِيئَةٌ لاَ تُصَدِّقُونِي بِذَلِكَ، وَلَئِنِ اعْتَرَفْتُ لَكُمْ بِأَمْرٍ، وَاللَّهُ يَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ لَتُصَدِّقُنِّي وَاللَّهِ مَا أَجِدُ لِي وَلَكُمْ مَثَلاً إِلاَّ أَبَا يُوسُفَ إِذْ قَالَ ‏{‏فَصَبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ‏}‏ ثُمَّ تَحَوَّلْتُ عَلَى فِرَاشِي، وَأَنَا أَرْجُو أَنْ يُبَرِّئَنِي اللَّهُ، وَلَكِنْ وَاللَّهِ مَا ظَنَنْتُ أَنْ يُنْزِلَ فِي شَأْنِي وَحْيًا، وَلأَنَا أَحْقَرُ فِي نَفْسِي مِنْ أَنْ يُتَكَلَّمَ بِالْقُرْآنِ فِي أَمْرِي، وَلَكِنِّي كُنْتُ أَرْجُو أَنْ يَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّوْمِ رُؤْيَا يُبَرِّئُنِي اللَّهُ، فَوَاللَّهِ مَا رَامَ مَجْلِسَهُ وَلاَ خَرَجَ أَحَدٌ مِنْ أَهْلِ الْبَيْتِ حَتَّى أُنْزِلَ عَلَيْهِ، فَأَخَذَهُ مَا كَانَ يَأْخُذُهُ مِنَ الْبُرَحَاءِ، حَتَّى إِنَّهُ لَيَتَحَدَّرُ مِنْهُ مِثْلُ الْجُمَانِ مِنَ الْعَرَقِ فِي يَوْمٍ شَاتٍ، فَلَمَّا سُرِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يَضْحَكُ، فَكَانَ أَوَّلَ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا أَنْ قَالَ لِي ‏"‏ يَا عَائِشَةُ، احْمَدِي اللَّهَ فَقَدْ بَرَّأَكِ اللَّهُ ‏"‏‏.‏ فَقَالَتْ لِي أُمِّي قُومِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَقُلْتُ لاَ وَاللَّهِ، لاَ أَقُومُ إِلَيْهِ، وَلاَ أَحْمَدُ إِلاَّ اللَّهَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ‏}‏ الآيَاتِ، فَلَمَّا أَنْزَلَ اللَّهُ هَذَا فِي بَرَاءَتِي قَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ـ رضى الله عنه ـ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحِ بْنِ أُثَاثَةَ لِقَرَابَتِهِ مِنْهُ وَاللَّهِ لاَ أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا بَعْدَ مَا قَالَ لِعَائِشَةَ‏.‏ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏وَلاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏غَفُورٌ رَحِيمٌ‏}‏ فَقَالَ أَبُو بَكْرٍ بَلَى، وَاللَّهِ إِنِّي لأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي، فَرَجَعَ إِلَى مِسْطَحٍ الَّذِي كَانَ يُجْرِي عَلَيْهِ‏.‏ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ عَنْ أَمْرِي، فَقَالَ ‏"‏ يَا زَيْنَبُ، مَا عَلِمْتِ مَا رَأَيْتِ ‏"‏‏.‏ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَحْمِي سَمْعِي وَبَصَرِي، وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا إِلاَّ خَيْرًا، قَالَتْ وَهْىَ الَّتِي كَانَتْ تُسَامِينِي، فَعَصَمَهَا اللَّهُ بِالْوَرَعِ‏.‏ قَالَ وَحَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، مِثْلَهُ‏.‏ قَالَ وَحَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ، مِثْلَهُ‏.‏
நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (அவதூறு பேசியவர்கள்) அவதூறாகப் பேசியபோது, அல்லாஹ் அவரை அதிலிருந்து விடுவித்தான். (நபித்தோழர்கள்) ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட நாடினால், தம் மனைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். அவர்களில் யாருடைய பெயர் (சீட்டில்) வருகிறதோ, அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள். (அவ்வாறே) அவர் மேற்கொண்ட ஒரு போரின்போது எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கினார்கள். அதில் என் பெயர் வந்தது. பர்தாவுடைய சட்டம் அருளப்பட்ட பின்னர் நான் அவர்களுடன் (அப்பயணத்தில்) சென்றேன். நான் எனது ஹவ்தஜில் (ஒட்டகச் சேணத்தில் அமைக்கப்பட்ட மூடிய சிவிகையில்) தூக்கி வைக்கப்படுபவளாகவும், அதிலேயே கீழே இறக்கி வைக்கப்படுபவளாகவும் இருந்தேன். நாங்கள் சென்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது, நாங்கள் மதீனாவை நெருங்கினோம். ஓர் இரவில் பயணம் செய்யுமாறு (புறப்பட) அறிவித்தார்கள். அவர்கள் புறப்பட அறிவித்தபோது நான் எழுந்து, படையைக் கடந்து (இயற்கை உபாதைக்காக) சென்றேன். எனது தேவையை முடித்துக்கொண்டு எனது வாகனத் திற்குத் திரும்பினேன். அப்போது என் மார்பைத் தொட்டுப் பார்த்தேன். (யமன் நாட்டிலுள்ள) ழிஃபார் நகரத்து மணிகளாலான என் கழுத்து மாலை அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. உடனே நான் திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடினேன். அதைத் தேடியது (நான் திரும்ப) தாமதமாக்கிவிட்டது. எனக்காக (பயண ஏற்பாடுகளைச்) செய்பவர்கள் வந்து, எனது ஹவ்தஜைத் தூக்கி, நான் சவாரி செய்யும் ஒட்டகத்தின் மீது வைத்தார்கள். நான் அதனுள் இருக்கிறேன் என்றே அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் பெண்கள் மெலிந்தவர்களாகவும், உடல் பருமன் அற்றவர்களாகவும் இருந்தனர். சதை போடும் அளவுக்கு அவர்கள் உண்பதில்லை; மிகக் குறைந்த உணவையே உண்பார்கள். எனவே, அந்த மக்கள் ஹவ்தஜைத் தூக்கி மேலே வைத்தபோது, அதன் எடையில் மாற்றத்தை உணரவில்லை. மேலும் நான் வயது குறைந்த இளம்பெண்ணாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை எழுப்பி(க் கூட்டிக்கொண்டு) சென்றுவிட்டார்கள். படை சென்றுவிட்ட பிறகு நான் எனது மாலையைக் கண்டெடுத்தேன். நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அங்கே எவரும் இல்லை. நான் தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்றேன். என்னைக் காணாதபோது அவர்கள் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருந்தபோது என் கண்கள் மேலிடவே நான் உறங்கிவிட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்-சுலமீ அத்-தக்வானீ என்பவர் படைக்குப் பின்னால் வருபவராக இருந்தார். அவர் காலையில் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதரின் உருவத்தைப் பார்த்தார். பர்தா சட்டம் வருவதற்கு முன்பு அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதன் முன் காலை மிதித்தபோது, அவர் "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; மேலும் நாம் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்) என்று கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். (உடனே எனது முகத்திரை ஆடையால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.) நான் அதில் ஏறிக் கொண்டேன். அவர் ஒட்டகத்தை ஓட்டிக்கொண்டு நடந்தார். நண்பகல் நேரத்தில் படைவீரர்கள் (ஓய்வுக்காகத்) தங்கியிருந்த இடத்தில் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். (இந்த அவதூறு விஷயத்தில்) யாரெல்லாம் அழிய வேண்டுமென்று இருந்ததோ அவர்கள் அழிந்தார்கள். இந்த அவதூறு விஷயத்தில் பெரும்பங்கு வகித்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் ஆவான். பிறகு நாங்கள் மதீனா வந்து சேர்ந்தோம். நான் மதீனா வந்ததிலிருந்து ஒரு மாதம் நோய்வாய்ப்பட்டிருந்தேன். அவதூறு பேசுவோரின் சொற்களில் மக்கள் மூழ்கிக்கிடந்தனர். ஆனால், அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. என்றாலும், நான் நோயுற்றிருந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் வழக்கமாக நான் காணும் அந்த அன்பு என் நோயின்போது அவர்களிடம் எனக்குக் கிடைக்காதது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் உள்ளே வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, "இவர் (இப்போது) எப்படி இருக்கிறார்?" என்று (மட்டும்) கேட்பார்கள். இது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால், நான் (நோயிலிருந்து) குணமடையும் வரை அந்தத் தீயச் செய்தியை அறியவில்லை. நானும் மிஸ்தஹ் உடைய தாயாரும் (இயற்கைத் தேவைக்காக) "மனாஸி" என்ற இடத்திற்குச் சென்றோம். அது நாங்கள் இயற்கைத் தேவைக்காக ஒதுங்கும் இடமாகும். இரவு நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் நாங்கள் வெளியே செல்லமாட்டோம். வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பறைகளை நாங்கள் அமைத்துக்கொள்வதற்கு முன்னால் (நடந்த நிகழ்வு) இதுவாகும். வெட்டவெளியில் சென்று மலஜலம் கழிக்கும் முந்தைய அரபிகளின் வழக்கத்தையே நாங்களும் கொண்டிருந்தோம். நானும், அபூ ருஹ்ம் என்பவரின் மகளான மிஸ்தஹ் உடைய தாயாரும் நடந்து சென்றோம். அவர் தனது ஆடைத் தடுக்கி (விழுந்து), "மிஸ்தஹ் நாசமாகட்டும்!" என்று கூறினார். நான் அவரிடம், "மிக மோசமான வார்த்தையைச் சொல்லிவிட்டீர்கள்; பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அடிப் பெண்ணே! அவர் சொன்னதை நீ கேட்கவில்லையா?" என்று கேட்டார். "அவர் என்ன சொன்னார்?" என்று நான் கேட்டேன். அவதூறு பேசுபவர்கள் சொன்னதை அவர் எனக்குத் தெரிவித்தார். (அதைக் கேட்டதும்) என் நோய் இன்னும் அதிகமானது. நான் என் வீட்டிற்குத் திரும்பியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து சலாம் கூறிவிட்டு, "இவர் (இப்போது) எப்படி இருக்கிறார்?" என்று கேட்டார்கள். நான், "என் பெற்றோரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?" என்று கேட்டேன். (அப்போது) என் பெற்றோரிடமிருந்து செய்தியைத் தீர்க்கமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள். நான் என் பெற்றோரிடம் வந்து என் தாயாரிடம், "அம்மா! மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தாயார், "என் அருமை மகளே! இந்த விஷயத்தை நீ பெரிதுபடுத்தாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு பெண்ணை அவளுடைய கணவன் நேசித்து, அவளுக்குச் சக்களத்திகளும் இருந்து, அவர்கள் அவள் மீது (இப்படிப்பட்ட குறைகளை) அதிகப்படுத்தாமல் இருந்ததில்லை" என்று ஆறுதல் கூறினார்கள். நான், "சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்); மக்களா இப்படிப் பேசிக்கொள்கிறார்கள்?" என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு விடியும் வரை அழுதுகொண்டே இருந்தேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலையில் என் பெற்றோர் என்னுடன் இருந்தனர். இரண்டு இரவுகளும் ஒரு பகலும் நான் அழுதுகொண்டிருந்தேன். அழுகை என் கல்லீரலைப் பிளந்துவிடுமோ என்று நான் எண்ணினேன். என் பெற்றோர் என் அருகில் அமர்ந்திருக்க நான் அழுதுகொண்டிருந்தபோது, அன்சாரிகளில் ஒரு பெண் என்னிடம் வர அனுமதி கேட்டார். நான் அவருக்கு அனுமதி அளித்தேன். அவர் வந்து என்னுடன் அமர்ந்து அழுதார். நாங்கள் இந்த நிலையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து (அருகில்) அமர்ந்தார்கள். என்னைப் பற்றிச் சொல்லப்பட்ட அந்தச் சொல் சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகில் அமர்ந்ததில்லை. ஒரு மாதமாக என் விஷயத்தில் அவர்களுக்கு எந்த வஹியும் (இறைச்செய்தியும்) அருளப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் அமர்ந்ததும் "கலிமா ஷஹாதத்" மொழிந்தார்கள். பிறகு, "ஆயிஷாவே! உன்னைப் பற்றி இன்னின்னவாறு எனக்குச் செய்தி எட்டியது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் உன்னைத் தூய்மைப்படுத்துவான். நீ ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேள்; அவனிடம் மீளு. ஏனெனில் அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, திருந்தி (அல்லாஹ்விடம்) மீளும்போது, அல்லாஹ்வும் அவனை மன்னிக்கிறான்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது எனது கண்ணீர் நின்றுவிட்டது. அதிலிருந்து ஒரு துளிகூட (வருவதாய்) நான் உணரவில்லை. நான் என் தந்தையிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு என் சார்பாகப் பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். பிறகு என் தாயாரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என் சார்பாகப் பதில் சொல்லுங்கள்" என்று சொன்னேன். அவர்களும், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். நான் வயது குறைந்த இளம்பெண்ணாக இருந்தேன்; குர்ஆனை அதிகம் ஓதத் தெரியாதவள். நான் சொன்னேன்: "அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் பேசிக்கொண்டதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்கள்; அது உங்கள் உள்ளங்களில் பதிந்துவிட்டது; அதை உண்மை என நம்பிவிட்டீர்கள் என்பதை நான் அறிவேன். 'நான் நிரபராதி' என்று உங்களிடம் சொன்னால் - நான் நிரபராதி என்று அல்லாஹ் அறிவான் - இருந்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். (நான் செய்யாத) ஒரு குற்றத்தை நானாக ஒப்புக்கொண்டால் - நான் நிரபராதி என்று அல்லாஹ் அறிவான் - நீங்கள் என்னை நம்புவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (யகூப் (அலை)) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். (அவர் கூறியது போல்): **'ஃபஸப்ருன் ஜமீல், வல்லாஹுல் முஸ்தஆனு அலா மா தஸிஃபூன்'** ('ஆகவே, (எனக்கு) அழகான பொறுமையே சிறந்தது; நீங்கள் கூறுவதற்கு எதிராக அல்லாஹ்விடமே உதவி தேடப்படுகிறது.') (திருக்குர்ஆன் 12:18)" பிறகு நான் எனது படுக்கையில் (மறுபுறம்) திரும்பிக்கொண்டேன். அல்லாஹ் நான் குற்றமற்றவள் என்பதை அறிவிப்பான் என்று அப்போதே நான் நம்பினேன். ஆனால் அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் ஓதப்படக்கூடிய வஹி (வேத வசனம்) இறங்கும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. என் விஷயம் பற்றி அல்லாஹ் குர்ஆனில் பேசுவதற்குரிய தகுதியைவிட நான் அற்பமானவள் என்றே கருதினேன். மாறாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறக்கத்தில் ஏதேனும் கனவு கண்டு, அதன் மூலம் அல்லாஹ் என்னை இப்பழியிலிருந்து நீக்குவான் என்றே ஆதரவு வைத்திருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழவும் இல்லை; வீட்டார் எவரும் வெளியேறவும் இல்லை. அதற்குள் அல்லாஹ், தனது தூதர் மீது வஹியை இறக்கி அருளினான். வஹி அருளப்படும்போது ஏற்படும் வேதனை அவர்களுக்கு ஏற்பட்டது. அது கடுங்குளிர்காலமாக இருந்தும், அவர் மேலிருந்து வியர்வை முத்துக்களாய் வழிந்தோடியது. (அந்த அளவுக்கு இறைச்செய்தி கனமானதாக இருந்தது.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அந்த நிலை விலகியபோது அவர்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிய முதல் வார்த்தையாக, "ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்வீராக! அல்லாஹ் உம்மை (இப்பழியிலிருந்து) தூய்மைப்படுத்திவிட்டான்" என்று கூறினார்கள். என் தாயார் என்னிடம், "அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நான், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் எழுந்து செல்லமாட்டேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் புகழவும் மாட்டேன்" என்று கூறினேன். (அப்போது) அல்லாஹ், **"இன்னல்லதீன ஜாஊ பில்இஃப்கி உஸ்பத்துன் மின்கும்..."** (நிச்சயமாக உங்கள் மீது அவதூறு கூறியவர்கள் உங்களில் ஒரு கூட்டத்தாரே...) என்று தொடங்கும் (பல) வசனங்களை அருளினான். அல்லாஹ் நான் நிரபராதி என (இந்த) வசனங்களை இறக்கியபோது, அபூபக்கர் (ரழி) அவர்கள் - மிஸ்தஹ் இப்னு உதாஸா தனக்கு உறவினர் என்பதாலும், (அவர் ஏழை என்பதாலும்) அவருக்குச் செலவு செய்து வந்தார்கள் - "அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைப் பற்றி மிஸ்தஹ் இத்தகைய சொல்லைச் சொன்ன பிறகு அவருக்காக நான் இனி ஒருபோதும் செலவு செய்யமாட்டேன்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கி அருளினான்: **"உங்களில் செல்வம் மற்றும் வசதி படைத்தவர்கள், உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்கள் (பிழைகளை) மன்னித்து, (குறைகளைப்) பொருட்படுத்தாமல் இருக்கட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பெருங்கருணையாளனும் ஆவான்."** (திருக்குர்ஆன் 24:22) உடனே அபூபக்கர் (ரழி) அவர்கள், "ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, மிஸ்தஹுக்குச் செலவு செய்துவந்ததை மீண்டும் தொடர்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் விஷயத்தில்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களிடமும் விசாரித்தார்கள். "ஸைனபே! என்ன அறிவீர்? என்ன கண்டீர்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! என் செவியையும் என் பார்வையையும் நான் (பத்திரமாகப்) பாதுகாத்துக் கொள்கிறேன். அவரைப் பற்றி நல்லதைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை" என்று கூறினார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஸைனப் (ரழி) அவர்கள் தாம் எனக்குப் போட்டியாக இருந்தார்கள். ஆயினும், இறையச்சத்தின் காரணமாக அல்லாஹ் அவரை (பொய் சொல்வதிலிருந்து) பாதுகாத்தான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2731, 2732ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ أَخْبَرَنِي الزُّهْرِيُّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ، يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا حَدِيثَ صَاحِبِهِ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَمَنَ الْحُدَيْبِيَةِ، حَتَّى كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ بِالْغَمِيمِ فِي خَيْلٍ لِقُرَيْشٍ طَلِيعَةً فَخُذُوا ذَاتَ الْيَمِينِ ‏"‏‏.‏ فَوَاللَّهِ مَا شَعَرَ بِهِمْ خَالِدٌ حَتَّى إِذَا هُمْ بِقَتَرَةِ الْجَيْشِ، فَانْطَلَقَ يَرْكُضُ نَذِيرًا لِقُرَيْشٍ، وَسَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى إِذَا كَانَ بِالثَّنِيَّةِ الَّتِي يُهْبَطُ عَلَيْهِمْ مِنْهَا، بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ‏.‏ فَقَالَ النَّاسُ حَلْ حَلْ‏.‏ فَأَلَحَّتْ، فَقَالُوا خَلأَتِ الْقَصْوَاءُ، خَلأَتِ الْقَصْوَاءُ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ مَا خَلأَتِ الْقَصْوَاءُ، وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ، وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الْفِيلِ، ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلاَّ أَعْطَيْتُهُمْ إِيَّاهَا ‏"‏‏.‏ ثُمَّ زَجَرَهَا فَوَثَبَتْ، قَالَ فَعَدَلَ عَنْهُمْ حَتَّى نَزَلَ بِأَقْصَى الْحُدَيْبِيَةِ، عَلَى ثَمَدٍ قَلِيلِ الْمَاءِ يَتَبَرَّضُهُ النَّاسُ تَبَرُّضًا، فَلَمْ يُلَبِّثْهُ النَّاسُ حَتَّى نَزَحُوهُ، وَشُكِيَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْعَطَشُ، فَانْتَزَعَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ، ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهُ فِيهِ، فَوَاللَّهِ مَا زَالَ يَجِيشُ لَهُمْ بِالرِّيِّ حَتَّى صَدَرُوا عَنْهُ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ، إِذْ جَاءَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ الْخُزَاعِيُّ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ مِنْ خُزَاعَةَ، وَكَانُوا عَيْبَةَ نُصْحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ تِهَامَةَ، فَقَالَ إِنِّي تَرَكْتُ كَعْبَ بْنَ لُؤَىٍّ وَعَامِرَ بْنَ لُؤَىٍّ نَزَلُوا أَعْدَادَ مِيَاهِ الْحُدَيْبِيَةِ، وَمَعَهُمُ الْعُوذُ الْمَطَافِيلُ، وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ الْبَيْتِ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّا لَمْ نَجِئْ لِقِتَالِ أَحَدٍ، وَلَكِنَّا جِئْنَا مُعْتَمِرِينَ، وَإِنَّ قُرَيْشًا قَدْ نَهِكَتْهُمُ الْحَرْبُ، وَأَضَرَّتْ بِهِمْ، فَإِنْ شَاءُوا مَادَدْتُهُمْ مُدَّةً، وَيُخَلُّوا بَيْنِي وَبَيْنَ النَّاسِ، فَإِنْ أَظْهَرْ فَإِنْ شَاءُوا أَنْ يَدْخُلُوا فِيمَا دَخَلَ فِيهِ النَّاسُ فَعَلُوا، وَإِلاَّ فَقَدْ جَمُّوا، وَإِنْ هُمْ أَبَوْا فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لأُقَاتِلَنَّهُمْ عَلَى أَمْرِي هَذَا حَتَّى تَنْفَرِدَ سَالِفَتِي، وَلَيُنْفِذَنَّ اللَّهُ أَمْرَهُ ‏"‏‏.‏ فَقَالَ بُدَيْلٌ سَأُبَلِّغُهُمْ مَا تَقُولُ‏.‏ قَالَ فَانْطَلَقَ حَتَّى أَتَى قُرَيْشًا قَالَ إِنَّا قَدْ جِئْنَاكُمْ مِنْ هَذَا الرَّجُلِ، وَسَمِعْنَاهُ يَقُولُ قَوْلاً، فَإِنْ شِئْتُمْ أَنْ نَعْرِضَهُ عَلَيْكُمْ فَعَلْنَا، فَقَالَ سُفَهَاؤُهُمْ لاَ حَاجَةَ لَنَا أَنْ تُخْبِرَنَا عَنْهُ بِشَىْءٍ‏.‏ وَقَالَ ذَوُو الرَّأْىِ مِنْهُمْ هَاتِ مَا سَمِعْتَهُ يَقُولُ‏.‏ قَالَ سَمِعْتُهُ يَقُولُ كَذَا وَكَذَا، فَحَدَّثَهُمْ بِمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏.‏ فَقَامَ عُرْوَةُ بْنُ مَسْعُودٍ فَقَالَ أَىْ قَوْمِ أَلَسْتُمْ بِالْوَالِدِ قَالُوا بَلَى‏.‏ قَالَ أَوَلَسْتُ بِالْوَلَدِ قَالُوا بَلَى‏.‏ قَالَ فَهَلْ تَتَّهِمُونِي‏.‏ قَالُوا لاَ‏.‏ قَالَ أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنِّي اسْتَنْفَرْتُ أَهْلَ عُكَاظٍ، فَلَمَّا بَلَّحُوا عَلَىَّ جِئْتُكُمْ بِأَهْلِي وَوَلَدِي وَمَنْ أَطَاعَنِي قَالُوا بَلَى‏.‏ قَالَ فَإِنَّ هَذَا قَدْ عَرَضَ لَكُمْ خُطَّةَ رُشْدٍ، اقْبَلُوهَا وَدَعُونِي آتِهِ‏.‏ قَالُوا ائْتِهِ‏.‏ فَأَتَاهُ فَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَحْوًا مِنْ قَوْلِهِ لِبُدَيْلٍ، فَقَالَ عُرْوَةُ عِنْدَ ذَلِكَ أَىْ مُحَمَّدُ، أَرَأَيْتَ إِنِ اسْتَأْصَلْتَ أَمْرَ قَوْمِكَ هَلْ سَمِعْتَ بِأَحَدٍ مِنَ الْعَرَبِ اجْتَاحَ أَهْلَهُ قَبْلَكَ وَإِنْ تَكُنِ الأُخْرَى، فَإِنِّي وَاللَّهِ لأَرَى وُجُوهًا، وَإِنِّي لأَرَى أَوْشَابًا مِنَ النَّاسِ خَلِيقًا أَنْ يَفِرُّوا وَيَدَعُوكَ‏.‏ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ امْصُصْ بَظْرَ اللاَّتِ، أَنَحْنُ نَفِرُّ عَنْهُ وَنَدَعُهُ فَقَالَ مَنْ ذَا قَالُوا أَبُو بَكْرٍ‏.‏ قَالَ أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ يَدٌ كَانَتْ لَكَ عِنْدِي لَمْ أَجْزِكَ بِهَا لأَجَبْتُكَ‏.‏ قَالَ وَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَكُلَّمَا تَكَلَّمَ أَخَذَ بِلِحْيَتِهِ، وَالْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ قَائِمٌ عَلَى رَأْسِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَهُ السَّيْفُ وَعَلَيْهِ الْمِغْفَرُ، فَكُلَّمَا أَهْوَى عُرْوَةُ بِيَدِهِ إِلَى لِحْيَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم ضَرَبَ يَدَهُ بِنَعْلِ السَّيْفِ، وَقَالَ لَهُ أَخِّرْ يَدَكَ عَنْ لِحْيَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَرَفَعَ عُرْوَةُ رَأْسَهُ فَقَالَ مَنْ هَذَا قَالُوا الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ‏.‏ فَقَالَ أَىْ غُدَرُ، أَلَسْتُ أَسْعَى فِي غَدْرَتِكَ وَكَانَ الْمُغِيرَةُ صَحِبَ قَوْمًا فِي الْجَاهِلِيَّةِ، فَقَتَلَهُمْ، وَأَخَذَ أَمْوَالَهُمْ، ثُمَّ جَاءَ فَأَسْلَمَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَمَّا الإِسْلاَمَ فَأَقْبَلُ، وَأَمَّا الْمَالَ فَلَسْتُ مِنْهُ فِي شَىْءٍ ‏"‏‏.‏ ثُمَّ إِنَّ عُرْوَةَ جَعَلَ يَرْمُقُ أَصْحَابَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِعَيْنَيْهِ‏.‏ قَالَ فَوَاللَّهِ مَا تَنَخَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نُخَامَةً إِلاَّ وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ، وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ، وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ، وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ، وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ، فَرَجَعَ عُرْوَةُ إِلَى أَصْحَابِهِ، فَقَالَ أَىْ قَوْمِ، وَاللَّهِ لَقَدْ وَفَدْتُ عَلَى الْمُلُوكِ، وَوَفَدْتُ عَلَى قَيْصَرَ وَكِسْرَى وَالنَّجَاشِيِّ وَاللَّهِ إِنْ رَأَيْتُ مَلِكًا قَطُّ، يُعَظِّمُهُ أَصْحَابُهُ مَا يُعَظِّمُ أَصْحَابُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مُحَمَّدًا، وَاللَّهِ إِنْ تَنَخَّمَ نُخَامَةً إِلاَّ وَقَعَتْ فِي كَفِّ رَجُلٍ مِنْهُمْ، فَدَلَكَ بِهَا وَجْهَهُ وَجِلْدَهُ، وَإِذَا أَمَرَهُمُ ابْتَدَرُوا أَمْرَهُ وَإِذَا تَوَضَّأَ كَادُوا يَقْتَتِلُونَ عَلَى وَضُوئِهِ، وَإِذَا تَكَلَّمَ خَفَضُوا أَصْوَاتَهُمْ عِنْدَهُ، وَمَا يُحِدُّونَ إِلَيْهِ النَّظَرَ تَعْظِيمًا لَهُ، وَإِنَّهُ قَدْ عَرَضَ عَلَيْكُمْ خُطَّةَ رُشْدٍ، فَاقْبَلُوهَا‏.‏ فَقَالَ رَجُلٌ مِنْ بَنِي كِنَانَةَ دَعُونِي آتِهِ‏.‏ فَقَالُوا ائْتِهِ‏.‏ فَلَمَّا أَشْرَفَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَصْحَابِهِ، قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ هَذَا فُلاَنٌ، وَهْوَ مِنْ قَوْمٍ يُعَظِّمُونَ الْبُدْنَ فَابْعَثُوهَا لَهُ ‏"‏‏.‏ فَبُعِثَتْ لَهُ وَاسْتَقْبَلَهُ النَّاسُ يُلَبُّونَ، فَلَمَّا رَأَى ذَلِكَ قَالَ سُبْحَانَ اللَّهِ مَا يَنْبَغِي لِهَؤُلاَءِ أَنْ يُصَدُّوا عَنِ الْبَيْتِ، فَلَمَّا رَجَعَ إِلَى أَصْحَابِهِ قَالَ رَأَيْتُ الْبُدْنَ قَدْ قُلِّدَتْ وَأُشْعِرَتْ، فَمَا أَرَى أَنْ يُصَدُّوا عَنِ الْبَيْتِ‏.‏ فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ مِكْرَزُ بْنُ حَفْصٍ‏.‏ فَقَالَ دَعُونِي آتِهِ‏.‏ فَقَالُوا ائْتِهِ‏.‏ فَلَمَّا أَشْرَفَ عَلَيْهِمْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ هَذَا مِكْرَزٌ وَهْوَ رَجُلٌ فَاجِرٌ ‏"‏‏.‏ فَجَعَلَ يُكَلِّمُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَبَيْنَمَا هُوَ يُكَلِّمُهُ إِذْ جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو‏.‏ قَالَ مَعْمَرٌ فَأَخْبَرَنِي أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ، أَنَّهُ لَمَّا جَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لَقَدْ سَهُلَ لَكُمْ مِنْ أَمْرِكُمْ ‏"‏‏.‏ قَالَ مَعْمَرٌ قَالَ الزُّهْرِيُّ فِي حَدِيثِهِ فَجَاءَ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ هَاتِ، اكْتُبْ بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابًا، فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْكَاتِبَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏"‏‏.‏ قَالَ سُهَيْلٌ أَمَّا الرَّحْمَنُ فَوَاللَّهِ مَا أَدْرِي مَا هُوَ وَلَكِنِ اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ‏.‏ كَمَا كُنْتَ تَكْتُبُ‏.‏ فَقَالَ الْمُسْلِمُونَ وَاللَّهِ لاَ نَكْتُبُهَا إِلاَّ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ اكْتُبْ بِاسْمِكَ اللَّهُمَّ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏"‏‏.‏ فَقَالَ سُهَيْلٌ وَاللَّهِ لَوْ كُنَّا نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ مَا صَدَدْنَاكَ عَنِ الْبَيْتِ وَلاَ قَاتَلْنَاكَ، وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَاللَّهِ إِنِّي لَرَسُولُ اللَّهِ وَإِنْ كَذَّبْتُمُونِي‏.‏ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏"‏‏.‏ قَالَ الزُّهْرِيُّ وَذَلِكَ لِقَوْلِهِ ‏"‏ لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلاَّ أَعْطَيْتُهُمْ إِيَّاهَا ‏"‏‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عَلَى أَنْ تُخَلُّوا بَيْنَنَا وَبَيْنَ الْبَيْتِ فَنَطُوفَ بِهِ ‏"‏‏.‏ فَقَالَ سُهَيْلٌ وَاللَّهِ لاَ تَتَحَدَّثُ الْعَرَبُ أَنَّا أُخِذْنَا ضُغْطَةً وَلَكِنْ ذَلِكَ مِنَ الْعَامِ الْمُقْبِلِ فَكَتَبَ‏.‏ فَقَالَ سُهَيْلٌ وَعَلَى أَنَّهُ لاَ يَأْتِيكَ مِنَّا رَجُلٌ، وَإِنْ كَانَ عَلَى دِينِكَ، إِلاَّ رَدَدْتَهُ إِلَيْنَا‏.‏ قَالَ الْمُسْلِمُونَ سُبْحَانَ اللَّهِ كَيْفَ يُرَدُّ إِلَى الْمُشْرِكِينَ وَقَدْ جَاءَ مُسْلِمًا فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ دَخَلَ أَبُو جَنْدَلِ بْنُ سُهَيْلِ بْنِ عَمْرٍو يَرْسُفُ فِي قُيُودِهِ، وَقَدْ خَرَجَ مِنْ أَسْفَلِ مَكَّةَ، حَتَّى رَمَى بِنَفْسِهِ بَيْنَ أَظْهُرِ الْمُسْلِمِينَ‏.‏ فَقَالَ سُهَيْلٌ هَذَا يَا مُحَمَّدُ أَوَّلُ مَا أُقَاضِيكَ عَلَيْهِ أَنْ تَرُدَّهُ إِلَىَّ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّا لَمْ نَقْضِ الْكِتَابَ بَعْدُ ‏"‏‏.‏ قَالَ فَوَاللَّهِ إِذًا لَمْ أُصَالِحْكَ عَلَى شَىْءٍ أَبَدًا‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ فَأَجِزْهُ لِي ‏"‏‏.‏ قَالَ مَا أَنَا بِمُجِيزِهِ لَكَ‏.‏ قَالَ ‏"‏ بَلَى، فَافْعَلْ ‏"‏‏.‏ قَالَ مَا أَنَا بِفَاعِلٍ‏.‏ قَالَ مِكْرَزٌ بَلْ قَدْ أَجَزْنَاهُ لَكَ‏.‏ قَالَ أَبُو جَنْدَلٍ أَىْ مَعْشَرَ الْمُسْلِمِينَ، أُرَدُّ إِلَى الْمُشْرِكِينَ وَقَدْ جِئْتُ مُسْلِمًا أَلاَ تَرَوْنَ مَا قَدْ لَقِيتُ وَكَانَ قَدْ عُذِّبَ عَذَابًا شَدِيدًا فِي اللَّهِ‏.‏ قَالَ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَتَيْتُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ أَلَسْتَ نَبِيَّ اللَّهِ حَقًّا قَالَ ‏"‏ بَلَى ‏"‏‏.‏ قُلْتُ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَعَدُوُّنَا عَلَى الْبَاطِلِ قَالَ ‏"‏ بَلَى ‏"‏‏.‏ قُلْتُ فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا قَالَ ‏"‏ إِنِّي رَسُولُ اللَّهِ، وَلَسْتُ أَعْصِيهِ وَهْوَ نَاصِرِي ‏"‏‏.‏ قُلْتُ أَوَلَيْسَ كُنْتَ تُحَدِّثُنَا أَنَّا سَنَأْتِي الْبَيْتَ فَنَطُوفُ بِهِ قَالَ ‏"‏ بَلَى، فَأَخْبَرْتُكَ أَنَّا نَأْتِيهِ الْعَامَ ‏"‏‏.‏ قَالَ قُلْتُ لاَ‏.‏ قَالَ ‏"‏ فَإِنَّكَ آتِيهِ وَمُطَّوِّفٌ بِهِ ‏"‏‏.‏ قَالَ فَأَتَيْتُ أَبَا بَكْرٍ فَقُلْتُ يَا أَبَا بَكْرٍ، أَلَيْسَ هَذَا نَبِيَّ اللَّهِ حَقًّا قَالَ بَلَى‏.‏ قُلْتُ أَلَسْنَا عَلَى الْحَقِّ وَعَدُوُّنَا عَلَى الْبَاطِلِ قَالَ بَلَى‏.‏ قُلْتُ فَلِمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا إِذًا قَالَ أَيُّهَا الرَّجُلُ، إِنَّهُ لَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَيْسَ يَعْصِي رَبَّهُ وَهْوَ نَاصِرُهُ، فَاسْتَمْسِكْ بِغَرْزِهِ، فَوَاللَّهِ إِنَّهُ عَلَى الْحَقِّ‏.‏ قُلْتُ أَلَيْسَ كَانَ يُحَدِّثُنَا أَنَّا سَنَأْتِي الْبَيْتَ وَنَطُوفُ بِهِ قَالَ بَلَى، أَفَأَخْبَرَكَ أَنَّكَ تَأْتِيهِ الْعَامَ قُلْتُ لاَ‏.‏ قَالَ فَإِنَّكَ آتِيهِ وَمُطَّوِّفٌ بِهِ‏.‏ قَالَ الزُّهْرِيِّ قَالَ عُمَرُ فَعَمِلْتُ لِذَلِكَ أَعْمَالاً‏.‏ قَالَ فَلَمَّا فَرَغَ مِنْ قَضِيَّةِ الْكِتَابِ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ ‏"‏ قُومُوا فَانْحَرُوا، ثُمَّ احْلِقُوا ‏"‏‏.‏ قَالَ فَوَاللَّهِ مَا قَامَ مِنْهُمْ رَجُلٌ حَتَّى قَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ، فَلَمَّا لَمْ يَقُمْ مِنْهُمْ أَحَدٌ دَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ، فَذَكَرَ لَهَا مَا لَقِيَ مِنَ النَّاسِ‏.‏ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا نَبِيَّ اللَّهِ، أَتُحِبُّ ذَلِكَ اخْرُجْ ثُمَّ لاَ تُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ كَلِمَةً حَتَّى تَنْحَرَ بُدْنَكَ، وَتَدْعُوَ حَالِقَكَ فَيَحْلِقَكَ‏.‏ فَخَرَجَ فَلَمْ يُكَلِّمْ أَحَدًا مِنْهُمْ، حَتَّى فَعَلَ ذَلِكَ نَحَرَ بُدْنَهُ، وَدَعَا حَالِقَهُ فَحَلَقَهُ‏.‏ فَلَمَّا رَأَوْا ذَلِكَ، قَامُوا فَنَحَرُوا، وَجَعَلَ بَعْضُهُمْ يَحْلِقُ بَعْضًا، حَتَّى كَادَ بَعْضُهُمْ يَقْتُلُ بَعْضًا غَمًّا، ثُمَّ جَاءَهُ نِسْوَةٌ مُؤْمِنَاتٌ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ‏}‏ حَتَّى بَلَغَ ‏{‏بِعِصَمِ الْكَوَافِرِ‏}‏ فَطَلَّقَ عُمَرُ يَوْمَئِذٍ امْرَأَتَيْنِ كَانَتَا لَهُ فِي الشِّرْكِ، فَتَزَوَّجَ إِحْدَاهُمَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، وَالأُخْرَى صَفْوَانُ بْنُ أُمَيَّةَ، ثُمَّ رَجَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَى الْمَدِينَةِ، فَجَاءَهُ أَبُو بَصِيرٍ ـ رَجُلٌ مِنْ قُرَيْشٍ ـ وَهْوَ مُسْلِمٌ فَأَرْسَلُوا فِي طَلَبِهِ رَجُلَيْنِ، فَقَالُوا الْعَهْدَ الَّذِي جَعَلْتَ لَنَا‏.‏ فَدَفَعَهُ إِلَى الرَّجُلَيْنِ، فَخَرَجَا بِهِ حَتَّى بَلَغَا ذَا الْحُلَيْفَةِ، فَنَزَلُوا يَأْكُلُونَ مِنْ تَمْرٍ لَهُمْ، فَقَالَ أَبُو بَصِيرٍ لأَحَدِ الرَّجُلَيْنِ وَاللَّهِ إِنِّي لأَرَى سَيْفَكَ هَذَا يَا فُلاَنُ جَيِّدًا‏.‏ فَاسْتَلَّهُ الآخَرُ فَقَالَ أَجَلْ، وَاللَّهِ إِنَّهُ لَجَيِّدٌ، لَقَدْ جَرَّبْتُ بِهِ ثُمَّ جَرَّبْتُ‏.‏ فَقَالَ أَبُو بَصِيرٍ أَرِنِي أَنْظُرْ إِلَيْهِ، فَأَمْكَنَهُ مِنْهُ، فَضَرَبَهُ حَتَّى بَرَدَ، وَفَرَّ الآخَرُ، حَتَّى أَتَى الْمَدِينَةَ، فَدَخَلَ الْمَسْجِدَ يَعْدُو‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ رَآهُ ‏"‏ لَقَدْ رَأَى هَذَا ذُعْرًا ‏"‏‏.‏ فَلَمَّا انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قُتِلَ وَاللَّهِ صَاحِبِي وَإِنِّي لَمَقْتُولٌ، فَجَاءَ أَبُو بَصِيرٍ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ، قَدْ وَاللَّهِ أَوْفَى اللَّهُ ذِمَّتَكَ، قَدْ رَدَدْتَنِي إِلَيْهِمْ ثُمَّ أَنْجَانِي اللَّهُ مِنْهُمْ‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ وَيْلُ أُمِّهِ مِسْعَرَ حَرْبٍ، لَوْ كَانَ لَهُ أَحَدٌ ‏"‏‏.‏ فَلَمَّا سَمِعَ ذَلِكَ عَرَفَ أَنَّهُ سَيَرُدُّهُ إِلَيْهِمْ، فَخَرَجَ حَتَّى أَتَى سِيفَ الْبَحْرِ‏.‏ قَالَ وَيَنْفَلِتُ مِنْهُمْ أَبُو جَنْدَلِ بْنُ سُهَيْلٍ، فَلَحِقَ بِأَبِي بَصِيرٍ، فَجَعَلَ لاَ يَخْرُجُ مِنْ قُرَيْشٍ رَجُلٌ قَدْ أَسْلَمَ إِلاَّ لَحِقَ بِأَبِي بَصِيرٍ، حَتَّى اجْتَمَعَتْ مِنْهُمْ عِصَابَةٌ، فَوَاللَّهِ مَا يَسْمَعُونَ بِعِيرٍ خَرَجَتْ لِقُرَيْشٍ إِلَى الشَّأْمِ إِلاَّ اعْتَرَضُوا لَهَا، فَقَتَلُوهُمْ، وَأَخَذُوا أَمْوَالَهُمْ، فَأَرْسَلَتْ قُرَيْشٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تُنَاشِدُهُ بِاللَّهِ وَالرَّحِمِ لَمَّا أَرْسَلَ، فَمَنْ أَتَاهُ فَهْوَ آمِنٌ، فَأَرْسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْهِمْ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏{‏وَهُوَ الَّذِي كَفَّ أَيْدِيَهُمْ عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْ بَعْدِ أَنْ أَظْفَرَكُمْ عَلَيْهِمْ‏}‏ حَتَّى بَلَغَ ‏{‏الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ‏}‏ وَكَانَتْ حَمِيَّتُهُمْ أَنَّهُمْ لَمْ يُقِرُّوا أَنَّهُ نَبِيُّ اللَّهِ، وَلَمْ يُقِرُّوا بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، وَحَالُوا بَيْنَهُمْ وَبَيْنَ الْبَيْتِ‏.‏
அல்-மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மற்றும் மர்வான் ஆகியோர் அறிவிக்கிறார்கள்: (இவ்விருவரின் அறிவிப்பும் மற்றவரின் அறிவிப்பை மெய்ப்பிக்கிறது).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் காலத்தில் (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்கள் வழியில் சிறிது தூரம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக காலித் பின் அல்-வலீத், குரைஷிகளின் குதிரைப்படையின் முன்னணிப் பிரிவுடன் 'அல்-கமீம்' என்னுமிடத்தில் இருக்கிறார். எனவே நீங்கள் வலதுபுறமாகச் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, காலித் அவர்களை (முஸ்லிம்களை) அவர்களது படையின் புழுதி பறக்கச் சென்றடையும் வரை உணரவில்லை. பிறகு அவர் (காலித்) குரைஷிகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காகத் தனது குதிரையை விரட்டிச் சென்றார்.

நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து சென்றார்கள். (மக்காவாசிகளுக்கு) இறங்கிச் செல்லக்கூடிய கனவாய் பகுதியை அவர்கள் அடைந்தபோது, அவர்களின் ஒட்டகம் மண்டியிட்டது. மக்கள் "ஹல், ஹல்" (எழும்பு! எழும்பு!) என்று அதட்டினர். ஆனால் அது (எழாமல்) அடம்பிடித்தது. மக்கள், "கஸ்வா (ஒட்டகம்) முரண்டு பிடிக்கிறது! கஸ்வா முரண்டு பிடிக்கிறது!" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா முரண்டு பிடிக்கவில்லை; அது அதன் குணமும் இல்லை. மாறாக, (அப்ராஹாவின்) யானையைத் தடுத்தவனே இதனையும் தடுத்துவிட்டான்" என்று கூறினார்கள். பிறகு, "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்கள் என்னிடம் எந்தத் திட்டத்தைக் கேட்டாலும், அதை நான் அவர்களுக்கு வழங்குவேன்" என்று கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தை அதட்ட, அது துள்ளி எழுந்தது. பிறகு அவர்கள் (குரைஷிகளின் பாதையைத் தவிர்த்து) மாறிச் சென்று, ஹுதைபிய்யாவின் ஒதுக்குப்புறத்தில், தண்ணீர் குறைவாக இருந்த ஒரு நீர்நிலைக்கு அருகில் தங்கினார்கள். மக்கள் அதிலிருந்து சிறுகச் சிறுகத் தண்ணீரை எடுத்தனர். சிறிது நேரத்திலேயே மக்கள் அதிலிருந்த நீரை வற்றச் செய்துவிட்டனர். பின்னர் தாகத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். நபி (ஸல்) அவர்கள் தங்கள் அம்பறாத்தூணியிலிருந்து ஒரு அம்பை எடுத்து, அதை அந்த நீர்நிலையில் ஊன்றுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் (தாகம் தணிய) நீர் அருந்தி அங்கிருந்து திரும்பும் வரை தண்ணீர் கொப்புளித்துக்கொண்டு இருந்தது.

அவர்கள் அந்நிலையில் இருந்தபோது, புதைல் பின் வரகா அல்குஸாஈ என்பவர் குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒரு குழுவினருடன் வந்தார். அவர்கள் திஹாமா வாசிகளிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நம்பிக்கையான ஆலோசகர்களாகத் திகழ்ந்தனர். அவர் (புதைல்), "நான் கஅப் பின் லுஅய் மற்றும் ஆமிர் பின் லுஅய் குலத்தாரை, ஹுதைபிய்யாவின் நீர்நிலைகளுக்கு அருகில் இறங்கியிருக்க விட்டு வருகிறேன். அவர்களுடன் பால் தரும் ஒட்டகங்களும் குட்டிகளும் (பெண்கள் மற்றும் குழந்தைகளும்) உள்ளன. அவர்கள் உங்களுடன் போரிடுவார்கள்; இறையில்லத்தை (கஅபாவை) நீங்கள் நெருங்க விடாமல் தடுப்பார்கள்" என்று கூறினார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, உம்ரா செய்வதற்காகவே வந்துள்ளோம். நிச்சயமாக போர் குரைஷிகளை பலவீனப்படுத்திவிட்டது; அவர்களுக்குத் தீங்கிழைத்துவிட்டது. அவர்கள் விரும்பினால், அவர்களுடன் நான் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தம் செய்துகொள்கிறேன்; அவர்களுக்கும் (எனக்கும்) மக்களுக்கும் இடையில் (குறுக்கிடாமல்) அவர்கள் வழிவிட வேண்டும். நான் (மற்றவர்களுடன் போரிட்டு) வெற்றி பெற்றால், மக்கள் நுழையும் மார்க்கத்தில் அவர்களும் விரும்பினால் நுழையலாம். இல்லையெனில், (போரின்றி) அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். அவர்கள் (ஒப்பந்தத்தை) மறுத்தால், என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! எனது தலை துண்டிக்கப்படும் வரை இக்காரியத்திற்காக நான் அவர்களுடன் போரிடுவேன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவேற்றியே தீருவான்" என்று கூறினார்கள்.

புதைல், "நீங்கள் கூறுவதை நான் அவர்களுக்குத் தெரிவிப்பேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டு குரைஷிகளிடம் வந்தார். "நாங்கள் அந்த மனிதரிடமிருந்து (நபியிடமிருந்து) வருகிறோம். அவர் ஒரு விஷயத்தைச் சொல்லக் கேட்டோம். அதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அவர்களிலிருந்த அறிவீனர்கள், "அவரைப் பற்றி எதையும் நீ எங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை" என்றனர். அவர்களிலிருந்த அறிவுடையோர், "நீர் கேட்டதைச் சொல்லும்" என்றனர். அவர், "அவர் (நபி (ஸல்)) இன்னின்னவாறு சொல்லக் கேட்டேன்" என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தார்.

அப்போது உர்வா பின் மஸ்ஊத் எழுந்து, "என் சமூகத்தாரே! நீங்கள் (எனக்குத்) தந்தை(யின் ஸ்தானத்தில்) இல்லையா?" என்று கேட்டார். அவர்கள் "ஆம்" என்றனர். "நான் (உங்கள்) பிள்ளை இல்லையா?" என்று கேட்டார். அவர்கள் "ஆம்" என்றனர். "என்னை நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?" என்று கேட்டார். அவர்கள் "இல்லை" என்றனர். "உக்காஸ்வாசிகளிடம் நான் உதவி கோரியதையும், அவர்கள் மறுத்தபோது, என் குடும்பத்தார், என் பிள்ளைகள் மற்றும் எனக்குக் கட்டுப்பட்டவர்களுடன் நான் உங்களிடம் வந்ததையும் நீங்கள் அறியவில்லையா?" என்று கேட்டார். அவர்கள் "ஆம்" என்றனர். அவர், "இதோ இவர் (நபி) உங்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்; என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்று கூறினார். அவர்கள் "அவரிடம் செல்லும்" என்றனர்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசினார். நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் கூறியதைப் போன்றே இவரிடமும் கூறினார்கள். அப்போது உர்வா, "முஹம்மதே! உங்கள் சமூகத்தை நீங்களே அழித்துவிடுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? உங்களுக்கு முன்பு அரபுகளில் யாரேனும் தன் குடும்பத்தையே அடியோடு அழித்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை மறுவிதமாக நடந்தால் (நீங்கள் தோற்றால்), அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (உங்களுக்கு உதவக்கூடிய) கண்ணியமான முகங்களை நான் இங்கு காணவில்லை. மாறாக, உங்களை விட்டுவிட்டு ஓடிவிடக்கூடிய பலதரப்பட்ட மக்களையே காண்கிறேன்" என்று கூறினார்.

அப்போது அபூபக்ர் (ரலி), "அல்-லாத் (சிலையின்) மர்ம உறுப்பைச் சப்பு! நாங்கள் அவரை விட்டு ஓடுவோமா? அவரைத் தனியே விட்டுவிடுவோமா?" என்று (கடிந்து) கூறினார். உர்வா, "யார் இது?" என்று கேட்டார். மக்கள், "அபூபக்ர்" என்றனர். உர்வா, "என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! உமக்கு நான் செய்ய வேண்டிய கைம்மாறு ஒன்று பாக்கியில்லையென்றால், உமக்கு நான் (தக்க) பதிலளித்திருப்பேன்" என்றார்.

பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் பேசலானார். அவர் பேசும்போது நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிப்பார். முகீரா பின் ஷுஅபா (ரலி) தலையில் இரும்புக் கவசமும் வாளுமாக நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் நின்றுகொண்டிருந்தார். உர்வா நபி (ஸல்) அவர்களின் தாடியைத் தொடுவதற்குத் தனது கையை நீட்டும்போதெல்லாம், முகீரா (ரலி) தனது வாளின் கைப்பிடியால் அவரது கையைத் தட்டி, "அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து உனது கையை எடு" என்று கூறுவார். உர்வா தலையை உயர்த்தி, "யார் இவர்?" என்று கேட்டார். மக்கள், "முகீரா பின் ஷுஅபா" என்றனர். உர்வா, "மோசக்காரனே! உனது மோசடிக்கு (நஷ்டஈடு கொடுத்து) நான் பாடுபடவில்லையா?" என்று கேட்டார். அறியாமைக் காலத்தில் முகீரா ஒரு கூட்டத்தினருடன் நட்பு கொண்டு, அவர்களைக் கொன்று அவர்களின் பொருட்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். பிறகு இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உனது இஸ்லாத்தை நான் ஏற்கிறேன். ஆனால் (நீ அபகரித்து வந்த) செல்வத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று கூறியிருந்தார்கள்.

பிறகு உர்வா, நபி (ஸல்) அவர்களின் தோழர்களை உற்றுநோக்கலானார். (அவர் கண்டது:) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் காறி உமிழ்ந்தால், அது அவர்களில் ஒருவரின் கரங்களில் விழாமல் இருப்பதில்லை. அதை அவர்கள் தங்கள் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கின்றனர். அவர் அவர்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால், அதை நிறைவேற்ற முந்திக்கொள்கின்றனர். அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால், அந்தத் தண்ணீரைப் பெறுவதற்குச் சண்டையிடும் அளவுக்குச் செல்கின்றனர். அவர் பேசினால், தங்கள் குரல்களைத் தாழ்த்திக்கொள்கின்றனர். அவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவரை அவர்கள் கூர்மையாக உற்றுநோக்குவதுமில்லை.

உர்வா தனது தோழர்களிடம் திரும்பிச் சென்று, "என் சமூகத்தாரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அரசர்களிடம் சென்றிருக்கிறேன். கைஸர், கிஸ்ரா, நஜாஷி ஆகியோரிடமும் சென்றிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மதுடைய தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவதைப் போன்று, எந்த மன்னரின் தோழர்களும் தங்கள் மன்னரைக் கண்ணியப்படுத்துவதை நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் காறி உமிழ்ந்தால், அது அவர்களில் ஒருவரின் கரத்தில் விழாமல் இருப்பதில்லை. அதை அவர்கள் தங்கள் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கின்றனர். அவர் கட்டளையிட்டால் அதைச் செய்ய முந்திக்கொள்கின்றனர். அவர் உளூச் செய்தால் அந்தத் தண்ணீருக்காகச் சண்டையிடும் அளவுக்குச் செல்கின்றனர். அவர் பேசினால் தங்கள் குரல்களைத் தாழ்த்திக்கொள்கின்றனர். அவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவரை உற்றுநோக்குவதுமில்லை. அவர் உங்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

பனூ கினானாவைச் சேர்ந்த ஒருவர், "என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்றார். அவர்கள் "செல்" என்றனர். அவர் நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் முன்னால் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் இன்னார்; குர்பானி ஒட்டகங்களைக் கண்ணியப்படுத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர். எனவே குர்பானி ஒட்டகங்களை அவருக்கு முன்னால் ஓட்டிச் செல்லுங்கள்" என்றார்கள். அவ்வாறே அவை ஓட்டிச் செல்லப்பட்டன. மக்கள் தல்பியா முழங்கியவாறு அவரை வரவேற்றனர். அவர் இதைக் கண்டபோது, "சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) இந்த மக்கள் இறையில்லத்தை அடைவதைத் தடுப்பது தகாது" என்று கூறினார். அவர் தன் தோழர்களிடம் திரும்பிச் சென்று, "குர்பானி ஒட்டகங்கள் அடையாளமிடப்பட்டு, கழுத்து மாலை அணிவிக்கப்பட்டிருப்பதை நான் கண்டேன். அவர்களை இறையில்லத்திலிருந்து தடுப்பதை நான் காணவில்லை (விரும்பவில்லை)" என்றார்.

பிறகு அவர்களிலிருந்து மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்பவர் எழுந்து, "என்னை அவரிடம் செல்ல அனுமதியுங்கள்" என்றார். அவர்கள் "செல்" என்றனர். அவர் அவர்களை (முஸ்லிம்களை) நெருங்கியபோது நபி (ஸல்) அவர்கள், "இவர் மிக்ரஸ்; ஒரு தீய மனிதர்" என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே சுஹைல் பின் அம்ர் வந்தார்.

(அவர் வந்ததைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், "உங்கள் காரியம் உங்களுக்கு எளிதாகிவிட்டது" என்றார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, "வாரும், எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தை எழுதுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்து, "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதுங்கள்" என்றார்கள். சுஹைல், "'ரஹ்மான்' என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. மாறாக, முன்பு நீர் எழுதுவதைப் போன்று 'பிஸ்மிக்க அல்லாஹும்ம' (அல்லாஹ்வே! உனது பெயரால்) என்று எழுதுவீராக!" என்றார். முஸ்லிம்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்றே எழுதுவோம்" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "'பிஸ்மிக்க அல்லாஹும்ம' என்றே எழுதுங்கள்" என்றார்கள். பிறகு "இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது தீர்ப்பளித்ததாகும்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "நீர் அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் நம்பியிருந்தால், இறையில்லத்திலிருந்து உம்மைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உம்முடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, 'முஹம்மது பின் அப்துல்லாஹ்' என்று எழுதுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் என்னைப்பொய்ப்பித்தாலும் நான் அல்லாஹ்வின் தூதர்தான். (பரவாயில்லை) 'முஹம்மது பின் அப்துல்லாஹ்' என்றே எழுதுங்கள்" என்றார்கள். (அறிவிப்பாளர் சுஹ்ரி கூறுகிறார்: அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களை கண்ணியப்படுத்தும் விதமாக அவர்கள் என்னிடம் எந்தத் திட்டத்தைக் கேட்டாலும், அதை நான் அவர்களுக்கு வழங்குவேன் என்று நபி (ஸல்) அவர்கள் முன்பே கூறியிருந்த காரணத்தால் இவ்வாறு நடந்துகொண்டார்கள்.)

பிறகு நபி (ஸல்) அவர்கள், "நாங்கள் இறையில்லத்தை வலம் வருவதற்கு (தவாஃப் செய்ய) எங்களுக்கு வழிவிட வேண்டும்" என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் நிர்பந்திக்கப்பட்டு இணங்கிவிட்டோம் என்று அரபுகள் பேசிக்கொள்ளக் கூடாது. வேண்டுமானால் அடுத்த வருடம் (அனுமதிக்கிறோம்)" என்று கூறி, அவ்வாறே எழுதினார். பிறகு சுஹைல், "எங்களிடமிருந்து ஒரு மனிதர் உம்மிடம் வந்தால் - அவர் உமது மார்க்கத்தில் இருந்தாலும் சரியே - அவரை எங்களிடமே நீர் திருப்பி அனுப்பிவிட வேண்டும்" என்றார். முஸ்லிம்கள், "சுப்ஹானல்லாஹ்! முஸ்லிமாக வந்த ஒருவரை எப்படி இணைவைப்பவர்களிடமே திருப்பி அனுப்புவது?" என்று கூறினார்கள்.

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அபூ ஜந்தல் பின் சுஹைல் பின் அம்ர், தனது விலங்குகளுடன் தள்ளாடி நடந்து வந்து முஸ்லிம்களிடம் தஞ்சம் புகுந்தார். சுஹைல், "முஹம்மதே! நான் உம்முடன் ஒப்பந்தம் செய்துகொண்ட முதல் விஷயம், இவரை என்னிடம் திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்பதே" என்றார். நபி (ஸல்) அவர்கள், "நாம் இன்னும் ஒப்பந்தத்தை எழுதி முடிக்கவில்லையே!" என்றார்கள். அவர், "அப்படியென்றால் நான் உம்முடன் எந்த சமாதானமும் செய்துகொள்ள மாட்டேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இவரை மட்டும் எனக்கு அனுமதிப்பீராக!" என்றார்கள். அவர், "நான் அனுமதிக்க மாட்டேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை, நீர் செய்தே ஆக வேண்டும்" என்றார்கள். அவர், "நான் செய்ய மாட்டேன்" என்றார். மிக்ரஸ், "நாங்கள் இவரை உமக்கு அனுமதித்துவிட்டோம்" என்றார். (ஆனால் சுஹைல் மறுத்துவிட்டார்). அபூ ஜந்தல், "முஸ்லிம் சமூகமே! முஸ்லிமாக வந்துள்ள என்னை இணைவைப்பவர்களிடமே திருப்பி அனுப்பப் போகிறீர்களா? நான் படும் துயரத்தை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கதறினார். அவர் அல்லாஹ்வின் பாதையில் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி) கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம் (நான் இறைத்தூதர்தான்)" என்றார்கள். "நாம் சத்தியத்திலும் நம் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்றார்கள். "அப்படியென்றால் நமது மார்க்கத்தில் நாம் ஏன் பணிந்து செல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கு நான் மாறுசெய்வதில்லை. அவன்தான் எனக்கு உதவி செய்பவன்" என்றார்கள். "நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை வலம் வருவோம் என்று எங்களிடம் நீங்கள் கூறவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், ஆனால் இந்த ஆண்டே வருவோம் என்று நான் உன்னிடம் கூறினேனா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். "நிச்சயமாக நீ அங்கு வருவாய்; அதை வலம் வருவாய்" என்று கூறினார்கள். பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, "அபூபக்ரே! இவர் உண்மையாகவே அல்லாஹ்வின் தூதர் இல்லையா?" என்று கேட்டேன். அவர் "ஆம்" என்றார். "நாம் சத்தியத்திலும் நம் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?" என்று கேட்டேன். அவர் "ஆம்" என்றார். "அப்படியென்றால் நமது மார்க்கத்தில் நாம் ஏன் பணிந்து செல்ல வேண்டும்?" என்று கேட்டேன். அவர், "மனிதரே! நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் தூதர். அவர் தன் இறைவனுக்கு மாறுசெய்வதில்லை. அவன்தான் அவருக்கு உதவி செய்பவன். எனவே அவரது வழிமுறையைப் பற்றிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் சத்தியத்தில்தான் இருக்கிறார்" என்றார். "நாம் இறையில்லத்திற்குச் சென்று வலம் வருவோம் என்று அவர் நம்மிடம் கூறவில்லையா?" என்று கேட்டேன். "ஆம், ஆனால் இந்த ஆண்டே வருவோம் என்று அவர் உன்னிடம் கூறினாரா?" என்று கேட்டார். நான் "இல்லை" என்றேன். அவர், "நிச்சயமாக நீ அங்கு வருவாய்; அதை வலம் வருவாய்" என்றார். (உமர் (ரலி) கூறுகிறார்: "இதற்காக (நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக) நான் பல அமல்களைச் செய்தேன்").

ஒப்பந்தம் எழுதி முடிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "எழுந்து குர்பானி கொடுத்துவிட்டு, தலைமுடியை மழித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறியும் அவர்களில் ஒருவரும் எழவில்லை. அவர்களில் யாரும் எழாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று, மக்களிடமிருந்து தனக்கு ஏற்பட்ட (மனவருத்தத்)தை விவரித்தார்கள். உம்மு ஸலமா (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதை விரும்புகிறீர்களா? நீங்கள் வெளியே சென்று உங்கள் ஒட்டகத்தை அறுத்து, உங்கள் நாவிதரை அழைத்து மழித்துக்கொள்ளும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்" என்று ஆலோசனை கூறினார். நபி (ஸல்) அவர்கள் வெளியே சென்று, (அவ்வாறே) தன் ஒட்டகத்தை அறுத்து, நாவிதரை அழைத்துத் தன் முடியை மழித்துக்கொண்டார்கள். இதைக் கண்டதும் (மற்றவர்களும்) எழுந்து குர்பானி கொடுத்து, ஒருவருக்கொருவர் முடியை மழித்துவிடலானார்கள். (தங்கள் மனவருத்தத்தால் விரைந்து செயல்பட்டதில்) ஒருவர் மீது ஒருவர் விழுந்து சாகுமளவுக்கு ஆயினர்.

பிறகு இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் வந்தார்கள். அப்போது அல்லாஹ், "ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் சோதித்துப் பாருங்கள்..." (திருக்குர்ஆன் 60:10) என்ற வசனத்தை அருளினான். (இதனைத் தொடர்ந்து) உமர் (ரலி) இணைவைப்பாளர்களாக இருந்த தன் இரண்டு மனைவியரை விவாகரத்து செய்தார். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபூ சுஃப்யானும், மற்றவரை சஃப்வான் பின் உமையாவும் மணந்துகொண்டனர்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பினார்கள். குரைஷிகளில் ஒருவரான அபூ பஸீர் என்பவர் முஸ்லிமாக அவர்களிடம் வந்தார். அவரைத் தேடி (குரைஷிகள்) இரண்டு நபர்களை அனுப்பி, "எங்களுக்கு நீ கொடுத்த வாக்கை நிறைவேற்று" என்று கேட்டனர். எனவே நபி (ஸல்) அவர்கள் அபூ பஸீரை அவ்விருவரிடமும் ஒப்படைத்தார்கள். அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு 'துல் ஹுலைஃபா' வரை சென்றனர். அங்கு அவர்கள் தங்களிடமிருந்த பேரீச்சம்பழங்களைச் சாப்பிடுவதற்காக இறங்கினர். அப்போது அபூ பஸீர் அவ்விருவரில் ஒருவரிடம், "இன்னாரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உனது இந்த வாள் மிக அருமையாக உள்ளதே!" என்றார். மற்றவர் அதை உருவி, "ஆம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது மிக அருமையானது; நான் இதை பலமுறை சோதித்திருக்கிறேன்" என்றார். அபூ பஸீர், "இங்கே தா, நான் அதைப் பார்க்கிறேன்" என்று கேட்டார். அவர் அவரிடம் அதைக் கொடுத்ததும், அவர் சாகும் வரை அவரை அடித்தார். மற்றவர் தப்பித்து மதீனா வந்து பள்ளியில் நுழைந்தார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "இவர் பீதியுற்றவர்போல் காணப்படுகிறார்" என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் தோழர் கொல்லப்பட்டுவிட்டார்; நானும் கொல்லப்படவிருந்தேன்" என்றார். அப்போது அபூ பஸீர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான்; என்னை அவர்களிடம் திருப்பி அனுப்பிவிட்டீர்கள். பிறகு அல்லாஹ் அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றிவிட்டான்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "இவருடைய தாய்க்கு கேடுதான்! இவருடன் இன்னும் சிலர் இருந்திருந்தால் இவர் போரை மூட்டியிருப்பாரே!" என்றார்கள்.

இதைச் செவியுற்ற அபூ பஸீர், நபி (ஸல்) அவர்கள் தன்னை மீண்டும் அவர்களிடமே திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அங்கிருந்து வெளியேறி கடற்கரைக்குச் சென்றுவிட்டார். (இதற்கிடையில்) அபூ ஜந்தல் பின் சுஹைல் அவர்களிடமிருந்து தப்பித்து அபூ பஸீருடன் சேர்ந்துகொண்டார். பிறகு குரைஷிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும் எவரும் அபூ பஸீருடன் போய்ச் சேரலாயினர். இறுதியில் ஒரு கூட்டம் சேர்ந்தது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குரைஷிகளின் வியாபாரக் கூட்டம் ஷாம் நோக்கிச் செல்வதை இவர்கள் கேள்விப்பட்டால், அவர்களை வழிமறித்து அவர்களைக் கொன்று, அவர்களின் பொருட்களை எடுத்துக்கொள்ளலானார்கள்.

எனவே குரைஷிகள் நபி (ஸல்) அவர்களுக்கு ஆளனுப்பி, அல்லாஹ்வையும் உறவையும் முன்னிறுத்தி, "அவர்களைத் தாங்களே அழைத்துக்கொள்ள வேண்டும்; இனி உம்மிடம் வருபவர் பாதுகாப்பானவர்" என்று வேண்டிக்கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் அவர்களை (மதீனாவிற்கு) அழைத்துக்கொண்டார்கள்.

அப்போது அல்லாஹ், "அவனே மக்காவின் (ஹுதைபிய்யா) பள்ளத்தாக்கில், அவர்கள்மீது உங்களுக்கு வெற்றியளித்த பின்னர், அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்களுடைய கைகளை அவர்களை விட்டும் தடுத்தான்... எவர் நிராகரித்தார்களோ அவர்கள், தங்கள் உள்ளங்களில் வைராக்கியத்தை - அறியாமைக் காலத்து வைராக்கியத்தை - கொண்டபோது..." (திருக்குர்ஆன் 48:24-26) என்ற வசனங்களை அருளினான். அவர்கள், இவர் அல்லாஹ்வின் தூதர் என்பதை ஏற்க மறுத்ததும், 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று எழுதுவதை ஏற்க மறுத்ததும், இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் தடுத்ததுமே அந்த (அறியாமைக் கால) வைராக்கியமாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3700ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَبْلَ أَنْ يُصَابَ بِأَيَّامٍ بِالْمَدِينَةِ وَقَفَ عَلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ وَعُثْمَانَ بْنِ حُنَيْفٍ، قَالَ كَيْفَ فَعَلْتُمَا أَتَخَافَانِ أَنْ تَكُونَا قَدْ حَمَّلْتُمَا الأَرْضَ مَا لاَ تُطِيقُ قَالاَ حَمَّلْنَاهَا أَمْرًا هِيَ لَهُ مُطِيقَةٌ، مَا فِيهَا كَبِيرُ فَضْلٍ‏.‏ قَالَ انْظُرَا أَنْ تَكُونَا حَمَّلْتُمَا الأَرْضَ مَا لاَ تُطِيقُ، قَالَ قَالاَ لاَ‏.‏ فَقَالَ عُمَرُ لَئِنْ سَلَّمَنِي اللَّهُ لأَدَعَنَّ أَرَامِلَ أَهْلِ الْعِرَاقِ لاَ يَحْتَجْنَ إِلَى رَجُلٍ بَعْدِي أَبَدًا‏.‏ قَالَ فَمَا أَتَتْ عَلَيْهِ إِلاَّ رَابِعَةٌ حَتَّى أُصِيبَ‏.‏ قَالَ إِنِّي لَقَائِمٌ مَا بَيْنِي وَبَيْنَهُ إِلاَّ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ غَدَاةَ أُصِيبَ، وَكَانَ إِذَا مَرَّ بَيْنَ الصَّفَّيْنِ قَالَ اسْتَوُوا‏.‏ حَتَّى إِذَا لَمْ يَرَ فِيهِنَّ خَلَلاً تَقَدَّمَ فَكَبَّرَ، وَرُبَّمَا قَرَأَ سُورَةَ يُوسُفَ، أَوِ النَّحْلَ، أَوْ نَحْوَ ذَلِكَ، فِي الرَّكْعَةِ الأُولَى حَتَّى يَجْتَمِعَ النَّاسُ، فَمَا هُوَ إِلاَّ أَنْ كَبَّرَ فَسَمِعْتُهُ يَقُولُ قَتَلَنِي ـ أَوْ أَكَلَنِي ـ الْكَلْبُ‏.‏ حِينَ طَعَنَهُ، فَطَارَ الْعِلْجُ بِسِكِّينٍ ذَاتِ طَرَفَيْنِ لاَ يَمُرُّ عَلَى أَحَدٍ يَمِينًا وَلاَ شِمَالاً إِلاَّ طَعَنَهُ حَتَّى طَعَنَ ثَلاَثَةَ عَشَرَ رَجُلاً، مَاتَ مِنْهُمْ سَبْعَةٌ، فَلَمَّا رَأَى ذَلِكَ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ، طَرَحَ عَلَيْهِ بُرْنُسًا، فَلَمَّا ظَنَّ الْعِلْجُ أَنَّهُ مَأْخُوذٌ نَحَرَ نَفْسَهُ، وَتَنَاوَلَ عُمَرُ يَدَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَدَّمَهُ، فَمَنْ يَلِي عُمَرَ فَقَدْ رَأَى الَّذِي أَرَى، وَأَمَّا نَوَاحِي الْمَسْجِدِ فَإِنَّهُمْ لاَ يَدْرُونَ غَيْرَ أَنَّهُمْ قَدْ فَقَدُوا صَوْتَ عُمَرَ وَهُمْ يَقُولُونَ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ‏.‏ فَصَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ صَلاَةً خَفِيفَةً، فَلَمَّا انْصَرَفُوا‏.‏ قَالَ يَا ابْنَ عَبَّاسٍ، انْظُرْ مَنْ قَتَلَنِي‏.‏ فَجَالَ سَاعَةً، ثُمَّ جَاءَ، فَقَالَ غُلاَمُ الْمُغِيرَةِ‏.‏ قَالَ الصَّنَعُ قَالَ نَعَمْ‏.‏ قَالَ قَاتَلَهُ اللَّهُ لَقَدْ أَمَرْتُ بِهِ مَعْرُوفًا، الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَجْعَلْ مَنِيَّتِي بِيَدِ رَجُلٍ يَدَّعِي الإِسْلاَمَ، قَدْ كُنْتَ أَنْتَ وَأَبُوكَ تُحِبَّانِ أَنْ تَكْثُرَ الْعُلُوجُ بِالْمَدِينَةِ وَكَانَ ‏{‏الْعَبَّاسُ‏}‏ أَكْثَرَهُمْ رَقِيقًا‏.‏ فَقَالَ إِنْ شِئْتَ فَعَلْتُ‏.‏ أَىْ إِنْ شِئْتَ قَتَلْنَا‏.‏ قَالَ كَذَبْتَ، بَعْدَ مَا تَكَلَّمُوا بِلِسَانِكُمْ، وَصَلَّوْا قِبْلَتَكُمْ وَحَجُّوا حَجَّكُمْ فَاحْتُمِلَ إِلَى بَيْتِهِ فَانْطَلَقْنَا مَعَهُ، وَكَأَنَّ النَّاسَ لَمْ تُصِبْهُمْ مُصِيبَةٌ قَبْلَ يَوْمَئِذٍ، فَقَائِلٌ يَقُولُ لاَ بَأْسَ‏.‏ وَقَائِلٌ يَقُولُ أَخَافُ عَلَيْهِ، فَأُتِيَ بِنَبِيذٍ فَشَرِبَهُ فَخَرَجَ مِنْ جَوْفِهِ، ثُمَّ أُتِيَ بِلَبَنٍ فَشَرِبَهُ فَخَرَجَ مِنْ جُرْحِهِ، فَعَلِمُوا أَنَّهُ مَيِّتٌ، فَدَخَلْنَا عَلَيْهِ، وَجَاءَ النَّاسُ يُثْنُونَ عَلَيْهِ، وَجَاءَ رَجُلٌ شَابٌّ، فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدَمٍ فِي الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ، ثُمَّ شَهَادَةٌ‏.‏ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لاَ عَلَىَّ وَلاَ لِي‏.‏ فَلَمَّا أَدْبَرَ، إِذَا إِزَارُهُ يَمَسُّ الأَرْضَ‏.‏ قَالَ رُدُّوا عَلَىَّ الْغُلاَمَ قَالَ ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ، فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ، يَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ انْظُرْ مَا عَلَىَّ مِنَ الدَّيْنِ‏.‏ فَحَسَبُوهُ فَوَجَدُوهُ سِتَّةً وَثَمَانِينَ أَلْفًا أَوْ نَحْوَهُ، قَالَ إِنْ وَفَى لَهُ مَالُ آلِ عُمَرَ، فَأَدِّهِ مِنْ أَمْوَالِهِمْ، وَإِلاَّ فَسَلْ فِي بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ، فَإِنْ لَمْ تَفِ أَمْوَالُهُمْ فَسَلْ فِي قُرَيْشٍ، وَلاَ تَعْدُهُمْ إِلَى غَيْرِهِمْ، فَأَدِّ عَنِّي هَذَا الْمَالَ، انْطَلِقْ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ فَقُلْ يَقْرَأُ عَلَيْكِ عُمَرُ السَّلاَمَ‏.‏ وَلاَ تَقُلْ أَمِيرُ الْمُؤْمِنِينَ‏.‏ فَإِنِّي لَسْتُ الْيَوْمَ لِلْمُؤْمِنِينَ أَمِيرًا، وَقُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَنْ يُدْفَنَ مَعَ صَاحِبَيْهِ‏.‏ فَسَلَّمَ وَاسْتَأْذَنَ، ثُمَّ دَخَلَ عَلَيْهَا، فَوَجَدَهَا قَاعِدَةً تَبْكِي فَقَالَ يَقْرَأُ عَلَيْكِ عُمَرُ بْنُ الْخَطَّابِ السَّلاَمَ وَيَسْتَأْذِنُ أَنْ يُدْفَنَ مَعَ صَاحِبَيْهِ‏.‏ فَقَالَتْ كُنْتُ أُرِيدُهُ لِنَفْسِي، وَلأُوثِرَنَّ بِهِ الْيَوْمَ عَلَى نَفْسِي‏.‏ فَلَمَّا أَقْبَلَ قِيلَ هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَدْ جَاءَ‏.‏ قَالَ ارْفَعُونِي، فَأَسْنَدَهُ رَجُلٌ إِلَيْهِ، فَقَالَ مَا لَدَيْكَ قَالَ الَّذِي تُحِبُّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَذِنَتْ‏.‏ قَالَ الْحَمْدُ لِلَّهِ، مَا كَانَ مِنْ شَىْءٍ أَهَمُّ إِلَىَّ مِنْ ذَلِكَ، فَإِذَا أَنَا قَضَيْتُ فَاحْمِلُونِي ثُمَّ سَلِّمْ فَقُلْ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَإِنْ أَذِنَتْ لِي فَأَدْخِلُونِي، وَإِنْ رَدَّتْنِي رُدُّونِي إِلَى مَقَابِرِ الْمُسْلِمِينَ‏.‏ وَجَاءَتْ أُمُّ الْمُؤْمِنِينَ حَفْصَةُ وَالنِّسَاءُ تَسِيرُ مَعَهَا، فَلَمَّا رَأَيْنَاهَا قُمْنَا، فَوَلَجَتْ عَلَيْهِ فَبَكَتْ عِنْدَهُ سَاعَةً، وَاسْتَأْذَنَ الرِّجَالُ، فَوَلَجَتْ دَاخِلاً لَهُمْ، فَسَمِعْنَا بُكَاءَهَا مِنَ الدَّاخِلِ‏.‏ فَقَالُوا أَوْصِ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اسْتَخْلِفْ‏.‏ قَالَ مَا أَجِدُ أَحَقَّ بِهَذَا الأَمْرِ مِنْ هَؤُلاَءِ النَّفَرِ أَوِ الرَّهْطِ الَّذِينَ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ عَنْهُمْ رَاضٍ‏.‏ فَسَمَّى عَلِيًّا وَعُثْمَانَ وَالزُّبَيْرَ وَطَلْحَةَ وَسَعْدًا وَعَبْدَ الرَّحْمَنِ وَقَالَ يَشْهَدُكُمْ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَلَيْسَ لَهُ مِنَ الأَمْرِ شَىْءٌ ـ كَهَيْئَةِ التَّعْزِيَةِ لَهُ ـ فَإِنْ أَصَابَتِ الإِمْرَةُ سَعْدًا فَهْوَ ذَاكَ، وَإِلاَّ فَلْيَسْتَعِنْ بِهِ أَيُّكُمْ مَا أُمِّرَ، فَإِنِّي لَمْ أَعْزِلْهُ عَنْ عَجْزٍ وَلاَ خِيَانَةٍ وَقَالَ أُوصِي الْخَلِيفَةَ مِنْ بَعْدِي بِالْمُهَاجِرِينَ الأَوَّلِينَ أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ، وَيَحْفَظَ لَهُمْ حُرْمَتَهُمْ، وَأُوصِيهِ بِالأَنْصَارِ خَيْرًا، الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ مِنْ قَبْلِهِمْ، أَنْ يُقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ، وَأَنْ يُعْفَى عَنْ مُسِيئِهِمْ، وَأُوصِيهِ بِأَهْلِ الأَمْصَارِ خَيْرًا فَإِنَّهُمْ رِدْءُ الإِسْلاَمِ، وَجُبَاةُ الْمَالِ، وَغَيْظُ الْعَدُوِّ، وَأَنْ لاَ يُؤْخَذَ مِنْهُمْ إِلاَّ فَضْلُهُمْ عَنْ رِضَاهُمْ، وَأُوصِيهِ بِالأَعْرَابِ خَيْرًا، فَإِنَّهُمْ أَصْلُ الْعَرَبِ وَمَادَّةُ الإِسْلاَمِ أَنْ يُؤْخَذَ مِنْ حَوَاشِي أَمْوَالِهِمْ وَتُرَدَّ عَلَى فُقَرَائِهِمْ، وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ وَذِمَّةِ رَسُولِهِ صلى الله عليه وسلم أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَلاَ يُكَلَّفُوا إِلاَّ طَاقَتَهُمْ‏.‏ فَلَمَّا قُبِضَ خَرَجْنَا بِهِ فَانْطَلَقْنَا نَمْشِي فَسَلَّمَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ قَالَ يَسْتَأْذِنُ عُمَرُ بْنُ الْخَطَّابِ‏.‏ قَالَتْ أَدْخِلُوهُ‏.‏ فَأُدْخِلَ، فَوُضِعَ هُنَالِكَ مَعَ صَاحِبَيْهِ، فَلَمَّا فُرِغَ مِنْ دَفْنِهِ اجْتَمَعَ هَؤُلاَءِ الرَّهْطُ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ اجْعَلُوا أَمْرَكُمْ إِلَى ثَلاَثَةٍ مِنْكُمْ‏.‏ فَقَالَ الزُّبَيْرُ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَلِيٍّ‏.‏ فَقَالَ طَلْحَةُ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عُثْمَانَ‏.‏ وَقَالَ سَعْدٌ قَدْ جَعَلْتُ أَمْرِي إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ‏.‏ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَيُّكُمَا تَبَرَّأَ مِنْ هَذَا الأَمْرِ فَنَجْعَلُهُ إِلَيْهِ، وَاللَّهُ عَلَيْهِ وَالإِسْلاَمُ لَيَنْظُرَنَّ أَفْضَلَهُمْ فِي نَفْسِهِ‏.‏ فَأُسْكِتَ الشَّيْخَانِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ أَفَتَجْعَلُونَهُ إِلَىَّ، وَاللَّهُ عَلَىَّ أَنْ لاَ آلُوَ عَنْ أَفْضَلِكُمْ قَالاَ نَعَمْ، فَأَخَذَ بِيَدِ أَحَدِهِمَا فَقَالَ لَكَ قَرَابَةٌ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالْقَدَمُ فِي الإِسْلاَمِ مَا قَدْ عَلِمْتَ، فَاللَّهُ عَلَيْكَ لَئِنْ أَمَّرْتُكَ لَتَعْدِلَنَّ، وَلَئِنْ أَمَّرْتُ عُثْمَانَ لَتَسْمَعَنَّ وَلَتُطِيعَنَّ‏.‏ ثُمَّ خَلاَ بِالآخَرِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ، فَلَمَّا أَخَذَ الْمِيثَاقَ قَالَ ارْفَعْ يَدَكَ يَا عُثْمَانُ‏.‏ فَبَايَعَهُ، فَبَايَعَ لَهُ عَلِيٌّ، وَوَلَجَ أَهْلُ الدَّارِ فَبَايَعُوهُ‏.‏
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் தாக்கப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு மதீனாவில் நான் அவர்களைக் கண்டேன். அவர்கள் ஹுதைஃபா பின் அல்-யமான் (ரழி) மற்றும் உஸ்மான் பின் ஹுனைஃப் (ரழி) ஆகியோருடன் நின்று, "நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அந்த நிலத்தின் (ஈராக்கின் மீது விதிக்கப்பட்ட வரி) மீது அது தாங்கக்கூடியதை விட அதிகமான சுமையை நீங்கள் விதித்திருக்கிறீர்களோ என்று அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அது தாங்கக்கூடிய சுமையையே நாங்கள் அதன் மீது விதித்திருக்கிறோம். அதில் பெரிய உபரி (விளைச்சல்) இல்லை" என்று பதிலளித்தார்கள். உமர் (ரழி) அவர்கள், "அந்த நிலத்தின் மீது அது தாங்க முடியாததை நீங்கள் விதிக்கவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அவர்கள், "இல்லை (நாங்கள் அவ்வாறு செய்யவில்லை)" என்றார்கள். உமர் (ரழி) அவர்கள், "அல்லாஹ் என்னை உயிரோடு வைத்திருந்தால், ஈராக்கின் விதவைகள் எனக்குப் பிறகு வேறெந்த ஆணின் உதவியையும் நாடாதவாறு அவர்களை (செழிப்பாக) ஆக்குவேன்" என்று கூறினார்கள்.

ஆனால், அதிலிருந்து நான்காவது நாளிலேயே அவர்கள் தாக்கப்பட்டார்கள். அவர்கள் தாக்கப்பட்ட அந்த அதிகாலையில் நான் (தொழுகை வரிசையில்) நின்று கொண்டிருந்தேன்; எனக்கும் அவர்களுக்கும் இடையில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. உமர் (ரழி) அவர்கள் இரு வரிசைகளுக்கு இடையே நடந்து செல்லும்போது, "வரிசைகளை நேராக்குங்கள்" என்று கூறுவார்கள். வரிசைகளில் எந்த இடைவெளியும் இல்லை என்பதைக் கண்டால், முன்னே சென்று தக்பீர் கூறுவார்கள். மக்கள் (தொழுகையில் வந்து இணைய) ஒன்றுசேர்வதற்காக முதல் ரக்அத்தில் 'சூரா யூஸுஃப்' அல்லது 'அன்-நஹ்ல்' அல்லது அது போன்ற அத்தியாயங்களை ஓதுவார்கள்.

அவர்கள் தக்பீர் கூறிய உடனேயே, "நாய் என்னைக் கொன்றுவிட்டது (அல்லது கடித்துவிட்டது)" என்று அவர்கள் கூறுவதைக் கேட்டேன்; அந்த (அபூ லுஃலுஆ எனும்) மஜூசி அவர்களைக் குத்திய நேரம் அது. அந்த இறைமறுப்பாளன் (விஷம்தோய்த்த) இருமுனைக் கத்தியை ஏந்தியபடி (வரிசைகளை ஊடுருவி) பாய்ந்து சென்றான். தனது வலப்பக்கமும் இடப்பக்கமும் இருந்த எவரையும் அவன் குத்தாமல் விடவில்லை. அவ்வாறு பதிமூன்று நபர்களை அவன் குத்தினான்; அவர்களில் ஏழு பேர் இறந்துவிட்டனர். முஸ்லிம்களில் ஒருவர் இதைக் கண்டபோது, (அவன் மீது) ஒரு போர்வையை வீசினார். தான் பிடிபட்டுவிட்டதை உணர்ந்த அந்த இறைமறுப்பாளன் (கத்தியால்) தன்னைத்தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான்.

உமர் (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களின் கையைப் பிடித்து (தொழுகை நடத்த) முன்னே நிறுத்தினார்கள். உமர் (ரழி) அவர்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் (அதாவது நான் உள்ளிட்டவர்கள்) நடந்த சம்பவத்தைக் கண்டோம். ஆனால், பள்ளிவாசலின் மற்ற பகுதிகளில் இருந்தவர்களுக்கு, உமர் (ரழி) அவர்களின் குரல் நின்றது தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்கள் "சுப்ஹானல்லாஹ், சுப்ஹானல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மக்களுக்குச் சுருக்கமாகத் தொழுகை நடத்தினார்கள்.

அவர்கள் (தொழுது) திரும்பியதும், உமர் (ரழி) அவர்கள், "இப்னு அப்பாஸே! என்னைக் குத்தியவர் யார் என்று பாருங்கள்" என்றார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் சிறிது நேரம் சென்று பார்த்துவிட்டுத் திரும்பி வந்து, "முஃகீராவின் அடிமை" என்றார்கள். உமர் (ரழி) அவர்கள், "அந்தக் கைவினைஞனா?" என்று கேட்க, "ஆம்" என்றார்கள். உமர் (ரழி), "அல்லாஹ் அவனை அழிப்பானாக! அவனுக்கு நான் நன்மை செய்யவே நாடினேன். தன்னை ஒரு முஸ்லிம் என்று வாதிடுபவனின் கையில் என் மரணத்தை ஏற்படுத்தாத அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். (இப்னு அப்பாஸே!) மதீனாவில் (இது போன்ற) இறைமறுப்பாளர்கள் அதிகம் இருக்கவேண்டுமென்று நீங்களும் உங்கள் தந்தையும் (அப்பாஸ் (ரழி)) விரும்பினீர்கள்" என்று கூறினார்கள். அப்பாஸ் (ரழி) அவர்கள் அதிகமான அடிமைகளை வைத்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் (ரழி), "நீங்கள் விரும்பினால் நாங்கள் செய்துவிடுகிறோம் (அதாவது அவர்களைக் கொன்றுவிடுகிறோம்)" என்றார். உமர் (ரழி), "தவறாகச் சொன்னீர்; அவர்கள் உங்கள் மொழியைப் பேசி, உங்கள் கிப்லாவை முன்னோக்கித் தொழுது, உங்களைப் போன்று ஹஜ்ஜும் செய்த பிறகு (அவர்களை எப்படிக் கொல்ல முடியும்?)" என்று கூறினார்கள்.

பிறகு உமர் (ரழி) அவர்கள் அவர்களது வீட்டிற்குச் சுமந்து செல்லப்பட்டார்கள்; நாங்களும் அவர்களுடன் சென்றோம். இதற்கு முன் மக்களுக்கு எந்த ஒரு சோதனையும் ஏற்படாதது போன்ற (ஒரு துயர) நிலை அது. சிலர் "பரவாயில்லை (குணமாகிவிடுவார்)" என்றார்கள்; சிலர் "இவரைப் பற்றிப் பயப்படுகிறோம்" என்றார்கள். பேரீச்சம்பழ ஊறல் (நபித்) கொண்டுவரப்பட்டது; அதை அவர்கள் அருந்தினார்கள். அது அவர்களின் வயிற்றுக் காயத்தின் வழியாக வெளியேறியது. பிறகு பால் கொண்டுவரப்பட்டது; அவர்கள் அருந்தினார்கள். அதுவும் காயத்தின் வழியாக வெளியேறியது. ஆகவே, அவர்கள் இறக்கப்போகிறார்கள் என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள்.

நாங்கள் அவர்களிடம் சென்றோம்; மக்களும் வந்து அவர்களைப் புகழ்ந்தனர். ஒரு இளைஞர் வந்து, "அமீருல் மூமினீன் அவர்களே! நற்செய்தி பெறுங்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீங்கள் கொண்டிருந்த தோழமை, இஸ்லாத்தில் உங்களுக்கிருக்கும் முந்திய அந்தஸ்து ஆகியவற்றை அறிவீர்கள். பிறகு ஆட்சிப் பொறுப்பேற்றீர்கள்; நீதியுடன் நடந்தீர்கள். இறுதியில் இதோ ஷஹாதத் (வீரமரணம்) அடைகிறீர்கள்" என்று கூறினார். அதற்கு உமர் (ரழி), "இவையனைத்தும் எனக்குச் சாதகமாகவும் இல்லாமல், பாதகமாகவும் இல்லாமல் (சமமாக) முடிந்தால் போதும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்கள். அந்த இளைஞர் திரும்பும்போது, அவரது ஆடை தரையில் படுவதைக் கண்ட உமர் (ரழி), "அந்த இளைஞரை என்னிடம் அழையுங்கள்" என்றார்கள். (அவர் வந்ததும்) "என் சகோதரரின் மகனே! உன் ஆடையை உயர்த்திக் கட்டிக்கொள். அது உன் ஆடைக்கும் நீண்ட உழைப்பைத் தரும்; உன் இறைவனிடத்திலும் அதிகச்சிறந்த பயபக்தியாக அமையும்" என்றார்கள்.

பிறகு, "அப்துல்லாஹ் பின் உமரே! எனக்கு எவ்வளவு கடன் உள்ளது என்று பார்" என்றார்கள். கணக்கிடப்பட்டபோது, அது சுமார் எண்பத்தாறாயிரம் (திர்ஹம்கள்) என்று தெரியவந்தது. உமர் (ரழி), "உமர் குடும்பத்தினரின் சொத்து இதற்குப் போதுமானதாக இருந்தால், அவர்களின் சொத்திலிருந்து இதைச் செலுத்திவிடு. போதவில்லை என்றால், 'பனு அதீ பின் கஅப்' குலத்தாரிடம் கேள். அவர்களின் சொத்தும் போதவில்லை என்றால், குறைஷிகளிடம் கேள். அவர்களைத் தாண்டி வேறு யாரிடமும் கேட்காதே. என் சார்பாக இந்தக் கடனை அடைத்துவிடு" என்றார்கள்.

பிறகு (மகனிடம்), "நீ அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் செல். 'உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று சொல். 'அமீருல் மூமினீன்' (நம்பிக்கையாளர்களின் தலைவர்) என்று சொல்லாதே; ஏனெனில் இன்று நான் நம்பிக்கையாளர்களுக்குத் தலைவன் அல்லன். 'உமர் பின் அல்-கத்தாப் தனது இரு தோழர்களுடன் (நபி (ஸல்) மற்றும் அபூபக்கர் (ரழி)) அடக்கம் செய்யப்பட அனுமதி கோருகிறார்' என்று சொல்" என்றார்கள்.

அவர் சென்று சலாம் கூறி அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தார். ஆயிஷா (ரழி) அவர்கள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். "உமர் பின் அல்-கத்தாப் உங்களுக்கு சலாம் உரைக்கிறார்; தனது இரு தோழர்களுடன் அடக்கம் செய்யப்பட அனுமதி கோருகிறார்" என்றார். அதற்கு ஆயிஷா (ரழி), "அந்த இடத்தை எனக்காக (நான் இறப்பிற்குப் பின் அடக்கம் செய்யப்பட) விரும்பியிருந்தேன். ஆயினும், இன்று என்னை விட அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கிறேன்" என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) திரும்பி வந்தபோது, "இதோ அப்துல்லாஹ் பின் உமர் வந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. உமர் (ரழி), "என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்" என்றார்கள். ஒரு நபர் அவர்களைத் தாங்கிப் பிடித்தார். "என்ன செய்தி?" என்று உமர் (ரழி) கேட்டார்கள். "அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் விரும்பியவாறே அனுமதி கிடைத்துவிட்டது" என்றார். உமர் (ரழி), "அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! இதைவிட எனக்கு முக்கியமான விஷயம் வேறெதுவும் இல்லை. என் உயிர் பிரிந்ததும் என்னைச் சுமந்து செல்லுங்கள். பிறகு (மீண்டும்) சலாம் கூறி, 'உமர் பின் அல்-கத்தாப் அனுமதி கேட்கிறார்' என்று கூறு. அனுமதி அளித்தால் என்னை உள்ளே கொண்டு செல்லுங்கள்; இல்லையெனில், பொது முஸ்லிம்களின் மையவாடிக்கு என்னைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள்.

பிறகு (அன்னை) ஹஃப்ஸா (ரழி) அவர்களும், அவருடன் சில பெண்களும் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நாங்கள் எழுந்து (விலகி) கொண்டோம். அவர் உமர் (ரழி) அவர்களிடம் சென்று சிறிது நேரம் அழுதார். பிறகு ஆண்கள் அனுமதி கேட்டபோது அவர் (திரைக்குள்) சென்றுவிட்டார். உள்ளே அவர் அழுவதை நாங்கள் கேட்டோம்.

மக்கள், "அமீருல் மூமினீன் அவர்களே! வசிய்யத் (மரண சாசனம்) செய்யுங்கள்; (அடுத்த) கலீஃபாவை நியமியுங்கள்" என்றார்கள். உமர் (ரழி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவர்களைக் குறித்துத் திருப்தி அடைந்திருந்த நிலையில் மரணத்தைத் தழுவினார்களோ, அந்தக் குழுவினரை (அல்லது அந்த நபர்களைத்) தவிர, இந்த ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள் என்று யாரையும் நான் காணவில்லை" என்று கூறி, அலீ, உஸ்மான், ஸுபைர், தல்ஹா, ஸஅத் மற்றும் அப்துர் ரஹ்மான் (பின் அவ்ஃப்) (ரழி அன்ஹும்) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்கள். மேலும், "அப்துல்லாஹ் பின் உமர் உங்களுக்கு (கண்காணிப்பாளராக/சாட்சியாக) இருப்பார்; ஆனால் ஆட்சியில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று கூறினார்கள் - இது அவருக்கு (அப்துல்லாஹ்வுக்கு) ஆறுதல் அளிப்பதற்காகக் கூறப்பட்டது. "ஸஅத் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் அவரே அதற்குத் தகுதியானவர்; இல்லையெனில், உங்களில் யார் பொறுப்பேற்றாலும் ஸஅத் உடைய உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் அவரைத் திறமையின்மைக்காகவோ, மோசடிக்காகவோ பதவி நீக்கம் செய்யவில்லை" (என்று கூறினார்கள்).

மேலும் கூறினார்கள்: "எனக்குப் பின் வரும் கலீஃபாவுக்கு நான் வசிய்யத் செய்கிறேன்: ஆரம்பகால முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து, அவர்களின் கண்ணியத்தைப் பேண வேண்டும். முஹாஜிர்களுக்கு முன்பே மதீனாவில் தங்கியிருந்து, ஈமானை ஏற்றுக்கொண்ட அன்ஸார்களிடமும் நன்முறையில் நடக்க வேண்டும்; அவர்களில் நன்மை புரிபவரை ஏற்று, தவறு செய்பவரை மன்னிக்க வேண்டும். நகரங்களின் (மாகாணங்களின்) மக்களுக்கும் நன்மை செய்யும்படி உபதேசிக்கிறேன்; ஏனெனில் அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள், செல்வத்தைச் சேகரிப்பவர்கள், மற்றும் எதிரிகளுக்கு ஆத்திரம் ஊட்டுபவர்கள். அவர்களின் விருப்பப்படியே தவிர, (வரி என்ற பெயரில்) அவர்களின் உபரிச் செல்வத்திலிருந்து எதையும் எடுக்கக்கூடாது. அரபி நாட்டுப்புற மக்களிடமும் (பெடோயின்கள்) நன்முறையில் நடக்க உபதேசிக்கிறேன்; ஏனெனில் அவர்கள் அரபியர்களின் அசல் தோற்றமும், இஸ்லாத்தின் பக்கபலமும் ஆவர். அவர்களின் செல்வத்தில் (கால்நடைகளில்) நடுத்தரமானதை எடுத்து, அவர்களிலுள்ள ஏழைகளுக்கே அது திரும்ப வழங்கப்பட வேண்டும். மேலும், அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் பாதுகாப்பில் உள்ளவர்களிடம் (திம்மிகளிடம்) செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், அவர்களுக்காகப் போரிடவும், அவர்களின் சக்திக்கு மீறிய சுமையை அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்றும் உபதேசிக்கிறேன்."

உமர் (ரழி) அவர்கள் உயிர் பிரிந்ததும், நாங்கள் அவர்களைச் சுமந்து சென்றோம். அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) (ஆயிஷா (ரழி) அவர்களிடம்) சலாம் கூறி, "உமர் பின் அல்-கத்தாப் அனுமதி கேட்கிறார்" என்றார். ஆயிஷா (ரழி), "அவரை உள்ளே கொண்டு வாருங்கள்" என்றார்கள். அவர்கள் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, தனது இரு தோழர்களுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அடக்கம் முடிந்ததும், (உமர் (ரழி) அவர்களால் நியமிக்கப்பட்ட) அந்தக் குழுவினர் ஒன்று கூடினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), "உங்கள் விவகாரத்தை (ஆட்சித் தேர்வை) உங்களில் மூன்று பேரிடம் ஒப்படைத்துவிடுங்கள் (சுருக்கிக்கொள்ளுங்கள்)" என்றார். ஸுபைர் (ரழி), "என் உரிமையை அலீயிடம் ஒப்படைக்கிறேன்" என்றார். தல்ஹா (ரழி), "என் உரிமையை உஸ்மானிடம் ஒப்படைக்கிறேன்" என்றார். ஸஅத் (ரழி), "என் உரிமையை அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபிடம் ஒப்படைக்கிறேன்" என்றார்.

(இப்போது மூவர் மீதமிருந்தனர்: அப்துர் ரஹ்மான், அலீ, உஸ்மான்). அப்துர் ரஹ்மான் (ரழி) (மற்ற இருவரிடம்), "உங்களில் யார் இந்த ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறாரோ, அவருக்குத் தலைமைப் பொறுப்பைத் தேர்வு செய்யும் உரிமையை நாம் வழங்கலாம்; அவர் (மீதமுள்ள) இருவரில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வும் இஸ்லாமும் சாட்சியாக இருப்பார்கள்" என்று கூறினார். அந்த இருவரும் (அலீ மற்றும் உஸ்மான்) அமைதியாக இருந்தனர். அப்துர் ரஹ்மான் (ரழி), "இதைத் தேர்வு செய்யும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுகிறீர்களா? உங்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுப்பதில் நான் எந்தக் குறையும் வைக்கமாட்டேன் என்று அல்லாஹ்வைச் சாட்சியாகக் கூறுகிறேன்" என்றார். இருவரும் "ஆம்" என்றனர்.

அவர் இருவரில் ஒருவரின் (அலீயின்) கையைப் பிடித்து, "உங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உறவுமுறை உள்ளது; இஸ்லாத்தில் உங்களுக்குள்ள முந்திய சிறப்பை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தால் நீங்கள் நீதியுடன் நடப்பீர்களா? உஸ்மானை நான் தேர்ந்தெடுத்தால் நீங்கள் அவருக்குச் செவிசாய்த்து, கட்டுப்படுவீர்களா? இதற்கு அல்லாஹ்வே உங்கள் மீது சாட்சி" என்று கேட்டார். பிறகு மற்றவரை (உஸ்மானை) தனியாக அழைத்து அவரிடமும் அவ்வாறே கூறினார். (இருவரிடமிருந்தும்) உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டதும், "உஸ்மானே! உங்கள் கையை உயர்த்துங்கள்" என்று கூறி, அவருக்கு (பைஅத்) விசுவாசப் பிரமாணம் செய்தார். பிறகு அலீ (ரழி) அவர்களும் அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார். பிறகு (மதீனா) மக்கள் அனைவரும் வந்து அவருக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3905ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ قَطُّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، فَلَمَّا ابْتُلِيَ الْمُسْلِمُونُ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا نَحْوَ أَرْضِ الْحَبَشَةِ، حَتَّى بَلَغَ بَرْكَ الْغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ وَهْوَ سَيِّدُ الْقَارَةِ‏.‏ فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَخْرَجَنِي قَوْمِي، فَأُرِيدُ أَنْ أَسِيحَ فِي الأَرْضِ وَأَعْبُدَ رَبِّي‏.‏ قَالَ ابْنُ الدَّغِنَةِ فَإِنَّ مِثْلَكَ يَا أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ، إِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ، وَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ، فَأَنَا لَكَ جَارٌ، ارْجِعْ وَاعْبُدْ رَبَّكَ بِبَلَدِكَ‏.‏ فَرَجَعَ وَارْتَحَلَ مَعَهُ ابْنُ الدَّغِنَةِ، فَطَافَ ابْنُ الدَّغِنَةِ عَشِيَّةً فِي أَشْرَافِ قُرَيْشٍ، فَقَالَ لَهُمْ إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ وَلاَ يُخْرَجُ، أَتُخْرِجُونَ رَجُلاً يَكْسِبُ الْمَعْدُومَ، وَيَصِلُ الرَّحِمَ، وَيَحْمِلُ الْكَلَّ، وَيَقْرِي الضَّيْفَ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ فَلَمْ تُكَذِّبْ قُرَيْشٌ بِجِوَارِ ابْنِ الدَّغِنَةِ، وَقَالُوا لاِبْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِي دَارِهِ، فَلْيُصَلِّ فِيهَا وَلْيَقْرَأْ مَا شَاءَ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ، وَلاَ يَسْتَعْلِنْ بِهِ، فَإِنَّا نَخْشَى أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا‏.‏ فَقَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لأَبِي بَكْرٍ، فَلَبِثَ أَبُو بَكْرٍ بِذَلِكَ يَعْبُدُ رَبَّهُ فِي دَارِهِ، وَلاَ يَسْتَعْلِنُ بِصَلاَتِهِ، وَلاَ يَقْرَأُ فِي غَيْرِ دَارِهِ، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ وَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَنْقَذِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ، وَهُمْ يَعْجَبُونَ مِنْهُ، وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً، لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، وَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ، فَقَدِمَ عَلَيْهِمْ‏.‏ فَقَالُوا إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ بِجِوَارِكَ، عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ، فَقَدْ جَاوَزَ ذَلِكَ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَأَعْلَنَ بِالصَّلاَةِ وَالْقِرَاءَةِ فِيهِ، وَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا فَانْهَهُ، فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ فَعَلَ، وَإِنْ أَبَى إِلاَّ أَنْ يُعْلِنَ بِذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ، فَإِنَّا قَدْ كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ، وَلَسْنَا مُقِرِّينَ لأَبِي بَكْرٍ الاِسْتِعْلاَنَ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ قَدْ عَلِمْتَ الَّذِي عَاقَدْتُ لَكَ عَلَيْهِ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ، وَإِمَّا أَنْ تَرْجِعَ إِلَىَّ ذِمَّتِي، فَإِنِّي لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ الْعَرَبُ أَنِّي أُخْفِرْتُ فِي رَجُلٍ عَقَدْتُ لَهُ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ فَإِنِّي أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ عَزَّ وَجَلَّ‏.‏ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَئِذٍ بِمَكَّةَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِلْمُسْلِمِينَ ‏"‏ إِنِّي أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ ذَاتَ نَخْلٍ بَيْنَ لاَبَتَيْنِ ‏"‏‏.‏ وَهُمَا الْحَرَّتَانِ، فَهَاجَرَ مَنْ هَاجَرَ قِبَلَ الْمَدِينَةِ، وَرَجَعَ عَامَّةُ مَنْ كَانَ هَاجَرَ بِأَرْضِ الْحَبَشَةِ إِلَى الْمَدِينَةِ، وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ قِبَلَ الْمَدِينَةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ عَلَى رِسْلِكَ، فَإِنِّي أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي ‏"‏‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ وَهَلْ تَرْجُو ذَلِكَ بِأَبِي أَنْتَ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لِيَصْحَبَهُ، وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ السَّمُرِ وَهْوَ الْخَبَطُ أَرْبَعَةَ أَشْهُرٍ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَبَيْنَمَا نَحْنُ يَوْمًا جُلُوسٌ فِي بَيْتِ أَبِي بَكْرٍ فِي نَحْرِ الظَّهِيرَةِ قَالَ قَائِلٌ لأَبِي بَكْرٍ هَذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُتَقَنِّعًا ـ فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا ـ فَقَالَ أَبُو بَكْرٍ فِدَاءٌ لَهُ أَبِي وَأُمِّي، وَاللَّهِ مَا جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلاَّ أَمْرٌ‏.‏ قَالَتْ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَ، فَأُذِنَ لَهُ فَدَخَلَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي بَكْرٍ ‏"‏ أَخْرِجْ مَنْ عِنْدَكَ ‏"‏‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّمَا هُمْ أَهْلُكَ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏"‏ فَإِنِّي قَدْ أُذِنَ لِي فِي الْخُرُوجِ ‏"‏‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ الصَّحَابَةُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ نَعَمْ ‏"‏‏.‏ قَالَ أَبُو بَكْرٍ فَخُذْ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ إِحْدَى رَاحِلَتَىَّ هَاتَيْنِ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ بِالثَّمَنِ ‏"‏‏.‏ قَالَتْ عَائِشَةُ فَجَهَّزْنَاهُمَا أَحَثَّ الْجَهَازِ، وَصَنَعْنَا لَهُمَا سُفْرَةً فِي جِرَابٍ، فَقَطَعَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ قِطْعَةً مَنْ نِطَاقِهَا فَرَبَطَتْ بِهِ عَلَى فَمِ الْجِرَابِ، فَبِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقِ ـ قَالَتْ ـ ثُمَّ لَحِقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ بِغَارٍ فِي جَبَلِ ثَوْرٍ فَكَمَنَا فِيهِ ثَلاَثَ لَيَالٍ، يَبِيتُ عِنْدَهُمَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ وَهْوَ غُلاَمٌ شَابٌّ ثَقِفٌ لَقِنٌ، فَيُدْلِجُ مِنْ عِنْدِهِمَا بِسَحَرٍ، فَيُصْبِحُ مَعَ قُرَيْشٍ بِمَكَّةَ كَبَائِتٍ، فَلاَ يَسْمَعُ أَمْرًا يُكْتَادَانِ بِهِ إِلاَّ وَعَاهُ، حَتَّى يَأْتِيَهُمَا بِخَبَرِ ذَلِكَ حِينَ يَخْتَلِطُ الظَّلاَمُ، وَيَرْعَى عَلَيْهِمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ مِنْحَةً مِنْ غَنَمٍ، فَيُرِيحُهَا عَلَيْهِمَا حِينَ يَذْهَبُ سَاعَةٌ مِنَ الْعِشَاءِ، فَيَبِيتَانِ فِي رِسْلٍ وَهْوَ لَبَنُ مِنْحَتِهِمَا وَرَضِيفِهِمَا، حَتَّى يَنْعِقَ بِهَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ بِغَلَسٍ، يَفْعَلُ ذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ تِلْكَ اللَّيَالِي الثَّلاَثِ، وَاسْتَأْجَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ رَجُلاً مِنْ بَنِي الدِّيلِ، وَهْوَ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيًا خِرِّيتًا ـ وَالْخِرِّيتُ الْمَاهِرُ بِالْهِدَايَةِ ـ قَدْ غَمَسَ حِلْفًا فِي آلِ الْعَاصِ بْنِ وَائِلٍ السَّهْمِيِّ، وَهْوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ فَأَمِنَاهُ، فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ بِرَاحِلَتَيْهِمَا صُبْحَ ثَلاَثٍ، وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ وَالدَّلِيلُ فَأَخَذَ بِهِمْ طَرِيقَ السَّوَاحِلِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் விபரமறியத் தொடங்கியது முதல் என் பெற்றோர் (அபூபக்கர் மற்றும் உம்மு ரூமான்) இருவரும் இந்த (இஸ்லாமிய) மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களாகவே அன்றி நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் எங்களைச் சந்திக்க வராத ஒரு நாள் கூட எங்களைக் கடந்து சென்றதில்லை. (மக்காவில்) முஸ்லிம்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூபக்கர் (ரழி) அவர்கள் (முதலாவதாக) எத்தியோப்பியா (ஹபஷா) நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டார்கள். அவர்கள் 'பர்க் அல்-கிமாத்' என்ற இடத்தை அடைந்தபோது, 'காரா' கோத்திரத்தின் தலைவரான இப்னு அத்தஃகினா அவரைச் சந்தித்தார். அவர், “அபூபக்கரே! எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார். அபூபக்கர் (ரழி), “என் சமுதாயத்தார் என்னை வெளியேற்றிவிட்டார்கள்; எனவே நான் பூமியில் சுற்றித் திரிந்து என் இறைவனை வணங்க விரும்புகிறேன்” என்றார்.

இப்னு அத்தஃகினா கூறினார்: “அபூபக்கரே! உங்களைப் போன்றவர் வெளியேறவும் கூடாது; வெளியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீங்கள் இல்லாதவர்களுக்கு ஈட்டித் தருகிறீர்கள்; உறவினர்களுடன் நல்லுறவைப் பேணுகிறீர்கள்; சிரமப்படுபவர்களின் சுமையைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்தியத்தால் ஏற்படும் சோதனைகளில் (மக்களுக்குத்) துணை நிற்கிறீர்கள். எனவே நான் உங்களுக்குப் தஞ்சமளிக்கிறேன் (பாதுகாப்புத் தருகிறேன்). திரும்பிச் சென்று உங்கள் ஊரிலேயே உங்கள் இறைவனை வணங்குங்கள்.” அவர் திரும்பினார்; இப்னு அத்தஃகினாவும் அவருடன் (மக்காவிற்கு) வந்தார்.

இப்னு அத்தஃகினா குறைஷிகளின் பிரமுகர்களைச் சந்தித்து, “அபூபக்கர் போன்ற ஒருவர் வெளியேற்றப்படக் கூடாது. இல்லாதவர்களுக்கு ஈட்டித் தருகிற, உறவுகளைப் பேணுகிற ஒரு மனிதரையா நீங்கள் வெளியேற்றுகிறீர்கள்?” என்று கேட்டார். குறைஷிகள் அந்தத் தஞ்சத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்கள், “அபூபக்கர் தம் வீட்டிற்குள் மட்டும் தொழட்டும்; அங்கே அவர் விரும்பியதை ஓதலாம். ஆனால் அதை வெளிப்படையாகச் செய்து எங்களுக்குத் தொல்லை தரக் கூடாது; ஏனெனில் அவர் எங்கள் பெண்களையும் பிள்ளைகளையும் குழப்பத்தில் (மார்க்க மாற்றத்தில்) ஆழ்த்திவிடுவார் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்றனர்.

அபூபக்கர் (ரழி) சில காலம் அவ்வாறே இருந்தார். பின்னர் அவருக்குத் தன் வீட்டின் முற்றத்தில் ஒரு மஸ்ஜிதை அமைக்கும் எண்ணம் தோன்றியது. அங்கே அவர் பகிரங்கமாகத் தொழவும் குர்ஆன் ஓதவும் ஆரம்பித்தார். இதைக் கண்டு இணைவைப்பாளர்களின் பெண்களும் பிள்ளைகளும் வியப்புடன் அவரைச் சூழ்ந்தனர். அபூபக்கர் (ரழி) அதிகம் அழக்கூடியவராக இருந்தார்; குர்ஆன் ஓதும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்த மாட்டார். இது குறைஷிப் பிரமுகர்களைப் பயமுறுத்தியதால், அவர்கள் இப்னு அத்தஃகினாவை அழைத்து முறையிட்டனர். இப்னு அத்தஃகினா அபூபக்கரிடம் வந்து, “ஒன்று வரம்பிற்குள் நில்லுங்கள், அல்லது எனது தஞ்சத்தைத் திருப்பித் தந்துவிடுங்கள்” என்றார். அபூபக்கர் (ரழி), “உமது தஞ்சத்தை உமக்கே திருப்பித் தருகிறேன்; அல்லாஹ்வின் பாதுகாப்பையே நான் பொருந்திக் கொள்கிறேன்” என்றார்.

அந்த நாட்களில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். அவர்கள் முஸ்லிம்களிடம், “நீங்கள் ஹிஜ்ரத் செய்யுமிடம் (மதீனா) எனக்குக் காட்டப்பட்டது; அது இரண்டு எரிமலைக் கற்களுக்கு (லாபத்தைன்) இடையில் பேரீச்சை மரங்கள் நிறைந்த பூமி” என்றார்கள். மதீனாவிற்குப் புறப்படத் தயாரான அபூபக்கரிடம் நபி (ஸல்), “பொறுத்திருங்கள், எனக்கும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்கள். அபூபக்கர் (ரழி) நபி (ஸல்) அவர்களுக்காகத் தம்மைத் தடுத்துக் கொண்டு, இரண்டு ஒட்டகங்களுக்கு நான்கு மாதங்களாகத் தீவனம் தந்து தயார் செய்தார்.

ஒரு நாள் நண்பகலில் நபி (ஸல்) அவர்கள் தலையை மறைத்தவாறு அபூபக்கர் இல்லத்திற்கு வந்தார்கள். நபி (ஸல்), “உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்” என, அபூபக்கர் (ரழி) “இவர்கள் உங்கள் குடும்பத்தினர் தான்” என்றார். நபி (ஸல்), “எனக்கு ஹிஜ்ரத் செய்ய அனுமதி கிடைத்துவிட்டது” என்றதும், அபூபக்கர் (ரழி) “உங்களுடன் வர எனக்கும் அனுமதி உண்டா?” எனக் கேட்டார். நபி (ஸல்) “ஆம்” என்றார்கள். அபூபக்கர் (ரழி) ஒரு ஒட்டகத்தை வழங்க முன்வர, நபி (ஸல்) “விலைக்கு மட்டுமே (பெற்றுக் கொள்வேன்)” என்றார்கள்.

நாங்கள் பயண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்தோம். அஸ்மா (ரழி) தனது இடுப்புக் கச்சையைக் கிழித்து உணவுப் பையைக் கட்டியதால் 'தாத் அந்-நிதாகைன்' எனப் பெயர் பெற்றார். பின்னர் அவர்கள் 'தவ்ர்' குகையில் மூன்று இரவுகள் தங்கியிருந்தனர். அபூபக்கரின் மகன் அப்துல்லாஹ் செய்திகளைச் சேகரிப்பார்; ஆமிர் பின் ஃபுஹைரா பாலுணவு வழங்குவார். அவர்கள் 'பனூ தில்' கோத்திர வழிகாட்டியை (கிர்ரீத்) வாடகைக்கு அமர்த்தி கடற்கரை வழியாக (மதீனா நோக்கி) நடந்தனர்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3989ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُمَرُ بْنُ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيُّ، حَلِيفُ بَنِي زُهْرَةَ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ أَبِي هُرَيْرَةَ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَشَرَةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، جَدَّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، حَتَّى إِذَا كَانُوا بِالْهَدَةِ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ ذُكِرُوا لِحَىٍّ مِنْ هُذَيْلٍ يُقَالُ لَهُمْ بَنُو لِحْيَانَ، فَنَفَرُوا لَهُمْ بِقَرِيبٍ مِنْ مِائَةِ رَجُلٍ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى وَجَدُوا مَأْكَلَهُمُ التَّمْرَ فِي مَنْزِلٍ نَزَلُوهُ فَقَالُوا تَمْرُ يَثْرِبَ‏.‏ فَاتَّبَعُوا آثَارَهُمْ، فَلَمَّا حَسَّ بِهِمْ عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى مَوْضِعٍ، فَأَحَاطَ بِهِمُ الْقَوْمُ، فَقَالُوا لَهُمْ انْزِلُوا فَأَعْطُوا بِأَيْدِيكُمْ وَلَكُمُ الْعَهْدُ وَالْمِيثَاقُ أَنْ لاَ نَقْتُلَ مِنْكُمْ أَحَدًا‏.‏ فَقَالَ عَاصِمُ بْنُ ثَابِتٍ أَيُّهَا الْقَوْمُ، أَمَّا أَنَا فَلاَ أَنْزِلُ فِي ذِمَّةِ كَافِرٍ‏.‏ ثُمَّ قَالَ اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ صلى الله عليه وسلم‏.‏ فَرَمَوْهُمْ بِالنَّبْلِ، فَقَتَلُوا عَاصِمًا، وَنَزَلَ إِلَيْهِمْ ثَلاَثَةُ نَفَرٍ عَلَى الْعَهْدِ وَالْمِيثَاقِ، مِنْهُمْ خُبَيْبٌ وَزَيْدُ بْنُ الدَّثِنَةِ، وَرَجُلٌ آخَرُ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ أَطْلَقُوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَرَبَطُوهُمْ بِهَا‏.‏ قَالَ الرَّجُلُ الثَّالِثُ هَذَا أَوَّلُ الْغَدْرِ، وَاللَّهِ لاَ أَصْحَبُكُمْ، إِنَّ لِي بِهَؤُلاَءِ أُسْوَةً‏.‏ يُرِيدُ الْقَتْلَى، فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ، فَأَبَى أَنْ يَصْحَبَهُمْ، فَانْطُلِقَ بِخُبَيْبٍ وَزَيْدِ بْنِ الدَّثِنَةِ حَتَّى بَاعُوهُمَا بَعْدَ وَقْعَةِ بَدْرٍ، فَابْتَاعَ بَنُو الْحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلٍ خُبَيْبًا، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الْحَارِثَ بْنَ عَامِرٍ يَوْمَ بَدْرٍ، فَلَبِثَ خُبَيْبٌ عِنْدَهُمْ أَسِيرًا حَتَّى أَجْمَعُوا قَتْلَهُ، فَاسْتَعَارَ مِنْ بَعْضِ بَنَاتِ الْحَارِثِ مُوسَى يَسْتَحِدُّ بِهَا فَأَعَارَتْهُ، فَدَرَجَ بُنَىٌّ لَهَا وَهْىَ غَافِلَةٌ حَتَّى أَتَاهُ، فَوَجَدَتْهُ مُجْلِسَهُ عَلَى فَخِذِهِ وَالْمُوسَى بِيَدِهِ قَالَتْ فَفَزِعْتُ فَزْعَةً عَرَفَهَا خُبَيْبٌ فَقَالَ أَتَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ مَا كُنْتُ لأَفْعَلَ ذَلِكَ قَالَتْ وَاللَّهِ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، وَاللَّهِ لَقَدْ وَجَدْتُهُ يَوْمًا يَأْكُلُ قِطْفًا مِنْ عِنَبٍ فِي يَدِهِ، وَإِنَّهُ لَمُوثَقٌ بِالْحَدِيدِ، وَمَا بِمَكَّةَ مِنْ ثَمَرَةٍ وَكَانَتْ تَقُولُ إِنَّهُ لَرِزْقٌ رَزَقَهُ اللَّهُ خُبَيْبًا، فَلَمَّا خَرَجُوا بِهِ مِنَ الْحَرَمِ لِيَقْتُلُوهُ فِي الْحِلِّ قَالَ لَهُمْ خُبَيْبٌ دَعُونِي أُصَلِّي رَكْعَتَيْنِ‏.‏ فَتَرَكُوهُ فَرَكَعَ رَكْعَتَيْنِ، فَقَالَ وَاللَّهِ لَوْلاَ أَنْ تَحْسِبُوا أَنَّ مَا بِي جَزَعٌ لَزِدْتُ، ثُمَّ قَالَ اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا، وَاقْتُلْهُمْ بَدَدًا، وَلاَ تُبْقِ مِنْهُمْ أَحَدًا‏.‏ ثُمَّ أَنْشَأَ يَقُولُ فَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا عَلَى أَىِّ جَنْبٍ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ ثُمَّ قَامَ إِلَيْهِ أَبُو سِرْوَعَةَ عُقْبَةُ بْنُ الْحَارِثِ، فَقَتَلَهُ وَكَانَ خُبَيْبٌ هُوَ سَنَّ لِكُلِّ مُسْلِمٍ قُتِلَ صَبْرًا الصَّلاَةَ، وَأَخْبَرَ أَصْحَابَهُ يَوْمَ أُصِيبُوا خَبَرَهُمْ، وَبَعَثَ نَاسٌ مِنْ قُرَيْشٍ إِلَى عَاصِمِ بْنِ ثَابِتٍ حِينَ حُدِّثُوا أَنَّهُ قُتِلَ أَنْ يُؤْتَوْا بِشَىْءٍ مِنْهُ يُعْرَفُ، وَكَانَ قَتَلَ رَجُلاً عَظِيمًا مِنْ عُظَمَائِهِمْ، فَبَعَثَ اللَّهُ لِعَاصِمٍ مِثْلَ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رُسُلِهِمْ، فَلَمْ يَقْدِرُوا أَنْ يَقْطَعُوا مِنْهُ شَيْئًا‏.‏ وَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ ذَكَرُوا مُرَارَةَ بْنَ الرَّبِيعِ الْعَمْرِيَّ وَهِلاَلَ بْنَ أُمَيَّةَ الْوَاقِفِيَّ، رَجُلَيْنِ صَالِحَيْنِ قَدْ شَهِدَا بَدْرًا‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், `ஆஸிம் பின் `உமர் அல்-கத்தாப் அவர்களின் பாட்டனாரான `ஆஸிம் பின் தாபித் அல்-அன்சாரி (ரழி) அவர்களின் தலைமையில் பத்து உளவாளிகளை அனுப்பினார்கள். அவர்கள் உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையில் (அல்-ஹதா எனப்படும்) ஒரு இடத்தை அடைந்தபோது, ஹுதைல் கோத்திரத்தின் ஒரு கிளைக்கோத்திரமான பனூ லிஹ்யான் என்பவர்களுக்கு அவர்களின் வருகை தெரியவந்தது. எனவே அவர்கள் சுமார் நூறு வில்லாளர்களை அவர்களுக்குப் பின்னால் அனுப்பினார்கள். வில்லாளர்கள் (முஸ்லிம்களின்) அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த இடங்களில் ஒன்றில் அவர்கள் உண்ட பேரீச்சம்பழங்களின் தடயங்களைக் கண்டுபிடித்தார்கள். வில்லாளர்கள், “இந்தப் பேரீச்சம்பழங்கள் யத்ரிபைச் (அதாவது மதீனாவைச்) சேர்ந்தவை” என்று கூறி, முஸ்லிம்களின் அடிச்சுவடுகளைத் தொடர்ந்து பின்தொடர்ந்தார்கள். `ஆஸிம் (ரழி) அவர்களும் அவர்களின் தோழர்களும் அவர்களைப் பற்றி அறிந்ததும், அவர்கள் (உயர்ந்த) ஒரு இடத்தில் தஞ்சம் புகுந்தார்கள். ஆனால் எதிரிகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டு, “கீழே இறங்கி சரணடையுங்கள். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம் என்று உங்களுக்கு உறுதியான வாக்குறுதியும் உடன்படிக்கையும் அளிக்கிறோம்” என்று கூறினார்கள். `ஆஸிம் பின் தாபித் (ரழி) அவர்கள், “மக்களே! என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு காஃபிரின் பாதுகாப்பின் கீழ் ஒருபோதும் இறங்க மாட்டேன். யா அல்லாஹ்! உன்னுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு எங்களைப் பற்றி தெரிவிப்பாயாக” என்று கூறினார்கள். எனவே வில்லாளர்கள் அவர்கள் மீது அம்புகளை எய்து `ஆஸிம் (ரழி) அவர்களை ஷஹீதாக்கினார்கள். அவர்களில் மூவர் கீழே இறங்கி, அவர்களின் வாக்குறுதியையும் உடன்படிக்கையையும் ஏற்று சரணடைந்தார்கள். அவர்கள் குபைப் (ரழி), ஜைத் பின் அத்-ததினா (ரழி) மற்றும் மற்றொரு மனிதர் ஆவார்கள். வில்லாளர்கள் அவர்களைப் பிடித்ததும், அவர்கள் வில்லின் நாண்களை அவிழ்த்து, தங்கள் கைதிகளை அவைகளால் கட்டினார்கள். மூன்றாவது மனிதர், “இது துரோகத்தின் முதல் ஆதாரம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் உங்களுடன் வரமாட்டேன், ஏனெனில் நான் இவர்களைப் பின்பற்றுகிறேன்” என்று கூறினார். (அவர் ஷஹீதாக்கப்பட்ட) தோழர்களைக் குறிப்பிட்டார். வில்லாளர்கள் அவரை இழுத்துச் சென்று அவருடன் போராடினார்கள் (அவர்கள் அவரை ஷஹீதாக்கும் வரை). பின்னர் குபைப் (ரழி) அவர்களையும் ஜைத் பின் அத்-ததினா (ரழி) அவர்களையும் அவர்கள் பிடித்துச் சென்றார்கள். பின்னர் பத்ருப் போரின் நிகழ்வுக்குப் பிறகு அவர்களை மக்காவில் அடிமைகளாக விற்றார்கள். அல்-ஹாரித் பின் `அம்ர் பின் நௌஃபலின் மகன்கள் குபைப் (ரழி) அவர்களை வாங்கினார்கள், ஏனெனில் அவர் பத்ருப் போரின் நாளில் (அவர்களின் தந்தையான) அல்-ஹாரி பின் `அம்ரைக் கொன்றவர். குபைப் (ரழி) அவர்கள், அவரைக் கொல்ல அவர்கள் ஒருமனதாக முடிவு செய்யும் வரை அவர்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு நாள் குபைப் (ரழி) அவர்கள் அல்-ஹாரித்தின் மகள்களில் ஒருவரிடமிருந்து தனது அந்தரங்க முடிகளை மழிப்பதற்காக ஒரு சவரக்கத்தியைக் கடன் வாங்கினார்கள், அவளும் அதை அவருக்குக் கொடுத்தாள். தற்செயலாக, அவள் கவனக்குறைவாக இருந்தபோது, அவளுடைய ஒரு சிறு மகன் அவரிடம் (அதாவது குபைப் (ரழி) அவர்களிடம்) சென்றான். குபைப் (ரழி) அவர்கள் அவனைத் தன் மடியில் அமர வைத்திருந்ததையும், சவரக்கத்தி அவர் கையில் இருந்ததையும் அவள் கண்டாள். அவள் மிகவும் பயந்துபோனதால், குபைப் (ரழி) அவர்கள் அவளுடைய பயத்தைக் கவனித்து, “நான் அவனைக் கொன்றுவிடுவேன் என்று பயப்படுகிறாயா? நான் ஒருபோதும் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். பின்னர் (கதையை விவரிக்கும்போது) அவள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, குபைப் (ரழி) அவர்களை விட சிறந்த கைதியை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஒரு நாள் அவர் இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தபோதும், (அப்போது) மக்காவில் பழங்கள் இல்லாதபோதும், தன் கையில் ஒரு கொத்து திராட்சையை உண்பதை நான் கண்டேன்” என்று கூறினாள். அவள், “அது அல்லாஹ் குபைப் (ரழி) அவர்களுக்கு வழங்கிய உணவு” என்று கூறுவது வழக்கம். அவரை ஷஹீதாக்குவதற்காக மக்கா புனித எல்லையிலிருந்து அல்-ஹில்லுக்கு அவர்கள் அழைத்துச் சென்றபோது, குபைப் (ரழி) அவர்கள் அவர்களிடம், “நான் இரண்டு ரக்அத் தொழுகை செய்ய என்னை அனுமதியுங்கள்” என்று கோரினார்கள். அவர்கள் அவரை அனுமதித்தார்கள், அவர் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் கவலைப்படுகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்று நான் பயப்படாவிட்டால், நான் இன்னும் அதிகமாகத் தொழுதிருப்பேன்” என்று கூறினார்கள். பின்னர் அவர் (அவர்களுக்கு எதிராக சாபமிட்டு) “யா அல்லாஹ்! அவர்களை எண்ணி, ஒவ்வொருவராக அவர்களைக் கொல்வாயாக, அவர்களில் எவரையும் விட்டுவிடாதே” என்று கூறினார். பின்னர் அவர் ஓதினார்: “நான் ஒரு முஸ்லிமாக ஷஹீதாக்கப்படுவதால், அல்லாஹ்வின் பொருட்டு நான் எந்த வழியில் என் மரணத்தைப் பெறுகிறேன் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, ஏனெனில் இது அல்லாஹ்வின் பாதையில் உள்ளது. அவன் நாடினால், என் உடலின் வெட்டப்பட்ட உறுப்புகளை அவன் ஆசீர்வதிப்பான்.” பின்னர் அபூ ஸர்வா, `உக்பா பின் அல்-ஹாரித் அவரிடம் சென்று அவரைக் கொன்றார். சிறைப்பிடிக்கப்பட்டு (கொல்லப்படுவதற்கு முன்பு) ஷஹீதாக்கப்படும் எந்தவொரு முஸ்லிமுக்காகவும் தொழுவும் பாரம்பரியத்தை ஏற்படுத்தியவர் குபைப் (ரழி) அவர்கள்தான். நபி (ஸல்) அவர்கள், அந்தப் பத்து உளவாளிகளுக்கும் என்ன நடந்தது என்பதை அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட அதே நாளில் தம் தோழர்களுக்குத் தெரிவித்தார்கள். `ஆஸிம் பின் தாபித் (ரழி) அவர்களின் மரணத்தைப் பற்றி தெரிவிக்கப்பட்ட சில குறைஷி மக்கள், அவருடைய மரணம் உறுதியாகத் தெரியவருவதற்காக அவருடைய உடலின் ஒரு பகுதியைக் கொண்டுவர சில தூதர்களை அனுப்பினார்கள். (ஏனெனில், ஆஸிம் (ரழி) அவர்கள் முன்பு பத்ருப் போரில்) அவர்களின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார். ஆனால் அல்லாஹ் `ஆஸிம் (ரழி) அவர்களின் இறந்த உடலைப் பாதுகாக்க ஒரு தேனீக் கூட்டத்தை அனுப்பினான். அவை (குறைஷி) தூதர்களிடமிருந்து அவரைப் பாதுகாத்தன. அவர்களால் அவருடைய உடலிலிருந்து எதையும் வெட்ட முடியவில்லை. கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: (இந்த ஹதீஸில்) முராரா பின் அர்-ரபீஉ அல்-அம்ரீ மற்றும் ஹிலால் பின் உமைய்யா அல்-வாகிஃபீ ஆகிய இரு நல்ல மனிதர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர், அவர்கள் இருவரும் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4086ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سُفْيَانَ الثَّقَفِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَرِيَّةً عَيْنًا، وَأَمَّرَ عَلَيْهِمْ عَاصِمَ بْنَ ثَابِتٍ ـ وَهْوَ جَدُّ عَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانَ بَيْنَ عُسْفَانَ وَمَكَّةَ ذُكِرُوا لَحِيٍّ مِنْ هُذَيْلٍ، يُقَالُ لَهُمْ بَنُو لَحْيَانَ، فَتَبِعُوهُمْ بِقَرِيبٍ مِنْ مِائَةِ رَامٍ، فَاقْتَصُّوا آثَارَهُمْ حَتَّى أَتَوْا مَنْزِلاً نَزَلُوهُ فَوَجَدُوا فِيهِ نَوَى تَمْرٍ تَزَوَّدُوهُ مِنَ الْمَدِينَةِ فَقَالُوا هَذَا تَمْرُ يَثْرِبَ‏.‏ فَتَبِعُوا آثَارَهُمْ حَتَّى لَحِقُوهُمْ، فَلَمَّا انْتَهَى عَاصِمٌ وَأَصْحَابُهُ لَجَئُوا إِلَى فَدْفَدٍ، وَجَاءَ الْقَوْمُ فَأَحَاطُوا بِهِمْ، فَقَالُوا لَكُمُ الْعَهْدُ وَالْمِيثَاقُ إِنْ نَزَلْتُمْ إِلَيْنَا أَنْ لاَ نَقْتُلَ مِنْكُمْ رَجُلاً‏.‏ فَقَالَ عَاصِمٌ أَمَّا أَنَا فَلاَ أَنْزِلُ فِي ذِمَّةِ كَافِرٍ، اللَّهُمَّ أَخْبِرْ عَنَّا نَبِيَّكَ‏.‏ فَقَاتَلُوهُمْ حَتَّى قَتَلُوا عَاصِمًا فِي سَبْعَةِ نَفَرٍ بِالنَّبْلِ، وَبَقِيَ خُبَيْبٌ، وَزَيْدٌ وَرَجُلٌ آخَرُ، فَأَعْطَوْهُمُ الْعَهْدَ وَالْمِيثَاقَ، فَلَمَّا أَعْطَوْهُمُ الْعَهْدَ وَالْمِيثَاقَ نَزَلُوا إِلَيْهِمْ، فَلَمَّا اسْتَمْكَنُوا مِنْهُمْ حَلُّوا أَوْتَارَ قِسِيِّهِمْ فَرَبَطُوهُمْ بِهَا‏.‏ فَقَالَ الرَّجُلُ الثَّالِثُ الَّذِي مَعَهُمَا هَذَا أَوَّلُ الْغَدْرِ‏.‏ فَأَبَى أَنْ يَصْحَبَهُمْ فَجَرَّرُوهُ وَعَالَجُوهُ عَلَى أَنْ يَصْحَبَهُمْ، فَلَمْ يَفْعَلْ، فَقَتَلُوهُ، وَانْطَلَقُوا بِخُبَيْبٍ وَزَيْدٍ حَتَّى بَاعُوهُمَا بِمَكَّةَ، فَاشْتَرَى خُبَيْبًا بَنُو الْحَارِثِ بْنِ عَامِرِ بْنِ نَوْفَلٍ، وَكَانَ خُبَيْبٌ هُوَ قَتَلَ الْحَارِثَ يَوْمَ بَدْرٍ، فَمَكَثَ عِنْدَهُمْ أَسِيرًا حَتَّى إِذَا أَجْمَعُوا قَتْلَهُ اسْتَعَارَ مُوسَى مِنْ بَعْضِ بَنَاتِ الْحَارِثِ أَسْتَحِدَّ بِهَا فَأَعَارَتْهُ، قَالَتْ فَغَفَلْتُ عَنْ صَبِيٍّ لِي فَدَرَجَ إِلَيْهِ حَتَّى أَتَاهُ، فَوَضَعَهُ عَلَى فَخِذِهِ، فَلَمَّا رَأَيْتُهُ فَزِعْتُ فَزْعَةً عَرَفَ ذَاكَ مِنِّي، وَفِي يَدِهِ الْمُوسَى فَقَالَ أَتَخْشَيْنَ أَنْ أَقْتُلَهُ مَا كُنْتُ لأَفْعَلَ ذَاكِ إِنْ شَاءَ اللَّهُ‏.‏ وَكَانَتْ تَقُولُ مَا رَأَيْتُ أَسِيرًا قَطُّ خَيْرًا مِنْ خُبَيْبٍ، لَقَدْ رَأَيْتُهُ يَأْكُلُ مِنْ قِطْفِ عِنَبٍ، وَمَا بِمَكَّةَ يَوْمَئِذٍ ثَمَرَةٌ، وَإِنَّهُ لَمُوثَقٌ فِي الْحَدِيدِ، وَمَا كَانَ إِلاَّ رِزْقٌ رَزَقَهُ اللَّهُ، فَخَرَجُوا بِهِ مِنَ الْحَرَمِ، لِيَقْتُلُوهُ فَقَالَ دَعُونِي أُصَلِّي رَكْعَتَيْنِ‏.‏ ثُمَّ انْصَرَفَ إِلَيْهِمْ فَقَالَ لَوْلاَ أَنْ تَرَوْا أَنَّ مَا بِي جَزَعٌ مِنَ الْمَوْتِ، لَزِدْتُ‏.‏ فَكَانَ أَوَّلَ مَنْ سَنَّ الرَّكْعَتَيْنِ عِنْدَ الْقَتْلِ هُوَ، ثُمَّ قَالَ اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا ثُمَّ قَالَ مَا أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا عَلَى أَىِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ ثُمَّ قَامَ إِلَيْهِ عُقْبَةُ بْنُ الْحَارِثِ فَقَتَلَهُ، وَبَعَثَ قُرَيْشٌ إِلَى عَاصِمٍ لِيُؤْتَوْا بِشَىْءٍ مِنْ جَسَدِهِ يَعْرِفُونَهُ، وَكَانَ عَاصِمٌ قَتَلَ عَظِيمًا مِنْ عُظَمَائِهِمْ يَوْمَ بَدْرٍ، فَبَعَثَ اللَّهُ عَلَيْهِ مِثْلَ الظُّلَّةِ مِنَ الدَّبْرِ، فَحَمَتْهُ مِنْ رُسُلِهِمْ، فَلَمْ يَقْدِرُوا مِنْهُ عَلَى شَىْءٍ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சாரணர் படையை (உளவாளிகளாக) அனுப்பினார்கள். அவர்களுக்கு ஆஸிம் பின் தாபித் (ரழி) அவர்களைத் தலைவராக்கினார்கள். இவர் ஆஸிம் பின் உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்களின் பாட்டனார் ஆவார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். உஸ்ஃபான் மற்றும் மக்காவுக்கு இடைப்பட்ட இடத்தை அவர்கள் அடைந்தபோது, ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூ லிஹ்யான் என்ற கூட்டத்தாருக்கு இவர்களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. எனவே, சுமார் நூறு வில்லாளர்களுடன் அவர்கள் இவர்களைப் பின்தொடர்ந்தார்கள். அவர்களின் காலடித் தடங்களைப் பின்தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த ஒரு இடத்தை அடைந்தபோது, அங்கே அவர்கள் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம்பழக் கொட்டைகளைக் கண்டார்கள். உடனே அவர்கள், "இது யத்ரிப் (மதீனா) நகரின் பேரீச்சம்பழம்" என்று கூறி, (மீண்டும்) அவர்களின் தடங்களைப் பின்தொடர்ந்து அவர்களை அடைந்தார்கள்.

ஆஸிம் (ரழி) அவர்களையும் அவர்களது தோழர்களையும் அவர்கள் நெருங்கியபோது, ஸஹாபாக்கள் ஒரு மேட்டுப்பாங்கான இடத்தில் தஞ்சம் புகுந்தனர். அந்த (எதிரிக்) கூட்டத்தார் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்கள், "நீங்கள் எங்களிடம் இறங்கி வந்தால், உங்களில் எவரையும் நாங்கள் கொல்ல மாட்டோம் என்பதற்கு உங்களுக்கு ஓர் உடன்படிக்கையும் வாக்குறுதியும் உண்டு" என்று கூறினார்கள்.

அதற்கு ஆஸிம் (ரழி), "என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு காஃபிரின் பாதுகாப்பில் இறங்க மாட்டேன். யா அல்லாஹ்! உமது தூதர் (ஸல்) அவர்களுக்கு எங்களைப் பற்றித் தெரிவிப்பாயாக" என்று கூறினார்கள். எனவே அவர்கள் இவர்களுடன் போரிட்டார்கள். ஆஸிம் (ரழி) அவர்களையும் ஏழு தோழர்களையும் அம்புகளால் எய்து கொன்றார்கள். குபைப் (ரழி), ஸைத் (ரழி) மற்றும் இன்னொரு மனிதர் மட்டும் எஞ்சியிருந்தார்கள். எதிரிகள் அவர்களுக்கு உடன்படிக்கையையும் வாக்குறுதியையும் கொடுத்தார்கள். அவர்களுக்கு உடன்படிக்கை அளிக்கப்பட்டதும் அவர்கள் கீழே இறங்கி வந்தார்கள்.

அவர்கள் இவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததும், தங்கள் விற்களின் நாண்களைக் கழற்றி, அதனைக் கொண்டு இவர்களைக் கட்டினார்கள். அவர்களுடன் இருந்த மூன்றாவது மனிதர், "இது (உடன்படிக்கையில் செய்யப்பட்ட) முதல் துரோகம்" என்று கூறி, அவர்களுடன் செல்ல மறுத்தார். அவர்கள் அவரை இழுத்துச் சென்று, தங்களுடன் வருமாறு கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்; எனவே அவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள்.

பின்னர் அவர்கள் குபைப் (ரழி) அவர்களையும் ஸைத் (ரழி) அவர்களையும் மக்காவில் கொண்டு போய் விற்கும் வரை அழைத்துச் சென்றார்கள். பனூ அல்-ஹாரித் பின் ஆமிர் பின் நௌஃபல் கூட்டத்தார் குபைப் (ரழி) அவர்களை விலைக்கு வாங்கினார்கள். பத்ர் போரில் அல்-ஹாரிதைக் கொன்றவர் குபைப் (ரழி) அவர்கள்தான். அவரைக் கொல்ல அவர்கள் முடிவு செய்யும் வரை குபைப் (ரழி) அவர்கள் சிறிது காலம் அவர்களிடம் கைதியாக இருந்தார்கள்.

(அப்போது) குபைப் (ரழி) அவர்கள் அல்-ஹாரித்தின் மகள்களில் ஒருவரிடமிருந்து, மறைவிட முடிகளை மழிக்க ஒரு சவரக்கத்தியைக் இரவலாகக் கேட்டார்கள். அவளும் அதை அவருக்குக் கொடுத்தாள். அவள் (பின்னர்) கூறினாள்: "நான் எனது சிறு குழந்தையைப் பற்றிக் கவனக்குறைவாக இருந்தேன். அக்குழந்தை குபைப் (ரழி) அவர்களை நோக்கிச் சென்றது. அக்குழந்தை அவரிடம் சென்றதும், அவர் அதைத் தன் தொடையில் அமர்த்தினார். நான் அதைப் பார்த்தபோது மிகவும் அஞ்சினேன். என் அச்சத்தை குபைப் அறிந்து கொண்டார். அப்போது அவர் கையில் சவரக்கத்தி இருந்தது. அவர், 'நான் இக்குழந்தையைக் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுகிறாயா? இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்), நான் அப்படிச் செய்ய மாட்டேன்' என்று கூறினார்."

அவள் கூறுவாள்: "குபைப் (ரழி) அவர்களை விடச் சிறந்த ஒரு கைதியை நான் பார்த்ததே இல்லை. ஒருமுறை அவர் திராட்சைக் குலையிலிருந்து (பழம்) சாப்பிடுவதை நான் பார்த்தேன். அப்போது மக்காவில் பழங்கள் எதுவும் கிடைக்கவில்லை; மேலும் அவர் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தார். நிச்சயமாக, அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய உணவேயன்றி வேறில்லை."

அவரைக் கொல்வதற்காக அவர்கள் (மக்காவின்) புனித எல்லைக்கு (ஹரம்) வெளியே அழைத்துச் சென்றார்கள். அவர், "என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள்" என்று கூறினார். (தொழுதுவிட்டு) அவர்களிடம் திரும்பி வந்து, "நான் மரணத்திற்குப் பயப்படுகிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால், நான் (தொழுகையை) அதிகப்படுத்தியிருப்பேன்" என்று கூறினார். கொலை செய்யப்படும் போது இரண்டு ரக்அத் தொழும் வழிமுறையை முதன்முதலில் ஏற்படுத்தியவர் அவர்தான்.

பின்னர் அவர், "அல்லாஹ்வே! இவர்களை எண்ணிக்கொள்வாயாக (அழிப்பாயாக)" என்று கூறிவிட்டு, (கவிதை பாடினார்):

"நான் ஒரு முஸ்லிமாக கொல்லப்படும்போது, (அல்லாஹ்வின் பொருட்டு) நான் எந்தப் பக்கத்தில் சாய்ந்து விழுகிறேன் என்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை.
இது அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவே (நிகழ்கிறது). அவன் நாடினால், துண்டு துண்டாக வெட்டப்பட்ட என் உடல் உறுப்புகளின் மீது அவன் பரக்கத் செய்வான்."

பின்னர் உக்பா பின் அல்-ஹாரித் எழுந்து அவரைக் கொன்றார்.

குறைஷிகள் ஆஸிம் (ரழி) அவர்களின் உடலிலிருந்து ஒரு பகுதியை (அடையாளத்திற்காக) கொண்டு வருமாறு சிலரை அனுப்பினார்கள். ஏனெனில் பத்ர் நாளன்று ஆஸிம் (ரழி) அவர்கள் அவர்களின் தலைவர்களில் ஒருவரைக் கொன்றிருந்தார்கள். ஆனால் அல்லாஹ், குளவிக் கூட்டத்தை ஒரு மேகத்தைப் போல அவர் மீது அனுப்பினான். அது அவர்களின் ஆட்களிடமிருந்து அவருடைய உடலைப் பாதுகாத்தது. எனவே அவர்களால் அவரது உடலில் எதையும் நெருங்க முடியவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5191ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ أَزَلْ حَرِيصًا أَنْ أَسْأَلَ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَنِ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَيْنِ قَالَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ حَتَّى حَجَّ وَحَجَجْتُ مَعَهُ، وَعَدَلَ وَعَدَلْتُ مَعَهُ بِإِدَاوَةٍ، فَتَبَرَّزَ، ثُمَّ جَاءَ فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ مِنْهَا فَتَوَضَّأَ فَقُلْتُ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَانِ قَالَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ قَالَ وَاعَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ، هُمَا عَائِشَةُ وَحَفْصَةُ‏.‏ ثُمَّ اسْتَقْبَلَ عُمَرُ الْحَدِيثَ يَسُوقُهُ قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ، وَهُمْ مِنْ عَوَالِي الْمَدِينَةِ، وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِمَا حَدَثَ مِنْ خَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنَ الْوَحْىِ أَوْ غَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى الأَنْصَارِ إِذَا قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَطَفِقَ نِسَاؤُنَا يَأْخُذْنَ مِنْ أَدَبِ نِسَاءِ الأَنْصَارِ، فَصَخِبْتُ عَلَى امْرَأَتِي فَرَاجَعَتْنِي فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي قَالَتْ وَلِمَ تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيُرَاجِعْنَهُ، وَإِنَّ إِحْدَاهُنَّ لَتَهْجُرُهُ الْيَوْمَ حَتَّى اللَّيْلِ‏.‏ فَأَفْزَعَنِي ذَلِكَ وَقُلْتُ لَهَا وَقَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْهُنَّ‏.‏ ثُمَّ جَمَعْتُ عَلَىَّ ثِيَابِي فَنَزَلْتُ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ لَهَا أَىْ حَفْصَةُ أَتُغَاضِبُ إِحْدَاكُنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم الْيَوْمَ حَتَّى اللَّيْلِ قَالَتْ نَعَمْ‏.‏ فَقُلْتُ قَدْ خِبْتِ وَخَسِرْتِ، أَفَتَأْمَنِينَ أَنْ يَغْضَبَ اللَّهُ لِغَضَبِ رَسُولِهِ صلى الله عليه وسلم فَتَهْلِكِي لاَ تَسْتَكْثِرِي النَّبِيَّ صلى الله عليه وسلم وَلاَ تُرَاجِعِيهِ فِي شَىْءٍ، وَلاَ تَهْجُرِيهِ، وَسَلِينِي مَا بَدَا لَكِ، وَلاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ أَوْضَأَ مِنْكِ، وَأَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ يُرِيدُ عَائِشَةَ ـ قَالَ عُمَرُ وَكُنَّا قَدْ تَحَدَّثْنَا أَنَّ غَسَّانَ تُنْعِلُ الْخَيْلَ لِغَزْوِنَا، فَنَزَلَ صَاحِبِي الأَنْصَارِيُّ يَوْمَ نَوْبَتِهِ، فَرَجَعَ إِلَيْنَا عِشَاءً فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا وَقَالَ أَثَمَّ هُوَ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ، فَقَالَ قَدْ حَدَثَ الْيَوْمَ أَمْرٌ عَظِيمٌ‏.‏ قُلْتُ مَا هُوَ، أَجَاءَ غَسَّانُ قَالَ لاَ بَلْ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَأَهْوَلُ، طَلَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ‏.‏ فَقُلْتُ خَابَتْ حَفْصَةُ وَخَسِرَتْ، قَدْ كُنْتُ أَظُنُّ هَذَا يُوشِكُ أَنْ يَكُونَ، فَجَمَعْتُ عَلَىَّ ثِيَابِي فَصَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَشْرُبَةً لَهُ، فَاعْتَزَلَ فِيهَا، وَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَإِذَا هِيَ تَبْكِي فَقُلْتُ مَا يُبْكِيكِ أَلَمْ أَكُنْ حَذَّرْتُكِ هَذَا أَطَلَّقَكُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَتْ لاَ أَدْرِي هَا هُوَ ذَا مُعْتَزِلٌ فِي الْمَشْرُبَةِ‏.‏ فَخَرَجْتُ فَجِئْتُ إِلَى الْمِنْبَرِ فَإِذَا حَوْلَهُ رَهْطٌ يَبْكِي بَعْضُهُمْ، فَجَلَسْتُ مَعَهُمْ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ، فَجِئْتُ الْمَشْرُبَةَ الَّتِي فِيهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ لِغُلاَمٍ لَهُ أَسْوَدَ اسْتَأْذِنْ لِعُمَرَ‏.‏ فَدَخَلَ الْغُلاَمُ فَكَلَّمَ النَّبِيَّ صلى الله عليه وسلم ثُمَّ رَجَعَ فَقَالَ كَلَّمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَكَرْتُكَ لَهُ، فَصَمَتَ‏.‏ فَانْصَرَفْتُ حَتَّى جَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ الْمِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ فَجِئْتُ فَقُلْتُ لِلْغُلاَمِ اسْتَأْذِنْ لِعُمَرَ‏.‏ فَدَخَلَ ثُمَّ رَجَعَ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ‏.‏ فَرَجَعْتُ فَجَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ الْمِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ فَجِئْتُ الْغُلاَمَ فَقُلْتُ اسْتَأْذِنْ لِعُمَرَ‏.‏ فَدَخَلَ ثُمَّ رَجَعَ إِلَىَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ‏.‏ فَلَمَّا وَلَّيْتُ مُنْصَرِفًا ـ قَالَ ـ إِذَا الْغُلاَمُ يَدْعُونِي فَقَالَ قَدْ أَذِنَ لَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ، قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ يَا رَسُولَ اللَّهِ أَطَلَّقْتَ نِسَاءَكَ‏.‏ فَرَفَعَ إِلَىَّ بَصَرَهُ فَقَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ‏.‏ ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَنِي، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ إِذَا قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَنِي وَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ لَهَا لاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ أَوْضَأَ مِنْكِ وَأَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُرِيدُ عَائِشَةَ فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم تَبَسُّمَةً أُخْرَى، فَجَلَسْتُ حِينَ رَأَيْتُهُ تَبَسَّمَ، فَرَفَعْتُ بَصَرِي فِي بَيْتِهِ، فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِي بَيْتِهِ شَيْئًا يَرُدُّ الْبَصَرَ غَيْرَ أَهَبَةٍ ثَلاَثَةٍ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فَلْيُوَسِّعْ عَلَى أُمَّتِكَ، فَإِنَّ فَارِسًا وَالرُّومَ قَدْ وُسِّعَ عَلَيْهِمْ، وَأُعْطُوا الدُّنْيَا وَهُمْ لاَ يَعْبُدُونَ اللَّهَ‏.‏ فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَكَانَ مُتَّكِئًا‏.‏ فَقَالَ ‏"‏ أَوَفِي هَذَا أَنْتَ يَا ابْنَ الْخَطَّابِ، إِنَّ أُولَئِكَ قَوْمٌ عُجِّلُوا طَيِّبَاتِهِمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ اسْتَغْفِرْ لِي‏.‏ فَاعْتَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ مِنْ أَجْلِ ذَلِكَ الْحَدِيثِ حِينَ أَفْشَتْهُ حَفْصَةُ إِلَى عَائِشَةَ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً وَكَانَ قَالَ ‏"‏ مَا أَنَا بِدَاخِلٍ عَلَيْهِنَّ شَهْرًا ‏"‏‏.‏ مِنْ شِدَّةِ مَوْجِدَتِهِ عَلَيْهِنَّ حِينَ عَاتَبَهُ اللَّهُ، فَلَمَّا مَضَتْ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً دَخَلَ عَلَى عَائِشَةَ فَبَدَأَ بِهَا فَقَالَتْ لَهُ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ كُنْتَ قَدْ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا، وَإِنَّمَا أَصْبَحْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ لَيْلَةً أَعُدُّهَا عَدًّا‏.‏ فَقَالَ ‏"‏ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ ‏"‏‏.‏ فَكَانَ ذَلِكَ الشَّهْرُ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً‏.‏ قَالَتْ عَائِشَةُ ثُمَّ أَنْزَلَ اللَّهُ تَعَالَى آيَةَ التَّخَيُّرِ فَبَدَأَ بِي أَوَّلَ امْرَأَةٍ مِنْ نِسَائِهِ فَاخْتَرْتُهُ، ثُمَّ خَيَّرَ نِسَاءَهُ كُلَّهُنَّ فَقُلْنَ مِثْلَ مَا قَالَتْ عَائِشَةُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் இருவர் குறித்து அல்லாஹ், ‘{இன் ததூபா இ(ல்)லல்லாஹி ஃபகத் ஸகத் குலூபுகுமா}’ (நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (நன்று); ஏனெனில், உங்கள் இருவரின் உள்ளங்களும் (அவருக்கு மாறுசெய்வதில்) சாய்ந்துவிட்டன) என்று கூறிய அந்தப் பெண்கள் யார் என்று கேட்பதற்கு நான் நீண்ட நாட்களாக ஆர்வமாக இருந்தேன். அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை (நான் காத்திருந்தேன்); நானும் அவர்களுடன் ஹஜ் செய்தேன். (வழியில்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக ஒதுங்கியபோது, நானும் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் ஒதுங்கினேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டு வந்தபோது, நான் அவர்களின் கைகளில் தண்ணீர் ஊற்றினேன்; அவர்கள் உளூச் செய்தார்கள்.

அப்போது நான், "முஃமின்களின் தளபதியே! நபி (ஸல்) அவர்களின் மனைவியரில், ‘{இன் ததூபா இ(ல்)லல்லாஹி ஃபகத் ஸகத் குலூபுகுமா}’ என்று அல்லாஹ் கூறிய அந்த இரண்டு பெண்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்! அவர்கள் ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் ஆவர்" என்று கூறினார்கள்.

பிறகு உமர் (ரழி) அந்தச் சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார்கள்: "நானும், மதீனாவின் மேட்டுப்பகுதியான 'அவாலி'யில் வசித்து வந்த பனூ உமைய்யா பின் ஸைத் கிளையைச் சேர்ந்த என் அன்சாரித் தோழர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் மாறி மாறிச் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் செல்லும்போது வஹீ (இறைச்செய்தி) மற்றும் பிற செய்திகள் குறித்து அன்று நிகழ்ந்தவற்றை அவரிடம் தெரிவிப்பேன். அவர் செல்லும்போது அவரும் அவ்வாறே செய்வார்.

நாங்கள் குறைஷியர், பெண்களை அடக்கி ஆள்பவர்களாக இருந்தோம். ஆனால் நாங்கள் அன்சாரிகளிடம் வந்தபோது, அங்கே பெண்கள் ஆண்களை மிகைத்து நடப்பவர்களாக இருக்கக் கண்டோம். எங்கள் பெண்கள் அந்த அன்சாரிப் பெண்களின் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளலானார்கள்.

நான் என் மனைவியிடம் கோபப்பட்டேன். அவள் எனக்குப் பதிலுக்குப் பதில் பேசினாள். அவள் என்னை எதிர்த்துப் பேசுவதை நான் ஆட்சேபித்தேன். அதற்கு அவள், 'நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை ஏன் மறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அவர்களை எதிர்த்துப் பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் (கோபத்தின் காரணமாக) காலை முதல் இரவு வரை நபி (ஸல்) அவர்களுடன் பேசாமல் கூட இருக்கின்றார்' என்று கூறினாள்.

அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் அவளிடம், 'அவர்களில் யார் அப்படிச் செய்தாரோ அவர் நஷ்டமடைந்துவிட்டார்' என்று கூறினேன். பிறகு ஆடையை அணிந்துகொண்டு கீழே இறங்கி (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். 'ஹஃப்ஸாவே! உங்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் (கோபத்தின் காரணமாக) காலை முதல் இரவு வரை பேசாமல் இருப்பதுண்டா?' என்று கேட்டேன். அவர், 'ஆம்' என்றார். 'நீ நஷ்டமடைந்துவிட்டாய்; அழிந்துவிட்டாய்! அல்லாஹ்வின் தூதருடைய கோபத்திற்காக அல்லாஹ் கோபப்படுவதிலிருந்து நீ அச்சமற்று இருக்கிறாயா? (அப்படியாயின்) நீ அழிந்துவிடுவாய்! நபி (ஸல்) அவர்களிடம் அதிகமாக எதையும் கேட்காதே; அவர்களை எதிர்த்துப் பேசாதே; அவர்களுடன் பேசுவதை நிறுத்தாதே. உனக்குத் தேவையானதை என்னிடம் கேள். உன்னுடைய தோழி (சக்களத்தி - அதாவது ஆயிஷா) உன்னை விட அழகானவராகவும், நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானவராகவும் இருப்பது உன்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்று கூறினேன்."

உமர் (ரழி) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்: "ஃகஸ்ஸான் (எனும் மன்னன்) எங்கள் மீது படையெடுக்கத் தன் குதிரைகளைத் தயார்படுத்துவதாக நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இந்நிலையில் (முறைப்படி நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்த) என் அன்சாரித் தோழர், திரும்பி வந்து இரவு நேரத்தில் என் கதவை பலமாகத் தட்டினார். 'அவர் இங்கே உள்ளாரா?' என்று (சத்தமாகக்) கேட்டார். நான் திடுக்கிட்டு அவரிடம் வெளியே வந்தேன். அவர், 'இன்று ஒரு பெரிய விஷயம் நடந்துவிட்டது' என்றார். 'என்ன அது? ஃகஸ்ஸான் வந்துவிட்டானா?' என்று நான் கேட்டேன். அவர், 'இல்லை; அதைவிடப் பெரியதும் பயங்கரமானதுமான ஒன்று நடந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள்' என்று கூறினார்.

'ஹஃப்ஸா நஷ்டமடைந்துவிட்டாள்; அழிந்துவிட்டாள். இப்படி ஒன்று நடக்கும் என நான் முன்பே நினைத்தேன்' என்று நான் (எனக்குள்) கூறிக்கொண்டேன். பிறகு ஆடையை அணிந்துகொண்டு (பள்ளிக்குச் சென்று) நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் (இல்லத்திற்கு மேலிருந்த) தமது தனி அறைக்குச் (மஷ்ருபா) சென்று ஒதுங்கிக்கொண்டார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன்; அவர் அழுதுகொண்டிருந்தார். 'ஏன் அழுகிறாய்? நான் முன்பே உனக்கு எச்சரிக்கவில்லையா? நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாகரத்துச் செய்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'எனக்குத் தெரியாது. இதோ அவர்கள் அந்தத் தனி அறையில் ஒதுங்கியிருக்கிறார்கள்' என்றார்.

நான் வெளியே வந்து மிம்பர் (மேடை) அருகே சென்றேன். அங்கே சிலர் அழுதுகொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்தேன். பிறகு என்னால் துயரத்தைத் தாங்க முடியவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் இருந்த அறைக்குச் சென்று, அவர்களின் கறுப்பு நிறப் பணியாளரிடம், "உமருக்காக அனுமதி கேள்" என்றேன். அவர் உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசிவிட்டுத் திரும்பி வந்து, "நான் உங்களுக்காக அனுமதி கேட்டேன்; அவர்கள் மவுனமாக இருந்தார்கள்" என்றார்.

நான் திரும்பி வந்து மிம்பர் அருகே இருந்தவர்களுடன் அமர்ந்தேன். மீண்டும் என்னால் பொறுக்க முடியவில்லை. அந்தப் பணியாளரிடம் வந்து, "உமருக்காக அனுமதி கேள்" என்றேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, "நான் உங்களுக்காக அனுமதி கேட்டேன்; அவர்கள் மவுனமாக இருந்தார்கள்" என்றார். நான் திரும்பி வந்து மிம்பர் அருகே இருந்தவர்களுடன் அமர்ந்தேன். மீண்டும் என்னால் பொறுக்க முடியவில்லை. அந்தப் பணியாளரிடம் வந்து, "உமருக்காக அனுமதி கேள்" என்றேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, "நான் உங்களுக்காக அனுமதி கேட்டேன்; அவர்கள் மவுனமாக இருந்தார்கள்" என்றார்.

நான் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தப் பணியாளர் என்னை அழைத்து, "நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளார்கள்" என்றார். நான் உள்ளே நுழைந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஈச்சம் பாயின் மீது படுத்திருந்தார்கள். அவர்களுக்கும் பாய்க்கும் இடையே விரிப்பு ஏதுமில்லை. பாயின் தழும்புகள் அவர்களின் விலாவில் பதிந்திருந்தன. ஈச்ச நாரினால் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்திருந்தார்கள்.

நான் ஸலாம் கூறிவிட்டு, நின்றவாறே, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மனைவியரை விவாகரத்துச் செய்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர்கள் தம் பார்வையை என் பக்கம் திருப்பி, "இல்லை" என்றார்கள். நான் "அல்லாஹு அக்பர்!" என்றேன்.

பிறகு நான் நின்றவாறே (அவர்களை மகிழ்விப்பதற்காக), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் குறைஷியர்; பெண்களை அடக்கி ஆள்பவர்களாக இருந்தோம். மதீனாவிற்கு வந்தபோது, அங்கே பெண்கள் ஆண்களை மிகைத்து நடப்பதைக் கண்டோம்..." என்று தொடங்கி (என் மனைவியுடனான சம்பவத்தைச்) சொன்னேன். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு, நான் ஹஃப்ஸாவிடம் சென்று, "உன் தோழி (ஆயிஷா) உன்னை விட அழகானவராகவும், நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பது உன்னை ஏமாற்றிவிட வேண்டாம் என்று எச்சரித்தேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் புன்னகைத்தார்கள்.

அவர்கள் சிரிப்பதைக் கண்டதும் நான் அமர்ந்தேன். நான் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! பதனிடப்பட்ட மூன்று தோல்களைத் தவிரப் பார்வையை ஈர்க்கக்கூடிய வேறெதையும் நான் அங்கே காணவில்லை. நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமுதாயத்திற்குச் செல்வ வளம் வழங்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். பாரசீகர்களுக்கும் ரோமானியர்களுக்கும் (இறைவனை வணங்காதிருந்தும்) வளம் வழங்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு உலகம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினேன்.

(அதுவரை) சாய்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் (நிமிர்ந்து) அமர்ந்து, "கத்தாபின் மகனே! நீயும் இதே சிந்தனையில்தானா இருக்கிறாய்? அவர்கள், தங்கள் நற்கூலிகள் உலக வாழ்விலேயே அவசரமாகக் கொடுக்கப்பட்டுவிட்ட சமூகத்தினர் ஆவர்" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என் அறியாமைக்காக) எனக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்றேன்.

ஹஃப்ஸா அந்தச் செய்தியை (ஆயிஷாவிடம்) பரப்பிய காரணத்தால், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் (அவர்கள் மீது ஏற்பட்ட) கோபத்தின் காரணமாக, ஒரு மாதம் அவர்களோடு சேருவதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்கள். இன்றோடு இருபத்தொன்பது நாட்கள்தாம் ஆகின்றன; நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகும்" என்றார்கள். அந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதாக இருந்தது.

ஆயிஷா (ரழி) கூறினார்கள்: "பிறகு அல்லாஹ் 'விருப்பத் தேர்வு' (தக்யிர்) குறித்த வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரில் என்னிடம் (கேட்க) ஆரம்பித்தார்கள். நான் அவர்களையே தேர்ந்தெடுத்தேன். பிறகு தம் மற்ற மனைவியருக்கும் விருப்பத் தேர்வை வழங்கினார்கள்; அவர்களும் ஆயிஷா கூறியவாறே கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1479 e, 1475 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، - وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ - قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمْ أَزَلْ حَرِيصًا أَنْأَسْأَلَ عُمَرَ عَنِ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَيْنِ قَالَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ حَتَّى حَجَّ عُمَرُ وَحَجَجْتُ مَعَهُ فَلَمَّا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ عَدَلَ عُمَرُ وَعَدَلْتُ مَعَهُ بِالإِدَاوَةِ فَتَبَرَّزَ ثُمَّ أَتَانِي فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ فَتَوَضَّأَ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَانِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمَا ‏{‏ إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ قَالَ عُمَرُ وَاعَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ - قَالَ الزُّهْرِيُّ كَرِهَ وَاللَّهِ مَا سَأَلَهُ عَنْهُ وَلَمْ يَكْتُمْهُ - قَالَ هِيَ حَفْصَةُ وَعَائِشَةُ ‏.‏ ثُمَّ أَخَذَ يَسُوقُ الْحَدِيثَ قَالَ كُنَّا مَعْشَرَ قُرَيْشٍ قَوْمًا نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ وَجَدْنَا قَوْمًا تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ فَطَفِقَ نِسَاؤُنَا يَتَعَلَّمْنَ مِنْ نِسَائِهِمْ - قَالَ - وَكَانَ مَنْزِلِي فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ بِالْعَوَالِي فَتَغَضَّبْتُ يَوْمًا عَلَى امْرَأَتِي فَإِذَا هِيَ تُرَاجِعُنِي فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي ‏.‏ فَقَالَتْ مَا تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيُرَاجِعْنَهُ وَتَهْجُرُهُ إِحْدَاهُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ ‏.‏ فَانْطَلَقْتُ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ أَتُرَاجِعِينَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ نَعَمْ ‏.‏ فَقُلْتُ أَتَهْجُرُهُ إِحْدَاكُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ قَالَتْ نَعَمْ ‏.‏ قُلْتُ قَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْكُنَّ وَخَسِرَ أَفَتَأْمَنُ إِحْدَاكُنَّ أَنْ يَغْضَبَ اللَّهُ عَلَيْهَا لِغَضَبِ رَسُولِهِ صلى الله عليه وسلم فَإِذَا هِيَ قَدْ هَلَكَتْ لاَ تُرَاجِعِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ تَسْأَلِيهِ شَيْئًا وَسَلِينِي مَا بَدَا لَكِ وَلاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْسَمَ وَأَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْكِ - يُرِيدُ عَائِشَةَ - قَالَ وَكَانَ لِي جَارٌ مِنَ الأَنْصَارِ فَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا فَيَأْتِينِي بِخَبَرِ الْوَحْىِ وَغَيْرِهِ وَآتِيهِ بِمِثْلِ ذَلِكَ وَكُنَّا نَتَحَدَّثُ أَنَّ غَسَّانَ تُنْعِلُ الْخَيْلَ لِتَغْزُوَنَا فَنَزَلَ صَاحِبِي ثُمَّ أَتَانِي عِشَاءً فَضَرَبَ بَابِي ثُمَّ نَادَانِي فَخَرَجْتُ إِلَيْهِ فَقَالَ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ ‏.‏ قُلْتُ مَاذَا أَجَاءَتْ غَسَّانُ قَالَ لاَ بَلْ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَأَطْوَلُ طَلَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ ‏.‏ فَقُلْتُ قَدْ خَابَتْ حَفْصَةُ وَخَسِرَتْ قَدْ كُنْتُ أَظُنُّ هَذَا كَائِنًا حَتَّى إِذَا صَلَّيْتُ الصُّبْحَ شَدَدْتُ عَلَىَّ ثِيَابِي ثُمَّ نَزَلْتُ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ وَهْىَ تَبْكِي فَقُلْتُ أَطَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ لاَ أَدْرِي هَا هُوَ ذَا مُعْتَزِلٌ فِي هَذِهِ الْمَشْرُبَةِ ‏.‏ فَأَتَيْتُ غُلاَمًا لَهُ أَسْوَدَ فَقُلْتُ اسْتَأْذِنْ لِعُمَرَ ‏.‏ فَدَخَلَ ثُمَّ خَرَجَ إِلَىَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ فَانْطَلَقْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى الْمِنْبَرِ فَجَلَسْتُ فَإِذَا عِنْدَهُ رَهْطٌ جُلُوسٌ يَبْكِي بَعْضُهُمْ فَجَلَسْتُ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ ثُمَّ أَتَيْتُ الْغُلاَمَ فَقُلْتُ اسْتَأْذِنْ لِعُمَرَ ‏.‏ فَدَخَلَ ثُمَّ خَرَجَ إِلَىَّ ‏.‏ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ ‏.‏ فَوَلَّيْتُ مُدْبِرًا فَإِذَا الْغُلاَمُ يَدْعُونِي فَقَالَ ادْخُلْ فَقَدْ أَذِنَ لَكَ فَدَخَلْتُ فَسَلَّمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ مُتَّكِئٌ عَلَى رَمْلِ حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَقُلْتُ أَطَلَّقْتَ يَا رَسُولَ اللَّهِ نِسَاءَكَ فَرَفَعَ رَأْسَهُ إِلَىَّ وَقَالَ ‏"‏ لاَ ‏"‏ ‏.‏ فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ لَوْ رَأَيْتَنَا يَا رَسُولَ اللَّهِ وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ قَوْمًا نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ وَجَدْنَا قَوْمًا تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ فَطَفِقَ نِسَاؤُنَا يَتَعَلَّمْنَ مِنْ نِسَائِهِمْ فَتَغَضَّبْتُ عَلَى امْرَأَتِي يَوْمًا فَإِذَا هِيَ تُرَاجِعُنِي فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي ‏.‏ فَقَالَتْ مَا تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيُرَاجِعْنَهُ وَتَهْجُرُهُ إِحْدَاهُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ ‏.‏ فَقُلْتُ قَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْهُنَّ وَخَسِرَ أَفَتَأْمَنُ إِحْدَاهُنَّ أَنْ يَغْضَبَ اللَّهُ عَلَيْهَا لِغَضَبِ رَسُولِهِ صلى الله عليه وسلم فَإِذَا هِيَ قَدْ هَلَكَتْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ دَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ لاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْسَمُ مِنْكِ وَأَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْكِ ‏.‏ فَتَبَسَّمَ أُخْرَى فَقُلْتُ أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ فَجَلَسْتُ فَرَفَعْتُ رَأْسِي فِي الْبَيْتِ فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِيهِ شَيْئًا يَرُدُّ الْبَصَرَ إِلاَّ أُهُبًا ثَلاَثَةً فَقُلْتُ ادْعُ اللَّهَ يَا رَسُولَ اللَّهِ أَنْ يُوَسِّعَ عَلَى أُمَّتِكَ فَقَدْ وَسَّعَ عَلَى فَارِسَ وَالرُّومِ وَهُمْ لاَ يَعْبُدُونَ اللَّهَ فَاسْتَوَى جَالِسًا ثُمَّ قَالَ ‏"‏ أَفِي شَكٍّ أَنْتَ يَا ابْنَ الْخَطَّابِ أُولَئِكَ قَوْمٌ عُجِّلَتْ لَهُمْ طَيِّبَاتُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ‏"‏ ‏.‏ فَقُلْتُ اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ ‏.‏ وَكَانَ أَقْسَمَ أَنْ لاَ يَدْخُلَ عَلَيْهِنَّ شَهْرًا مِنْ شِدَّةِ مَوْجِدَتِهِ عَلَيْهِنَّ ‏.‏ حَتَّى عَاتَبَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏.‏
قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا مَضَى تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَدَأَ بِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا وَإِنَّكَ دَخَلْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ أَعُدُّهُنَّ ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ - ثُمَّ قَالَ - يَا عَائِشَةُ إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَعْجَلِي فِيهِ حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ ‏"‏ ‏.‏ ثُمَّ قَرَأَ عَلَىَّ الآيَةَ ‏{‏ يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ‏}‏ حَتَّى بَلَغَ ‏{‏ أَجْرًا عَظِيمًا‏}‏ قَالَتْ عَائِشَةُ قَدْ عَلِمَ وَاللَّهِ أَنَّ أَبَوَىَّ لَمْ يَكُونَا لِيَأْمُرَانِي بِفِرَاقِهِ قَالَتْ فَقُلْتُ أَوَفِي هَذَا أَسْتَأْمِرُ أَبَوَىَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ ‏.‏ قَالَ مَعْمَرٌ فَأَخْبَرَنِي أَيُّوبُ أَنَّ عَائِشَةَ قَالَتْ لاَ تُخْبِرْ نِسَاءَكَ أَنِّي اخْتَرْتُكَ فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ اللَّهَ أَرْسَلَنِي مُبَلِّغًا وَلَمْ يُرْسِلْنِي مُتَعَنِّتًا ‏"‏ ‏.‏ قَالَ قَتَادَةُ صَغَتْ قُلُوبُكُمَا مَالَتْ قُلُوبُكُمَا‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரில் இரு பெண்கள் குறித்து உமர் (ரழி) அவர்களிடம் நான் எப்போதும் கேட்க ஆவலாக இருந்தேன். அந்த இரு பெண்களைக் குறித்து உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்: "நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், நிச்சயமாக உங்கள் இதயங்கள் (சத்தியத்திலிருந்து) சாய்ந்துவிட்டன" (திருக்குர்ஆன் 66:4). உமர் (ரழி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும் வரை நான் (அவர்களிடம் கேட்க) ஆவலாக இருந்தேன், நானும் அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். நாங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது, உமர் (ரழி) அவர்கள் (இயற்கை உபாதைக்காக) ஒதுங்கிச் சென்றார்கள், நானும் அவர்களுடன் ஒரு (தண்ணீர்) குவளையுடன் ஒதுங்கிச் சென்றேன். அவர்கள் இயற்கை உபாதையை முடித்துவிட்டு, பின்னர் என்னிடம் வந்தார்கள், நான் அவர்கள் கைகளில் தண்ணீர் ஊற்றினேன், அவர்கள் உளூச் செய்தார்கள். நான் கூறினேன்: நம்பிக்கையாளர்களின் தளபதியே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரில் அந்த இரு பெண்கள் யார், அவர்களைக் குறித்து உயர்ந்தவனும் மகத்துவமிக்கனுமான அல்லாஹ் கூறினான்: 'நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், நிச்சயமாக உங்கள் இதயங்கள் (சத்தியத்திலிருந்து) சாய்ந்துவிட்டன'? உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் அவர்களே, இது உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! (ஸுஹ்ரி அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர் கேட்டதைப் பற்றி உமர் (ரழி) அவர்கள் விரும்பவில்லை, ஆனால் அதை இரகசியமாக வைத்திருக்கவில்லை.) அவர் (உமர் (ரழி) அவர்கள்) கூறினார்கள்: அவர்கள் ஹஃப்ஸா (ரழி) அவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களும் ஆவார்கள்; பின்னர் அவர் ஹதீஸை விவரிக்கத் தொடங்கி கூறினார்கள்: நாங்கள் குறைஷிகளில் பெண்களை அடக்கி ஆளும் மக்களாக இருந்தோம். நாங்கள் மதீனாவை அடைந்தபோது, அங்கு தங்கள் பெண்களால் அடக்கி ஆளப்படும் மக்களைக் கண்டோம். (இதன் காரணமாக) எங்கள் பெண்களும் அவர்களின் பெண்களின் (பழக்கவழக்கங்களை) கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

அவர் மேலும் கூறினார்கள்: எனது வீடு மதீனாவின் புறநகரில் (அல்-அவாலி பகுதியில்) பனூ உமைய்யா பின் ஸைத் கோத்திரத்தில் அமைந்திருந்தது. ஒரு நாள் நான் என் மனைவியிடம் கோபமடைந்தேன், அவள் எனக்குப் பதிலளித்து (தர்க்கம்) செய்தாள். அவள் எனக்குப் பதிலளிப்பதை நான் விரும்பவில்லை. அவள் சொன்னாள்: நான் உங்களுக்குப் பதிலளிப்பதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் அவருக்குப் பதிலளித்து (தர்க்கம்) செய்கிறார்கள், அவர்களில் ஒருவர் பகல் முதல் இரவு வரை அவரை விட்டுப் பிரிந்துவிடுகிறார். எனவே நான் (உமர் (ரழி) அவர்கள்) வெளியே சென்று ஹஃப்ஸா (ரழி) அவர்களைச் சந்தித்துக் கேட்டேன்: நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலளித்து (தர்க்கம்) செய்கிறீர்களா? அவர்கள் ஆம் என்றார்கள். நான் கேட்டேன்: உங்களில் யாராவது பகல் முதல் இரவு வரை அவரை விட்டுப் பிரிந்து இருக்கிறீர்களா? அவர்கள் ஆம் என்றார்கள். அவர் (உமர் (ரழி) அவர்கள்) கூறினார்கள்: உங்களில் அவ்வாறு செய்தவர் உண்மையில் தோல்வியடைந்து நஷ்டத்தை அடைந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தின் காரணமாக அவள் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படும் என்று உங்களில் ஒவ்வொருவரும் பயப்படவில்லையா, (அதன் விளைவாக) அவள் அழிந்துவிடக்கூடும்? எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலளித்து (தர்க்கம்) செய்யாதீர்கள், அவரிடம் எதையும் கேட்காதீர்கள், ஆனால் நீங்கள் விரும்புவதை என்னிடம் கேளுங்கள். உங்கள் தோழி (அதாவது ஆயிஷா (ரழி) அவர்கள்) உங்களை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பிரியமானவராகவும் இருந்தால், (அவருடைய) வெளிப்படையான நடத்தை உங்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம்.

அவர் (உமர் (ரழி) அவர்கள் மேலும்) கூறினார்கள்: எனக்கு அன்ஸாரைச் சேர்ந்த ஒரு தோழர் இருந்தார். நாங்கள் முறைவைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சமூகத்திற்குச் சென்று (அவர்களுடன்) இருப்போம். அவர் ஒரு நாள் அங்கே இருப்பார், நான் மறுநாள் அங்கே இருப்பேன். அவர் எனக்கு வஹீ (இறைச்செய்தி) மற்றும் பிற (சம்பவங்கள்) பற்றிய செய்திகளைக் கொண்டு வருவார், நானும் அவருக்கு இது போன்ற (செய்திகளை) கொண்டு வருவேன். கஸ்ஸானியர்கள் நம்மீது படையெடுக்க குதிரைகளுக்கு லாடம் அடித்துக் கொண்டிருப்பதாக நாங்கள் பேசிக்கொண்டோம். ஒருமுறை என் தோழர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்துவிட்டு) பின்னர் இரவில் என்னிடம் வந்து என் கதவைத் தட்டி என்னை அழைத்தார். நான் அவரிடம் வெளியே வந்தேன், அவர் கூறினார்: மிக முக்கியமான ஒரு விஷயம் நடந்துவிட்டது. நான் கேட்டேன்: அது என்ன? கஸ்ஸானியர்கள் வந்துவிட்டார்களா? அவர் கூறினார்: இல்லை, ஆனால் அதைவிட மிகவும் தீவிரமானதும், மிக முக்கியமானதுமான ஒன்று: நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டார்கள். நான் கூறினேன்: ஹஃப்ஸா (ரழி) அவர்கள் தோல்வியடைந்து நஷ்டத்தை அடைந்துவிட்டார், (இது நடக்கும் என்று) நான் பயந்தேன். விடிந்ததும் நான் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றி, என் ஆடையை அணிந்துகொண்டு, பின்னர் (நபி (ஸல்) அவர்களின் வீட்டிற்கு) வந்து ஹஃப்ஸா (ரழி) அவர்களைச் சந்தித்தேன், அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை (எல்லோரையும்) விவாகரத்து செய்துவிட்டார்களா? அவர்கள் கூறினார்கள்: எனக்குத் தெரியாது. இருப்பினும், அவர் தம் மாடி அறையில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

நான் ஒரு கறுப்பு நிற ஊழியரிடம் சென்று அவரிடம் கூறினேன்: உமருக்காக (உள்ளே செல்ல) அனுமதி கேள். அவர் உள்ளே சென்று பின்னர் என்னிடம் வந்து கூறினார்: நான் உங்களைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன், ஆனால் அவர் அமைதியாக இருந்தார்கள். (அனுமதி கிடைக்காததால்) நான் அங்கிருந்து புறப்பட்டு மிம்பருக்குச் சென்று அங்கே அமர்ந்தேன். அங்கே ஒரு கூட்டம் மக்கள் அதன் அருகே அமர்ந்திருந்தார்கள், அவர்களில் சிலர் அழுதுகொண்டிருந்தார்கள். நான் சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்தேன், என் மனதில் இருந்த (கவலை மற்றும் ஆவல்) என்னைப் பெரும்பாடுபடுத்தும் வரை. பின்னர் நான் அந்தச் சிறுவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் கூறினேன்: உமருக்காக (உள்ளே செல்ல) அனுமதி கேள். அவன் உள்ளே சென்று என்னிடம் வந்து கூறினான்: நான் உங்களைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன், ஆனால் அவர் அமைதியாக இருந்தார்கள். நான் திரும்பிச் செல்லவிருந்தபோது அந்தச் சிறுவன் என்னை அழைத்துச் சொன்னான்: உள்ளே செல்லுங்கள்; உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் உள்ளே சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் ஒரு பாயால் ஆன (கடுமையான) சாய்வு மஞ்சத்தின் மீது சாய்ந்திருந்தார்கள், அது அவர்கள் விலாவில் அதன் அடையாளங்களை ஏற்படுத்தியிருந்தது. நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் உங்கள் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டீர்களா? அவர்கள் என் பக்கம் தலையை உயர்த்தி, "இல்லை" என்றார்கள். நான் கூறினேன்: அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வின் தூதரே, குறைஷிகளாகிய நாங்கள் பெண்களை எப்படி அடக்கி ஆண்டோம் என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, தங்கள் பெண்களால் அடக்கி ஆளப்படும் மக்களைக் கண்டோம். அதனால் எங்கள் பெண்கள் அவர்களின் பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு நாள் நான் என் மனைவியிடம் கோபமடைந்தேன், அவள் எனக்குப் பதிலளித்து (தர்க்கம்) செய்ய ஆரம்பித்தாள். அவள் எனக்குப் பதிலளிப்பதை நான் விரும்பவில்லை. அவள் சொன்னாள்: நான் உங்களுக்குப் பதிலளிப்பதை நீங்கள் விரும்பவில்லை, ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் அவருக்குப் பதிலளித்து (தர்க்கம்) செய்கிறார்கள், அவர்களில் எவரேனும் ஒருவர் பகல் முதல் இரவு வரை அவரை விட்டுப் பிரிந்துவிடுகிறார். நான் கூறினேன்: அவர்களில் அவ்வாறு செய்தவர் உண்மையில் தோல்வியடைந்து நஷ்டத்தை அடைந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தின் காரணமாக அவள் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படும் என்பதிலிருந்து அவர்களில் எவரேனும் பாதுகாப்பாக உணர்கிறாரா, (அவ்வாறு நடந்தால்) அவள் நிச்சயமாக அழிந்துவிட்டாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களைச் சந்தித்துச் சொன்னேன்: உங்கள் தோழியின் ('ஆயிஷா (ரழி) அவர்களின்) (நடத்தை) உங்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம், அவர் உங்களை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பிரியமானவராகவும் இருந்தால். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக புன்னகைத்தார்கள். நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, நான் உங்களிடம் (சற்று) இனிமையான விஷயங்களைப் பற்றி பேசலாமா? அவர்கள் "ஆம்" என்றார்கள். நான் அமர்ந்து வீட்டை (பொருட்களைப் பார்க்க) என் தலையை உயர்த்தினேன், அல்லாஹ்வின் மீது ஆணையாக, மூன்று பதனிடப்பட்ட தோல்களைத் தவிர வேறு எதையும் நான் காணவில்லை. நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, உங்கள் உம்மத்திற்கு (வாழ்க்கையை) வளமாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள், ஏனெனில் அவன் பாரசீகம் மற்றும் ரோம் மக்களுக்கு (அவர்கள் அல்லாஹ்வை வணங்காத போதிலும்) ஏராளமாக வழங்கியுள்ளான். அதன்பேரில் அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) சாய்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து அமர்ந்து, "கத்தாபின் மகனே! அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் தங்கள் நன்மைகள் (மற்றும் இன்பங்கள்) முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்ட ஒரு கூட்டத்தினர் என்பதில் உமக்குச் சந்தேகமா?" என்று கேட்டார்கள். நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே! எனக்காக மன்னிப்புக் கோருங்கள். மேலும் அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) (தம் மனைவியர் மீது ஏற்பட்ட) மிகுந்த எரிச்சலின் காரணமாக ஒரு மாதத்திற்கு அவர்களைச் சந்திக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தார்கள், அல்லாஹ் அவரிடம் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) தன் அதிருப்தியைக் காட்டும் வரை.

ஸுஹ்ரி அவர்கள் கூறினார்கள்: உர்வா அவர்கள் எனக்கு அறிவித்தார்கள், ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் (தங்கள் வருகையை) என்னுடன் ஆரம்பித்தார்கள். நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் ஒரு மாதத்திற்கு எங்களைச் சந்திக்க மாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்கள், ஆனால் நான் இருபத்தொன்பது (இரவுகளை) மட்டுமே கணக்கிட்ட பிறகு நீங்கள் வந்துள்ளீர்கள். அதன்பேரில் அவர்கள் கூறினார்கள்: "மாதம் இருபத்தொன்பது (நாட்களாகவும்) இருக்கலாம்." பின்னர் அவர்கள் கூறினார்கள்: "ஆயிஷா (ரழி) அவர்களே, நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறேன், அதில் நீங்கள் உங்கள் பெற்றோரை ஆலோசிக்கும் வரை அவசரப்பட வேண்டாம் (உங்கள் இறுதி முடிவைக் கொடுக்காதீர்கள்)." பின்னர் அவர்கள் இந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள்: "நபியே, உம் மனைவியரிடம் கூறுவீராக" என்பதிலிருந்து "மகத்தான வெகுமதி" (திருக்குர்ஆன் 33:28-29) என்பதை அடையும் வரை. ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் பெற்றோர் என்னை அவரிடமிருந்து பிரிய அனுமதிக்க மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். நான் கூறினேன்: இந்த விஷயத்தில் என் பெற்றோரை ஆலோசிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? நான் உண்மையில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமையின் இருப்பிடத்தையும் தேர்ந்தெடுக்கிறேன். மஃமர் அவர்கள் கூறினார்கள்: அய்யூப் அவர்கள் எனக்கு அறிவித்தார்கள், ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என்று உங்கள் (மற்ற) மனைவியருக்குத் தெரிவிக்காதீர்கள். அதன்பேரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் என்னை ஒரு செய்தியைத் தெரிவிப்பவனாக அனுப்பியுள்ளான், அவன் என்னை (மற்றவர்களுக்கு) சிரமத்தை ஏற்படுத்துபவனாக அனுப்பவில்லை." கதாதா அவர்கள் கூறினார்கள்: "ஸகத் குலூபுகும்" என்றால் "உங்கள் இதயங்கள் சாய்ந்துவிட்டன (சத்தியத்திலிருந்து விலகிவிட்டன)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2380 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ إِنَّهُ
بَيْنَمَا مُوسَى عَلَيْهِ السَّلاَمُ فِي قَوْمِهِ يُذَكِّرُهُمْ بِأَيَّامِ اللَّهِ وَأَيَّامُ اللَّهِ نَعْمَاؤُهُ وَبَلاَؤُهُ إِذْ قَالَ
مَا أَعْلَمُ فِي الأَرْضِ رَجُلاً خَيْرًا أَوْ أَعْلَمَ مِنِّي ‏.‏ قَالَ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ إِنِّي أَعْلَمُ بِالْخَيْرِ
مِنْهُ أَوْ عِنْدَ مَنْ هُوَ إِنَّ فِي الأَرْضِ رَجُلاً هُوَ أَعْلَمُ مِنْكَ ‏.‏ قَالَ يَا رَبِّ فَدُلَّنِي عَلَيْهِ ‏.‏ قَالَ
فَقِيلَ لَهُ تَزَوَّدْ حُوتًا مَالِحًا فَإِنَّهُ حَيْثُ تَفْقِدُ الْحُوتَ ‏.‏ قَالَ فَانْطَلَقَ هُوَ وَفَتَاهُ حَتَّى انْتَهَيَا
إِلَى الصَّخْرَةِ فَعُمِّيَ عَلَيْهِ فَانْطَلَقَ وَتَرَكَ فَتَاهُ فَاضْطَرَبَ الْحُوتُ فِي الْمَاءِ فَجَعَلَ لاَ يَلْتَئِمُ
عَلَيْهِ صَارَ مِثْلَ الْكُوَّةِ قَالَ فَقَالَ فَتَاهُ أَلاَ أَلْحَقُ نَبِيَّ اللَّهِ فَأُخْبِرَهُ قَالَ فَنُسِّيَ ‏.‏ فَلَمَّا تَجَاوَزَا
قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا ‏.‏ قَالَ وَلَمْ يُصِبْهُمْ نَصَبٌ حَتَّى تَجَاوَزَا
‏.‏ قَالَ فَتَذَكَّرَ قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلاَّ الشَّيْطَانُ
أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا ‏.‏ قَالَ ذَلِكَ مَا كُنَّا نَبْغِي ‏.‏ فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا
قَصَصًا فَأَرَاهُ مَكَانَ الْحُوتِ قَالَ هَا هُنَا وُصِفَ لِي ‏.‏ قَالَ فَذَهَبَ يَلْتَمِسُ فَإِذَا هُوَ بِالْخَضِرِ
مُسَجًّى ثَوْبًا مُسْتَلْقِيًا عَلَى الْقَفَا أَوْ قَالَ عَلَى حَلاَوَةِ الْقَفَا قَالَ السَّلاَمُ عَلَيْكُمْ ‏.‏ فَكَشَفَ
الثَّوْبَ عَنْ وَجْهِهِ قَالَ وَعَلَيْكُمُ السَّلاَمُ مَنْ أَنْتَ قَالَ أَنَا مُوسَى ‏.‏ قَالَ وَمَنْ مُوسَى قَالَ
مُوسَى بَنِي إِسْرَائِيلَ ‏.‏ قَالَ مَجِيءٌ مَا جَاءَ بِكَ قَالَ جِئْتُ لِتُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا ‏.‏ قَالَ
إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا ‏.‏ شَىْءٌ أُمِرْتُ بِهِ أَنْ
أَفْعَلَهُ إِذَا رَأَيْتَهُ لَمْ تَصْبِرْ ‏.‏ قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا ‏.‏ قَالَ
فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَىْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ‏.‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا رَكِبَا
فِي السَّفِينَةِ خَرَقَهَا ‏.‏ قَالَ انْتَحَى عَلَيْهَا ‏.‏ قَالَ لَهُ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ أَخَرَقْتَهَا لِتُغْرِقَ
أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا ‏.‏ قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا قَالَ لاَ تُؤَاخِذْنِي
بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا ‏.‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا لَقِيَا غِلْمَانًا يَلْعَبُونَ ‏.‏ قَالَ
فَانْطَلَقَ إِلَى أَحَدِهِمْ بَادِيَ الرَّأْىِ فَقَتَلَهُ فَذُعِرَ عِنْدَهَا مُوسَى عَلَيْهِ السَّلاَمُ ذَعْرَةً مُنْكَرَةً ‏.‏
قَالَ أَقَتَلْتَ نَفْسًا زَاكِيَةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم عِنْدَ هَذَا الْمَكَانِ ‏"‏ رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى مُوسَى لَوْلاَ أَنَّهُ عَجَّلَ لَرَأَى الْعَجَبَ وَلَكِنَّهُ
أَخَذَتْهُ مِنْ صَاحِبِهِ ذَمَامَةٌ ‏.‏ قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ
لَدُنِّي عُذْرًا ‏.‏ وَلَوْ صَبَرَ لَرَأَى الْعَجَبَ - قَالَ وَكَانَ إِذَا ذَكَرَ أَحَدًا مِنَ الأَنْبِيَاءِ بَدَأَ بِنَفْسِهِ
‏"‏ رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى أَخِي كَذَا رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا - ‏"‏ فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ
لِئَامًا فَطَافَا فِي الْمَجَالِسِ فَاسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا
يُرِيدُ أَنْ يَنْقَضَّ فَأَقَامَهُ ‏.‏ قَالَ لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا ‏.‏ قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ
وَأَخَذَ بِثَوْبِهِ ‏.‏ قَالَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا أَمَّا السَّفِينَةُ فَكَانَتْ لِمَسَاكِينَ
يَعْمَلُونَ فِي الْبَحْرِ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏ فَإِذَا جَاءَ الَّذِي يُسَخِّرُهَا وَجَدَهَا مُنْخَرِقَةً فَتَجَاوَزَهَا
فَأَصْلَحُوهَا بِخَشَبَةٍ وَأَمَّا الْغُلاَمُ فَطُبِعَ يَوْمَ طُبِعَ كَافِرًا وَكَانَ أَبَوَاهُ قَدْ عَطَفَا عَلَيْهِ فَلَوْ
أَنَّهُ أَدْرَكَ أَرْهَقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا فَأَرَدْنَا أَنْ يُبَدِّلَهُمَا رَبُّهُمَا خَيْرًا مِنْهُ زَكَاةً وَأَقْرَبَ رُحْمًا
‏.‏ وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلاَمَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ ‏"‏ ‏.‏ إِلَى آخِرِ الآيَةِ ‏.‏
உபய் இப்னு கஅப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்:

"மூஸா (அலை) அவர்கள் தம் சமூகத்தினரிடையே 'அல்லாஹ்வின் நாட்களை' (அய்யாமுல்லாஹ் - அவனது அருட்கொடைகளையும் அவனது சோதனைகளையும்) நினைவூட்டிக் கொண்டிருந்த சமயத்தில், அவர், 'பூமியில் என்னை விடச் சிறந்த அல்லது என்னை விட அதிகம் அறிந்த ஒருவரை நான் அறியவில்லை' என்று கூறினார்.

அப்போது அல்லாஹ் அவருக்கு வஹி அறிவித்தான்: 'அவரை விடச் சிறந்தவர் யார் என்பதை அல்லது அவர் எங்கு இருக்கிறார் என்பதை நான் நன்கு அறிவேன்; பூமியில் உன்னை விட அதிக அறிவுடைய ஒரு மனிதர் இருக்கிறார்.'

அதற்கு மூஸா (அலை), 'என் இறைவா! அவரை நான் அடைவது எப்படி (எனக்குக் காட்டு)?' என்று கேட்டார்.

அதற்கு, 'உப்புக்கண்டம் போடப்பட்ட ஒரு மீனை உணவாக எடுத்துக்கொள். எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறாயோ அங்கே (அவர் இருப்பார்)' என்று கூறப்பட்டது.

எனவே அவரும் அவருடைய உதவியாளரும் (பயணப்பட்டு) அந்தப் பாறையை அடைந்தனர். அங்கே அவருக்கு (அந்த அடையாளம்) மறைக்கப்பட்டது. அவர் (மூஸா) (முன்னோக்கி) சென்றார், (அங்கு) தம் உதவியாளரை விட்டுவிட்டு. அப்போது அந்த மீன் தண்ணீரில் துடித்தது. தண்ணீர் அதன் மீது மூடாமல் ஒரு சுரங்கப்பாதையைப் போல (வழியமைத்து) நின்றது.

அப்போது அவரது உதவியாளர், 'நான் அல்லாஹ்வின் நபியைச் சந்தித்து இதைத் தெரிவிக்க வேண்டுமே' என்று (நினைத்தார்). ஆனால் (பிறகு) மறக்கடிக்கப்பட்டார்.

அவர்கள் அந்த இடத்தைக் கடந்த பிறகு, அவர் (மூஸா) தம் உதவியாளரிடம், 'நமது மதிய உணவைக் கொண்டு வா. இப்பயணத்தினால் நாம் களைப்படைந்து விட்டோம்' என்றார். (உண்மையில்) அவர்கள் (மீன் உயிர் பெற்ற) அந்த இடத்தைக் கடக்கும் வரை களைப்படையவில்லை.

அப்போது (உதவியாளர்) நினைவு கூர்ந்தார். 'நாம் அந்தப் பாறையில் தங்கியபோது (நடந்ததை) கவனித்தீர்களா? நான் அந்த மீனை மறந்துவிட்டேன். அதை நான் நினைவுகூருவதை சைத்தானே மறக்கடித்துவிட்டான். அது ஆச்சரியமான வகையில் கடலில் தனது பாதையை அமைத்துக் கொண்டது' என்று கூறினார்.

அதற்கு மூஸா (அலை), 'அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்' என்றார். உடனே அவர்கள் தங்கள் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து திரும்பி வந்தார்கள்.

அவர் (உதவியாளர்) மீன் இருந்த இடத்தைக் காட்டினார். 'எனக்கு விவரிக்கப்பட்ட இடம் இதுதான்' என்று மூஸா (அலை) கூறினார். அவர் தேடியபோது, அங்கே கிள்ர் (அலை) அவர்கள் ஒரு துணியால் போர்த்தப்பட்ட நிலையில் மல்லாந்து - அல்லது பிடரியின் மீது - படுத்திருப்பதைக் கண்டார்.

மூஸா (அலை), 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்றார். அவர் முகத்திலிருந்து துணியை விலக்கி, 'வ அலைக்குமுஸ்ஸலாம், நீர் யார்?' என்று கேட்டார். 'நான் மூஸா' என்றார். 'பனூ இஸ்ராயீல் சமூகத்து மூஸாவா?' என்று கேட்டார். (அதற்கு) 'மூஸா பனூ இஸ்ராயீல் (ஆம், பனூ இஸ்ராயீல் சமூகத்து மூஸா)' என்று பதிலளித்தார்.

'என்ன விஷயமாக இங்கு வந்தீர்?' என்று கிள்ர் கேட்டார். 'உங்களுக்குக் கற்றுத் தரப்பட்ட நல்வழியிலிருந்து எனக்கும் நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் வந்துள்ளேன்' என்று கூறினார்.

அதற்கு அவர், 'நிச்சயமாக நீர் என்னுடன் இருக்கையில் பொறுமையாக இருக்க உம்மால் முடியாது. உமக்கு முழு விபரம் தெரியாத விஷயத்தில் உம்மால் எப்படிப் பொறுமையாக இருக்க முடியும்? நான் செய்யும்படி ஏவப்பட்ட ஒரு காரியத்தை நான் செய்வதை நீர் பார்த்தால் உம்மால் பொறுக்க முடியாது' என்று கூறினார்.

மூஸா (அலை), 'அல்லாஹ் நாடினால், நீங்கள் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்; எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்' என்று கூறினார்.

கிள்ர், 'நீர் என்னைப் பின்பற்றி வருவதானால், நானாக உமக்குச் சொல்லும் வரை எதைப் பற்றியும் என்னிடம் கேட்கக் கூடாது' என்று கூறினார்.

பிறகு இருவரும் நடந்தனர். ஒரு கப்பலில் ஏறியபோது, கிள்ர் அதில் ஓட்டையிட்டார். அவர் அதன் மீது சாய்ந்து (சேதப்படுத்தினார்). மூஸா (அலை) அவரிடம், 'கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காகவா அதில் ஓட்டையிட்டீர்? விபரீதமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டீரே!' என்று கேட்டார்.

அதற்கு அவர், 'நீர் என்னுடன் இருக்கையில் பொறுமையாக இருக்க உம்மால் முடியாது என்று நான் முன்பே சொல்லவில்லையா?' என்றார்.

மூஸா (அலை), 'நான் மறந்துவிட்டதற்காக என்னைக் குற்றம் பிடிக்காதீர்கள்; என் விஷயத்தில் கண்டிப்பு காட்டாதீர்கள்' என்று கூறினார்.

பிறகு இருவரும் நடந்தனர். சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தனர். கிள்ர் அவர்களில் ஒருவனிடம் சென்று, திடீரென அவனைப் பிடித்துக் கொன்றுவிட்டார்.

இதைக் கண்ட மூஸா (அலை) கடும் அதிர்ச்சியடைந்தார். 'எந்த உயிருக்கும் பகரமாக இல்லாமல், ஒரு தூய ஆத்மாவையா நீர் கொன்றுவிட்டீர்? மிகக் கடுமையான ஒரு செயலைச் செய்துவிட்டீரே!' என்று கேட்டார்.

(இச்சம்பவத்தை விவரிக்கும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் நம்மீதும் மூஸா மீதும் கருணை புரிவானாக! அவர் அவசரப்படாமல் இருந்திருந்தால் ஆச்சரியமான பலவற்றைக் கண்டிருப்பார். ஆனால், தனது தோழரிடம் (கிள்ரிடம்) ஏற்பட்ட அச்சம் (பிரிந்துவிடுவாரோ என்ற கவலை) அவரைப் பற்றிக்கொண்டது.'

(தொடர்ந்து மூஸா கூறினார்:) 'இதற்குப் பிறகு நான் உம்மிடம் எதையேனும் கேட்டால், நீர் என்னை உம்முடன் வைத்துக் கொள்ள வேண்டாம்; (என்னை விலக்கிவிட) என்னிடமிருந்து உமக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது' என்று கூறினார்.

(நபி (ஸல்) கூறினார்கள்:) 'அவர் பொறுமையாக இருந்திருந்தால் ஆச்சரியமானவற்றைக் கண்டிருப்பார்.' - நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு நபியைப் பற்றிக் கூறினால், தம்மைக்கொண்டே ஆரம்பிப்பார்கள்: 'அல்லாஹ்வின் ரஹ்மத் நம்மீதும் என் சகோதரர் (இன்னார்) மீதும் உண்டாவதாக...' (என்று கூறுவார்கள்) -

பிறகு இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஒரு ஊர் மக்களிடம் வந்து உணவளிக்குமாறு கேட்டார்கள் - அவர்கள் மிகவும் கஞ்சத்தனம் உடையவர்களாக இருந்தனர். அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்துவிட்டனர். அவ்வூரில் சாய்ந்து விழும் நிலையில் இருந்த ஒரு சுவரை அவர்கள் கண்டனர். கிள்ர் அதை நிமிர்த்தி வைத்தார்.

மூஸா (அலை), 'நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கியிருக்கலாமே!' என்றார்.

அதற்கு அவர், 'இதுதான் எனக்கும் உமக்குமிடையே உள்ள பிரிவு (பிரியும் நேரம்). உம்மால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக்கத்தை உமக்குச் சொல்கிறேன்' என்று கூறி, அவரது ஆடையைப் பிடித்துக் கொண்டார்.

'கப்பலைப் பொறுத்தவரை, அது கடலில் வேலை செய்யும் ஏழைகளுக்குச் சொந்தமானது...' (என்று ஆரம்பித்து) அந்த வசனத்தின் இறுதி வரை ஓதினார்கள். 'அந்தக் கப்பலைப் அபகரித்துக் கொள்பவன் (ஒரு அரசன்) வரும்போது, அது ஓட்டையுள்ளதாக இருந்தால் அதை விட்டுச் செல்வான்; பிறகு அவர்கள் அதை மரப்பலகை வைத்துச் சரிசெய்து கொள்வார்கள்.'

'அந்தச் சிறுவனைப் பொறுத்தவரை, அவன் படைக்கப்படும்போதே காஃபிராக (இறைமறுப்பாளனாக) முத்திரை குத்தப்பட்டவன். அவனது பெற்றோர் அவன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். அவன் வளர்ந்தால், தன் பெற்றோரை வழிகேட்டிலும் இறைமறுப்பிலும் சேர்த்துவிடுவான் (என்று அஞ்சினோம்). எனவே, அவர்களுக்குச் சிறந்த, பரிசுத்தமான, இன்னும் நெருக்கமான பாசமுள்ள ஒரு குழந்தையை அவர்களுடைய இறைவன் அவனுக்குப் பகரமாகக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினோம்.'

'அந்தச் சுவரைப் பொறுத்தவரை, அது அந்த நகரத்திலுள்ள அனாதைச் சிறுவர்கள் இருவருக்குச் சொந்தமானது; அதற்கு அடியில்...' - என்று அந்த வசனத்தின் இறுதி வரை (விளக்கினார்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2769 a, bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ سَرْحٍ مَوْلَى بَنِي
أُمَيَّةَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ ثُمَّ غَزَا رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم غَزْوَةَ تَبُوكَ وَهُوَ يُرِيدُ الرُّومَ وَنَصَارَى الْعَرَبِ بِالشَّامِ ‏.‏ قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي
عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ كَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ
حِينَ عَمِيَ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حَدِيثَهُ حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ قَالَ كَعْبُ بْنُ مَالِكٍ لَمْ أَتَخَلَّفْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم فِي غَزْوَةٍ غَزَاهَا قَطُّ إِلاَّ فِي غَزْوَةِ تَبُوكَ غَيْرَ أَنِّي قَدْ تَخَلَّفْتُ فِي غَزْوَةِ بَدْرٍ وَلَمْ
يُعَاتِبْ أَحَدًا تَخَلَّفَ عَنْهُ إِنَّمَا خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ يُرِيدُونَ
عِيرَ قُرَيْشٍ حَتَّى جَمَعَ اللَّهُ بَيْنَهُمْ وَبَيْنَ عَدُوِّهُمْ عَلَى غَيْرِ مِيعَادٍ وَلَقَدْ شَهِدْتُ مَعَ رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْعَقَبَةِ حِينَ تَوَاثَقْنَا عَلَى الإِسْلاَمِ وَمَا أُحِبُّ أَنَّ لِي بِهَا مَشْهَدَ
بَدْرٍ وَإِنْ كَانَتْ بَدْرٌ أَذْكَرَ فِي النَّاسِ مِنْهَا وَكَانَ مِنْ خَبَرِي حِينَ تَخَلَّفْتُ عَنْ رَسُولِ اللَّهِ
صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ أَنِّي لَمْ أَكُنْ قَطُّ أَقْوَى وَلاَ أَيْسَرَ مِنِّي حِينَ تَخَلَّفْتُ
عَنْهُ فِي تِلْكَ الْغَزْوَةِ وَاللَّهِ مَا جَمَعْتُ قَبْلَهَا رَاحِلَتَيْنِ قَطُّ حَتَّى جَمَعْتُهُمَا فِي تِلْكَ الْغَزْوَةِ
فَغَزَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَرٍّ شَدِيدٍ وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيدًا وَمَفَازًا وَاسْتَقْبَلَ
عَدُوًّا كَثِيرًا فَجَلاَ لِلْمُسْلِمِينَ أَمْرَهُمْ لِيَتَأَهَّبُوا أُهْبَةَ غَزْوِهِمْ فَأَخْبَرَهُمْ بِوَجْهِهِمُ الَّذِي يُرِيدُ
وَالْمُسْلِمُونَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَثِيرٌ وَلاَ يَجْمَعُهُمْ كِتَابُ حَافِظٍ - يُرِيدُ
بِذَلِكَ الدِّيوَانَ - قَالَ كَعْبٌ فَقَلَّ رَجُلٌ يُرِيدُ أَنْ يَتَغَيَّبَ يَظُنُّ أَنَّ ذَلِكَ سَيَخْفَى لَهُ مَا لَمْ يَنْزِلْ
فِيهِ وَحْىٌ مِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ وَغَزَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم تِلْكَ الْغَزْوَةَ حِينَ طَابَتِ
الثِّمَارُ وَالظِّلاَلُ فَأَنَا إِلَيْهَا أَصْعَرُ فَتَجَهَّزَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ مَعَهُ
وَطَفِقْتُ أَغْدُو لِكَىْ أَتَجَهَّزَ مَعَهُمْ فَأَرْجِعُ وَلَمْ أَقْضِ شَيْئًا ‏.‏ وَأَقُولُ فِي نَفْسِي أَنَا قَادِرٌ
عَلَى ذَلِكَ إِذَا أَرَدْتُ ‏.‏ فَلَمْ يَزَلْ ذَلِكَ يَتَمَادَى بِي حَتَّى اسْتَمَرَّ بِالنَّاسِ الْجِدُّ فَأَصْبَحَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم غَادِيًا وَالْمُسْلِمُونَ مَعَهُ وَلَمْ أَقْضِ مِنْ جَهَازِي شَيْئًا ثُمَّ غَدَوْتُ
فَرَجَعْتُ وَلَمْ أَقْضِ شَيْئًا فَلَمْ يَزَلْ ذَلِكَ يَتَمَادَى بِي حَتَّى أَسْرَعُوا وَتَفَارَطَ الْغَزْوُ فَهَمَمْتُ
أَنْ أَرْتَحِلَ فَأُدْرِكَهُمْ فَيَا لَيْتَنِي فَعَلْتُ ثُمَّ لَمْ يُقَدَّرْ ذَلِكَ لِي فَطَفِقْتُ إِذَا خَرَجْتُ فِي النَّاسِ
بَعْدَ خُرُوجِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَحْزُنُنِي أَنِّي لاَ أَرَى لِي أُسْوَةً إِلاَّ رَجُلاً مَغْمُوصًا
عَلَيْهِ فِي النِّفَاقِ أَوْ رَجُلاً مِمَّنْ عَذَرَ اللَّهُ مِنَ الضُّعَفَاءِ وَلَمْ يَذْكُرْنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم حَتَّى بَلَغَ تَبُوكًا فَقَالَ وَهُوَ جَالِسٌ فِي الْقَوْمِ بِتَبُوكَ ‏"‏ مَا فَعَلَ كَعْبُ بْنُ مَالِكٍ ‏"‏ ‏.‏
قَالَ رَجُلٌ مِنْ بَنِي سَلِمَةَ يَا رَسُولَ اللَّهِ حَبَسَهُ بُرْدَاهُ وَالنَّظَرُ فِي عِطْفَيْهِ ‏.‏ فَقَالَ لَهُ مُعَاذُ
بْنُ جَبَلٍ بِئْسَ مَا قُلْتَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ إِلاَّ خَيْرًا ‏.‏ فَسَكَتَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم فَبَيْنَمَا هُوَ عَلَى ذَلِكَ رَأَى رَجُلاً مُبَيِّضًا يَزُولُ بِهِ السَّرَابُ فَقَالَ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ كُنْ أَبَا خَيْثَمَةَ ‏"‏ ‏.‏ فَإِذَا هُو أَبُو خَيْثَمَةَ الأَنْصَارِيُّ وَهُوَ الَّذِي
تَصَدَّقَ بِصَاعِ التَّمْرِ حِينَ لَمَزَهُ الْمُنَافِقُونَ ‏.‏ فَقَالَ كَعْبُ بْنُ مَالِكٍ فَلَمَّا بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم قَدْ تَوَجَّهَ قَافِلاً مِنْ تَبُوكَ حَضَرَنِي بَثِّي فَطَفِقْتُ أَتَذَكَّرُ الْكَذِبَ وَأَقُولُ
بِمَ أَخْرُجُ مِنْ سَخَطِهِ غَدًا وَأَسْتَعِينُ عَلَى ذَلِكَ كُلَّ ذِي رَأْىٍ مِنْ أَهْلِي فَلَمَّا قِيلَ لِي إِنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَظَلَّ قَادِمًا زَاحَ عَنِّي الْبَاطِلُ حَتَّى عَرَفْتُ أَنِّي لَنْ أَنْجُوَ مِنْهُ
بِشَىْءٍ أَبَدًا فَأَجْمَعْتُ صِدْقَهُ وَصَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَادِمًا وَكَانَ إِذَا قَدِمَ
مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ لِلنَّاسِ فَلَمَّا فَعَلَ ذَلِكَ جَاءَهُ الْمُخَلَّفُونَ
فَطَفِقُوا يَعْتَذِرُونَ إِلَيْهِ وَيَحْلِفُونَ لَهُ وَكَانُوا بِضْعَةً وَثَمَانِينَ رَجُلاً فَقَبِلَ مِنْهُمْ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم عَلاَنِيَتَهُمْ وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ حَتَّى جِئْتُ فَلَمَّا
سَلَّمْتُ تَبَسَّمَ تَبَسُّمَ الْمُغْضَبِ ثُمَّ قَالَ ‏"‏ تَعَالَ ‏"‏ ‏.‏ فَجِئْتُ أَمْشِي حَتَّى جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ فَقَالَ
لِي ‏"‏ مَا خَلَّفَكَ ‏"‏ ‏.‏ أَلَمْ تَكُنْ قَدِ ابْتَعْتَ ظَهْرَكَ ‏"‏ ‏.‏ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي وَاللَّهِ لَوْ
جَلَسْتُ عِنْدَ غَيْرِكَ مِنْ أَهْلِ الدُّنْيَا لَرَأَيْتُ أَنِّي سَأَخْرُجُ مِنْ سَخَطِهِ بِعُذْرٍ وَلَقَدْ أُعْطِيتُ جَدَلاً
وَلَكِنِّي وَاللَّهِ لَقَدْ عَلِمْتُ لَئِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيثَ كَذِبٍ تَرْضَى بِهِ عَنِّي لَيُوشِكَنَّ اللَّهُ أَنْ يُسْخِطَكَ
عَلَىَّ وَلَئِنْ حَدَّثْتُكَ حَدِيثَ صِدْقٍ تَجِدُ عَلَىَّ فِيهِ إِنِّي لأَرْجُو فِيهِ عُقْبَى اللَّهِ وَاللَّهِ مَا كَانَ لِي
عُذْرٌ وَاللَّهِ مَا كُنْتُ قَطُّ أَقْوَى وَلاَ أَيْسَرَ مِنِّي حِينَ تَخَلَّفْتُ عَنْكَ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله
عليه وسلم ‏"‏ أَمَّا هَذَا فَقَدْ صَدَقَ فَقُمْ حَتَّى يَقْضِيَ اللَّهُ فِيكَ ‏"‏ ‏.‏ فَقُمْتُ وَثَارَ رِجَالٌ مِنْ بَنِي
سَلِمَةَ فَاتَّبَعُونِي فَقَالُوا لِي وَاللَّهِ مَا عَلِمْنَاكَ أَذْنَبْتَ ذَنْبًا قَبْلَ هَذَا لَقَدْ عَجَزْتَ فِي أَنْ لاَ
تَكُونَ اعْتَذَرْتَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا اعْتَذَرَ بِهِ إِلَيْهِ الْمُخَلَّفُونَ فَقَدْ كَانَ
كَافِيَكَ ذَنْبَكَ اسْتِغْفَارُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَكَ ‏.‏ قَالَ فَوَاللَّهِ مَا زَالُوا يُؤَنِّبُونَنِي
حَتَّى أَرَدْتُ أَنْ أَرْجِعَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأُكَذِّبَ نَفْسِي - قَالَ - ثُمَّ
قُلْتُ لَهُمْ هَلْ لَقِيَ هَذَا مَعِي مِنْ أَحَدٍ قَالُوا نَعَمْ لَقِيَهُ مَعَكَ رَجُلاَنِ قَالاَ مِثْلَ مَا قُلْتَ فَقِيلَ
لَهُمَا مِثْلُ مَا قِيلَ لَكَ - قَالَ - قُلْتُ مَنْ هُمَا قَالُوا مُرَارَةُ بْنُ رَبِيعَةَ الْعَامِرِيُّ وَهِلاَلُ بْنُ
أُمَيَّةَ الْوَاقِفِيُّ - قَالَ - فَذَكَرُوا لِي رَجُلَيْنِ صَالِحَيْنِ قَدْ شِهِدَا بَدْرًا فِيهِمَا أُسْوَةٌ - قَالَ
- فَمَضَيْتُ حِينَ ذَكَرُوهُمَا لِي ‏.‏ قَالَ وَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُسْلِمِينَ عَنْ
كَلاَمِنَا أَيُّهَا الثَّلاَثَةُ مِنْ بَيْنِ مَنْ تَخَلَّفَ عَنْهُ - قَالَ - فَاجْتَنَبَنَا النَّاسُ - وَقَالَ - تَغَيَّرُوا
لَنَا حَتَّى تَنَكَّرَتْ لِي فِي نَفْسِيَ الأَرْضُ فَمَا هِيَ بِالأَرْضِ الَّتِي أَعْرِفُ فَلَبِثْنَا عَلَى ذَلِكَ خَمْسِينَ
لَيْلَةً فَأَمَّا صَاحِبَاىَ فَاسْتَكَانَا وَقَعَدَا فِي بُيُوتِهِمَا يَبْكِيَانِ وَأَمَّا أَنَا فَكُنْتُ أَشَبَّ الْقَوْمِ وَأَجْلَدَهُمْ
فَكُنْتُ أَخْرُجُ فَأَشْهَدُ الصَّلاَةَ وَأَطُوفُ فِي الأَسْوَاقِ وَلاَ يُكَلِّمُنِي أَحَدٌ وَآتِي رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم فَأُسَلِّمُ عَلَيْهِ وَهُوَ فِي مَجْلِسِهِ بَعْدَ الصَّلاَةِ فَأَقُولُ فِي نَفْسِي هَلْ حَرَّكَ شَفَتَيْهِ
بِرَدِّ السَّلاَمِ أَمْ لاَ ثُمَّ أُصَلِّي قَرِيبًا مِنْهُ وَأُسَارِقُهُ النَّظَرَ فَإِذَا أَقْبَلْتُ عَلَى صَلاَتِي نَظَرَ إِلَىَّ
وَإِذَا الْتَفَتُّ نَحْوَهُ أَعْرَضَ عَنِّي حَتَّى إِذَا طَالَ ذَلِكَ عَلَىَّ مِنْ جَفْوَةِ الْمُسْلِمِينَ مَشَيْتُ حَتَّى
تَسَوَّرْتُ جِدَارَ حَائِطِ أَبِي قَتَادَةَ وَهُوَ ابْنُ عَمِّي وَأَحَبُّ النَّاسِ إِلَىَّ فَسَلَّمْتُ عَلَيْهِ فَوَاللَّهِ
مَا رَدَّ عَلَىَّ السَّلاَمَ فَقُلْتُ لَهُ يَا أَبَا قَتَادَةَ أَنْشُدُكَ بِاللَّهِ هَلْ تَعْلَمَنَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ
قَالَ فَسَكَتَ فَعُدْتُ فَنَاشَدْتُهُ فَسَكَتَ فَعُدْتُ فَنَاشَدْتُهُ فَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ فَفَاضَتْ
عَيْنَاىَ وَتَوَلَّيْتُ حَتَّى تَسَوَّرْتُ الْجِدَارَ فَبَيْنَا أَنَا أَمْشِي فِي سُوقِ الْمَدِينَةِ إِذَا نَبَطِيٌّ مِنْ نَبَطِ
أَهْلِ الشَّامِ مِمَّنْ قَدِمَ بِالطَّعَامِ يَبِيعُهُ بِالْمَدِينَةِ يَقُولُ مَنْ يَدُلُّ عَلَى كَعْبِ بْنِ مَالِكٍ - قَالَ
- فَطَفِقَ النَّاسُ يُشِيرُونَ لَهُ إِلَىَّ حَتَّى جَاءَنِي فَدَفَعَ إِلَىَّ كِتَابًا مِنْ مَلِكِ غَسَّانَ وَكُنْتُ كَاتِبًا
فَقَرَأْتُهُ فَإِذَا فِيهِ أَمَّا بَعْدُ فَإِنَّهُ قَدْ بَلَغَنَا أَنَّ صَاحِبَكَ قَدْ جَفَاكَ وَلَمْ يَجْعَلْكَ اللَّهُ بِدَارِ هَوَانٍ
وَلاَ مَضْيَعَةٍ فَالْحَقْ بِنَا نُوَاسِكَ ‏.‏ قَالَ فَقُلْتُ حِينَ قَرَأْتُهَا وَهَذِهِ أَيْضًا مِنَ الْبَلاَءِ ‏.‏ فَتَيَامَمْتُ
بِهَا التَّنُّورَ فَسَجَرْتُهَا بِهَا حَتَّى إِذَا مَضَتْ أَرْبَعُونَ مِنَ الْخَمْسِينَ وَاسْتَلْبَثَ الْوَحْىُ إِذَا رَسُولُ
رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَأْتِينِي فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُكَ
أَنْ تَعْتَزِلَ امْرَأَتَكَ ‏.‏ قَالَ فَقُلْتُ أُطَلِّقُهَا أَمْ مَاذَا أَفْعَلُ قَالَ لاَ بَلِ اعْتَزِلْهَا فَلاَ تَقْرَبَنَّهَا -
قَالَ - فَأَرْسَلَ إِلَى صَاحِبَىَّ بِمِثْلِ ذَلِكَ - قَالَ - فَقُلْتُ لاِمْرَأَتِي الْحَقِي بِأَهْلِكِ فَكُونِي عِنْدَهُمْ
حَتَّى يَقْضِيَ اللَّهُ فِي هَذَا الأَمْرِ - قَالَ - فَجَاءَتِ امْرَأَةُ هِلاَلِ بْنِ أُمَيَّةَ رَسُولَ اللَّهِ صلى
الله عليه وسلم فَقَالَتْ لَهُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هِلاَلَ بْنَ أُمَيَّةَ شَيْخٌ ضَائِعٌ لَيْسَ لَهُ خَادِمٌ فَهَلْ
تَكْرَهُ أَنْ أَخْدُمَهُ قَالَ ‏"‏ لاَ وَلَكِنْ لاَ يَقْرَبَنَّكِ ‏"‏ ‏.‏ فَقَالَتْ إِنَّهُ وَاللَّهِ مَا بِهِ حَرَكَةٌ إِلَى شَىْءٍ وَوَاللَّهِ
مَا زَالَ يَبْكِي مُنْذُ كَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ إِلَى يَوْمِهِ هَذَا ‏.‏ قَالَ فَقَالَ لِي بَعْضُ أَهْلِي لَوِ اسْتَأْذَنْتَ
رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي امْرَأَتِكَ فَقَدْ أَذِنَ لاِمْرَأَةِ هِلاَلِ بْنِ أُمَيَّةَ أَنْ تَخْدُمَهُ -
قَالَ - فَقُلْتُ لاَ أَسْتَأْذِنُ فِيهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا يُدْرِينِي مَاذَا يَقُولُ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اسْتَأْذَنْتُهُ فِيهَا وَأَنَا رَجُلٌ شَابٌّ - قَالَ - فَلَبِثْتُ
بِذَلِكَ عَشْرَ لَيَالٍ فَكَمُلَ لَنَا خَمْسُونَ لَيْلَةً مِنْ حِينَ نُهِيَ عَنْ كَلاَمِنَا - قَالَ - ثُمَّ صَلَّيْتُ صَلاَةَ
الْفَجْرِ صَبَاحَ خَمْسِينَ لَيْلَةً عَلَى ظَهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا فَبَيْنَا أَنَا جَالِسٌ عَلَى الْحَالِ الَّتِي
ذَكَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنَّا قَدْ ضَاقَتْ عَلَىَّ نَفْسِي وَضَاقَتْ عَلَىَّ الأَرْضُ بِمَا رَحُبَتْ سَمِعْتُ
صَوْتَ صَارِخٍ أَوْفَى عَلَى سَلْعٍ يَقُولُ بِأَعْلَى صَوْتِهِ يَا كَعْبَ بْنَ مَالِكٍ أَبْشِرْ - قَالَ - فَخَرَرْتُ
سَاجِدًا وَعَرَفْتُ أَنْ قَدْ جَاءَ فَرَجٌ ‏.‏ - قَالَ - فَآذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّاسَ
بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا حِينَ صَلَّى صَلاَةَ الْفَجْرِ فَذَهَبَ النَّاسُ يُبَشِّرُونَنَا فَذَهَبَ قِبَلَ صَاحِبَىَّ مُبَشِّرُونَ
وَرَكَضَ رَجُلٌ إِلَىَّ فَرَسًا وَسَعَى سَاعٍ مِنْ أَسْلَمَ قِبَلِي وَأَوْفَى الْجَبَلَ فَكَانَ الصَّوْتُ أَسْرَعَ
مِنَ الْفَرَسِ فَلَمَّا جَاءَنِي الَّذِي سَمِعْتُ صَوْتَهُ يُبَشِّرُنِي فَنَزَعْتُ لَهُ ثَوْبَىَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ
بِبِشَارَتِهِ وَاللَّهِ مَا أَمْلِكُ غَيْرَهُمَا يَوْمَئِذٍ وَاسْتَعَرْتُ ثَوْبَيْنِ ‏.‏ فَلَبِسْتُهُمَا فَانْطَلَقْتُ أَتَأَمَّمُ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم يَتَلَقَّانِي النَّاسُ فَوْجًا فَوْجًا يُهَنِّئُونِي بِالتَّوْبَةِ وَيَقُولُونَ لِتَهْنِئْكَ
تَوْبَةُ اللَّهِ عَلَيْكَ ‏.‏ حَتَّى دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ فِي
الْمَسْجِدِ وَحَوْلَهُ النَّاسُ فَقَامَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّأَنِي وَاللَّهِ مَا
قَامَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ غَيْرُهُ ‏.‏ قَالَ فَكَانَ كَعْبٌ لاَ يَنْسَاهَا لِطَلْحَةَ ‏.‏ قَالَ كَعْبٌ فَلَمَّا سَلَّمْتُ
عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ يَبْرُقُ وَجْهُهُ مِنَ السُّرُورِ وَيَقُولُ ‏"‏ أَبْشِرْ
بِخَيْرِ يَوْمٍ مَرَّ عَلَيْكَ مُنْذُ وَلَدَتْكَ أُمُّكَ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ أَمِنْ عِنْدِكَ يَا رَسُولَ اللَّهِ أَمْ مِنْ عِنْدِ
اللَّهِ فَقَالَ ‏"‏ لاَ بَلْ مِنْ عِنْدِ اللَّهِ ‏"‏ ‏.‏ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا سُرَّ اسْتَنَارَ
وَجْهُهُ كَأَنَّ وَجْهَهُ قِطْعَةُ قَمَرٍ - قَالَ - وَكُنَّا نَعْرِفُ ذَلِكَ - قَالَ - فَلَمَّا جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صلى
الله عليه وسلم ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمْسِكْ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ
لَكَ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ فَإِنِّي أُمْسِكُ سَهْمِيَ الَّذِي بِخَيْبَرَ - قَالَ - وَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ
إِنَّمَا أَنْجَانِي بِالصِّدْقِ وَإِنَّ مِنْ تَوْبَتِي أَنْ لاَ أُحَدِّثَ إِلاَّ صِدْقًا مَا بَقِيتُ - قَالَ - فَوَاللَّهِ
مَا عَلِمْتُ أَنَّ أَحَدًا مِنَ الْمُسْلِمِينَ أَبْلاَهُ اللَّهُ فِي صِدْقِ الْحَدِيثِ مُنْذُ ذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ
صلى الله عليه وسلم إِلَى يَوْمِي هَذَا أَحْسَنَ مِمَّا أَبْلاَنِي اللَّهُ بِهِ وَاللَّهِ مَا تَعَمَّدْتُ كَذْبَةً مُنْذُ
قُلْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى يَوْمِي هَذَا وَإِنِّي لأَرْجُو أَنْ يَحْفَظَنِيَ اللَّهُ
فِيمَا بَقِيَ ‏.‏ قَالَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ لَقَدْ تَابَ اللَّهُ عَلَى النَّبِيِّ وَالْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ
الَّذِينَ اتَّبَعُوهُ فِي سَاعَةِ الْعُسْرَةِ مِنْ بَعْدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٍ مِنْهُمْ ثُمَّ تَابَ عَلَيْهِمْ
إِنَّهُ بِهِمْ رَءُوفٌ رَحِيمٌ * وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ خُلِّفُوا حَتَّى إِذَا ضَاقَتْ عَلَيْهِمُ الأَرْضُ بِمَا رَحُبَتْ
وَضَاقَتْ عَلَيْهِمْ أَنْفُسُهُمْ‏}‏ حَتَّى بَلَغَ ‏{‏ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ‏}‏
قَالَ كَعْبٌ وَاللَّهِ مَا أَنْعَمَ اللَّهُ عَلَىَّ مِنْ نِعْمَةٍ قَطُّ بَعْدَ إِذْ هَدَانِي اللَّهُ لِلإِسْلاَمِ أَعْظَمَ فِي نَفْسِي
مِنْ صِدْقِي رَسُولَ اللَّهُ صلى الله عليه وسلم أَنْ لاَ أَكُونَ كَذَبْتُهُ فَأَهْلِكَ كَمَا هَلَكَ الَّذِينَ كَذَبُوا
إِنَّ اللَّهَ قَالَ لِلَّذِينَ كَذَبُوا حِينَ أَنْزَلَ الْوَحْىَ شَرَّ مَا قَالَ لأَحَدٍ وَقَالَ اللَّهُ ‏{‏ سَيَحْلِفُونَ بِاللَّهِ
لَكُمْ إِذَا انْقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا عَنْهُمْ فَأَعْرِضُوا عَنْهُمْ إِنَّهُمْ رِجْسٌ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ جَزَاءً
بِمَا كَانُوا يَكْسِبُونَ * يَحْلِفُونَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ فَإِنْ تَرْضَوْا عَنْهُمْ فَإِنَّ اللَّهَ لاَ يَرْضَى عَنِ
الْقَوْمِ الْفَاسِقِينَ‏}‏ قَالَ كَعْبٌ كُنَّا خُلِّفْنَا أَيُّهَا الثَّلاَثَةُ عَنْ أَمْرِ أُولَئِكَ الَّذِينَ قَبِلَ مِنْهُمْ رَسُولُ
اللَّهِ صلى الله عليه وسلم حِينَ حَلَفُوا لَهُ فَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَأَرْجَأَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم أَمْرَنَا حَتَّى قَضَى اللَّهُ فِيهِ فَبِذَلِكَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَعَلَى الثَّلاَثَةِ الَّذِينَ
خُلِّفُوا‏}‏ وَلَيْسَ الَّذِي ذَكَرَ اللَّهُ مِمَّا خُلِّفْنَا تَخَلُّفَنَا عَنِ الْغَزْوِ وَإِنَّمَا هُوَ تَخْلِيفُهُ إِيَّانَا وَإِرْجَاؤُهُ
أَمْرَنَا عَمَّنْ حَلَفَ لَهُ وَاعْتَذَرَ إِلَيْهِ فَقَبِلَ مِنْهُ ‏.‏

وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ
ابْنِ شِهَابٍ، بِإِسْنَادِ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ، سَوَاءً ‏.‏
இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டிலுள்ள ரோமர்களையும், கிறிஸ்தவ அரபிகளையும் (எதிர்கொள்ள) நாடினார்கள்.

(அடுத்து) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் எனக்கு அறிவித்தார்கள்; கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கண் பார்வை இழந்தபோது, அவருடைய மகன்களில் அப்துல்லாஹ் பின் கஅப் அவருக்கு வழிகாட்டியாக இருந்தார். அப்துல்லாஹ் பின் கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பின்தங்கிய தனது கதையை விவரிப்பதை நான் கேட்டேன்.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட எந்தவொரு போரிலிருந்தும் பின்தங்கியதில்லை; தபூக் போரையும் பத்ருப் போரையும் தவிர. பத்ருப் போரைப் பொறுத்தவரை, அதில் கலந்து கொள்ளாத யாரும் பழிக்கப்படவில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் (போரிடுவதற்காக அல்லாமல்) குறைஷிகளின் வர்த்தகக் கூட்டத்தை வழிமறிக்கவே புறப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களுடைய எதிரிகளுக்கும் இடையே முன்னரே திட்டமிடாமல் ஒரு சந்திப்பை (போரை) ஏற்படுத்திவிட்டான்.

நான் ‘அகபா’ இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது நாங்கள் இஸ்லாத்திற்காக (உறுதிமொழி) ஒப்பந்தம் செய்தோம். பத்ருப் போர் மக்களிடையே (அகபாவை விட) பிரபலம் என்றாலும், பத்ருப் போரில் நான் கலந்து கொள்வதை விட அகபாவில் கலந்துகொண்டதையே நான் அதிகம் விரும்புகிறேன்.

தபூக் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட்டு நான் பின்தங்கிய என் கதை இதுதான்:
அந்தப் போரின் போது இருந்த உடல் வலிமையும் வசதியும் அதற்கு முன் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்கு முன் என்னிடம் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் (ஒட்டகங்கள்) இருந்ததில்லை; ஆனால் இப்போருக்காக இரண்டு வாகனங்களைச் சேகரித்து வைத்திருந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான வெப்பத்தில் இப்பயணத்தை மேற்கொண்டார்கள். இப்பயணம் வெகுதொலைவானதாகவும், பாலைவனத்தைக் கடக்க வேண்டியதாகவும் இருந்தது. மேலும், (ரோமர்கள் என்ற) பெரும் எதிரிப் படையைச் சந்திக்க வேண்டியிருந்ததால், முஸ்லிம்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக, தாம் எங்கே செல்கிறோம் என்ற விவரத்தை அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏராளமான முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களுடைய பெயர்களை எந்தப் பதிவேடும் (அதாவது, அரசுப் பதிவேடு) உள்ளடக்கியிருக்கவில்லை.

கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: எனவே, ஒரு மனிதர் (போருக்கு வராமல்) மறைந்து கொள்ள நினைத்தால், அல்லாஹ்விடமிருந்து வஹீ (இறைச்செய்தி) வராத வரை, தான் வராமல் இருப்பது நபியவர்களுக்குத் தெரியாது என்று எண்ணிக் கொள்ள முடியும். கனிகள் பழுத்து, மரநிழல்கள் அடர்ந்திருந்த (சுகமான) காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்போருக்குப் புறப்பட்டார்கள். எனக்கு அவற்றின் மீது அதிக விருப்பம் இருந்தது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்தார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்வதற்காகக் காலையில் புறப்படுவேன்; ஆனால், எதையும் முடிக்காமல் திரும்பி வருவேன். "நான் விரும்பினால் எளிதாகத் தயாராகிவிடுவேன்" என்று என் மனதிற்குள் சொல்லிக் கொள்வேன். இது இப்படியே நீடித்துக் கொண்டே இருந்தது. மக்களோ போருக்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ஒரு காலையில் புறப்பட்டு விட்டனர். அப்போதும் நான் எனது சாதனங்களில் எதையும் தயார் செய்திருக்கவில்லை.

அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகு, ஏற்பாடுகளைச் செய்வதற்காக நான் காலையில் சென்றேன்; ஆனால் எதையும் முடிக்காமலேயே திரும்பினேன். மறுநாளும் இப்படியே ஆனது. இது என்னிடம் நீடித்துக் கொண்டே இருந்தது. அதற்குள் படையினர் வேகமாகச் சென்று விட்டனர். நான் புறப்பட்டு அவர்களை அடைந்து விடலாமா என்று நினைத்தேன் - நான் அப்படிச் செய்திருக்கக் கூடாதா! - ஆனால், அது எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்களிடையே நடமாடியபோது, நயவஞ்சகத்தில் மூழ்கியவர் என்று கருதப்பட்டவர் அல்லது பலவீனத்தின் காரணமாக அல்லாஹ் யாரை மன்னித்துவிட்டானோ அத்தகையவரைத் தவிர (சரியான இறைநம்பிக்கை கொண்ட) யாரையும் (ஊரில்) பார்க்க முடியாதது எனக்குக் கவலையை ஏற்படுத்தியது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போர்க்களத்தைச் சென்றடையும் வரை என்னை நினைவுகூரவில்லை. அங்கே மக்களிடையே அமர்ந்திருந்தபோது, "கஅப் பின் மாலிக் என்ன ஆனார்?" என்று கேட்டார்கள். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அவருடைய ஆடையும், அவர் தனது தோற்றப்பொலிவை ரசிப்பதும் அவரைத் தடுத்துவிட்டன" என்று கூறினார். உடனே முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், "நீ சொன்னது தவறு! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அவரைப் பற்றி நல்லதைத் தவிர வேறெதையும் அறியவில்லை" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

அப்போது, கானல் நீரை ஊடுருவி வரும் வெண்ணிற ஆடை அணிந்த ஒருவரை நபி (ஸல்) கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூ கைஸமாவாக இருக்கட்டும்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் அன்சாரியான அபூ கைஸமாவாகவே இருந்தார். அவர்தான் (முன்பொரு முறை) ஒரு ஸாஉ அளவு பேரீச்சம்பழத்தை தர்மம் செய்தபோது, நயவஞ்சகர்களால் கேலி செய்யப்பட்டவர்.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்குக் கிடைத்தபோது என் கவலை அதிகமானது. பொய்யான காரணங்களைச் சொல்ல நான் நினைத்தேன். "நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்பிப்பேன்?" என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இது தொடர்பாக என் குடும்பத்திலுள்ள விவேகமான அனைவரிடமும் ஆலோசனை கேட்டேன்.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா) வந்துவிட்டார்கள்" என்று கூறப்பட்டபோது, பொய்யான எண்ணங்கள் என்னைவிட்டு அகன்றன. பொய்யைச் சொல்லிவிட்டு நபியவர்களிடமிருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்பதை நான் உணர்ந்தேன். எனவே, உண்மையையே பேசுவது என்று நான் உறுதி கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பினால், முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, மக்களுக்காக அமர்வது வழக்கம். அவ்வாறே செய்தார்கள். போருக்கு வராமல் பின்தங்கியவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தங்களுக்கான (பொய்க்) காரணங்களைக் கூறி சத்தியம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட ஆண்களாக இருந்தனர். அவர்களுடைய வெளிப்படையான காரணங்களை ஏற்றுக்கொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து உறுதிமொழி (பைஅத்) பெற்றார்கள், அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள்; அவர்களின் உள்ளத்தில் உள்ளவற்றை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.

இறுதியில் நான் வந்தேன். நான் சலாம் சொன்னபோது, கோபத்திலிருப்பவர் புன்னகைப்பது போல் புன்னகைத்தார்கள். பிறகு, "அருகே வா!" என்றார்கள். நான் நடந்து சென்று அவர்கள் முன் அமர்ந்தேன். என்னிடம், "ஏன் நீர் பின்தங்கினீர்? நீர் உமது வாகனத்தை வாங்கியிருக்கவில்லையா?" என்று கேட்டார்கள்.

அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, தாங்கள் அல்லாத வேறொருவர் முன் நான் அமர்ந்திருந்தால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவருடைய கோபத்திலிருந்து தப்பித்திருப்பேன்; (வாதிடும்) தர்க்கத் திறமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, இன்று உங்களிடம் பொய்யான காரணத்தைச் சொல்லி உங்களைத் திருப்திப்படுத்தினாலும், விரைவில் அல்லாஹ் என் மீது உங்களைக் கோபப்படச் செய்துவிடுவான் என்பதை நான் அறிவேன். நான் உங்களிடம் உண்மையைச் சொன்னால், அதில் நீங்கள் என் மீது கோபமடைவீர்கள்; இருப்பினும் அதில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் ஆதரவு வைக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு (தகுந்த) எந்தக் காரணமும் இருக்கவில்லை. நான் பின்தங்கியிருந்த அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் வலிமையும் வசதியும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை" என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் உண்மை பேசினார். நீர் எழுந்து செல்லும்! உமது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுத்திரும்" என்று கூறினார்கள். நான் எழுந்தேன். பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன் நீர் எந்தக் குற்றமும் செய்ததாக நாங்கள் அறியவில்லை. பின்தங்கிய மற்றவர்கள் சொன்னது போல் ஏதாவது ஒரு காரணத்தை நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குத் தவறிவிட்டீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமக்காகப் பாவமன்னிப்புத் தேடியதே உமது பாவத்திற்குப் போதுமானதாக இருந்திருக்குமே!" என்று கூறினார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, "நான் சொன்னது பொய் (எனக்குக் காரணம் இருந்தது)" என்று சொல்லச் சொல்லி அவர்கள் என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தார்கள். நான் அவர்களிடம், "என்னுடன் இது போன்று வேறு யாருக்கேனும் நடந்துள்ளதா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம், இரண்டு பேர் நீர் சொன்னது போலவே சொன்னார்கள். உமக்குச் சொல்லப்பட்டது போலவே அவர்களுக்கும் சொல்லப்பட்டது" என்றார்கள். "அவர்கள் இருவரும் யார்?" என்று கேட்டேன். அவர்கள், "முராரா பின் ரபீஆ அல்-ஆமிரி மற்றும் ஹிலால் பின் உமையா அல்-வாகிஃபி" என்று பதிலளித்தனர். பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயரை என்னிடம் அவர்கள் கூறினர்; அவ்விருவரிடமும் எனக்கு ஒரு முன்மாதிரி இருந்தது. அவர்கள் இருவரின் பெயரையும் என்னிடம் சொன்னவுடன் நான் (எனது முடிவில்) உறுதியாகிவிட்டேன்.

போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கியவர்களில் எங்கள் மூவருடன் மட்டும் யாரும் பேசக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தார்கள். பூமி எனக்கு அந்நியமாகிவிட்டது போல் என் உள்ளத்தில் தோன்றியது. நான் அறிந்திருந்த பூமி இதுவல்ல (என்று நினைத்தேன்). இப்படியே ஐம்பது இரவுகள் கழிந்தன. என் இரு தோழர்களும் சோர்ந்து போய், அழுது கொண்டே தங்கள் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். ஆனால் நான் மக்களில் மிகவும் இளையவனாகவும், திடகாத்திரமானவனாகவும் இருந்தேன். எனவே, நான் வெளியே சென்று தொழுகையில் கலந்து கொள்வேன்; கடைவீதிகளில் சுற்றி வருவேன்; ஆனால் யாரும் என்னுடன் பேச மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை முடித்து அமர்ந்திருக்கும் போது அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். "சலாமுக்கு பதிலளிக்க அவர்கள் உதட்டை அசைத்தார்களா இல்லையா?" என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு அவர்களுக்கு அருகிலேயே நின்று தொழுவேன்; அவர்களைக் கள்ளப் பார்வையாகப் பார்ப்பேன். நான் தொழுகையில் ஈடுபடும்போது அவர்கள் என்னைப் பார்ப்பார்கள்; நான் அவர்கள் பக்கம் திரும்பினால் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

மக்களின் புறக்கணிப்பு நீண்டுகொண்டே சென்றபோது, (ஒரு நாள்) நான் என் தந்தையின் சகோதரர் மகனும், எனக்கு மிகவும் விருப்பமானவருமான அபூ கதாதா (ரலி) அவர்களுடைய தோட்டத்தின் மதிலில் ஏறி அவருக்கு சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் எனக்கு சலாம் பதில் சொல்லவில்லை. நான் அவரிடம், "அபூ கதாதாவே! அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னிடம் கேட்கிறேன்; நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதை நீ அறிவாயா?" என்று கேட்டேன். அவர் மவுனமாக இருந்தார். மீண்டும் அவரிடம் அல்லாஹ்வைக் கொடுத்துக் கேட்டேன்; அவர் மவுனமாகவே இருந்தார். மீண்டும் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்" என்று கூறினார். எனது கண்கள் கலங்கின. மதிலில் ஏறித் திரும்பி விட்டேன்.

நான் மதீனாவின் கடைவீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மதீனாவில் உணவு தானியங்களை விற்பதற்காக வந்திருந்த ஷாம் தேசத்து உழவன் (நபத்) ஒருவன், "கஅப் பின் மாலிக்கை எனக்கு யார் காட்டுவார்?" என்று கேட்டான். மக்கள் என்னைச் சுட்டிக்காட்டினார்கள். அவன் என்னிடம் வந்து, (கிறித்தவ) கஸ்ஸான் மன்னன் எழுதிய கடிதம் ஒன்றைக் கொடுத்தான். நான் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்ததால் அதைப் படித்தேன். அதில், "உமது தோழர் (முஹம்மத்) உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தது. இழிவுக்கும் உரிமை மறுப்புக்கும் உள்ளாகும் இடத்தில் அல்லாஹ் உம்மை வைத்திருக்க வேண்டாம்; நீர் எங்களிடம் வந்துவிடும்; நாங்கள் உம்மை கண்ணியப்படுத்துவோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

அதைப் படித்ததும், "இதுவும் ஒரு சோதனையே" என்று கூறி, அதை அடுப்பில் போட்டு எரித்து விட்டேன்.

ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கடந்த நிலையில் வஹீ (இறைச்செய்தி) வருவது தாமதமானது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தூதர் என்னிடம் வந்து, "நீர் உமது மனைவியை விட்டு விலகியிருக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்" என்றார். "நான் அவளை விவாகரத்து செய்ய வேண்டுமா? அல்லது என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டேன். "இல்லை, அவளைவிட்டு விலகியிரும்; அவளை நெருங்க வேண்டாம்" என்று அவர் கூறினார். என் இரு தோழர்களுக்கும் இது போன்றே சொல்லியனுப்பினார்கள். நான் என் மனைவியிடம், "அல்லாஹ் இவ்விஷயத்தில் தீர்ப்பளிக்கும் வரை நீ உன் தாய் வீட்டிற்குச் சென்று அங்கே இரு" என்று கூறினேன்.

ஹிலால் பின் உமையாவின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஹிலால் பின் உமையா முதியவர்; அவருக்குப் பணிவிடை செய்பவர் யாருமில்லை. நான் அவருக்குப் பணிவிடை செய்வதை வெறுக்கிறீர்களா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "இல்லை (வெறுக்கவில்லை), ஆனால் அவர் உம்மை நெருங்கக் கூடாது" என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு எதிலும் நாட்டம் இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவருக்கு இந்நிலை ஏற்பட்டது முதல் இன்று வரை அவர் அழுது கொண்டே இருக்கிறார்" என்று கூறினார்.

என் குடும்பத்தினர் சிலர் என்னிடம், "ஹிலால் பின் உமையாவின் மனைவிக்கு அவருக்குப் பணிவிடை செய்ய அனுமதியளித்தது போல், உங்கள் மனைவிக்கும் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கலாமே?" என்று கூறினர். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இது குறித்து அனுமதி கேட்க மாட்டேன். நான் ஒரு இளைஞன்; நான் அனுமதி கேட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்வார்களோ எனக்குத் தெரியாது" என்று கூறிவிட்டேன்.

அதன் பிறகு பத்து இரவுகள் கழிந்தன. எங்களுடன் மக்கள் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு ஐம்பது இரவுகள் நிறைவடைந்தன. ஐம்பதாவது நாள் காலையில் நான் ஃபஜ்ர் தொழுதுவிட்டு, எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் அமர்ந்திருந்தேன். அல்லாஹ் (எங்களைப் பற்றிக் குர்ஆனில்) குறிப்பிட்டுள்ள அந்த நிலையில் நான் இருந்தேன்; என் உயிர் எனக்குச் சுமையாகி, பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் எனக்குக் குறுகியதாக இருந்தது. அப்போது, 'சல்ஃ' மலை மீதேறி ஒருவர், "கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி!" என்று உரத்த குரலில் அழைப்பதை நான் செவியுற்றேன். உடனே (நன்றிக்காக) சஜ்தாவில் விழுந்தேன்; துன்பம் நீங்கிவிட்டது என்பதை அறிந்து கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் போது, அல்லாஹ் எங்கள் தவ்பாவை (பாவமன்னிப்பை) ஏற்றுக் கொண்டதை மக்களுக்கு அறிவித்தார்கள். உடனே மக்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்லப் புறப்பட்டனர். என் இரு தோழர்களிடமும் நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். ஒருவர் என் பக்கம் குதிரையை விரட்டி வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மலையேறி) என்னை நோக்கி ஓடி வந்தார். குதிரையை விட அவருடைய குரல் வேகமாக என்னிடம் வந்து சேர்ந்தது. யாருடைய குரலை நான் கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல வந்தபோது, என்னுடைய இரண்டு ஆடைகளையும் கழற்றி அவருக்குப் பரிசாக அளித்துவிட்டேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்நாளில் அவ்விரண்டைத் தவிர எனக்கு வேறு ஆடை இருக்கவில்லை. எனவே, நான் இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டேன். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, "அல்லாஹ் உமது தவ்பாவை ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு வாழ்த்துக்கள்!" என்று கூறினார்கள்.

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள்; அவர்களைச் சுற்றி மக்கள் இருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் என்னை நோக்கி ஓடி வந்து, எனக்குக் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஹாஜிர்களில் அவரைத் தவிர வேறு யாரும் என்னிடம் எழுந்து வரவில்லை. தல்ஹாவின் இந்தச் செயலை கஅப் (ரலி) அவர்கள் மறக்கவே இல்லை.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் மகிழ்ச்சியால் முகம் பிரகாசிக்க, "உம்மை உம் தாய் பெற்றெடுத்த நாள் முதல் உமக்குக் கிடைத்த நாட்களில் இதுவே சிறந்த நாள் என்ற நற்செய்தியைப் பெற்றுக் கொள்வீராக!" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இது தங்களிடமிருந்தா? அல்லது அல்லாஹ்விடமிருந்தா?" என்று கேட்டேன். "இல்லை, அல்லாஹ்விடமிருந்துதான்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களுடைய முகம் சந்திரனின் ஒரு துண்டு போன்று பிரகாசிக்கும்; அதை நாங்கள் அறிவோம்.

நான் அவர்கள் முன் அமர்ந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! என் தவ்பா அங்கீகரிக்கப்பட்டதற்காக என் செல்வங்கள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் தர்மமாக வழங்கி விடுகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது செல்வத்தில் சிலவற்றை உமக்காக வைத்துக் கொள்ளும்; அதுவே உமக்கு நல்லது" என்றார்கள். நான், "கைபரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் வைத்துக் கொள்கிறேன்" என்று கூறினேன்.

மேலும் நான், "அல்லாஹ்வின் தூதரே! உண்மையின் மூலமாகவே அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். நான் உயிருடன் இருக்கும் வரை உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்பது என் தவ்பாவின் ஒரு பகுதியாகும்" என்று கூறினேன்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைச் சொன்னது முதல் இன்று வரை, என்னை விட உண்மையை அதிகமாகப் பேசியதற்காக அல்லாஹ் சோதித்த (வெற்றியளித்த) யாரையும் நான் முஸ்லிம்களில் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அதைச் சொன்னது முதல் இன்று வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்லவில்லை. எஞ்சிய காலத்திலும் அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்று ஆதரவு வைக்கிறேன்.

அப்போது அல்லாஹ் (கீழ்கண்ட) வசனங்களை அருளினான்:
[திருக்குர்ஆன் 9:117-118]
**“லகத் தாபல்லாஹு அலன் நபிய்யி வல் முஹாஜிரீன வல் அன்ஸார் அல்லதீனத் தபஊஹு ஃபீ ஸாஅதில் உஸ்ரதி மின் பஅதி மா காத யஸீகு குலூபு ஃபரீகிம் மின்ஹும் ஸும்ம தாப அலைஹிம் இன்னஹு பிஹிம் ரஊஃபுர் ரஹீம். வ அலத் ஸலாஸதில் லதீன குல்லிஃபூ ஹத்தா இதா தாகத் அலைஹிமுல் அருளு பிமா ரஹுபத் வ தாகத் அலைஹிம் அன்ஃபுஸுஹும்...”**

(பொருள்: "நிச்சயமாக அல்லாஹ் நபியையும், கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் மன்னித்தான்; அவர்களில் ஒரு பிரிவினருடைய உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க அன்புடைவனாகவும், பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான். மேலும், (போருக்குச் செல்லாமல்) பின்தங்கி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (அல்லாஹ் மன்னித்தான்). பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் அவர்களுக்குக் குறுகிவிட்டது; அவர்களுடைய உயிர்களும் அவர்களுக்குச் சுமையாகிவிட்டன... (இறுதியில்) 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் இருங்கள்' என்பது வரை (வசனம் அருளப்பட்டது).")

கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழிகாட்டிய பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உண்மை பேசியதை விடப் பெரிய அருட்கொடை எதையும் என் வாழ்வில் நான் உணரவில்லை. நான் பொய் சொல்லியிருந்தால், பொய் சொன்னவர்கள் அழிந்தது போல் நானும் அழிந்திருப்பேன். ஏனெனில், பொய் சொன்னவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, யாருக்கும் சொல்லாத மிகக் கடுமையான வார்த்தைகளை வஹீ அருளப்பட்டபோது அல்லாஹ் கூறினான்:
[திருக்குர்ஆன் 9:95-96]
**“ஸயஹ்லிபூன பில்லாஹி லகும் இதின்கலப்தும் இலைஹிம் லிதுஃரிளூ அன்ஹும் ஃஅக்ரிளூ அன்ஹும் இன்னஹும் ரிஜ்ஸுன் வ மஃவாஹும் ஜஹன்னமு ஜஸாஅன் பிமா கானூ யக்ஸிபூன். யஹ்லிபூன லகும் லிதர்ளவ் அன்ஹும் ஃஇன் தர்ளவ் அன்ஹும் ஃஇன்னல்லாஹ லா யர்ளா அனில் கவ்மில் ஃபாஸிகீன்.”**

(பொருள்: "நீங்கள் அவர்களிடம் திரும்பிச் சென்றால், அவர்களை நீங்கள் (கண்டிப்பதைத்) தவிர்த்துக் கொள்வதற்காக உங்கள் முன் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணியுங்கள். நிச்சயமாக அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் சம்பாதித்ததற்குக் கூலியாக அவர்கள் தங்குமிடம் நரகமேயாகும். நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்கிறார்கள். நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும், நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான கூட்டத்தாரைப் பற்றித் திருப்தியடைய மாட்டான்.")

கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரிடம் சத்தியத்தை ஏற்று, பைஅத் செய்து, அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடினார்களோ, அவர்களை விட்டும் எங்கள் மூவரின் விவகாரம் ஒத்திவைக்கப்பட்டது. எங்கள் விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தள்ளிப் போட்டார்கள். அதனால்தான் அல்லாஹ் **"வ அலத் ஸலாஸதில் லதீன குல்லிஃபூ"** (மேலும் பின்தங்கி வைக்கப்பட்ட அந்த மூவர்) என்று கூறினான்.

இங்கே (குல்லிஃபூ - பின்தங்க வைக்கப்பட்டனர் என்று) அல்லாஹ் குறிப்பிட்டிருப்பது, நாங்கள் போரிலிருந்து பின்தங்கியதை அல்ல; மாறாக, எங்களுடைய விவகாரம் ஒத்திவைக்கப்பட்டதையே அது குறிக்கிறது. அதாவது, தங்களிடம் வந்து சத்தியம் செய்து சாக்குப்போக்குச் சொன்னவர்களை ஏற்றுக்கொண்டு, எங்களை(த் தீர்ப்புக் கூறாமல்) பிற்படுத்தினானே, அதையே இது குறிக்கிறது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3149ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبِكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ لَيْسَ بِمُوسَى صَاحِبِ الْخَضِرِ قَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ سَمِعْتُ أُبَىَّ بْنَ كَعْبٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏"‏ قَامَ مُوسَى خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَسُئِلَ أَىُّ النَّاسِ أَعْلَمُ فَقَالَ أَنَا أَعْلَمُ ‏.‏ فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنَّ عَبْدًا مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ هُوَ أَعْلَمُ مِنْكَ قَالَ مُوسَى أَىْ رَبِّ فَكَيْفَ لِي بِهِ فَقَالَ لَهُ احْمِلْ حُوتًا فِي مِكْتَلٍ فَحَيْثُ تَفْقِدُ الْحُوتَ فَهُوَ ثَمَّ فَانْطَلَقَ وَانْطَلَقَ مَعَهُ فَتَاهُ وَهُوَ يُوشَعُ بْنُ نُونٍ وَيُقَالُ يُوسَعُ فَحَمَلَ مُوسَى حُوتًا فِي مِكْتَلٍ فَانْطَلَقَ هُوَ وَفَتَاهُ يَمْشِيَانِ حَتَّى إِذَا أَتَيَا الصَّخْرَةَ فَرَقَدَ مُوسَى وَفَتَاهُ فَاضْطَرَبَ الْحُوتُ فِي الْمِكْتَلِ حَتَّى خَرَجَ مِنَ الْمِكْتَلِ فَسَقَطَ فِي الْبَحْرِ قَالَ وَأَمْسَكَ اللَّهُ عَنْهُ جِرْيَةَ الْمَاءِ حَتَّى كَانَ مِثْلَ الطَّاقِ وَكَانَ لِلْحُوتِ سَرَبًا وَكَانَ لِمُوسَى وَلِفَتَاهُ عَجَبًا فَاَنْطَلَقَا بَقِيَّةَ يَوْمِهِمَا وَلَيْلَتِهِمَا وَنُسِّيَ صَاحِبُ مُوسَى أَنْ يُخْبِرَهُ فَلَمَّا أَصْبَحَ مُوسَى قَالَ لِفَتَاهُ‏:‏ ‏(‏آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا ‏)‏ قَالَ وَلَمْ يَنْصَبْ حَتَّى جَاوَزَ الْمَكَانَ الَّذِي أُمِرَ بِهِ ‏:‏ ‏(‏قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ وَمَا أَنْسَانِيهُ إِلاَّ الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ وَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ عَجَبًا ‏)‏ قَالَ مُوسَى ‏:‏ ‏(‏ ذَلِكَ مَا كُنَّا نَبْغِ فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا ‏)‏ قَالَ فَكَانَا يَقُصَّانِ آثَارَهُمَا ‏.‏ قَالَ سُفْيَانُ يَزْعُمُ نَاسٌ أَنَّ تِلْكَ الصَّخْرَةَ عِنْدَهَا عَيْنُ الْحَيَاةِ وَلاَ يُصِيبُ مَاؤُهَا مَيِّتًا إِلاَّ عَاشَ ‏.‏ قَالَ وَكَانَ الْحُوتُ قَدْ أُكِلَ مِنْهُ فَلَمَّا قَطَرَ عَلَيْهِ الْمَاءُ عَاشَ ‏.‏ قَالَ فَقَصَّا آثَارَهُمَا حَتَّى أَتَيَا الصَّخْرَةَ فَرَأَى رَجُلاً مُسَجًّى عَلَيْهِ بِثَوْبٍ فَسَلَّمَ عَلَيْهِ مُوسَى فَقَالَ أَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ قَالَ أَنَا مُوسَى ‏.‏ قَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ ‏.‏ قَالَ يَا مُوسَى إِنَّكَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ وَأَنَا عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ لاَ تَعْلَمُهُ فَقَالَ مُوسَى ‏:‏ ‏(‏ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رُشْدًا * قَالَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا * وَكَيْفَ تَصْبِرُ عَلَى مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا * قَالَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ صَابِرًا وَلاَ أَعْصِي لَكَ أَمْرًا ‏)‏ قَالَ لَهُ الْخَضِرُ ‏:‏ ‏(‏فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَيْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ‏)‏ قَالَ نَعَمْ فَانْطَلَقَ الْخَضِرُ وَمُوسَى يَمْشِيَانِ عَلَى سَاحِلِ الْبَحْرِ فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ فَكَلَّمَاهُ أَنْ يَحْمِلُوهُمَا فَعَرَفُوا الْخَضِرَ فَحَمَلُوهُمَا بِغَيْرِ نَوْلٍ فَعَمَدَ الْخَضِرُ إِلَى لَوْحٍ مِنْ أَلْوَاحِ السَّفِينَةِ فَنَزَعَهُ فَقَالَ لَهُ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا ‏:‏ ‏(‏ لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ شَيْئًا إِمْرًا * قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا * قَالَ لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا ‏)‏ ثُمَّ خَرَجَا مِنَ السَّفِينَةِ فَبَيْنَمَا هُمَا يَمْشِيَانِ عَلَى السَّاحِلِ وَإِذَا غُلاَمٌ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ فَاقْتَلَعَهُ بِيَدِهِ فَقَتَلَهُ فَقَالَ لَهُ مُوسَى ‏:‏ ‏(‏ أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا * قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا ‏)‏ قَالَ وَهَذِهِ أَشَدُّ مِنَ الأُولَى ‏:‏ ‏(‏ قَالَ إِنْ سَأَلْتُكَ عَنْ شَيْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي عُذْرًا * فَانْطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ ‏)‏ يَقُولُ مَائِلٌ فَقَالَ الْخَضِرُ بِيَدِهِ هَكَذَا ‏:‏ ‏(‏ فَأَقَامَهُ ‏)‏ فَقَالَ لَهُ مُوسَى قَوْمٌ أَتَيْنَاهُمْ فَلَمْ يُضَيِّفُونَا وَلَمْ يُطْعِمُونَا ‏:‏ ‏(‏ إِنْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا * قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا ‏)‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَرْحَمُ اللَّهُ مُوسَى لَوَدِدْنَا أَنَّهُ كَانَ صَبَرَ حَتَّى يَقُصَّ عَلَيْنَا مِنْ أَخْبَارِهِمَا ‏"‏ ‏.‏ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ الأُولَى كَانَتْ مِنْ مُوسَى نِسْيَانٌ - قَالَ وَجَاءَ عُصْفُورٌ حَتَّى وَقَعَ عَلَى حَرْفِ السَّفِينَةِ ثُمَّ نَقَرَ فِي الْبَحْرِ فَقَالَ لَهُ الْخَضِرُ مَا نَقَصَ عِلْمِي وَعِلْمُكَ مِنْ عِلْمِ اللَّهِ إِلاَّ مِثْلَ مَا نَقَصَ هَذَا الْعُصْفُورُ مِنَ الْبَحْرِ ‏"‏ ‏.‏ قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ وَكَانَ يَعْنِي ابْنَ عَبَّاسٍ يَقْرَأُ وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا وَكَانَ يَقْرَأُ وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَرَوَاهُ الزُّهْرِيُّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ رَوَاهُ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ أَبُو عِيسَى سَمِعْتُ أَبَا مُزَاحِمٍ السَّمَرْقَنْدِيَّ يَقُولُ سَمِعْتُ عَلِيَّ بْنَ الْمَدِينِيِّ يَقُولُ حَجَجْتُ حَجَّةً وَلَيْسَ لِي هِمَّةٌ إِلاَّ أَنْ أَسْمَعَ مِنْ سُفْيَانَ يَذْكُرُ فِي هَذَا الْحَدِيثِ الْخَبَرَ حَتَّى سَمِعْتُهُ يَقُولُ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ وَقَدْ كُنْتُ سَمِعْتُ هَذَا مِنْ سُفْيَانَ مِنْ قَبْلِ ذَلِكَ وَلَمْ يَذْكُرْ فِيهِ الْخَبَرَ ‏.‏
ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "நவ்ஃப் அல்-பிகாலீ என்பவர், பனூ இஸ்ராயீல்களுக்கு அனுப்பப்பட்ட மூஸா, கித்ருடைய தோழரான மூஸா அல்லர் என்று வாதிடுகிறார்" என்று கூறினேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), "அல்லாஹ்வின் எதிரி பொய் சொல்லிவிட்டான்" என்று கூறினார்கள். (பிறகு) "உபய் பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவித்ததாக நான் கேட்டிருக்கிறேன்; அவர்கள் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறினார்கள்:

'மூஸா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே உரையாற்ற எழுந்தார்கள். அப்போது அவர்களிடம், "மக்களில் மிக அறிந்தவர் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நானே மிக அறிந்தவன்" என்று பதிலளித்தார்கள். (அறிவை) அல்லாஹ்வின் பக்கம் அவர்கள் சேர்க்காததால் அல்லாஹ் அவர்கள் மீது அதிருப்தி கொண்டான். அல்லாஹ் அவருக்கு, "இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் (மஜ்மஉல் பஹ்ரைனில்) என்னுடைய அடியார்களில் ஒருவர் இருக்கிறார்; அவர் உங்களை விட அதிகம் அறிந்தவர்" என்று வஹீ அறிவித்தான்.

மூஸா (அலை) அவர்கள், "என் இறைவா! அவரை நான் எவ்வாறு சந்திப்பது?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், "ஒரு மீனை எடுத்துச் (அல்லது சுமந்து) சென்று அதை ஒரு கூடையில் (மக்தல்) வைத்துச் சுமந்து செல்லும்! எங்கு அந்த மீனைத் தவறவிடுகிறீரோ அங்கே அவர் இருப்பார்" என்று கூறினான்.

ஆகவே, மூஸா (அலை) அவர்களும் அவருடைய இளைஞரான யூஷஃ பின் நூன் என்பவரும் புறப்பட்டனர். (யூஷஃ என்பதை யூஸஃ என்றும் சொல்லப்படும்). மூஸா (அலை) ஒரு மீனை ஒரு கூடையில் வைத்துச் சுமந்து சென்றார்கள். அவரும் அவருடைய இளைஞரும் நடந்து சென்றனர். அவர்கள் ஒரு பாறையை அடைந்தபோது, மூஸா (அலை) அவர்களும் அவருடைய இளைஞரும் (அயர்ந்து) உறங்கிவிட்டனர். அப்போது கூடையில் இருந்த மீன் துடித்து, கூடையிலிருந்து வெளியேறி கடலில் விழுந்தது.

அல்லாஹ் நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தினான்; அது ஒரு சுரங்கம் போலானது. மீனுக்கு அது ஒரு வழியை ஏற்படுத்தியது; மூஸாவுக்கும் அவருடைய இளைஞருக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பகலின் எஞ்சிய நேரத்திலும் இரவிலும் பயணம் செய்தனர். மூஸாவுடைய தோழர் (யூஷஃ) மீன் விஷயத்தை மூஸாவிடம் கூற மறந்துவிட்டார்.

விடிந்ததும் மூஸா (அலை) தம் இளைஞரிடம்: **"ஆதினா ஃகதாஅனா லகத் லகீனா மின் ஸஃபரினா ஹாதா நஸபா"** (18:62) (நமக்கு நம் உணவைக் கொண்டு வாருங்கள்! நிச்சயமாக நாம் இந்த நம் பயணத்தில் களைப்பை அடைந்துவிட்டோம்) என்று கூறினார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தைக் கடந்து செல்லும் வரை மூஸா (அலை) களைப்பை உணரவில்லை.

அப்போது அந்த இளைஞர்: **"அரஅய்த இத் அவாய்னா இலாஸ் ஸக்ரதி ஃப இன்னீ நஸீதுல் ஹூத வமா அன்ஸானீஹு இல்லஷ் ஷைத்தானு அன் அத்குரஹ்; வத்த ஃகத ஸபீலஹு ஃபில் பஹ்ரி அஜபா"** (18:63) (நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியபோது (நடந்ததை) நீர் பார்த்தீரா? நிச்சயமாக நான் மீனை மறந்துவிட்டேன். அதை நான் நினைவூட்டுவதிலிருந்து ஷைத்தானைத் தவிர வேறு யாரும் என்னை மறக்கடிக்கவில்லை. அது கடலில் ஆச்சரியமான ஒரு வழியை ஏற்படுத்திக்கொண்டது) என்று கூறினார்.

அதற்கு மூஸா (அலை): **"தாலிக மா குன்னா நப்ஃகி ஃபர்தத்தா அலா ஆத்தாரிஹிமா கஸஸா"** (18:64) (அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்தது) என்று கூறிவிட்டு, அவர்கள் இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் (திரும்பிச்) சென்றார்கள்.'"

(அறிவிப்பாளர்) சுஃப்யான் (ரஹ்) கூறினார்: "அந்தப் பாறையின் அருகில் 'அல்-ஹயாத்' (ஜீவ ஊற்று) என்றொரு ஊற்று இருந்ததாகவும், அதன் தண்ணீர் இறந்துபோன எவர் மீது பட்டாலும் அவர் உயிர் பெற்றுவிடுவார் என்றும் மக்கள் கருதுகின்றனர். அந்த மீனில் ஒரு பகுதி உண்ணப்பட்டிருந்தது. அதன் மீது அந்தத் தண்ணீர் துளி பட்டவுடன் அது உயிர் பெற்றது."

(நபிகளார் தொடர்ந்தார்கள்): "அவர்கள் இருவரும் தங்கள் சுவடுகளைப் பின்பற்றிச் சென்று அந்தப் பாறையை அடைந்தபோது, அங்கே ஒரு மனிதர் தம் உடல் முழுவதையும் ஆடையால் போர்த்தியவாறு இருப்பதைக் கண்டனர். மூஸா (அலை) அவருக்கு ஸலாம் கூறினார்கள். அதற்கு அவர் (கித்ர்), "உமது பூமியில் சாந்தி (ஸலாம்) ஏது?" என்று கேட்டார். மூஸா (அலை), "நான்தான் மூஸா" என்றார்கள். அவர், "பனூ இஸ்ராயீல்களின் மூஸாவா?" என்று கேட்டார். மூஸா (அலை), "ஆம்" என்றார்கள். அவர், "மூஸாவே! அல்லாஹ் உமக்குக் கற்றுக்கொடுத்த அவனது இல்ம் (ஞானம்) உம்மிடம் உள்ளது; அதை நான் அறியமாட்டேன். அவன் எனக்குக் கற்றுக்கொடுத்த இல்ம் என்னிடம் உள்ளது; அதை நீர் அறியமாட்டீர்" என்று கூறினார்.

அப்போது மூஸா (அலை): **"ஹல் அத்தபிஉக அலா அன் துஅல்லிமனி மிம்மா உல்லிம்த ருஷ்தா"** (18:66) (நீர் கற்றுக்கொடுக்கப்பட்ட நேர்வழியில் இருந்து எனக்குக் கற்றுக்கொடுப்பதற்காக நான் உம்மைப் பின்பற்றலாமா?) என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்: **"இன்னக லன் தஸ்ததீஅ மஇய ஸப்ரா, வ கைஃப தஸ்பிரு அலா மா லம் துஹித் பிஹி ஃகுப்ரா"** (18:67-68) (நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க மாட்டீர். நீர் எதைப்பற்றி முழுமையாக அறியவில்லையோ, அதன் மீது எவ்வாறு பொறுமையாக இருப்பீர்?) என்று கூறினார்.

மூஸா (அலை): **"ஸ தஜிதுனீ இன் ஷாஅல்லாஹு ஸாபிரன் வலா அஃஸீ லக அம்ரா"** (18:69) (அல்லாஹ் நாடினால், நீர் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்; நான் உமது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்) என்று கூறினார்கள்.

அதற்கு கித்ர் அவரிடம்: **"ஃப இனித்த பஅதனீ ஃபாலா தஸ்அல்னீ அன் ஷையின் ஹத்தா உஹ்தித லக மின்ஹு திக்ரா"** (18:70) (நீர் என்னைப் பின்பற்றினால், நான் அதைப்பற்றி உமக்குக் கூறும் வரை எதைப் பற்றியும் என்னிடம் கேட்காதீர்) என்று கூறினார். மூஸா (அலை), "சரி" என்றார்கள்.

கித்ரும் மூஸாவும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது ஒரு கப்பல் அவர்களைக் கடந்து சென்றது. அதில் தங்களையும் ஏற்றிக்கொள்ளுமாறு அவர்கள் பேசினார்கள். அவர்கள் கித்ரை அடையாளம் கண்டுகொண்டு, கூலி எதுவும் வாங்காமல் அவர்களை ஏற்றிக்கொண்டனர். அப்போது கித்ர் கப்பல் பலகைகளில் ஒன்றை கழற்றிவிட்டார்.

இதைக் கண்ட மூஸா (அலை), "இம்மக்கள் நம்மை கூலி எதுவும் வாங்காமல் ஏற்றிக்கொண்டனர். ஆனால், நீர் அவர்களுடைய கப்பலைக் கேடுபடுத்தும் விதமாக ஓட்டையிட்டுவிட்டீரே! (அதன் மக்களை மூழ்கடிப்பதற்காகவே நீர் இவ்வாறு செய்தீரோ?) **"லி துஃக்ரிக அஹ்லஹா லகத் ஜிஃத ஷையன் இம்ரா"** (18:71) (நிச்சயமாக நீர் ஒரு பெரும் விபரீதமான காரியத்தைச் செய்துவிட்டீர்) என்று கூறினார்கள்.

அதற்கு கித்ர்: **"அலம் அகுல் இன்னக லன் தஸ்ததீஅ மஇய ஸப்ரா"** (18:72) (நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க மாட்டீர் என்று நான் உமக்குக் கூறவில்லையா?) என்று கேட்டார்.

அதற்கு மூஸா (அலை): **"லா துஆகித்னீ பிமா நஸீது வலா துர்ஹிக்னீ மின் அம்ரீ உஸ்ரா"** (18:73) (நான் மறந்ததற்காக என்னைத் தண்டிக்காதீர்; எனது விஷயத்தில் எனக்குக் கஷ்டத்தை ஏற்படுத்தாதீர்) என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் கப்பலிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். கித்ர் அந்தச் சிறுவனின் தலையைப் பிடித்துத் தம் கையால் அதைத் துண்டித்துக் கொன்றுவிட்டார்.

இதைக் கண்ட மூஸா (அலை) அவரிடம்: **"அ கதல்த நஃப்ஸன் ஸகிய்யதன் பி ஃகைரி நஃப்ஸ்; லகத் ஜிஃத ஷையன் நுக்ரா"** (18:74) (நீர் ஒரு பரிசுத்தமான உயிரை, (வேறு) ஒரு உயிருக்காக அல்லாமல் கொன்றுவிட்டீரே! நிச்சயமாக நீர் ஒரு பயங்கரமான காரியத்தைச் செய்துவிட்டீர்) என்று கேட்டார்கள்.

அதற்கு கித்ர்: **"அலம் அகுல் லக இன்னக லன் தஸ்ததீஅ மஇய ஸப்ரா"** (18:75) (நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க மாட்டீர் என்று நான் உமக்குக் கூறவில்லையா?) என்று கேட்டார்.

(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்): "இது முதலாவதை விட மிகக் கடுமையானது."

மூஸா (அலை): **"இன் ஸஅல்துக அன் ஷையின் பஃதஹா ஃபாலா துஸாஹிப்னீ; கத் பலஃக்த மின் லதுன்னீ உத்ரா"** (18:76) (இதற்குப் பிறகு நான் உம்மிடம் எதைப் பற்றியாவது கேட்டால், நீர் என்னுடன் தோழமை கொள்ளாதீர். நிச்சயமாக நீர் என்னிடமிருந்து (பிரிவதற்கு) ஒரு சான்றை அடைந்துவிட்டீர்) என்று கூறினார்கள்.

**"ஃபன் தலகா ஹத்தா இதா அதயா அஹ்ல கர்யதின் இஸ்தத்அமா அஹ்லஹா ஃப அபவ் அன் யுளய்யிஃபூஹுமா ஃப வஜதா ஃபீஹா ஜிதாரன் யுரீது அன் யின்கள்ள"** (18:77). (யுரீது அன் யின்கள்ள என்பதற்கு) சாய்ந்திருந்தது என்று பொருள். கித்ர் தம் கையால் 'இப்படி'ச் செய்து அதை நிமிர்த்தி வைத்தார் **"ஃப அகாமுஹு"** (அதை நிமிர்த்தி வைத்தார்).

அப்போது மூஸா (அலை) அவரிடம், "நாம் ஒரு கூட்டத்தாரிடம் வந்தோம்; அவர்கள் நமக்கு விருந்தளிக்கவுமில்லை; உணவளிக்கவும் இல்லை. **இன் ஷிஃத லத்த ஃகத்த அலைஹி அஜ்ரா**" (18:77) (நீர் விரும்பியிருந்தால், அதற்காக ஒரு கூலியைப் பெற்றிருக்கலாமே!) என்று கூறினார்கள்.

அதற்கு கித்ர்: **"ஹாதா ஃபிராகு பைனீ வ பைனிக; ஸ உனப்பிவுக பி தஃவீலி மா லம் தஸ்ததி அலைஹி ஸப்ரா"** (18:78) (இது எனக்கும் உமக்கும் இடையிலான பிரிவாகும். நீர் எதன் மீது பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தை நான் உமக்கு அறிவிப்பேன்) என்று கூறினார்."

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் மூஸாவுக்கு அருள் புரிவானாக! அவர் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம்; அவ்வாறாயின் அவர்களின் செய்திகள் நமக்கு இன்னும் விபரிக்கப்பட்டிருக்கும்."

மேலும் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முதலாவது நிகழ்வு மூஸாவிடமிருந்து ஏற்பட்ட மறதியாகும்." (மேலும் கூறினார்கள்): "ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் விளிம்பில் அமர்ந்து கடலில் (தண்ணீரைக்) கொத்தியது. அப்போது கித்ர் மூஸாவிடம், 'அல்லாஹ்வின் அறிவுக்கு முன்னால் என்னுடைய அறிவும் உம்முடைய அறிவும், இந்தக் குருவி கடலிலிருந்து குறைத்த அளவேயன்றி வேறில்லை' என்று கூறினார்."

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறினார்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (18:79 வசனத்தை) **"வ கான அமாமஹும் மலிகன் யஃகுது குல்ல ஸஃபீனதின் ஸாலிஹதின் ஃகஸ்பா"** (அவர்களுக்கு முன்னால் ஒரு மன்னன் இருந்தான்; அவன் பழுதுபடாத நல்ல கப்பல்களை எல்லாம் அபகரித்துக் கொண்டிருந்தான்) என்று ஓதுவார்கள். மேலும், (18:80 வசனத்தை) **"வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரா"** (அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்) என்றும் ஓதுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
1392முவத்தா மாலிக்
وَحَدَّثَنِي مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَبْعَثُ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ إِلَى خَيْبَرَ فَيَخْرُصُ بَيْنَهُ وَبَيْنَ يَهُودِ خَيْبَرَ - قَالَ - فَجَمَعُوا لَهُ حَلْيًا مِنْ حَلْىِ نِسَائِهِمْ فَقَالُوا لَهُ هَذَا لَكَ وَخَفِّفْ عَنَّا وَتَجَاوَزْ فِي الْقَسْمِ ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ يَا مَعْشَرَ الْيَهُودِ وَاللَّهِ إِنَّكُمْ لَمِنْ أَبْغَضِ خَلْقِ اللَّهِ إِلَىَّ وَمَا ذَاكَ بِحَامِلِي عَلَى أَنْ أَحِيفَ عَلَيْكُمْ فَأَمَّا مَا عَرَضْتُمْ مِنَ الرُّشْوَةِ فَإِنَّهَا سُحْتٌ وَإِنَّا لاَ نَأْكُلُهَا ‏.‏ فَقَالُوا بِهَذَا قَامَتِ السَّمَوَاتُ وَالأَرْضُ ‏.‏ قَالَ مَالِكٌ إِذَا سَاقَى الرَّجُلُ النَّخْلَ وَفِيهَا الْبَيَاضُ فَمَا ازْدَرَعَ الرَّجُلُ الدَّاخِلُ فِي الْبَيَاضِ فَهُوَ لَهُ ‏.‏ قَالَ وَإِنِ اشْتَرَطَ صَاحِبُ الأَرْضِ أَنَّهُ يَزْرَعُ فِي الْبَيَاضِ لِنَفْسِهِ فَذَلِكَ لاَ يَصْلُحُ لأَنَّ الرَّجُلَ الدَّاخِلَ فِي الْمَالِ يَسْقِي لِرَبِّ الأَرْضِ فَذَلِكَ زِيَادَةٌ ازْدَادَهَا عَلَيْهِ ‏.‏ قَالَ وَإِنِ اشْتَرَطَ الزَّرْعَ بَيْنَهُمَا فَلاَ بَأْسَ بِذَلِكَ إِذَا كَانَتِ الْمَئُونَةُ كُلُّهَا عَلَى الدَّاخِلِ فِي الْمَالِ الْبَذْرُ وَالسَّقْىُ وَالْعِلاَجُ كُلُّهُ فَإِنِ اشْتَرَطَ الدَّاخِلُ فِي الْمَالِ عَلَى رَبِّ الْمَالِ أَنَّ الْبَذْرَ عَلَيْكَ كَانَ ذَلِكَ غَيْرَ جَائِزٍ لأَنَّهُ قَدِ اشْتَرَطَ عَلَى رَبِّ الْمَالِ زِيَادَةً ازْدَادَهَا عَلَيْهِ وَإِنَّمَا تَكُونُ الْمُسَاقَاةُ عَلَى أَنَّ عَلَى الدَّاخِلِ فِي الْمَالِ الْمَئُونَةَ كُلَّهَا وَالنَّفَقَةَ وَلاَ يَكُونُ عَلَى رَبِّ الْمَالِ مِنْهَا شَىْءٌ فَهَذَا وَجْهُ الْمُسَاقَاةِ الْمَعْرُوفُ ‏.‏ قَالَ مَالِكٌ فِي الْعَيْنِ تَكُونُ بَيْنَ الرَّجُلَيْنِ فَيَنْقَطِعُ مَاؤُهَا فَيُرِيدُ أَحَدُهُمَا أَنْ يَعْمَلَ فِي الْعَيْنِ وَيَقُولُ الآخَرُ لاَ أَجِدُ مَا أَعْمَلُ بِهِ إِنَّهُ يُقَالُ لِلَّذِي يُرِيدُ أَنْ يَعْمَلَ فِي الْعَيْنِ اعْمَلْ وَأَنْفِقْ وَيَكُونُ لَكَ الْمَاءُ كُلُّهُ تَسْقِي بِهِ حَتَّى يَأْتِيَ صَاحِبُكَ بِنِصْفِ مَا أَنْفَقْتَ فَإِذَا جَاءَ بِنِصْفِ مَا أَنْفَقْتَ أَخَذَ حِصَّتَهُ مِنَ الْمَاءِ ‏.‏ وَإِنَّمَا أُعْطِيَ الأَوَّلُ الْمَاءَ كُلَّهُ لأَنَّهُ أَنْفَقَ وَلَوْ لَمْ يُدْرِكْ شَيْئًا بِعَمَلِهِ لَمْ يَعْلَقِ الآخَرَ مِنَ النَّفَقَةِ شَىْءٌ ‏.‏ قَالَ مَالِكٌ وَإِذَا كَانَتِ النَّفَقَةُ كُلُّهَا وَالْمَئُونَةُ عَلَى رَبِّ الْحَائِطِ وَلَمْ يَكُنْ عَلَى الدَّاخِلِ فِي الْمَالِ شَىْءٌ إِلاَّ أَنَّهُ يَعْمَلُ بِيَدِهِ إِنَّمَا هُوَ أَجِيرٌ بِبَعْضِ الثَّمَرِ فَإِنَّ ذَلِكَ لاَ يَصْلُحُ لأَنَّهُ لاَ يَدْرِي كَمْ إِجَارَتُهُ إِذَا لَمْ يُسَمِّ لَهُ شَيْئًا يَعْرِفُهُ وَيَعْمَلُ عَلَيْهِ لاَ يَدْرِي أَيَقِلُّ ذَلِكَ أَمْ يَكْثُرُ ‏.‏ قَالَ مَالِكٌ وَكُلُّ مُقَارِضٍ أَوْ مُسَاقٍ فَلاَ يَنْبَغِي لَهُ أَنْ يَسْتَثْنِيَ مِنَ الْمَالِ وَلاَ مِنَ النَّخْلِ شَيْئًا دُونَ صَاحِبِهِ وَذَلِكَ أَنَّهُ يَصِيرُ لَهُ أَجِيرًا بِذَلِكَ يَقُولُ أُسَاقِيكَ عَلَى أَنْ تَعْمَلَ لِي فِي كَذَا وَكَذَا نَخْلَةً تَسْقِيهَا وَتَأْبُرُهَا وَأُقَارِضُكَ فِي كَذَا وَكَذَا مِنَ الْمَالِ عَلَى أَنْ تَعْمَلَ لِي بِعَشَرَةِ دَنَانِيرَ لَيْسَتْ مِمَّا أُقَارِضُكَ عَلَيْهِ فَإِنَّ ذَلِكَ لاَ يَنْبَغِي وَلاَ يَصْلُحُ وَذَلِكَ الأَمْرُ عِنْدَنَا ‏.‏ قَالَ مَالِكٌ وَالسُّنَّةُ فِي الْمُسَاقَاةِ الَّتِي يَجُوزُ لِرَبِّ الْحَائِطِ أَنْ يَشْتَرِطَهَا عَلَى الْمُسَاقَى شَدُّ الْحِظَارِ وَخَمُّ الْعَيْنِ وَسَرْوُ الشَّرَبِ وَإِبَّارُ النَّخْلِ وَقَطْعُ الْجَرِيدِ وَجَذُّ الثَّمَرِ هَذَا وَأَشْبَاهُهُ عَلَى أَنَّ لِلْمُسَاقَى شَطْرَ الثَّمَرِ أَوْ أَقَلَّ مِنْ ذَلِكَ أَوْ أَكْثَرَ إِذَا تَرَاضَيَا عَلَيْهِ غَيْرَ أَنَّ صَاحِبَ الأَصْلِ لاَ يَشْتَرِطُ ابْتِدَاءَ عَمَلٍ جَدِيدٍ يُحْدِثُهُ الْعَامِلُ فِيهَا مِنْ بِئْرٍ يَحْتَفِرُهَا أَوْ عَيْنٍ يَرْفَعُ رَأْسَهَا أَوْ غِرَاسٍ يَغْرِسُهُ فِيهَا يَأْتِي بِأَصْلِ ذَلِكَ مِنْ عِنْدِهِ أَوْ ضَفِيرَةٍ يَبْنِيهَا تَعْظُمُ فِيهَا نَفَقَتُهُ وَإِنَّمَا ذَلِكَ بِمَنْزِلَةِ أَنْ يَقُولَ رَبُّ الْحَائِطِ لِرَجُلٍ مِنَ النَّاسِ ابْنِ لِي هَا هُنَا بَيْتًا أَوِ احْفُرْ لِي بِئْرًا أَوْ أَجْرِ لِي عَيْنًا أَوِ اعْمَلْ لِي عَمَلاً بِنِصْفِ ثَمَرِ حَائِطِي هَذَا قَبْلَ أَنْ يَطِيبَ ثَمَرُ الْحَائِطِ وَيَحِلَّ بَيْعُهُ فَهَذَا بَيْعُ الثَّمَرِ قَبْلَ أَنْ يَبْدُوَ صَلاَحُهُ وَقَدْ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ بَيْعِ الثِّمَارِ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا ‏.‏ قَالَ مَالِكٌ فَأَمَّا إِذَا طَابَ الثَّمَرُ وَبَدَا صَلاَحُهُ وَحَلَّ بَيْعُهُ ثُمَّ قَالَ رَجُلٌ لِرَجُلٍ اعْمَلْ لِي بَعْضَ هَذِهِ الأَعْمَالِ - لِعَمَلٍ يُسَمِّيهِ لَهُ - بِنِصْفِ ثَمَرِ حَائِطِي هَذَا فَلاَ بَأْسَ بِذَلِكَ إِنَّمَا اسْتَأْجَرَهُ بِشَىْءٍ مَعْرُوفٍ مَعْلُومٍ قَدْ رَآهُ وَرَضِيَهُ فَأَمَّا الْمُسَاقَاةُ فَإِنَّهُ إِنْ لَمْ يَكُنْ لِلْحَائِطِ ثَمَرٌ أَوْ قَلَّ ثَمَرُهُ أَوْ فَسَدَ فَلَيْسَ لَهُ إِلاَّ ذَلِكَ وَأَنَّ الأَجِيرَ لاَ يُسْتَأْجَرُ إِلاَّ بِشَىْءٍ مُسَمًّى لاَ تَجُوزُ الإِجَارَةُ إِلاَّ بِذَلِكَ وَإِنَّمَا الإِجَارَةُ بَيْعٌ مِنَ الْبُيُوعِ إِنَّمَا يَشْتَرِي مِنْهُ عَمَلَهُ وَلاَ يَصْلُحُ ذَلِكَ إِذَا دَخَلَهُ الْغَرَرُ لأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الْغَرَرِ ‏.‏ قَالَ مَالِكٌ السُّنَّةُ فِي الْمُسَاقَاةِ عِنْدَنَا أَنَّهَا تَكُونُ فِي أَصْلِ كُلِّ نَخْلٍ أَوْ كَرْمٍ أَوْ زَيْتُونٍ أَوْ رُمَّانٍ أَوْ فِرْسِكٍ أَوْ مَا أَشْبَهَ ذَلِكَ مِنَ الأُصُولِ جَائِزٌ لاَ بَأْسَ بِهِ عَلَى أَنَّ لِرَبِّ الْمَالِ نِصْفَ الثَّمَرِ مِنْ ذَلِكَ أَوْ ثُلُثَهُ أَوْ رُبُعَهُ أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ أَوْ أَقَلَّ ‏.‏ قَالَ مَالِكٌ وَالْمُسَاقَاةُ أَيْضًا تَجُوزُ فِي الزَّرْعِ إِذَا خَرَجَ وَاسْتَقَلَّ فَعَجَزَ صَاحِبُهُ عَنْ سَقْيِهِ وَعَمَلِهِ وَعِلاَجِهِ فَالْمُسَاقَاةُ فِي ذَلِكَ أَيْضًا جَائِزَةٌ ‏.‏ قَالَ مَالِكٌ لاَ تَصْلُحُ الْمُسَاقَاةُ فِي شَىْءٍ مِنَ الأُصُولِ مِمَّا تَحِلُّ فِيهِ الْمُسَاقَاةُ إِذَا كَانَ فِيهِ ثَمَرٌ قَدْ طَابَ وَبَدَا صَلاَحُهُ وَحَلَّ بَيْعُهُ وَإِنَّمَا يَنْبَغِي أَنْ يُسَاقَى مِنَ الْعَامِ الْمُقْبِلِ وَإِنَّمَا مُسَاقَاةُ مَا حَلَّ بَيْعُهُ مِنَ الثِّمَارِ إِجَارَةٌ لأَنَّهُ إِنَّمَا سَاقَى صَاحِبَ الأَصْلِ ثَمَرًا قَدْ بَدَا صَلاَحُهُ عَلَى أَنْ يَكْفِيَهُ إِيَّاهُ وَيَجُذَّهُ لَهُ بِمَنْزِلَةِ الدَّنَانِيرِ وَالدَّرَاهِمِ يُعْطِيهِ إِيَّاهَا وَلَيْسَ ذَلِكَ بِالْمُسَاقَاةِ إِنَّمَا الْمُسَاقَاةُ مَا بَيْنَ أَنْ يَجُذَّ النَّخْلَ إِلَى أَنْ يَطِيبَ الثَّمَرُ وَيَحِلَّ بَيْعُهُ ‏.‏ قَالَ مَالِكٌ وَمَنْ سَاقَى ثَمَرًا فِي أَصْلٍ قَبْلَ أَنْ يَبْدُوَ صَلاَحُهُ وَيَحِلَّ بَيْعُهُ فَتِلْكَ الْمُسَاقَاةُ بِعَيْنِهَا جَائِزَةٌ ‏.‏ قَالَ مَالِكٌ وَلاَ يَنْبَغِي أَنْ تُسَاقَى الأَرْضُ الْبَيْضَاءُ وَذَلِكَ أَنَّهُ يَحِلُّ لِصَاحِبِهَا كِرَاؤُهَا بِالدَّنَانِيرِ وَالدَّرَاهِمِ وَمَا أَشْبَهَ ذَلِكَ مِنَ الأَثْمَانِ الْمَعْلُومَةِ ‏.‏ قَالَ فَأَمَّا الرَّجُلُ الَّذِي يُعْطِي أَرْضَهُ الْبَيْضَاءَ بِالثُّلُثِ أَوِ الرُّبُعِ مِمَّا يَخْرُجُ مِنْهَا فَذَلِكَ مِمَّا يَدْخُلُهُ الْغَرَرُ لأَنَّ الزَّرْعَ يَقِلُّ مَرَّةً وَيَكْثُرُ مَرَّةً وَرُبَّمَا هَلَكَ رَأْسًا فَيَكُونُ صَاحِبُ الأَرْضِ قَدْ تَرَكَ كِرَاءً مَعْلُومًا يَصْلُحُ لَهُ أَنْ يُكْرِيَ أَرْضَهُ بِهِ وَأَخَذَ أَمْرًا غَرَرًا لاَ يَدْرِي أَيَتِمُّ أَمْ لاَ فَهَذَا مَكْرُوهٌ وَإِنَّمَا ذَلِكَ مَثَلُ رَجُلٍ اسْتَأْجَرَ أَجِيرًا لِسَفَرٍ بِشَىْءٍ مَعْلُومٍ ثُمَّ قَالَ الَّذِي اسْتَأْجَرَ الأَجِيرَ هَلْ لَكَ أَنْ أَعْطِيَكَ عُشْرَ مَا أَرْبَحُ فِي سَفَرِي هَذَا إِجَارَةً لَكَ فَهَذَا لاَ يَحِلُّ وَلاَ يَنْبَغِي ‏.‏ قَالَ مَالِكٌ وَلاَ يَنْبَغِي لِرَجُلٍ أَنْ يُؤَاجِرَ نَفْسَهُ وَلاَ أَرْضَهُ وَلاَ سَفِينَتَهُ إِلاَّ بِشَىْءٍ مَعْلُومٍ لاَ يَزُولُ إِلَى غَيْرِهِ ‏.‏ قَالَ مَالِكٌ وَإِنَّمَا فَرَّقَ بَيْنَ الْمُسَاقَاةِ فِي النَّخْلِ وَالأَرْضِ الْبَيْضَاءِ أَنَّ صَاحِبَ النَّخْلِ لاَ يَقْدِرُ عَلَى أَنْ يَبِيعَ ثَمَرَهَا حَتَّى يَبْدُوَ صَلاَحُهُ وَصَاحِبُ الأَرْضِ يُكْرِيهَا وَهِيَ أَرْضٌ بَيْضَاءُ لاَ شَىْءَ فِيهَا ‏.‏ قَالَ مَالِكٌ وَالأَمْرُ عِنْدَنَا فِي النَّخْلِ أَيْضًا إِنَّهَا تُسَاقِي السِّنِينَ الثَّلاَثَ وَالأَرْبَعَ وَأَقَلَّ مِنْ ذَلِكَ وَأَكْثَرَ ‏.‏ قَالَ وَذَلِكَ الَّذِي سَمِعْتُ وَكُلُّ شَىْءٍ مِثْلُ ذَلِكَ مِنَ الأُصُولِ بِمَنْزِلَةِ النَّخْلِ يَجُوزُ فِيهِ لِمَنْ سَاقَى مِنَ السِّنِينَ مِثْلُ مَا يَجُوزُ فِي النَّخْلِ ‏.‏ قَالَ مَالِكٌ فِي الْمُسَاقِي إِنَّهُ لاَ يَأْخُذُ مِنْ صَاحِبِهِ الَّذِي سَاقَاهُ شَيْئًا مِنْ ذَهَبٍ وَلاَ وَرِقٍ يَزْدَادُهُ وَلاَ طَعَامٍ وَلاَ شَيْئًا مِنَ الأَشْيَاءِ لاَ يَصْلُحُ ذَلِكَ وَلاَ يَنْبَغِي أَنْ يَأْخُذَ الْمُسَاقَى مِنْ رَبِّ الْحَائِطِ شَيْئًا يَزِيدُهُ إِيَّاهُ مِنْ ذَهَبٍ وَلاَ وَرِقٍ وَلاَ طَعَامٍ وَلاَ شَىْءٍ مِنَ الأَشْيَاءِ وَالزِّيَادَةُ فِيمَا بَيْنَهُمَا لاَ تَصْلُحُ ‏.‏ قَالَ مَالِكٌ وَالْمُقَارِضُ أَيْضًا بِهَذِهِ الْمَنْزِلَةِ لاَ يَصْلُحُ إِذَا دَخَلَتِ الزِّيَادَةُ فِي الْمُسَاقَاةِ أَوِ الْمُقَارَضَةِ صَارَتْ إِجَارَةً وَمَا دَخَلَتْهُ الإِجَارَةُ فَإِنَّهُ لاَ يَصْلُحُ وَلاَ يَنْبَغِي أَنْ تَقَعَ الإِجَارَةُ بِأَمْرٍ غَرَرٍ لاَ يَدْرِي أَيَكُونُ أَمْ لاَ يَكُونُ أَوْ يَقِلُّ أَوْ يَكْثُرُ ‏.‏ قَالَ مَالِكٌ فِي الرَّجُلِ يُسَاقِي الرَّجُلَ الأَرْضَ فِيهَا النَّخْلُ وَالْكَرْمُ أَوْ مَا أَشْبَهَ ذَلِكَ مِنَ الأُصُولِ فَيَكُونُ فِيهَا الأَرْضُ الْبَيْضَاءُ ‏.‏ قَالَ مَالِكٌ إِذَا كَانَ الْبَيَاضُ تَبَعًا لِلأَصْلِ وَكَانَ الأَصْلُ أَعْظَمَ ذَلِكَ أَوْ أَكْثَرَهُ فَلاَ بَأْسَ بِمُسَاقَاتِهِ وَذَلِكَ أَنْ يَكُونَ النَّخْلُ الثُّلُثَيْنِ أَوْ أَكْثَرَ وَيَكُونَ الْبَيَاضُ الثُّلُثَ أَوْ أَقَلَّ مِنْ ذَلِكَ وَذَلِكَ أَنَّ الْبَيَاضَ حِينَئِذٍ تَبَعٌ لِلأَصْلِ وَإِذَا كَانَتِ الأَرْضُ الْبَيْضَاءُ فِيهَا نَخْلٌ أَوْ كَرْمٌ أَوْ مَا يُشْبِهُ ذَلِكَ مِنَ الأُصُولِ فَكَانَ الأَصْلُ الثُّلُثَ أَوْ أَقَلَّ وَالْبَيَاضُ الثُّلُثَيْنِ أَوْ أَكْثَرَ جَازَ فِي ذَلِكَ الْكِرَاءُ وَحَرُمَتْ فِيهِ الْمُسَاقَاةُ وَذَلِكَ أَنَّ مِنْ أَمْرِ النَّاسِ أَنْ يُسَاقُوا الأَصْلَ وَفِيهِ الْبَيَاضُ وَتُكْرَى الأَرْضُ وَفِيهَا الشَّىْءُ الْيَسِيرُ مِنَ الأَصْلِ أَوْ يُبَاعَ الْمُصْحَفُ أَوِ السَّيْفُ وَفِيهِمَا الْحِلْيَةُ مِنَ الْوَرِقِ بِالْوَرِقِ أَوِ الْقِلاَدَةُ أَوِ الْخَاتَمُ وَفِيهِمَا الْفُصُوصُ وَالذَّهَبُ بِالدَّنَانِيرِ وَلَمْ تَزَلْ هَذِهِ الْبُيُوعُ جَائِزَةً يَتَبَايَعُهَا النَّاسُ وَيَبْتَاعُونَهَا وَلَمْ يَأْتِ فِي ذَلِكَ شَىْءٌ مَوْصُوفٌ مَوْقُوفٌ عَلَيْهِ إِذَا هُوَ بَلَغَهُ كَانَ حَرَامًا أَوْ قَصُرَ عَنْهُ كَانَ حَلاَلاً ‏.‏ وَالأَمْرُ فِي ذَلِكَ عِنْدَنَا الَّذِي عَمِلَ بِهِ النَّاسُ وَأَجَازُوهُ بَيْنَهُمْ أَنَّهُ إِذَا كَانَ الشَّىْءُ مِنْ ذَلِكَ الْوَرِقِ أَوِ الذَّهَبِ تَبَعًا لِمَا هُوَ فِيهِ جَازَ بَيْعُهُ وَذَلِكَ أَنْ يَكُونَ النَّصْلُ أَوِ الْمُصْحَفُ أَوِ الْفُصُوصُ قِيمَتُهُ الثُّلُثَانِ أَوْ أَكْثَرُ وَالْحِلْيَةُ قِيمَتُهَا الثُّلُثُ أَوْ أَقَلُّ ‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரழி) அவர்களைக் கைபருக்கு அனுப்புவது வழக்கம். அவர் அங்கு சென்று (முஸ்லிம்களுக்கும்) கைபர் யூதர்களுக்கும் இடையே பழப்பயிர்களின் விளைச்சலைப் பங்கிடுவதற்காக மதிப்பீடு செய்வார்.

யூதர்கள் தங்கள் பெண்களின் நகைகளை அவருக்காகச் சேகரித்து அவரிடம், "இது உங்களுக்குத்தான். (பங்கீட்டில்) எங்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளுங்கள், (எங்கள் மீது) கறாராக இருக்க வேண்டாம்" என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரழி) அவர்கள், "யூதக் கூட்டமே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் படைப்புகளிலேயே எனக்கு மிகவும் வெறுப்பானவர்கள் நீங்கள். ஆயினும், அது உங்களிடம் அநீதியாக நடந்துகொள்ளும்படி என்னைத் தூண்டாது. நீங்கள் லஞ்சமாகக் கொடுக்கும் இப்பொருள் சட்டவிரோதமானது (சுஹ்த்). நாங்கள் அதை உண்ண மாட்டோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், "இதனில்தான் (இந்த நீதியான கொள்கையில்தான்) வானங்களும் பூமியும் நிலைபெற்றுள்ளன" என்று கூறினார்கள்.

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு குத்தகை விவசாயி பேரீச்சை மரங்களுக்கு நீர் பாய்ச்சுகிறார், அவற்றுக்கிடையே சில பயிரிடத்தக்க காலி நிலங்கள் இருந்தால், அந்த நிலத்தில் அவர் எதை பயிரிட்டாலும் அது அவருக்கே உரியது."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "நிலத்தின் உரிமையாளர், அந்தக் காலி நிலத்தைத் தமக்குத் தானே பயிரிட்டுக் கொள்வதாக நிபந்தனை விதித்தால், அது சரியானதல்ல. ஏனெனில் (முஸாகாத் ஒப்பந்தத்தின்படி) குத்தகை விவசாயி நில உரிமையாளருக்காக நீர் பாய்ச்சுகிறார். அதன் மூலம் அவர் (தனக்கு எந்தப் பலனுமின்றி) நில உரிமையாளரின் பயிருக்கு (கூடுதல்) நன்மையை அதிகரிக்கிறார்."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "விதைத்தல், நீர்ப்பாசனம், பராமரிப்பு போன்ற அனைத்துச் செலவுகளும் வேலைகளும் குத்தகை விவசாயியின் பொறுப்பாக இருக்கும் பட்சத்தில், விளைச்சலைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று உரிமையாளர் நிபந்தனை விதித்தால் அதில் எந்தத் தீங்கும் இல்லை.

ஆனால் குத்தகை விவசாயி, 'விதைகளை நிலத்தின் உரிமையாளர் தரவேண்டும்' என்று நிபந்தனை விதித்தால், அது அனுமதிக்கப்படாது. ஏனெனில் அவர் நில உரிமையாளரின் மீது ஒரு செலவைச் சுமத்துகிறார். முஸாகாத் (குத்தகை விவசாயம்) என்பதன் அடிப்படை என்னவென்றால், அனைத்து பராமரிப்பும் செலவும் குத்தகை விவசாயியால் செய்யப்பட வேண்டும், நில உரிமையாளர் எதற்கும் கடமைப்பட்டவர் அல்ல. இதுவே (மதீனாவில்) குத்தகை விவசாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும்."

மாலிக் (ரஹ்) அவர்கள், இருவருக்குப் பொதுவான ஒரு நீரூற்று வற்றிப் போனதைக் குறித்துப் பேசினார்கள். அவர்களில் ஒருவர் அந்த நீரூற்றில் வேலை செய்ய விரும்பினார், மற்றவரோ, "அதில் வேலை செய்ய என்னிடம் வசதி இல்லை" என்று கூறினார். அவர் (மாலிக்) கூறினார்கள்: "நீரூற்றில் வேலை செய்ய விரும்பும் நபரிடம், 'நீங்கள் வேலை செய்து செலவிடுங்கள். தண்ணீர் முழுவதும் உங்களுக்கே உரியது. உங்கள் கூட்டாளி நீங்கள் செலவழித்ததில் பாதியைக் கொண்டு வரும் வரை அதன் தண்ணீர் உங்களுக்கே சொந்தம். அவர் நீங்கள் செலவழித்ததில் பாதியைக் கொண்டு வந்தால், அவர் தனது பங்குத் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளலாம்' என்று சொல்லுங்கள். முதலில் வேலை செய்தவருக்கே தண்ணீர் முழுவதும் கொடுக்கப்படுகிறது, ஏனெனில் அவர் அதற்காகச் செலவு செய்துள்ளார். மேலும், அவருடைய உழைப்பால் (நீரூற்றிலிருந்து) தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை என்றால், மற்றவருக்கு எந்தச் செலவும் நஷ்டமும் இல்லை."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு குத்தகை விவசாயி தனது உழைப்பைத் தவிர வேறு எதையும் செலவிடாமல், பழத்தின் ஒரு பங்கிற்காக மட்டும் வேலைக்கு அமர்த்தப்படுவது சரியானதல்ல. அதேசமயம் அனைத்து செலவுகளும் வேலைகளும் தோட்ட உரிமையாளரால் செய்யப்படுகின்றன. ஏனெனில் (இந்த ஒப்பந்தத்தில்) குத்தகை விவசாயிக்குத் தனது உழைப்புக்கான சரியான கூலி என்னவாக இருக்கும், அது குறைவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா என்பது தெரியாது."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "'கிராத்' (வணிகக் கூட்டு) கொடுப்பவரோ அல்லது குத்தகை ஒப்பந்தம் (முஸாகாத்) செய்பவரோ, தனது முகவரிடமிருந்து மூலதனத்தின் ஒரு பகுதியையோ அல்லது சில மரங்களையோ தனக்கென விலக்களிக்கக் கூடாது. ஏனெனில், அவ்வாறு செய்வதன் மூலம் அந்த முகவர் அவரது கூலியாளாக மாறிவிடுகிறார். அதாவது அவர், 'நான் உனக்கு இந்தக் குறிப்பிட்ட பேரீச்சை மரத்தில் எனக்காக வேலை செய்து, தண்ணீர் பாய்ச்சி, பராமரிக்கும் நிபந்தனையின் பேரில் (கூலியாக) குத்தகைக்குத் தருகிறேன்' என்றோ, 'நான் உனக்கு இந்தக் குறிப்பிட்ட பணத்தை கிராத் அடிப்படையில் தருகிறேன், நீ எனக்காகப் பத்து தீனார்களுக்கு வேலை செய்ய வேண்டும். அவை நான் உனக்குக் கொடுத்த கிராத் தொகையின் ஒரு பகுதி அல்ல' என்றோ கூறுவது போலாகும். அவ்வாறு செய்யக்கூடாது, அது சரியானதல்ல. இதுவே எங்கள் வழிமுறையாகும்."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "குத்தகை விவசாயத்தில் ஒரு தோட்ட உரிமையாளருக்கு அனுமதிக்கப்பட்ட நடைமுறை (சுன்னா) என்னவென்றால், அவர் குத்தகை விவசாயியிடம் வேலிகளைப் பராமரித்தல், நீரூற்றைச் சுத்தம் செய்தல், நீர்ப்பாசனக் கால்வாய்களைத் துடைத்தல், பேரீச்சை மரங்களில் மகரந்தச் சேர்க்கை செய்தல், கிளைகளை வெட்டுதல், பழங்களை அறுவடை செய்தல் போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம். ஆனால் குத்தகை விவசாயிக்கு பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பழங்களில் ஒரு பங்கு (பாதியோ அல்லது அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ) இருக்க வேண்டும். இருப்பினும், (முஸாகாத் ஒப்பந்தத்தின் கீழ்) முகவர் ஒரு புதிய கிணறு தோண்டுவது, ஒரு கிணற்றின் உயரத்தை உயர்த்துவது, புதிய மரக்கன்றுகளை நடுவது, அல்லது அதிக செலவாகும் ஒரு கட்டுமானத்தைக் கட்டுவது போன்ற புதிய வேலைகளைத் தொடங்குவதற்கு உரிமையாளர் நிபந்தனை விதிக்க முடியாது. இது, ஒரு தோட்டத்தின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட மனிதரிடம், 'இங்கே எனக்கு ஒரு வீட்டைக் கட்டு அல்லது எனக்கு ஒரு கிணறு தோண்டு அல்லது எனக்கு ஒரு நீரூற்றை ஓடச் செய், பதிலாக இந்தத் தோட்டத்தின் பழங்களில் பாதியைக் கூலியாகத் தந்துவிடுகிறேன்' என்று, அந்தத் தோட்டத்தின் பழங்கள் பக்குவமடைந்து, அதை விற்பது ஹலாலாவதற்கு முன்பு கேட்பது போன்றதாகும். இது, பழங்கள் நல்ல நிலையை அடைவதற்கு முன்பே அவற்றை விற்பனை செய்வதாகும். (இத்தகைய) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பழங்கள் பக்குவமடைவதற்கு முன்பு விற்கப்படுவதைத் தடை செய்தார்கள்."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பழங்கள் நன்றாக முற்றி, அவற்றின் நல்ல நிலை தெளிவாகத் தெரிந்து, அவற்றை விற்பது ஹலாலாகிவிட்டால், உரிமையாளர் ஒருவரிடம் அந்த வேலைகளில் ஒன்றைச் செய்யச் சொல்லி, வேலையைக் குறிப்பிட்டு, உதாரணமாக, தனது தோட்டத்தின் பழங்களில் பாதியை கூலியாகக் கொடுத்தால், அதில் எந்தத் தீங்கும் இல்லை. அவர் அந்த நபரை அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அறியப்பட்ட ஒன்றுக்காக வேலைக்கு அமர்த்தியுள்ளார். அந்த நபர் அதைப் பார்த்து, அதில் திருப்தி அடைந்துள்ளார்.

"ஆனால் முஸாகாத் (குத்தகை விவசாயம்) என்பது, தோட்டத்தில் பழங்கள் இல்லாவிட்டாலோ அல்லது குறைவாகவோ அல்லது மோசமாகவோ இருந்தாலோ (கூலியாக) செய்யப்படுவதாகும். ஒரு தொழிலாளி குறிப்பிட்ட கூலிக்கு மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுகிறார், தெளிவான நிபந்தனைகளின் பேரில் மட்டுமே வேலைக்கு அமர்த்துவது அனுமதிக்கப்படுகிறது. கூலிக்கு அமர்த்துவது என்பது ஒரு வகை விற்பனையாகும். ஒருவர் மற்றொருவரின் உழைப்பை அவரிடமிருந்து விலைக்கு வாங்குகிறார். அதில் நிச்சயமற்ற தன்மை (கறார்) நுழைந்தால் அது சரியானதல்ல. ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிச்சயமற்ற பரிவர்த்தனைகளைத் தடை செய்தார்கள்."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "எங்களிடம் உள்ள குத்தகை விவசாயத்தின் நடைமுறை என்னவென்றால், பேரீச்சை, திராட்சை, ஆலிவ், மாதுளை, பீச் போன்ற எந்த வகையான பழ மரத்திலும் இதைப் பயிற்சி செய்யலாம். இது அனுமதிக்கப்படுகிறது, மேலும் தோட்ட உரிமையாளருக்கு பழங்களில் பாதி, அல்லது மூன்றில் ஒரு பங்கு, அல்லது நான்கில் ஒரு பங்கு, அல்லது எதுவானாலும் ஒரு பங்கு இருக்கும் வரை அதில் எந்தத் தீங்கும் இல்லை."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பூமியிலிருந்து வெளிப்படும் எந்தப் பயிரிலும், அது விளைந்து, அதன் உரிமையாளரால் நீர் பாய்ச்சவோ, வேலை செய்யவோ, பராமரிக்கவோ இயலாத நிலை ஏற்பட்டால், அதிலும் முஸாகாத் (குத்தகை விவசாயம்) அனுமதிக்கப்படுகிறது.

"குத்தகை விவசாயம் அனுமதிக்கப்பட்ட எந்தவொன்றிலும், பழம் பக்குவமடைந்து, அதன் நல்ல நிலை தெளிவாகத் தெரிந்து, அதை விற்பது ஹலாலாகிவிட்டால், அதில் முஸாகாத் செய்வது வெறுக்கத்தக்கதாகிவிடும். மாறாக அவர் அடுத்த ஆண்டுக்கான பயிரில் முஸாகாத் செய்ய வேண்டும். விற்பனைக்குத் தகுதியான பழங்களுக்கு நீர் பாய்ச்சி, அதை உரிமையாளருக்காகப் பறித்து, விளைச்சலில் ஒரு பங்கைப் பெற்றால், அது முஸாகாத் ஆகாது. அது அவருக்குத் திர்ஹம்கள் மற்றும் தீனார்கள் மூலம் (நிர்ணயிக்கப்பட்ட) கூலி வழங்கப்படுவதற்கு ஒப்பானது. முஸாகாத் என்பது (முந்தைய) பேரீச்சை மரங்களைச் சீரமைப்பதற்கும், (அடுத்த) பழங்கள் பக்குவமடைந்து அதன் விற்பனை ஹலால் ஆவதற்கும் இடைப்பட்ட காலத்தில் செய்யப்படுவதாகும்."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பழ மரங்களின் நிலை தெளிவாகி, அதன் விற்பனை ஹலால் ஆவதற்கு முன்பு ஒருவர் குத்தகை ஒப்பந்தம் செய்தால், அதுவே முஸாகாத் ஆகும், மேலும் அது அனுமதிக்கப்படுகிறது."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "வெற்று நிலத்தை (விளைச்சலில் பங்கு என்ற அடிப்படையில்) முஸாகாத் ஒப்பந்தத்தில் விடக்கூடாது. ஏனெனில் அதன் உரிமையாளர் அதைத் தீனார்கள் மற்றும் திர்ஹம்களுக்காகவோ (பணம்) அல்லது நிர்ணயிக்கப்பட்ட வாடகைக்கோ விடுவதே ஹலால் ஆகும்."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் தனது வெற்று நிலத்தை அதிலிருந்து வெளிவரும் விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்குக்குக் கொடுப்பதைப் பொறுத்தவரை, அது ஒரு நிச்சயமற்ற பரிவர்த்தனையாகும் (கறார்). ஏனெனில் பயிர்கள் ஒரு முறை குறைவாகவும், மற்றொரு முறை அதிகமாகவும் இருக்கலாம். சில சமயம் அது முற்றிலுமாக அழிந்து போகலாம், அப்போது நிலத்தின் உரிமையாளர், நிலத்தை வாடகைக்கு விடுவதற்குத் தகுதியான ஒரு குறிப்பிட்ட வாடகையை இழந்திருப்பார். அவர் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையை எடுத்துக்கொள்கிறார், அது நிறைவேறுமா இல்லையா என்பது அவருக்குத் தெரியாது. இது வெறுக்கப்படுகிறது. இது, ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குப் பயணம் செய்ய வைத்துவிட்டு, பின்னர், 'பயணத்தின் லாபத்தில் பத்தில் ஒரு பங்கை உங்கள் கூலியாகத் தரட்டுமா?' என்று கேட்பது போன்றது. (இத்தகைய நிச்சயமற்ற கூலி) ஹலால் அல்ல, செய்யப்படக்கூடாது."

மாலிக் (ரஹ்) அவர்கள் சுருக்கமாகக் கூறினார்கள்: "ஒரு மனிதன் தன்னையோ, தனது நிலத்தையோ, அல்லது தனது கப்பலையோ ஒரு குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட கூலிக்குத் தவிர வேறு எதற்காகவும் வாடகைக்கு விடக்கூடாது."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பேரீச்சை மரங்களில் குத்தகை விவசாயம் செய்வதற்கும், வெற்று நிலங்களில் குத்தகை விவசாயம் செய்வதற்கும் இடையே ஒரு வேறுபாடு உள்ளது. ஏனெனில் பேரீச்சை மரங்களின் உரிமையாளர் அதன் நல்ல நிலை தெளிவாகும் வரை பழங்களை விற்க முடியாது. ஆனால் நிலத்தின் உரிமையாளர், அதில் எதுவும் இல்லாத போது அதை வாடகைக்கு விடலாம்."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பேரீச்சை மரங்களைப் பற்றி எங்கள் சமூகத்தில் என்ன செய்யப்படுகிறது என்றால், அவற்றை மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கும், அதற்கும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ குத்தகைக்கு விடலாம்."

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "அதைத்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது போன்ற எந்தப் பழ மரங்களும் பேரீச்சை மரங்களின் நிலையிலேயே உள்ளன. பல வருடங்களுக்கான ஒப்பந்தங்கள் பேரீச்சை மரங்களில் அனுமதிக்கப்படுவதைப் போலவே இதிலும் அனுமதிக்கப்படுகின்றன."

மாலிக் (ரஹ்) அவர்கள் (முஸாகாத் ஒப்பந்தத்தில் உள்ள) உரிமையாளரைப் பற்றிக் கூறினார்கள்: "அவர் குத்தகை விவசாயியிடமிருந்து தங்கம், வெள்ளி, அல்லது பயிர்கள் வடிவில் தனக்கு இலாபத்தை அதிகரிக்கும் கூடுதல் எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அது சரியானதல்ல. குத்தகை விவசாயியும் தோட்ட உரிமையாளரிடமிருந்து தங்கம், வெள்ளி, பயிர்கள் அல்லது வேறு எதிலும் தனக்கு இலாபத்தை அதிகரிக்கும் கூடுதல் எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டதற்கு அப்பாற்பட்ட (எந்தவொரு) அதிகரிப்பும் சரியானதல்ல. 'கிராத்' கடன் கொடுப்பவரும் இந்த நிலையில் இருப்பது சரியானதல்ல. குத்தகை விவசாயத்திலோ அல்லது கிராத் முறையிலோ அத்தகைய கூடுதல் அதிகரிப்பு நுழைந்தால், அது கூலியாக மாறிவிடும். அதில் கூலி நுழைவது சரியானதல்ல. நிச்சயமற்ற தன்மை உள்ள சூழ்நிலையில் கூலி நிர்ணயம் ஒருபோதும் ஏற்படக்கூடாது."

மாலிக் (ரஹ்) அவர்கள், ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு ஒரு குத்தகை ஒப்பந்தத்தில் நிலத்தைக் கொடுத்தது பற்றிக் கூறினார்கள். அதில் பேரீச்சை மரங்கள், திராட்சைக் கொடிகள் அல்லது அது போன்ற பழ மரங்கள் இருந்தன, மேலும் அதில் வெற்று நிலமும் இருந்தது. அவர் கூறினார்கள்: "வெற்று நிலம் பழ மரங்களுக்கு முக்கியத்துவத்திலோ அல்லது அளவிலோ இரண்டாம்பட்சமாக இருந்தால், குத்தகை விவசாயத்தில் (முஸாகாத்) எந்தத் தீங்கும் இல்லை. அதாவது, நிலத்தின் மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கு மேற்பட்ட பகுதியை மரங்கள் எடுத்துக் கொண்டிருந்து, வெற்று நிலம் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் இது பொருந்தும். (இத்தகைய நிலையில்) ஏனென்றால், இந்நிலையில் வெற்று நிலம் மரங்களுக்குத் துணையாக அமைகிறது. மாறாக, பழ மரங்கள் உள்ள நிலம் வெற்று நிலத்திற்கு இரண்டாம்பட்சமாக இருந்து, அதாவது மரங்கள் உள்ள பகுதி மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கும் குறைவாகவும், வெற்று நிலம் மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கு அதிகமாகவும் இருந்தால், நிலத்தை வாடகைக்கு விடுவது மட்டுமே அனுமதிக்கப்படுகிறது, மேலும் அதில் முஸாகாத் (குத்தகை விவசாயம்) செய்வது ஹராம் (தடைசெய்யப்பட்டது)."

"பழ மரங்களைக் கொண்ட சொத்தில் வெற்று நிலம் இருக்கும்போது குத்தகை ஒப்பந்தங்கள் கொடுப்பதும், பழ மரங்கள் குறைவாக இருக்கும்போது நிலத்தை வாடகைக்கு விடுவதும் மக்களின் நடைமுறைகளில் ஒன்றாகும். இது, வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட ஒரு குர்ஆன் அல்லது வாள் வெள்ளிக்கு விற்கப்படுவது போலவோ, அல்லது கற்கள் மற்றும் தங்கம் உள்ள ஒரு நெக்லஸ் அல்லது மோதிரம் தீனார்களுக்கு விற்கப்படுவது போலவோ ஆகும். (இங்கு, துணைப் பொருள் முதன்மைப் பொருளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்). இந்த விற்பனைகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகின்றன. மக்கள் அவற்றின் மூலம் வாங்குகிறார்கள், விற்கிறார்கள். எதைத் தாண்டினால் அது ஹராமாகிவிடும், எதற்குக் கீழே இருந்தால் அது ஹலாலாகிவிடும் என்று (சரியான விகிதத்தை) வரையறுக்கப்பட்ட குறிப்புகள் எதுவும் வரவில்லை. இது குறித்து எங்கள் சமூகத்தில் என்ன செய்யப்படுகிறது என்றால், மக்கள் தங்களுக்குள் எதைப் பயிற்சி செய்து அனுமதிக்கிறார்களோ அதுவே ஆகும். அதாவது, தங்கம் அல்லது வெள்ளி எதனுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அதற்கு இரண்டாம்பட்சமாக இருந்தால், அதை விற்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது, வாள், குர்ஆன் அல்லது கற்களின் மதிப்பு மூன்றில் இரண்டு பங்கு அல்லது அதற்கு அதிகமாகவும், அதில் உள்ள அலங்காரத்தின் மதிப்பு மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். (அப்போதுதான் துணைப் பொருள் முதன்மைப் பொருளுக்கு உட்பட்டதாகக் கருதப்படும்)."