அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் கூறுவான்: 'ஆதமுடைய மகனே! நான் நோயுற்றிருந்தேன், ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை.'"
அவன் (மனிதன்) கூறுவான்: "என் இறைவனே! நீ அகிலங்களின் அதிபதியாக இருக்க, நான் உன்னை எப்படி நலம் விசாரிக்க முடியும்?"
(அல்லாஹ் கூறுவான்): "என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தான் என்பதும், நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை என்பதும் உனக்குத் தெரியாதா? நீ அவனை நலம் விசாரித்திருந்தால், என்னை அவனிடம் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா (அதாவது, அவனுக்குச் செய்யும் உதவி எனக்குச் செய்ததாகக் கருதப்படும், அல்லது அவனது நோயின் போது நான் அவனுடன் இருப்பேன்)?"
"ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன்; ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை."
அவன் கூறுவான்: "என் இறைவனே! நீ அகிலங்களின் அதிபதியாக இருக்க, நான் உனக்கு எப்படி உணவளிக்க முடியும்?"
(அல்லாஹ் கூறுவான்): "என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான் என்பதும், நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதும் உனக்குத் தெரியாதா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அதை என்னிடம் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா (அதாவது, அதன் நற்கூலியை என்னிடம் பெற்றிருப்பாய்)?"
"ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன்; ஆனால், நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை."
அவன் கூறுவான்: "என் இறைவனே! நீ அகிலங்களின் அதிபதியாக இருக்க, நான் உனக்கு எப்படித் தண்ணீர் கொடுக்க முடியும்?"
(அல்லாஹ் கூறுவான்): "என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான்; ஆனால், நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. நீ அவனுக்குத் தண்ணீர் கொடுத்திருந்தால், அதை என்னிடம் கண்டிருப்பாய் (அதாவது, அதன் நற்கூலியை என்னிடம் பெற்றிருப்பாய்)."