இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5027ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ، سَمِعْتُ سَعْدَ بْنَ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عُثْمَانَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ ‏ ‏‏.‏ قَالَ وَأَقْرَأَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فِي إِمْرَةِ عُثْمَانَ حَتَّى كَانَ الْحَجَّاجُ، قَالَ وَذَاكَ الَّذِي أَقْعَدَنِي مَقْعَدِي هَذَا‏.‏
உஸ்மான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று, அதைப் (பிறருக்குக்) கற்பிப்பவர்களே ஆவார்கள்.”

(இதன் அறிவிப்பாளர்) அபூஅப்துர் ரஹ்மான் அவர்கள், உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலம் முதல் ஹஜ்ஜாஜ் அவர்களின் காலம் வரை (மக்களுக்குக் குர்ஆனைக்) கற்பித்து வந்தார்கள். மேலும் அவர்கள், “இதுவே (இந்த ஹதீஸே) என்னை இந்த இடத்தில் (கற்பிப்பதற்காக) அமர வைத்தது” என்றும் கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح