حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ بَيْنَمَا رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقْرَأُ، وَفَرَسٌ لَهُ مَرْبُوطٌ فِي الدَّارِ، فَجَعَلَ يَنْفِرُ، فَخَرَجَ الرَّجُلُ فَنَظَرَ فَلَمْ يَرَ شَيْئًا، وَجَعَلَ يَنْفِرُ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ بِالْقُرْآنِ .
அல்-பரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக்கொண்டிருந்தபோது, வீட்டில் கட்டப்பட்டிருந்த அவருடைய குதிரை மிரண்டு துள்ள ஆரம்பித்தது. அந்த மனிதர் வெளியே வந்து, சுற்றிலும் பார்த்தார், ஆனால் எதையும் காணமுடியவில்லை; இருப்பினும், குதிரை தொடர்ந்து துள்ளிக்கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் அவர் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அது குர்ஆன் ஓதியதன் காரணமாக இறங்கிய ஸகீனா (அமைதி) ஆகும்."
ஒரு மனிதர் ‘ஸூரத்துல் கஹ்ஃப்’ ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு குதிரை இரண்டு கயிறுகளால் கட்டப்பட்டிருந்தது. அப்போது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்து கொண்டது. அம்மேகம் நெருங்க நெருங்க, அவருடைய குதிரை மிரளத் தொடங்கியது. காலை நேரமானதும் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அது பற்றிக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதுதான் ‘அஸ்-ஸகீனா’ (அமைதி). குர்ஆன் (ஓதியதன்) காரணமாக அது இறங்கியது" என்று கூறினார்கள்.
அல்-பரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் ‘சூரத்துல் கஹ்ஃப்’ ஓதிக்கொண்டிருந்தார். அவரது அருகே இரண்டு கயிறுகளால் கட்டப்பட்ட ஒரு குதிரை இருந்தது. அப்போது ஒரு மேகம் அவரைச் சூழ்ந்துகொண்டது. அது சுழன்று அவரை நெருங்கத் தொடங்கியது. அதைக் கண்டு அவரது குதிரை மிரளத் தொடங்கியது. அவர் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப்பற்றித் தெரிவித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் அமைதி (சகீனா); குர்ஆனுக்காக அது இறங்கியது” என்று கூறினார்கள்.