அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் பாதையில் (போரிடப்) புறப்படுபவருக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். (அல்லாஹ் கூறுகிறான்:) 'என் மீது கொண்ட நம்பிக்கையும், என் தூதர்களை உண்மைப்படுத்தியதும், என் பாதையில் அறப்போர் (ஜிஹாத்) புரிவதுமே அவனை (வீட்டை விட்டு) வெளியேற்றியது என்றால், அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்வதும் அல்லது அவன் பெற்ற நற்கூலி அல்லது போர்க்களச் செல்வத்துடன் (கனீமத்) அவன் புறப்பட்ட இடத்திற்கே அவனைத் திருப்பியனுப்புவதும் என் மீது பொறுப்பாகும்'.
முஹம்மதுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் காயம் எதுவாயினும், மறுமை நாளில் அது முதலில் காயப்பட்டபோது இருந்த அதே நிலையில் வரும். அதன் நிறம் இரத்தத்தின் நிறமாக இருக்கும்; ஆனால் அதன் மணம் கஸ்தூரியின் நறுமணாமாகவும் இருக்கும்.
முஹம்மதுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! முஸ்லிம்களுக்குச் சிரமமாக இருக்கும் என்று இல்லாவிட்டால், அல்லாஹ்வின் பாதையில் போரிடும் எந்தவொரு படைப்பிரிவிலிருந்தும் நான் பின்தங்கியிருக்க மாட்டேன். ஆனால், அவர்களை (வாகனங்களில்) ஏற்றிச் செல்ல என்னிடம் வசதியில்லை; அவர்களிடமும் (வாகன) வசதியில்லை; (இந்நிலையில்) என்னைவிட்டுப் பிரிந்திருப்பது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும்.
முஹம்மதுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ்வின் பாதையில் நான் போரிட்டுக் கொல்லப்படுவதையும், பிறகு (உயிர்ப்பிக்கப்பட்டுப்) போரிட்டுக் கொல்லப்படுவதையும், மீண்டும் (உயிர்ப்பிக்கப்பட்டுப்) போரிட்டுக் கொல்லப்படுவதையும் நான் (பெரிதும்) விரும்புகிறேன்."
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ رِفَاعَةَ الْجُهَنِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ إِذَا حَلَفَ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ .
ரிஃபாஆ அல்-ஜுஹனீ (ரழி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்யும்போது, "எவனுடைய கரத்தில் முஹம்மதின் உயிர் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக" என்று கூறுவார்கள்.