சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "எவருடைய இஸ்லாம் மிகச் சிறந்தது? (அதாவது மிகச் சிறந்த முஸ்லிம் யார்?)" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே" என்று பதிலளித்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக ஒரு நபர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அதற்கு (நபியவர்கள்), "எவருடைய நாவு மற்றும் கரத்திலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே" என்று கூறினார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “இஸ்லாத்தில் எந்தப் (பண்பு) மிகவும் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: “எந்த (ஒரு முஸ்லிமின்) நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் (மற்ற) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ, அதுவே.”