அபு ஹுரைரா (ரழி) அவர்கள், அபுல் காசிம் (ஸல்) (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருநாமங்களில் ஒன்று) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
எவர் தமது அடிமையின் மீது விபச்சாரக் குற்றம் சாட்டுகிறாரோ, அவர் கூறியவாறு (அதாவது, அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக) இருந்தாலே தவிர, மறுமை நாளில் அவருக்கு ஹத் (இஸ்லாமிய சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட) தண்டனை நிறைவேற்றப்படும்.