அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நற்செயல்களைச் செய்து, அதற்காக மக்களின் பாராட்டையும் பெறும் ஒருவரைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அது இறைநம்பிக்கையாளருக்கு (இம்மையிலேயே கிடைக்கும்) விரைவான நற்செய்தியாகும்" என்று கூறினார்கள்.