புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(இறைவழியில் போருக்குச் செல்லாமல்) வீட்டில் தங்கியிருப்பவர்களுக்கு, இறைப்போராளிகளின் மனைவியரின் புனிதத்தன்மை, அவர்களுடைய தாய்மார்களின் புனிதத்தன்மையைப் போன்றதாகும். வீட்டில் தங்கியிருப்பவர்களில் ஒருவர், ஒரு இறைப்போராளியின் குடும்பத்தைப் (அவர் இல்லாதபோது) பராமரிக்கும் பொறுப்பை ஏற்று, அதில் அவருக்குத் துரோகம் இழைத்தால், மறுமை நாளில் அந்த இறைப்போராளியின் முன்னிலையில் அவர் நிறுத்தப்படுவார். அப்போது அந்த இறைப்போராளி, இவருடைய நற்செயல்களிலிருந்து தாம் விரும்பியதை எடுத்துக்கொள்வார். எனவே, (அவருடைய நற்செயல்களில் எதுவும் மிச்சமிருக்கும் என்று) நீங்கள் நினைக்கிறீர்களா?"