இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அறிவித்தார்கள்:
"உங்களில் ஒருவர் மற்றவரின் வியாபாரத்தின் மீது (அதாவது, ஒரு விற்பனை உறுதி செய்யப்பட்டு, வாங்குபவர் மற்றும் விற்பவர் சம்மதித்த பின் அதை முறியடிக்கும் விதமாக) வியாபாரம் செய்ய வேண்டாம். மேலும், உங்களில் ஒருவர் மற்றவரின் பெண் பேசுதலின் மீது (அதாவது, ஒரு பெண்ணுக்கு திருமணப் பேச்சுவார்த்தை நடந்து, இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்து, நிச்சயதார்த்தம் உறுதியான பின்) பெண் பேச வேண்டாம்."
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒருவர் தம் சகோதரரின் வியாபாரத்தின் மீது (அதாவது, ஒரு விற்பனை உறுதியாகிவிட்ட அல்லது உறுதியாகும் நிலையில் உள்ளபோது) வியாபாரம் செய்ய வேண்டாம். மேலும், தம் சகோதரரின் திருமணப் பேச்சுவார்த்தையின் மீது (அதாவது, பெண் தரப்பால் சம்மதம் தெரிவிக்கப்பட்டுவிட்ட அல்லது சம்மதம் தெரிவிக்கப்படும் நிலையில் உள்ளபோது) பெண் பேச வேண்டாம். அவர் (சகோதரன்) இவருக்கு அனுமதியளித்தாலன்றி (இவை அனுமதிக்கப்படாது).”
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
ஒருவர், தம் சகோதரர் (ஒரு பொருளை விற்க) சம்மதித்திருக்கும்போது (அந்த ஒப்பந்தத்தை முறியடிக்கும் விதமாக) அதன் மீது விற்கவோ, தம் சகோதரர் (ஒரு பெண்ணிடம்) பெண் கேட்டிருக்கும்போது (அதே பெண்ணிடம்) பெண் கேட்கவோ கூடாது; அவர் (முதல் சகோதரர்) அனுமதி கொடுத்தால் தவிர.