உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் மிம்பரில் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் சகோதரர் ஆவார். ஆகவே, ஒரு முஃமின் தன் சகோதரர் ஒரு பொருளுக்கு விலை பேசிக்கொண்டிருக்கும்போது, இவர் (அவரை விட) விலையை உயர்த்திப் பேசுவது ஆகுமானதல்ல; மேலும், தன் சகோதரர் (ஒரு பெண்ணிடம்) அவ்வாறு திருமணத்திற்காகப் பெண் கேட்டிருக்கும் போது, அவர் அதை விட்டுவிடும் வரை இவர் (அப்பெண்ணிடம்) திருமணத்திற்காகப் பெண் கேட்கக்கூடாது.