இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7346ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ فِي صَلاَةِ الْفَجْرِ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ ‏"‏ اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ فِي الأَخِيرَةِ ‏"‏‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا ‏"‏‏.‏ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ‏}‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவர் (இப்னு உமர் (ரழி) அவர்கள்) நபி (ஸல்) அவர்கள், ஃபஜ்ரு தொழுகையில் ருகூவிலிருந்து தம் தலையை உயர்த்திய பின்பு, “யா அல்லாஹ்! எங்கள் இரட்சகனே! எல்லாப் புகழும் உனக்கே உரியது” என்றும், மேலும் இறுதி (ரக்அத்)தில், “யா அல்லாஹ்! இன்னாரையும் இன்னாரையும் சபிப்பாயாக!” என்றும் கூறுவதை கேட்டார்கள். பிறகு அல்லாஹ் வஹீ (இறைச்செய்தி) அருளினான்:-- ‘(முஹம்மதே (ஸல்)!) இந்த(க் காரியத்தின்) முடிவு உமக்குரியதன்று, (மாறாக அல்லாஹ்வுக்கே உரியது); அவன் அவர்கள் மீது கருணை கொண்டு அவர்களை மன்னிப்பதா அல்லது அவர்களைத் தண்டிப்பதா (என்பது அவனுடையதே); ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள்.’ (3:128)

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1716 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ، اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ ‏.‏ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ ‏ ‏ ‏.‏
அம்ரு இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுவதைக் கேட்டதாக அறிவித்தார்கள்:
ஒரு நீதிபதி, சரியான முறையில் தீர்ப்பளிக்க தன்னால் இயன்றவரை முழுமையாக முயற்சி செய்து, அவர் வழங்கும் தீர்ப்புச் சரியாக அமைந்துவிட்டால், அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு; மேலும் அவர், (சரியான தீர்ப்பை எட்டுவதற்காக) தன்னால் இயன்றவரை முழுமையாக முயற்சி செய்து தீர்ப்பளித்து, அதில் தவறிழைத்துவிட்டால், அவருக்கு ஒரு நன்மை உண்டு.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح