இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2215ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ خَرَجَ ثَلاَثَةٌ يَمْشُونَ فَأَصَابَهُمُ الْمَطَرُ، فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ، فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ‏.‏ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ، إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ، فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى، ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ، فَأَجِيءُ بِالْحِلاَبِ فَآتِي بِهِ أَبَوَىَّ فَيَشْرَبَانِ، ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي، فَاحْتَبَسْتُ لَيْلَةً‏.‏ فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ ـ قَالَ ـ فَكَرِهْتُ أَنْ أُوقِظَهُمَا، وَالصِّبِيْةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَىَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا، حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ‏.‏ قَالَ فَفُرِجَ عَنْهُمْ‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي كُنْتُ أُحِبُّ امْرَأَةً مِنْ بَنَاتِ عَمِّي كَأَشَدِّ مَا يُحِبُّ الرَّجُلُ النِّسَاءَ، فَقَالَتْ لاَ تَنَالُ ذَلِكَ مِنْهَا حَتَّى تُعْطِيَهَا مِائَةَ دِينَارٍ‏.‏ فَسَعَيْتُ فِيهَا حَتَّى جَمَعْتُهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفُضَّ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ‏.‏ فَقُمْتُ وَتَرَكْتُهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً، قَالَ فَفَرَجَ عَنْهُمُ الثُّلُثَيْنِ‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقٍ مِنْ ذُرَةٍ فَأَعْطَيْتُهُ، وَأَبَى ذَاكَ أَنْ يَأْخُذَ، فَعَمَدْتُ إِلَى ذَلِكَ الْفَرَقِ، فَزَرَعْتُهُ حَتَّى اشْتَرَيْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، ثُمَّ جَاءَ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ أَعْطِنِي حَقِّي‏.‏ فَقُلْتُ انْطَلِقْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرَاعِيهَا، فَإِنَّهَا لَكَ‏.‏ فَقَالَ أَتَسْتَهْزِئُ بِي‏.‏ قَالَ فَقُلْتُ مَا أَسْتَهْزِئُ بِكَ وَلَكِنَّهَا لَكَ‏.‏ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا‏.‏ فَكُشِفَ عَنْهُمْ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் (வழியில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகைக்குள் நுழைந்தார்கள். அப்போது மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து, குகையின் வாசலை அடைத்துக் கொண்டது. அவர்கள் (ஒருவருக்கொருவர்), 'நீங்கள் செய்த நற்செயல்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று பேசிக்கொண்டார்கள்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் (கால்நடைகளை) மேய்த்துவிட்டு வெளியே செல்வேன். பிறகு (மாலையில்) வந்து பால் கறந்து, அந்தப் பாலைப் பாத்திரத்தில் என் பெற்றோரிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். அதன் பிறகே என் குழந்தைகளுக்கும், என் குடும்பத்தாருக்கும், என் மனைவிக்கும் புகட்டுவேன். ஓர் இரவில் நான் வருவதற்குத் தாமதமாகிவிட்டது. நான் வந்தபோது அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தார்கள். அவர்களை எழுப்ப எனக்கு மனமில்லை. குழந்தங்களோ (பசியால்) என் காலடியில் அழுது கொண்டிருந்தார்கள். விடியும் வரை எனதும் அவர்களது நிலையும் இப்படியே இருந்தது. இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், நாங்கள் வானத்தைப் பார்க்கும் அளவுக்கு (பாறையை விலக்கி) ஒரு இடைவெளியை ஏற்படுத்துவாயாக!' (என்று வேண்டினார்). பாறை (சிறிது) விலகியது.

வேறொருவர் கூறினார்: 'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் (மீது) நான் அன்பு வைத்திருந்தேன். ஒரு ஆண், பெண்களை நேசிப்பதிலேயே மிக அதிகமாக நேசிப்பதைப் போன்று அவள் மீது நான் அன்பு வைத்திருந்தேன். (நான் அவளை அடைய விரும்பினேன்). ஆனால், நூறு தீனார்கள் (தங்கக் காசுகள்) கொடுத்தாலன்றி நீ என்னை அடைய முடியாது என்று அவள் சொல்லிவிட்டாள். அதற்காக நான் உழைத்து அதைச் சேகரித்தேன். அவளுடைய இரண்டு கால்களுக்கு இடையே நான் அமர்ந்தபோது, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையில் (திருமணம் செய்து) அன்றி, முத்திரையை உடைக்காதே!' என்று அவள் கூறினாள். உடனே நான் எழுந்து அவளைவிட்டு விலகிவிட்டேன். இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், எங்களுக்கு (வழியைத்) திறப்பாயாக!' (என்று வேண்டினார்). பாறை மூன்றில் இரண்டு பங்கு விலகியது.

வேறொருவர் கூறினார்: 'இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு சோளத்திற்கு ஒரு கூலியாளை அமர்த்தினேன். (வேலை முடிந்ததும்) அவனுக்குக் கூலி கொடுத்தேன். அவன் அதைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். (அவன் போன பிறகு) அந்தச் சோளத்தை நான் பயிரிட்டேன். (அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு) அதிலிருந்து மாடுகளையும் அவற்றை மேய்ப்பவரையும் வாங்கினேன். பிறகு (சில காலம் கழித்து) அவன் வந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! என் கூலியை எனக்குக் கொடுத்துவிடு' என்று கேட்டான். நான், 'அந்த மாடுகளிடமும் அதை மேய்ப்பவரிடமும் செல்! அவை உனக்குரியவைதாம்' என்று சொன்னேன். அதற்கு அவன், 'என்னை நீ கேலி செய்கிறாயா?' என்று கேட்டான். நான், 'உன்னை நான் கேலி செய்யவில்லை; அவை உனக்குரியவைதாம்' என்று சொன்னேன். இறைவா! உனது திருப்பொருத்தத்தை நாடியே நான் இதைச் செய்தேன் என்று நீ அறிந்தால், (பாறையை முழுவதுமாக) விலக்கிவிடு!' என்று வேண்டினார். பாறை (முழுமையாக) விலகியது."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5974ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَاشَوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ، فَمَالُوا إِلَى غَارٍ فِي الْجَبَلِ، فَانْحَطَّتْ عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ، فَأَطْبَقَتْ عَلَيْهِمْ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً عَمِلْتُمُوهَا لِلَّهِ صَالِحَةً، فَادْعُوا اللَّهَ بِهَا لَعَلَّهُ يَفْرُجُهَا‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ، وَلِي صِبْيَةٌ صِغَارٌ كُنْتُ أَرْعَى عَلَيْهِمْ، فَإِذَا رُحْتُ عَلَيْهِمْ فَحَلَبْتُ بَدَأْتُ بِوَالِدَىَّ أَسْقِيهِمَا قَبْلَ وَلَدِي، وَإِنَّهُ نَاءَ بِيَ الشَّجَرُ فَمَا أَتَيْتُ حَتَّى أَمْسَيْتُ، فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا، فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ، فَجِئْتُ بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا، أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا، وَأَكْرَهُ أَنْ أَبْدَأَ بِالصِّبْيَةِ قَبْلَهُمَا، وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ قَدَمَىَّ، فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ لَنَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ، فَفَرَجَ اللَّهُ لَهُمْ فُرْجَةً حَتَّى يَرَوْنَ مِنْهَا السَّمَاءَ‏.‏ وَقَالَ الثَّانِي اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِي ابْنَةُ عَمٍّ، أُحِبُّهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ، فَطَلَبْتُ إِلَيْهَا نَفْسَهَا، فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ، فَسَعَيْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ، فَلَقِيتُهَا بِهَا، فَلَمَّا قَعَدْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ، وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ‏.‏ فَقُمْتُ عَنْهَا، اللَّهُمَّ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي قَدْ فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فَفَرَجَ لَهُمْ فُرْجَةً‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي‏.‏ فَعَرَضْتُ عَلَيْهِ حَقَّهُ، فَتَرَكَهُ وَرَغِبَ عَنْهُ، فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرَاعِيَهَا، فَجَاءَنِي فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِي، وَأَعْطِنِي حَقِّي‏.‏ فَقُلْتُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْبَقَرِ وَرَاعِيهَا‏.‏ فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَهْزَأْ بِي‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَهْزَأُ بِكَ، فَخُذْ ذَلِكَ الْبَقَرَ وَرَاعِيَهَا‏.‏ فَأَخَذَهُ فَانْطَلَقَ بِهَا، فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ، فَافْرُجْ مَا بَقِيَ، فَفَرَجَ اللَّهُ عَنْهُمْ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று நபர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகையில் ஒதுங்கினர். மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து அவர்களது குகை வாசலை மூடிக்கொண்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் அல்லாஹ்விற்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப்பாருங்கள். அவற்றைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் (இக்கஷ்டத்தை) உங்களை விட்டு நீக்கக்கூடும்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். எனக்குச் சிறிய குழந்தைகளும் இருந்தனர். அவர்களுக்காக நான் (கால்நடைகளை) மேய்த்து வருவேன். நான் (மேய்ச்சலிலிருந்து) திரும்பினால் பால் கறப்பேன்; என் குழந்தைகளுக்கு முன்பாக என் பெற்றோருக்கே (பாலை) புகட்டுவேன். ஒரு நாள் மேய்ச்சல் என்னைத் வெகுதூரம் கொண்டு சென்றுவிட்டது. மாலை நேரம் வரை நான் திரும்பவில்லை. (நான் வந்தபோது) அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். நான் எப்போதும் போல் பால் கறந்து, பாத்திரத்துடன் அவர்கள் தலைமாட்டில் நின்றேன். அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் எனக்கு மனமில்லை; அவர்களுக்கு முன் குழந்தைகளுக்குக் கொடுக்கவும் மனமில்லை. என் காலடியில் குழந்தைகள் (பசியால்) அழுதுகொண்டிருந்தனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், வானம் தெரியும் அளவிற்கு எங்களுக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்துவாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களுக்கு வானம் தெரியும் அளவிற்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தினான்.

இரண்டாமவர் கூறினார்: 'இறைவா! என் தந்தையின் சகோதரர் மகள் (என் மாமன் மகள்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகக் கடுமையான நேசத்தை அவள் மீது நான் கொண்டேன். நான் அவளை அடைய விரும்பினேன். ஆனால் நான் நூறு தீனார்கள் கொண்டுவரும் வரை அவள் மறுத்துவிட்டாள். நான் (கடுமையாக) உழைத்து நூறு தீனார்களைச் சேகரித்து அவளிடம் கொண்டு சென்றேன். அவள் கால்களுக்கு இடையே நான் (உறவாட) அமர்ந்தபோது, 'அல்லாஹ்வின் அடியாரே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிமையின்றி முத்திரையை உடைக்காதே' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு விலகினேன். (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், இதிலிருந்து எங்களுக்கு விடுதலையளிப்பாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களுக்கு (பாறையை இன்னும் சற்று) விலக்கினான்.

மற்றவர் கூறினார்: 'இறைவா! நான் ஒரு பணியாளரை ஒரு 'ஃபரக்' (அளவை) நெல்லுக்குக் கூலியாக அமர்த்தினேன். அவர் வேலையை முடித்துத் தன் கூலியைக் கேட்டார். நான் அவருக்குரியதை அவரிடம் கொடுத்தபோது, அவர் (அற்பமெனக் கருதி) அதை விட்டுவிட்டு, வெறுத்துச் சென்றுவிட்டார். நான் அப்பயிரைத் தொடர்ந்து பயிரிட்டு (விளைச்சலைப் பெருக்கி), அதிலிருந்து மாடுகளையும் அதற்கென ஒரு இடையனையும் வாங்கினேன். பின்னர் அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! எனக்கு அநீதி இழைக்காதே! என் கூலியைத் தந்துவிடு' என்றார். நான், 'அந்த மாடுகளையும் அதன் இடையனையும் எடுத்துக்கொள்' என்றேன். அவர், 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! என்னைக் கேலி செய்யாதே' என்றார். நான், 'உன்னை நான் கேலி செய்யவில்லை; அந்த மாடுகளையும் இடையனையும் எடுத்துக்கொள்' என்றேன். அவர் அதை ஓட்டிச் சென்றார். (இறைவா!) இதை நான் உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எஞ்சியிருக்கும் பகுதியையும் விலக்குவாயாக!' (என்று வேண்டினார்). அல்லாஹ் அவர்களை (முழுமையாக) விடுவித்தான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2743 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، حَدَّثَنِي أَنَسٌ، - يَعْنِي ابْنَ عِيَاضٍ أَبَا ضَمْرَةَ
- عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه
وسلم أَنَّهُ قَالَ ‏"‏ بَيْنَمَا ثَلاَثَةُ نَفَرٍ يَتَمَشَّوْنَ أَخَذَهُمُ الْمَطَرُ فَأَوَوْا إِلَى غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ
عَلَى فَمِ غَارِهِمْ صَخْرَةٌ مِنَ الْجَبَلِ فَانْطَبَقَتْ عَلَيْهِمْ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ انْظُرُوا أَعْمَالاً
عَمِلْتُمُوهَا صَالِحَةً لِلَّهِ فَادْعُوا اللَّهَ تَعَالَى بِهَا لَعَلَّ اللَّهَ يَفْرُجُهَا عَنْكُمْ ‏.‏ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ
إِنَّهُ كَانَ لِي وَالِدَانِ شَيْخَانِ كَبِيرَانِ وَامْرَأَتِي وَلِيَ صِبْيَةٌ صِغَارٌ أَرْعَى عَلَيْهِمْ فَإِذَا أَرَحْتُ
عَلَيْهِمْ حَلَبْتُ فَبَدَأْتُ بِوَالِدَىَّ فَسَقَيْتُهُمَا قَبْلَ بَنِيَّ وَأَنَّهُ نَأَى بِي ذَاتَ يَوْمٍ الشَّجَرُ فَلَمْ آتِ
حَتَّى أَمْسَيْتُ فَوَجَدْتُهُمَا قَدْ نَامَا فَحَلَبْتُ كَمَا كُنْتُ أَحْلُبُ فَجِئْتُ بِالْحِلاَبِ فَقُمْتُ عِنْدَ رُءُوسِهِمَا
أَكْرَهُ أَنْ أُوقِظَهُمَا مِنْ نَوْمِهِمَا وَأَكْرَهُ أَنْ أَسْقِيَ الصِّبْيَةَ قَبْلَهُمَا وَالصِّبْيَةُ يَتَضَاغَوْنَ عِنْدَ
قَدَمَىَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمْ حَتَّى طَلَعَ الْفَجْرُ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ
وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ ‏.‏ فَفَرَجَ اللَّهُ مِنْهَا فُرْجَةً فَرَأَوْا مِنْهَا السَّمَاءَ
‏.‏ وَقَالَ الآخَرُ اللَّهُمَّ إِنَّهُ كَانَتْ لِيَ ابْنَةُ عَمٍّ أَحْبَبْتُهَا كَأَشَدِّ مَا يُحِبُّ الرِّجَالُ النِّسَاءَ وَطَلَبْتُ
إِلَيْهَا نَفْسَهَا فَأَبَتْ حَتَّى آتِيَهَا بِمِائَةِ دِينَارٍ فَتَعِبْتُ حَتَّى جَمَعْتُ مِائَةَ دِينَارٍ فَجِئْتُهَا بِهَا
فَلَمَّا وَقَعْتُ بَيْنَ رِجْلَيْهَا قَالَتْ يَا عَبْدَ اللَّهِ اتَّقِ اللَّهَ وَلاَ تَفْتَحِ الْخَاتَمَ إِلاَّ بِحَقِّهِ ‏.‏ فَقُمْتُ عَنْهَا
فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مِنْهَا فُرْجَةً ‏.‏ فَفَرَجَ لَهُمْ ‏.‏ وَقَالَ
الآخَرُ اللَّهُمَّ إِنِّي كُنْتُ اسْتَأْجَرْتُ أَجِيرًا بِفَرَقِ أَرُزٍّ فَلَمَّا قَضَى عَمَلَهُ قَالَ أَعْطِنِي حَقِّي ‏.‏
فَعَرَضْتُ عَلَيْهِ فَرَقَهُ فَرَغِبَ عَنْهُ فَلَمْ أَزَلْ أَزْرَعُهُ حَتَّى جَمَعْتُ مِنْهُ بَقَرًا وَرِعَاءَهَا فَجَاءَنِي
فَقَالَ اتَّقِ اللَّهَ وَلاَ تَظْلِمْنِي حَقِّي ‏.‏ قُلْتُ اذْهَبْ إِلَى تِلْكَ الْبَقَرِ وَرِعَائِهَا فَخُذْهَا ‏.‏ فَقَالَ اتَّقِ
اللَّهَ وَلاَ تَسْتَهْزِئْ بِي ‏.‏ فَقُلْتُ إِنِّي لاَ أَسْتَهْزِئُ بِكَ خُذْ ذَلِكَ الْبَقَرَ وَرِعَاءَهَا ‏.‏ فَأَخَذَهُ فَذَهَبَ
بِهِ فَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّي فَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ لَنَا مَا بَقِيَ ‏.‏ فَفَرَجَ اللَّهُ مَا بَقِيَ
‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"மூன்று நபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது மழை பிடித்தது. அவர்கள் மலையிலுள்ள ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். அப்போது மலையிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து குகையின் வாசலை மூடிக்கொண்டது. அவர்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் அல்லாஹ்வுக்காகச் செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் அதைக்கொண்டு உங்களுக்கு (வழியைத்) திறக்கக்கூடும்' என்று பேசிக்கொண்டனர்.

அவர்களில் ஒருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர்கள் இருந்தார்கள்; என் மனைவியும், சிறிய குழந்தைகளும் இருந்தார்கள். நான் அவர்களுக்காக (கால்நடைகளை) மேய்த்து வருவேன். நான் (மேய்த்துவிட்டு) திரும்பி வந்தால், பால் கறந்து, என் பிள்ளைகளுக்கு முன்பு என் பெற்றோர்களுக்கு (முதலில்) புகட்டுவேன். ஒரு நாள் (கால்நடைகளை மேய்க்கச் சென்றபோது) மேய்ச்சல் நிலம் என்னைத் தொலைதூரம் அழைத்துச் சென்றுவிட்டதால், (திரும்பி வர) எனக்குத் தாமதமாகிவிட்டது. நான் மாலையில் வந்தபோது அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர். நான் எப்போதும் போல் பால் கறந்து, பாத்திரத்தைக் கொண்டு வந்து அவர்கள் தலைமாட்டில் நின்றேன். உறக்கத்திலிருந்து அவர்களை எழுப்புவதை நான் வெறுத்தேன்; அவர்களுக்கு முன்பாகப் பிள்ளைகளுக்குப் புகட்டுவதையும் நான் வெறுத்தேன். என் காலடியில் குழந்தைகள் (பசியால்) அழுதுகொண்டிருந்தனர். வைகறை உதயமாகும் வரை என்னுடைய நிலையும் அவர்களின் நிலையும் இப்படியே இருந்தது. (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், வானம் தெரியும் அளவுக்கு எங்களுக்கு ஒரு திறப்பை ஏற்படுத்துவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் அவர்களுக்கு ஒரு திறப்பை ஏற்படுத்தினான்; அதிலிருந்து அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

மற்றவர் கூறினார்: 'யா அல்லாஹ்! எனக்கு என் தந்தையின் சகோதரரின் மகள் (அதாவது, என் ஒன்றுவிட்ட சகோதரி) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை நேசிப்பதிலேயே மிகக் கடுமையாக நான் அவளை நேசித்தேன். நான் அவளை அடைய விரும்பினேன்; ஆனால் நூறு தீனார்கள் நான் அவளிடம் கொண்டு வரும் வரை அவள் மறுத்துவிட்டாள். நான் (கடுமையாக) உழைத்து நூறு தீனார்களைச் சேகரித்தேன். அதை அவளிடம் கொண்டு வந்தேன். நான் அவள் கால்களுக்கு இடையே அமர்ந்தபோது, 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சு! உரிய முறையிலன்றி (திருமணமின்றி) முத்திரையை உடைக்காதே!' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்துவிட்டேன். (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எங்களுக்கு (இன்னும்) ஒரு திறப்பை ஏற்படுத்துவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் அவர்களுக்கு (மேலும்) ஒரு திறப்பை ஏற்படுத்தினான்.

மற்றொருவர் கூறினார்: 'யா அல்லாஹ்! நான் ஒருவரை ஒரு 'ஃபரக்' (எனும் அளவு) அரிசி கூலிக்கு வேலைக்கு அமர்த்தினேன். அவர் தனது வேலையை முடித்ததும், 'என் கூலியை எனக்குத் தா!' என்று கேட்டார். நான் அவருக்குரிய (அந்த ஒரு ஃபரக்) கூலியை எடுத்துக் கொடுத்தேன். ஆனால் அவர் அதைப் புறக்கணித்துச் சென்றுவிட்டார். நான் அதை (விதையாகப்) பயிரிட்டேன்; அதிலிருந்து மாடுகளையும் அதை மேய்ப்பவர்களையும் நான் சம்பாதிக்கும் வரை (செல்வம் பெருகியது). பின்னர் அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வை அஞ்சு! எனக்கு அநீதி இழைக்காதே (என் கூலியைத் தா)!' என்று கேட்டார். நான், 'அந்த மாடுகளிடமும் அதை மேய்ப்பவர்களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்!' என்று கூறினேன். அவர், 'அல்லாஹ்வை அஞ்சு! என்னைக் கேலி செய்யாதே!' என்றார். நான், 'உன்னைக் கேலி செய்யவில்லை; அந்த மாடுகளையும் அதை மேய்ப்பவர்களையும் எடுத்துக்கொள்!' என்றேன். அவர் அவற்றை (ஓட்டிச்) சென்றார். (யா அல்லாஹ்!) நான் இதை உனது திருப்பொருத்தத்தை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால், எஞ்சியிருப்பதையும் எங்களுக்குத் திறந்துவிடுவாயாக!' என்று வேண்டினார். அல்லாஹ் எஞ்சியிருந்த (பகுதியையும்) திறந்தான்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح