இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2548 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفٍ الثَّقَفِيُّ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا
جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ
اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي قَالَ ‏"‏ أُمُّكَ ‏"‏ ‏.‏ قَالَ
ثُمَّ مَنْ قَالَ ‏"‏ ثُمَّ أُمُّكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏"‏ ثُمَّ أُمُّكَ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏"‏ ثُمَّ أَبُوكَ ‏"‏
‏.‏ وَفِي حَدِيثِ قُتَيْبَةَ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي وَلَمْ يَذْكُرِ النَّاسَ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "மக்களில் நான் நன்முறையில் நடந்துகொள்ள மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "உமது தாய்" என்றார்கள். அவர், "பிறகு யார்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "பிறகு உமது தாய்" என்றார்கள். அவர், "பிறகு யார்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "பிறகு உமது தாய்" என்றார்கள். அவர், "பிறகு யார்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "பிறகு உமது தந்தை" என்றார்கள்.

குதைபா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் "மக்கள்" என்ற சொல் இடம்பெறவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح