அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்-ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் தம் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.”
அவர்கள் (தோழர்கள்), “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தம் பெற்றோரைத் (தானே) திட்டுவாரா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், “ஆம், ஒருவர் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகிறார்; உடனே அவர் இவருடைய தந்தையைத் திட்டுகிறார். (அதேபோல்) ஒருவர் இன்னொருவரின் தாயைத் திட்டுகிறார்; உடனே அவர் இவருடைய தாயைத் திட்டுகிறார்” என்று பதிலளித்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் தன் பெற்றோரை சபிப்பது மிகப் பெரும் பாவங்களில் ஒன்றாகும்."
(நபித்தோழர்கள்) கேட்டார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தன் பெற்றோரை எப்படி சபிப்பார்?" அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: "அவர் ஒரு மனிதரின் தந்தையை சபிப்பார்; அதனால் அந்த மனிதர் இவருடைய தந்தையை சபிப்பார். மேலும் அவர் ஒரு மனிதரின் தாயை சபிப்பார்; அதனால் அந்த மனிதர் இவருடைய தாயை சபிப்பார்."
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு மனிதன் தன் பெற்றோரை ஏசுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.” அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் பெற்றோரை (நேரடியாக) ஏசுவானா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் (ஸல்) அவர்கள், “ஆம். ஒருவன் (மற்றொரு) மனிதனின் தந்தையை ஏசுகிறான். அதனால் (பதிலுக்கு) அவன் இவனுடைய தந்தையை ஏசுகிறான். (அதேபோல) இவன் (மற்றொரு மனிதனின்) தாயை ஏசுகிறான். அதனால் (பதிலுக்கு) அவன் இவனுடைய தாயை ஏசுகிறான்” என்று பதிலளித்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஒருவர் தம் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். (அப்போது நபித்தோழர்கள்), "ஒருவர் தம் பெற்றோரை எப்படித் திட்டுவார்?" என்று கேட்டார்கள். அதற்கு (நபியவர்கள்), "(ஒருவன் மற்றொரு) மனிதரைத் திட்டுவான், (அதற்குப்) பதிலாக அந்த மனிதர் இவனுடைய தந்தையையும் தாயையும் திட்டுவார்" என்று கூறினார்கள்.