அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாரைச் சந்திக்கச் சென்றார்கள். அவர்களிடத்தில் உணவருந்தினார்கள். அவர்கள் புறப்பட்டபோது, அவ்வீட்டின் ஓர் இடத்தைக் குறித்துக் கட்டளையிட்டார்கள். (அங்கு) அவருக்காக ஒரு விரிப்பின் மீது (தொழுவதற்காக) தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதன் மீது அவர்கள் தொழுது, அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.