இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2794சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ضَحَّى بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ يَذْبَحُ وَيُكَبِّرُ وَيُسَمِّي وَيَضَعُ رِجْلَهُ عَلَى صَفْحَتِهِمَا ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், கொம்புகளுள்ள, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிறமுடைய இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களை அறுத்து, "அல்லாஹ் மிகப் பெரியவன்" என்று கூறி, அல்லாஹ்வின் பெயரையும் குறிப்பிட்டு, அவற்றின் பக்கங்களில் தமது பாதத்தை வைத்துப் பலியிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)