இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4476ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏ وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ يَجْتَمِعُ الْمُؤْمِنُونَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ أَنْتَ أَبُو النَّاسِ، خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَأَسْجَدَ لَكَ مَلاَئِكَتَهُ، وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَىْءٍ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا‏.‏ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ ذَنْبَهُ فَيَسْتَحِي ـ ائْتُوا نُوحًا فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الأَرْضِ‏.‏ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ‏.‏ وَيَذْكُرُ سُؤَالَهُ رَبَّهُ مَا لَيْسَ لَهُ بِهِ عِلْمٌ فَيَسْتَحِي، فَيَقُولُ ائْتُوا خَلِيلَ الرَّحْمَنِ‏.‏ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُوسَى عَبْدًا كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ‏.‏ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ‏.‏ وَيَذْكُرُ قَتْلَ النَّفْسِ بِغَيْرِ نَفْسٍ فَيَسْتَحِي مِنْ رَبِّهِ فَيَقُولُ ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ، وَكَلِمَةَ اللَّهِ وَرُوحَهُ‏.‏ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم عَبْدًا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ‏.‏ فَيَأْتُونِي فَأَنْطَلِقُ حَتَّى أَسْتَأْذِنَ عَلَى رَبِّي فَيُؤْذَنُ ‏{‏لِي‏}‏ فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ، وَسَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ‏.‏ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُهُ بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ، ثُمَّ أَشْفَعُ، فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الْجَنَّةَ، ثُمَّ أَعُودُ إِلَيْهِ، فَإِذَا رَأَيْتُ رَبِّي ـ مِثْلَهُ ـ ثُمَّ أَشْفَعُ، فَيَحُدُّ لِي حَدًّا، فَأُدْخِلُهُمُ الْجَنَّةَ ‏{‏ثُمَّ أَعُودُ الثَّالِثَةَ‏}‏ ثُمَّ أَعُودُ الرَّابِعَةَ فَأَقُولُ مَا بَقِيَ فِي النَّارِ إِلاَّ مَنْ حَبَسَهُ الْقُرْآنُ وَوَجَبَ عَلَيْهِ الْخُلُودُ ‏"‏‏.‏ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ ‏"‏ إِلاَّ مَنْ حَبَسَهُ الْقُرْآنُ ‏"‏‏.‏ يَعْنِي قَوْلَ اللَّهِ تَعَالَى ‏{‏خَالِدِينَ فِيهَا‏}‏‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, 'நம்முடைய இறைவனிடம் நமக்காகப் பரிந்துரை செய்யும்படி (யாரையேனும்) கோருவோமே!' என்று (தமக்குள்) பேசிக்கொள்வார்கள்.

ஆகவே, அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனிதகுலத்தின் தந்தை ஆவீர்கள்; அல்லாஹ் உங்களைத் தன்னுடைய கரத்தால் படைத்தான்; தன் வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; மேலும் உங்களுக்கு எல்லாப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக்கொடுத்தான். ஆகவே, நாங்கள் இருக்கும் இந்த (துயர) இடத்திலிருந்து எங்களுக்கு விடுதலை பெற்றுத் தர, உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்' என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், 'நான் அதற்குரியவன் அல்ல' என்று கூறி, தம் பாவத்தை நினைவுகூர்ந்து வெட்கப்படுவார்கள். மேலும், 'நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்; ஏனெனில், அவர்தான் பூமிவாசிகளுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த முதல் தூதர் ஆவார்' என்று கூறுவார்கள்.

அவர்கள் அவரிடம் செல்வார்கள். நூஹ் (அலை) அவர்கள், 'நான் அதற்குரியவன் அல்ல' என்று கூறி, தமக்கு (தீர்க்கமாக) ஞானம் இல்லாத ஒரு விஷயத்தில் தம் இறைவனிடம் வேண்டிக்கேட்டதை நினைவுகூர்ந்து வெட்கப்படுவார்கள். மேலும், 'நீங்கள் 'கலீலுர் ரஹ்மான்' (அளவற்ற அருளாளனின் உற்ற தோழரான இப்ராஹீம்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவர்கள் அவரிடம் செல்வார்கள். அவரோ, 'நான் அதற்குரியவன் அல்ல; நீங்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவர் அல்லாஹ்வுடன் (நேரடியாக) உரையாடிய அடியார்; மேலும் அவருக்கு (அல்லாஹ்) தவ்ராத் வேதத்தை வழங்கினான்' என்று கூறுவார்கள்.

ஆகவே, அவர்கள் அவரிடம் செல்வார்கள். அவரோ, 'நான் அதற்குரியவன் அல்ல' என்று கூறி, (பதிலுக்குப் பதிலாக இன்றி) அநியாயமாக ஓர் உயிரைக் கொன்றதை நினைவுகூர்ந்து தம் இறைவனுக்கு வெட்கப்படுவார்கள். மேலும், 'நீங்கள் ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதரும், அவனது (கட்டளைத்) வார்த்தையும், அவனிடமிருந்து (உருவான) ஓர் ஆன்மாவும் ஆவார்' என்று கூறுவார்கள்.

ஈஸா (அலை) அவர்கள், 'நான் அதற்குரியவன் அல்ல; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். அவர் அல்லாஹ்வின் ஓர் அடியார்; அவருடைய முன்-பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான்' என்று கூறுவார்கள்.

ஆகவே, அவர்கள் என்னிடம் வருவார்கள். நான் சென்று என் இறைவனிடம் (பரிந்துரைக்க) அனுமதி கோருவேன். எனக்கு அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். அல்லாஹ் நாடிய வரை என்னை (அந்நிலத்திலேயே) விட்டுவைப்பான். பிறகு, 'உம் தலையை உயர்த்தும்! கேளும், உமக்குத் தரப்படும்! கூறும், உமது சொல் செவியேற்கப்படும்! பரிந்துரை செய்யும், உமது பரிந்துரை ஏற்கப்படும்!' என்று சொல்லப்படும்.

நான் என் தலையை உயர்த்தி, அல்லாஹ் எனக்குக் கற்றுத்தரும் புகழ்மொழிகளைக் கொண்டு அவனைப் போற்றுவேன். பிறகு பரிந்துரைப்பேன். எனக்கு ஒரு வரம்பை அவன் விதிப்பான். (அவ்வரையறைக்குள் உள்ள) அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன். பிறகு நான் அவனிடம் திரும்புவேன். என் இறைவனைக் காணும்போது (முன்பு போன்றே) செய்வேன். பிறகு பரிந்துரைப்பேன். எனக்கு ஒரு வரம்பை அவன் விதிப்பான். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன். பிறகு மூன்றாம் முறையாகத் திரும்புவேன்.

பிறகு நான்காம் முறையாகத் திரும்புவேன். அப்போது, 'குர்ஆன் தடுத்துவைத்தவர்களையும், (நரகத்தில்) நிரந்தரமாக இருப்பது விதியாக்கப்பட்டவர்களையும் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை' என்று கூறுவேன்."

(அறிவிப்பாளர்) அபூ அப்துல்லாஹ் (இமாம் புகாரீ) அவர்கள் கூறுகிறார்கள்: 'குர்ஆன் தடுத்துவைத்தவர்கள்' என்பது, 'காலிதீன ஃபீஹா' (அவர்கள் அதில் என்றென்றும் தங்குவார்கள்) எனும் இறைவசனத்தைக் குறிக்கும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4712ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِلَحْمٍ، فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ، وَكَانَتْ تُعْجِبُهُ، فَنَهَسَ مِنْهَا نَهْسَةً ثُمَّ قَالَ ‏ ‏ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ، وَهَلْ تَدْرُونَ مِمَّ ذَلِكَ يُجْمَعُ النَّاسُ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، يُسْمِعُهُمُ الدَّاعِي، وَيَنْفُذُهُمُ الْبَصَرُ، وَتَدْنُو الشَّمْسُ، فَيَبْلُغُ النَّاسَ مِنَ الْغَمِّ وَالْكَرْبِ مَا لاَ يُطِيقُونَ وَلاَ يَحْتَمِلُونَ فَيَقُولُ النَّاسُ أَلاَ تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلاَ تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ عَلَيْكُمْ بِآدَمَ فَيَأْتُونَ آدَمَ عليه السلام فَيَقُولُونَ لَهُ أَنْتَ أَبُو الْبَشَرِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ‏.‏ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ الْمَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ آدَمُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنَّهُ نَهَانِي عَنِ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ، نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى نُوحٍ، فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُونَ يَا نُوحُ إِنَّكَ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الأَرْضِ، وَقَدْ سَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ إِنَّ رَبِّي عَزَّ وَجَلَّ قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنَّهُ قَدْ كَانَتْ لِي دَعْوَةٌ دَعَوْتُهَا عَلَى قَوْمِي نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى إِبْرَاهِيمَ، فَيَأْتُونَ إِبْرَاهِيمَ، فَيَقُولُونَ يَا إِبْرَاهِيمُ، أَنْتَ نَبِيُّ اللَّهِ وَخَلِيلُهُ مِنْ أَهْلِ الأَرْضِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ لَهُمْ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنِّي قَدْ كُنْتُ كَذَبْتُ ثَلاَثَ كَذَبَاتٍ ـ فَذَكَرَهُنَّ أَبُو حَيَّانَ فِي الْحَدِيثِ ـ نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُوسَى، فَيَأْتُونَ مُوسَى، فَيَقُولُونَ يَا مُوسَى أَنْتَ رَسُولُ اللَّهِ، فَضَّلَكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلاَمِهِ عَلَى النَّاسِ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ، وَإِنِّي قَدْ قَتَلْتُ نَفْسًا لَمْ أُومَرْ بِقَتْلِهَا، نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي، اذْهَبُوا إِلَى عِيسَى، فَيَأْتُونَ عِيسَى فَيَقُولُونَ يَا عِيسَى أَنْتَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ، وَكَلَّمْتَ النَّاسَ فِي الْمَهْدِ صَبِيًّا اشْفَعْ لَنَا أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ عِيسَى إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ ـ وَلَمْ يَذْكُرْ ذَنْبًا ـ نَفْسِي نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَيَأْتُونَ مُحَمَّدًا صلى الله عليه وسلم فَيَقُولُونَ يَا مُحَمَّدُ أَنْتَ رَسُولُ اللَّهِ وَخَاتَمُ الأَنْبِيَاءِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ، فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي عَزَّ وَجَلَّ ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَىَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ، سَلْ تُعْطَهْ، وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَرْفَعُ رَأْسِي، فَأَقُولُ أُمَّتِي يَا رَبِّ، أُمَّتِي يَا رَبِّ فَيُقَالُ يَا مُحَمَّدُ أَدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لاَ حِسَابَ عَلَيْهِمْ مِنَ الْبَابِ الأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الأَبْوَابِ، ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ كَمَا بَيْنَ مَكَّةَ وَحِمْيَرَ، أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சமைத்த) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அவர்களுக்கு ஆட்டின் முன்னங்கால் பகுதி எடுத்துக் கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். அதிலிருந்து ஒரு கவளம் கடித்தார்கள். பிறகு கூறினார்கள்:

“மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் நானே. அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? (அல்லாஹ்) முந்தையவர்களையும் பிந்தையவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அழைப்பவர் (அழைத்தால்) அவர்களுக்குக் கேட்கும்; பார்ப்பவர் (பார்த்தால்) (அனைவரையும்) ஊடுருவிப் பார்க்க முடியும். சூரியன் (அவர்களுக்கு) மிக அருகில் வரும். மக்களுக்குத் தாங்க முடியாத, சுமக்க முடியாத அளவுக்குத் துயரமும் கவலையும் ஏற்படும். அப்போது மக்கள், ‘(துயரத்தில்) நீங்கள் எந்த நிலையை அடைந்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கவில்லையா? உங்கள் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்துரை செய்பவர் ஒருவரை நீங்கள் தேடமாட்டீர்களா?’ என்று பேசிக்கொள்வார்கள்.

சிலர் வேறு சிலரிடம், ‘ஆதம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள். அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, ‘நீங்கள் மனிதகுலத்தின் தந்தை. அல்லாஹ் உங்களைத் தன் கரத்தால் படைத்தான். மேலும் அவன் தன் ரூஹிலிருந்து (ஆன்மாவிலிருந்து) உங்களுக்குள் ஊதினான். மேலும் வானவர்களை உங்களுக்கு ஸஜ்தா செய்யும்படி கட்டளையிட்டான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? நாங்கள் எத்தகைய (துயரத்தை) அடைந்துவிட்டோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘இன்று என் இறைவன் முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான். அவன் என்னை (அந்த) மரத்தை விட்டும் தடுத்தான். ஆனால் நான் அவனுக்கு மாறுசெய்துவிட்டேன். எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

எனவே அவர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று, ‘நூஹ் அவர்களே! நீங்கள் பூமியிலுள்ள மக்களுக்கு (அனுப்பப்பட்ட) தூதர்களில் முதலாவதாக இருக்கிறீர்கள். அல்லாஹ் உங்களை நன்றியுள்ள அடியார் என்று பெயரிட்டான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள், ‘இன்று என் இறைவன் (அல்லாஹ்) முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான். எனக்கு (உலகில்) நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு பிரார்த்தனையைச் செய்யும் உரிமை இருந்தது. அதை நான் என் சமூகத்திற்கு எதிராகச் செய்துவிட்டேன். எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று, ‘இப்ராஹீம் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராகவும் பூமியிலுள்ள மக்களில் அவனுடைய கலீல் (நெருங்கிய நண்பர்) ஆகவும் இருக்கிறீர்கள். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான். நான் மூன்று பொய்களைச் சொல்லியிருந்தேன்’ என்று கூறிவிட்டு – (அறிவிப்பாளர் அபூ ஹையான் அவற்றை ஹதீஸில் குறிப்பிட்டுள்ளார்கள்) – ‘எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் சென்று, ‘மூஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். அல்லாஹ் தனது தூதுத்துவத்தாலும், (உங்களுடன்) பேசியதாலும் மற்ற மனிதர்களைவிட உங்களுக்கு மேன்மையை வழங்கினான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான். நான் கொல்லும்படி கட்டளையிடப்படாத ஓர் உயிரைக் கொன்றுவிட்டேன். எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

எனவே அவர்கள் ஈஸா (அலை) அவர்களிடம் சென்று, ‘ஈஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். மேலும் மர்யமிடம் அவன் போட்ட அவனுடைய வார்த்தையாகவும், அவனிடமிருந்து உருவான ஓர் ஆன்மாவாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் குழந்தையாகத் தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசினீர்கள். எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள். அதற்கு ஈஸா (அலை) அவர்கள், ‘என் இறைவன் இன்று முன்னெப்போதும் கோபப்படாத அளவுக்குக் கடும் கோபமாக இருக்கிறான். இனிமேலும் அவன் இதுபோன்று கோபப்பட மாட்டான்’ என்று கூறுவார்கள் – ஈஸா (அலை) அவர்கள் எந்தப் பாவத்தையும் குறிப்பிடமாட்டார்கள் – ‘எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! எனக்கு என் கவலையே பெரிது! வேறொருவரிடம் செல்லுங்கள்; முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று கூறுவார்கள்.

எனவே அவர்கள் முஹம்மது (ஸல்) ஆகிய என்னிடம் வருவார்கள். அவர்கள், ‘முஹம்மது அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். மேலும் நபிமார்களில் இறுதியானவர் ஆவீர்கள். அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று கூறுவார்கள்.

அப்போது நான் புறப்பட்டுச் சென்று அர்ஷுக்குக் கீழே என் இறைவனுக்கு முன்னால் ஸஜ்தாவில் விழுவேன். பின்னர் அல்லாஹ் எனக்கு முன் வேறு யாருக்கும் வெளிப்படுத்தாத அவனது புகழாங்களையும், அவனைப் போற்றும் அழகிய வார்த்தைகளையும் எனக்கு வெளிப்படுத்துவான். பின்னர், ‘முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள், உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், (உங்கள் பரிந்துரை) ஏற்கப்படும்’ என்று கூறப்படும். எனவே நான் என் தலையை உயர்த்தி, ‘என் உம்மத்தினரே! என் இறைவனே! என் உம்மத்தினரே! என் இறைவனே!’ என்று கூறுவேன். அப்போது, ‘முஹம்மதே! உங்கள் உம்மத்தினரில் கேள்வி கணக்கு இல்லாதவர்களைச் சொர்க்கத்தின் வாசல்களில் வலதுபுறத்தில் அமைந்துள்ள வாசல் வழியாக நுழையச் செய்யுங்கள். மேலும் அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் கூட்டாக நுழைவார்கள்’ என்று கூறப்படும்.”

பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, சொர்க்கத்தின் வாசல்களின் இரு கதவுகளுக்குப் இடைப்பட்ட தூரமானது, மக்காவிற்கும் ஹிம்யருக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றது; அல்லது மக்காவிற்கும் புஸ்ராவிற்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றது.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6565ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا عَلَى رَبِّنَا حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا‏.‏ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ أَنْتَ الَّذِي خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ، وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ، وَأَمَرَ الْمَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ، فَاشْفَعْ لَنَا عِنْدَ رَبِّنَا‏.‏ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ خَطِيئَتَهُ وَيَقُولُ ـ ائْتُوا نُوحًا أَوَّلَ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ‏.‏ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ خَطِيئَتَهُ ـ ائْتُوا إِبْرَاهِيمَ الَّذِي اتَّخَذَهُ اللَّهُ خَلِيلاً‏.‏ فَيَأْتُونَهُ، فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ خَطِيئَتَهُ ـ ائْتُوا مُوسَى الَّذِي كَلَّمَهُ اللَّهُ فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، فَيَذْكُرُ خَطِيئَتَهُ ـ ائْتُوا عِيسَى فَيَأْتُونَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ، ائْتُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم فَقَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ فَيَأْتُونِي فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي، فَإِذَا رَأَيْتُهُ وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ، ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ، سَلْ تُعْطَهْ، وَقُلْ يُسْمَعْ، وَاشْفَعْ تُشَفَّعْ‏.‏ فَأَرْفَعُ رَأْسِي، فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِي، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا، ثُمَّ أُخْرِجُهُمْ مِنَ النَّارِ، وَأُدْخِلُهُمُ الْجَنَّةَ، ثُمَّ أَعُودُ فَأَقَعُ سَاجِدًا مِثْلَهُ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ حَتَّى مَا بَقِيَ فِي النَّارِ إِلاَّ مَنْ حَبَسَهُ الْقُرْآنُ ‏ ‏‏.‏ وَكَانَ قَتَادَةُ يَقُولُ عِنْدَ هَذَا أَىْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் அல்லாஹ் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். அப்போது அவர்கள், 'நம்முடைய இந்த இடத்திலிருந்து (இந்த நீண்ட காத்திருப்பிலிருந்து) நமக்கு ஓய்வளிப்பதற்காக நம் இறைவனிடம் நமக்காகப் பரிந்துரை செய்யும்படி (யாரையேனும்) கேட்போம்' என்று கூறுவார்கள்.

பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் தான் அல்லாஹ் தன் கரங்களால் படைத்தவர்; தன் ரூஹிலிருந்து உங்களில் ஊதினான்; மேலும் வானவர்களுக்குக் கட்டளையிட்டு அவர்கள் உங்களுக்கு ஸஜ்தா செய்தார்கள்; ஆகவே, எங்களுக்காக நம் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்' என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், 'நான் இதற்குத் தகுதியானவன் அல்லன்' என்று கூறி, தம் பாவத்தை நினைவுகூர்ந்து, 'அல்லாஹ் அனுப்பிய முதல் தூதரான நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவர்கள் அவரிடம் செல்வார்கள். அவர், 'நான் இதற்குத் தகுதியானவன் அல்லன்' என்று கூறி, தம் பாவத்தை நினைவுகூர்ந்து, 'அல்லாஹ் கலீலாக (நெருங்கிய நண்பராக) எடுத்துக்கொண்ட இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவர்கள் அவரிடம் செல்வார்கள். அவர், 'நான் இதற்குத் தகுதியானவன் அல்லன்,' என்று கூறி, தம் பாவத்தை நினைவுகூர்ந்து, 'அல்லாஹ் (நேரடியாகப்) பேசிய மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர், 'நான் இதற்குத் தகுதியானவன் அல்லன்,' என்று கூறி, தம் பாவத்தை நினைவுகூர்ந்து, 'ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவர்கள் ஈஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர், 'நான் இதற்குத் தகுதியானவன் அல்லன்; முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்; ஏனெனில் அல்லாஹ் அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான்' என்று கூறுவார்கள்.

அவர்கள் என்னிடம் வருவார்கள். நான் என் இறைவனிடம் (பரிந்துரைக்க) அனுமதி கேட்பேன். அவனை நான் காணும்போது, (அவனுக்கு) சஜ்தாவில் விழுவேன். அல்லாஹ் நாடிய காலம் வரை அவன் என்னை (அந்த நிலையில்) விட்டுவிடுவான். பிறகு, '(முஹம்மதே!) உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள், உங்களுக்கு வழங்கப்படும்; சொல்லுங்கள், செவியேற்கப்படும்; பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்' என்று சொல்லப்படும்.

பிறகு நான் என் தலையை உயர்த்தி, என் இறைவன் எனக்குக் கற்பிக்கும் புகழ்மொழிகளைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அல்லாஹ் எனக்கு ஒரு வரம்பை நிர்ணயிப்பான். நான் அவர்களை (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றி சொர்க்கத்தில் நுழையச் செய்வேன். பிறகு நான் (மீண்டும்) வந்து, முன்போலவே சஜ்தாவில் விழுவேன். (இவ்வாறு) மூன்றாவது அல்லது நான்காவது முறையாகவும் செய்வேன். இறுதியில் குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர (நரக) நெருப்பில் யாரும் மீதமிருக்க மாட்டார்கள்."

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா (ரஹ்) அவர்கள், '(குர்ஆன் தடுத்துவிட்டவர்கள் என்பதற்கு) யார் மீது (நரகத்தில்) நித்தியம் விதிக்கப்பட்டதோ அவர்கள் (அதாவது நிராகரிப்பாளர்கள்) (என்று பொருள்)' எனக் கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
7410ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ يَجْمَعُ اللَّهُ الْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ كَذَلِكَ فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا إِلَى رَبِّنَا حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا‏.‏ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ يَا آدَمُ أَمَا تَرَى النَّاسَ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَأَسْجَدَ لَكَ مَلاَئِكَتَهُ وَعَلَّمَكَ أَسْمَاءَ كُلِّ شَىْءٍ، شَفِّعْ لَنَا إِلَى رَبِّنَا حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا‏.‏ فَيَقُولُ لَسْتُ هُنَاكَ ـ وَيَذْكُرُ لَهُمْ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ ـ وَلَكِنِ ائْتُوا نُوحًا، فَإِنَّهُ أَوَّلُ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ إِلَى أَهْلِ الأَرْضِ‏.‏ فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ ـ وَلَكِنِ ائْتُوا إِبْرَاهِيمَ خَلِيلَ الرَّحْمَنِ‏.‏ فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ لَهُمْ خَطَايَاهُ الَّتِي أَصَابَهَا ـ وَلَكِنِ ائْتُوا مُوسَى عَبْدًا أَتَاهُ اللَّهُ التَّوْرَاةَ وَكَلَّمَهُ تَكْلِيمًا ـ فَيَأْتُونَ مُوسَى فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ـ وَيَذْكُرُ لَهُمْ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ ـ وَلَكِنِ ائْتُوا عِيسَى عَبْدَ اللَّهِ وَرَسُولَهُ وَكَلِمَتَهُ وَرُوحَهُ‏.‏ فَيَأْتُونَ عِيسَى فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ وَلَكِنِ ائْتُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم عَبْدًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ‏.‏ فَيَأْتُونِي فَأَنْطَلِقُ فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي فَيُؤْذَنُ لِي عَلَيْهِ، فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ لَهُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ أَنْ يَدَعَنِي ثُمَّ يُقَالُ لِي ارْفَعْ مُحَمَّدُ، وَقُلْ يُسْمَعْ، وَسَلْ تُعْطَهْ، وَاشْفَعْ تُشَفَّعْ‏.‏ فَأَحْمَدُ رَبِّي بِمَحَامِدَ عَلَّمَنِيهَا، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمُ الْجَنَّةَ، ثُمَّ أَرْجِعُ فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ أَنْ يَدَعَنِي ثُمَّ يُقَالُ ارْفَعْ مُحَمَّدُ، وَقُلْ يُسْمَعْ، وَسَلْ تُعْطَهْ، وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَحْمَدُ رَبِّي بِمَحَامِدَ عَلَّمَنِيهَا رَبِّي ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمُ الْجَنَّةَ، ثُمَّ أَرْجِعُ فَإِذَا رَأَيْتُ رَبِّي وَقَعْتُ سَاجِدًا، فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ أَنْ يَدَعَنِي ثُمَّ يُقَالُ ارْفَعْ مُحَمَّدُ، قُلْ يُسْمَعْ، وَسَلْ تُعْطَهْ، وَاشْفَعْ تُشَفَّعْ، فَأَحْمَدُ رَبِّي بِمَحَامِدَ عَلَّمَنِيهَا، ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُدْخِلُهُمُ الْجَنَّةَ، ثُمَّ أَرْجِعُ فَأَقُولُ يَا رَبِّ مَا بَقِيَ فِي النَّارِ إِلاَّ مَنْ حَبَسَهُ الْقُرْآنُ وَوَجَبَ عَلَيْهِ الْخُلُودُ ‏"‏‏.‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ شَعِيرَةً، ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ بُرَّةً، ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ‏.‏ وَكَانَ فِي قَلْبِهِ مَا يَزِنُ مِنَ الْخَيْرِ ذَرَّةً ‏"‏‏.‏
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒன்று திரட்டுவான் (ஒரு குறிப்பிட்ட இடத்தில்). அப்போது அவர்கள், '(நமது சிரமத்தைப் போக்க) நம் இறைவனிடம் நமக்காகப் பரிந்துரைக்கக் கோரி, (அதன் மூலம்) இந்த இடத்திலிருந்து அவன் நம்மை விடுவித்தால் (நன்றாக இருக்குமே!)' என்று கூறுவார்கள்.

பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, 'ஆதமே! (துயரத்தில் இருக்கும்) மக்களை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் தன் கரம் கொண்டு உங்களைப் படைத்தான்; தன் வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; எல்லாப் பொருட்களின் பெயர்களையும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்தான். எனவே, எங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; அவன் எங்களை இந்த இடத்திலிருந்து விடுவிக்கட்டும்' என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை), 'நான் அந்த நிலையில் இல்லை' என்று கூறி, தாம் செய்த பிழையை அவர்களிடம் நினைவுகூர்வார்கள். மேலும், 'நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், பூமியில் உள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய முதல் தூதர் அவரே' என்று கூறுவார்கள்.

அவர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர், 'நான் அந்த நிலையில் இல்லை' என்று கூறி, தாம் செய்த பிழையை நினைவுகூர்வார். மேலும், 'நீங்கள் 'கலீலுர் ரஹ்மான்' (அளவற்ற அருளாளனின் உற்ற தோழர்) ஆகிய இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்.

அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர், 'நான் அந்த நிலையில் இல்லை' என்று கூறி, தாம் செய்த பிழைகளை அவர்களிடம் நினைவுகூர்வார். மேலும், 'நீங்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவர் ஓர் அடியார்; அவருக்கு அல்லாஹ் 'தவ்ராத்' வேதத்தை வழங்கினான்; அவருடன் நேரிடையாகப் பேசினான்' என்று கூறுவார்.

அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர், 'நான் அந்த நிலையில் இல்லை' என்று கூறி, தாம் செய்த பிழையை அவர்களிடம் நினைவுகூர்வார். மேலும், 'நீங்கள் ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள். அவர் அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதரும், அவனது வார்த்தையும், அவனது ஆன்மாவும் ஆவார்' என்று கூறுவார்.

அவர்கள் ஈஸா (அலை) அவர்களிடம் செல்வார்கள். அவர், 'நான் அந்த நிலையில் இல்லை. ஆனால், நீங்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். அவர் ஓர் அடியார்; அவருடைய முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான்' என்று கூறுவார்.

ஆகவே, அவர்கள் என்னிடம் வருவார்கள். நான் (சென்று) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். எனக்கு அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது அவனுக்குச் சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பிறகு, 'முஹம்மதே! தலையை உயர்த்தும்! பேசும்; செவியேற்கப்படும். கேளும்; வழங்கப்படும். பரிந்துரைப்பீராக; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழுரைகளைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு பரிந்துரைப்பேன். அப்போது (யாரை நான் சொர்க்கத்தில் சேர்க்கலாம் என்பது குறித்து) எனக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன்.

பிறகு நான் திரும்புவேன். என் இறைவனை நான் காணும்போது சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பிறகு, 'முஹம்மதே! தலையை உயர்த்தும்! பேசும்; செவியேற்கப்படும். கேளும்; வழங்கப்படும். பரிந்துரைப்பீராக; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழுரைகளைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு பரிந்துரைப்பேன். அப்போது எனக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன்.

பிறகு நான் திரும்புவேன். என் இறைவனை நான் காணும்போது சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பிறகு, 'முஹம்மதே! தலையை உயர்த்தும்! பேசும்; செவியேற்கப்படும். கேளும்; வழங்கப்படும். பரிந்துரைப்பீராக; உமது பரிந்துரை ஏற்கப்படும்' என்று கூறப்படும். அப்போது நான் என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழுரைகளைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு பரிந்துரைப்பேன். அப்போது எனக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அவர்களை நான் சொர்க்கத்தில் சேர்ப்பேன்.

பிறகு நான் திரும்பி வந்து, 'என் இறைவா! குர்ஆன் (நரகத்தில் இருக்குமாறு) தடுத்து நிறுத்தியவர்களையும், (நரகத்தில்) நிரந்தரமாக இருப்பது விதியாக்கப்பட்டவர்களையும் தவிர நரகத்தில் வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூறுவேன்."

நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்: "யார் 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லி, அவர் உள்ளத்தில் ஒரு வாற்கோதுமை அளவு நன்மை இருந்ததோ அவர் நரகத்திலிருந்து வெளியேறுவார். பிறகு, யார் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லி, அவர் உள்ளத்தில் ஒரு கோதுமை அளவு நன்மை இருந்ததோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறுவார். பிறகு, யார் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லி, அவர் உள்ளத்தில் ஓர் அணு அளவு நன்மை இருந்ததோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறுவார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
193 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ - وَاللَّفْظُ لأَبِي كَامِلٍ - قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَهْتَمُّونَ لِذَلِكَ - وَقَالَ ابْنُ عُبَيْدٍ فَيُلْهَمُونَ لِذَلِكَ - فَيَقُولُونَ لَوِ اسْتَشْفَعْنَا عَلَى رَبِّنَا حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا - قَالَ - فَيَأْتُونَ آدَمَ صلى الله عليه وسلم فَيَقُولُونَ أَنْتَ آدَمُ أَبُو الْخَلْقِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ اشْفَعْ لَنَا عِنْدَ رَبِّكَ حَتَّى يُرِيحَنَا مِنْ مَكَانِنَا هَذَا ‏.‏ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ - فَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا - وَلَكِنِ ائْتُوا نُوحًا أَوَّلَ رَسُولٍ بَعَثَهُ اللَّهُ - قَالَ - فَيَأْتُونَ نُوحًا صلى الله عليه وسلم فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ - فَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا - وَلَكِنِ ائْتُوا إِبْرَاهِيمَ صلى الله عليه وسلم الَّذِي اتَّخَذَهُ اللَّهُ خَلِيلاً ‏.‏ فَيَأْتُونَ إِبْرَاهِيمَ صلى الله عليه وسلم فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ - وَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا - وَلَكِنِ ائْتُوا مُوسَى صلى الله عليه وسلم الَّذِي كَلَّمَهُ اللَّهُ وَأَعْطَاهُ التَّوْرَاةَ ‏.‏ قَالَ فَيَأْتُونَ مُوسَى - عَلَيْهِ السَّلاَمُ - فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ - وَيَذْكُرُ خَطِيئَتَهُ الَّتِي أَصَابَ فَيَسْتَحْيِي رَبَّهُ مِنْهَا - وَلَكِنِ ائْتُوا عِيسَى رُوحَ اللَّهِ وَكَلِمَتَهُ ‏.‏ فَيَأْتُونَ عِيسَى رُوحَ اللَّهِ وَكَلِمَتَهُ فَيَقُولُ لَسْتُ هُنَاكُمْ ‏.‏ وَلَكِنِ ائْتُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم عَبْدًا قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ ‏"‏ ‏.‏ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَيَأْتُونِي فَأَسْتَأْذِنُ عَلَى رَبِّي فَيُؤْذَنُ لِي فَإِذَا أَنَا رَأَيْتُهُ وَقَعْتُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ فَيُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ قُلْ تُسْمَعْ سَلْ تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ ‏.‏ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ رَبِّي ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُخْرِجُهُمْ مِنَ النَّارِ وَأُدْخِلُهُمُ الْجَنَّةَ ثُمَّ أَعُودُ فَأَقَعُ سَاجِدًا فَيَدَعُنِي مَا شَاءَ اللَّهُ أَنْ يَدَعَنِي ثُمَّ يُقَالُ ارْفَعْ رَأْسَكَ يَا مُحَمَّدُ قُلْ تُسْمَعْ سَلْ تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ ‏.‏ فَأَرْفَعُ رَأْسِي فَأَحْمَدُ رَبِّي بِتَحْمِيدٍ يُعَلِّمُنِيهِ ثُمَّ أَشْفَعُ فَيَحُدُّ لِي حَدًّا فَأُخْرِجُهُمْ مِنَ النَّارِ وَأُدْخِلُهُمُ الْجَنَّةَ - قَالَ فَلاَ أَدْرِي فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ قَالَ - فَأَقُولُ يَا رَبِّ مَا بَقِيَ فِي النَّارِ إِلاَّ مَنْ حَبَسَهُ الْقُرْآنُ أَىْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ ‏"‏ ‏.‏ - قَالَ ابْنُ عُبَيْدٍ فِي رِوَايَتِهِ قَالَ قَتَادَةُ أَىْ وَجَبَ عَلَيْهِ الْخُلُودُ ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று திரட்டுவான். அப்போது அவர்கள் (அந்நாளின் பயங்கரமான நிலைகண்டு) கவலை கொள்வார்கள்.” - (அறிவிப்பாளர்) இப்னு உபைது (ரஹ்) அவர்கள் (தம் அறிவிப்பில்), “அவர்களுக்கு (பரிந்துரை தேட வேண்டும் என்ற) உள்ளுணர்வு ஊட்டப்படும்” என்று கூறினார்கள். - “பிறகு மக்கள், ‘நாம் நமது இறைவனிடம் பரிந்துரை (ஷஃபாஅத்) தேடினால், நம்முடைய இந்த (நீண்ட காத்திருப்பு மற்றும் துன்ப) நிலையிலிருந்து அவன் நம்மை விடுவிப்பானே!’ என்று (தங்களுக்குள் பேசிக்கொண்டு) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள்.

‘நீங்கள்தான் ஆதம்; மனிதகுலத்தின் தந்தை. அல்லாஹ் தன் கரத்தால் உங்களைப் படைத்தான்; தன் ரூஹிலிருந்து உங்களுக்குள் ஊதினான்; வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான். ஆகவே, எங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; அவன் எங்களை இந்த இடத்திலிருந்து விடுவிக்கட்டும்!’ என்று கூறுவார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘நான் அந்த நிலையில் இல்லை (அந்தப் பொறுப்புக்கு நான் தகுதியானவன் அல்ல)’ என்று கூறி, தாம் செய்த பாவத்தை (அதாவது, மரத்திலிருந்து உண்டதை) நினைவுகூர்ந்து, அதற்காகத் தம் இறைவனிடம் வெட்கப்படுவார்கள். மேலும், ‘நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்; அல்லாஹ் அனுப்பி வைத்த முதல் தூதர் அவரே’ என்று கூறுவார்கள்.

அவ்வாறே அவர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரும், ‘நான் அந்த நிலையில் இல்லை (அந்தப் பொறுப்புக்கு நான் தகுதியானவன் அல்ல)’ என்று கூறி, தாம் செய்த பாவத்தை (அதாவது, தன் சமூகத்தினர் அழிந்துபோகும்படி பிரார்த்தித்ததை) நினைவுகூர்ந்து, அதற்காகத் தம் இறைவனிடம் வெட்கப்படுவார்கள். மேலும், ‘நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்; அல்லாஹ் அவரைத்தான் தன் உற்ற நண்பராக (கலீல்) ஆக்கிக்கொண்டான்’ என்று கூறுவார்கள்.

அவ்வாறே அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரும், ‘நான் அந்த நிலையில் இல்லை (அந்தப் பொறுப்புக்கு நான் தகுதியானவன் அல்ல)’ என்று கூறி, தாம் செய்த பாவத்தை (அதாவது, மூன்று முறை உண்மைக்கு மாறாகப் பேசியதை) நினைவுகூர்ந்து, அதற்காகத் தம் இறைவனிடம் வெட்கப்படுவார்கள். மேலும், ‘நீங்கள் மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்; அல்லாஹ் அவரிடம் நேரடியாகப் பேசினான்; அவருக்குத் தவ்ராத் வேதத்தையும் வழங்கினான்’ என்று கூறுவார்கள்.

அவ்வாறே அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரும், ‘நான் அந்த நிலையில் இல்லை (அந்தப் பொறுப்புக்கு நான் தகுதியானவன் அல்ல)’ என்று கூறி, தாம் செய்த பாவத்தை (அதாவது, ஒருவரைக் கொன்றதை) நினைவுகூர்ந்து, அதற்காகத் தம் இறைவனிடம் வெட்கப்படுவார்கள். மேலும், ‘நீங்கள் ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்; அவர் அல்லாஹ்வின் ரூஹாகவும் அவனது வார்த்தையாகவும் இருக்கின்றார்’ என்று கூறுவார்கள்.

அவ்வாறே அவர்கள் ஈஸா (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரும், ‘நான் அந்த நிலையில் இல்லை (அந்தப் பொறுப்புக்கு நான் தகுதியானவன் அல்ல). ஆனால், நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்; முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியார் அவரே’ என்று கூறுவார்கள்.”

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்:
“ஆகவே, அவர்கள் என்னிடம் வருவார்கள். நான் என் இறைவனிடம் (பரிந்துரைக்க) அனுமதி கோருவேன். எனக்கு அனுமதி வழங்கப்படும். அவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பிறகு, ‘முஹம்மதே! தலையை உயர்த்தும்! பேசும்; செவியேற்கப்படும்! கேளும்; வழங்கப்படும்! பரிந்துரை செய்யும்; ஏற்கப்படும்!’ என்று சொல்லப்படும்.

அப்போது நான் என் தலையை உயர்த்தி, என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போது (நான் யாரை நரகத்திலிருந்து மீட்கலாம் என்பதற்கு) எனக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அதன்படி அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றிச் சொர்க்கத்தில் நுழைவிப்பேன்.

பிறகு நான் (மீண்டும்) திரும்பி வந்து சஜ்தாவில் விழுவேன். அல்லாஹ் நாடிய வரை அவன் என்னை (அப்படியே) விட்டுவிடுவான். பிறகு, ‘முஹம்மதே! தலையை உயர்த்தும்! பேசும்; செவியேற்கப்படும்! கேளும்; வழங்கப்படும்! பரிந்துரை செய்யும்; ஏற்கப்படும்!’ என்று சொல்லப்படும்.

அப்போது நான் என் தலையை உயர்த்தி, என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழைக் கொண்டு அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போது எனக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அதன்படி அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றிச் சொர்க்கத்தில் நுழைவிப்பேன்.”

(அறிவிப்பாளர் கூறினார்): நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையா அல்லது நான்காவது முறையா என்று எனக்கு நினைவில்லை; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(இறுதியில்) நான், ‘என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர, அதாவது யாருக்கு (நரகில்) நிரந்தரமாகத் தங்குவது விதியாக்கப்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர வேறு யாரும் நரகில் மிஞ்சவில்லை’ என்று கூறுவேன்.”

(அறிவிப்பாளர் இப்னு உபைது (ரஹ்) அவர்கள் தம் அறிவிப்பில், “குர்ஆன் தடுத்துவிட்டவர்கள் என்பதற்கு, ‘நிரந்தரமாகத் தங்குவது யார் மீது கடமையாகிவிட்டதோ அவர்கள்’ என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.)
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
194 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، - وَاتَّفَقَا فِي سِيَاقِ الْحَدِيثِ إِلاَّ مَا يَزِيدُ أَحَدُهُمَا مِنَ الْحَرْفِ بَعْدَ الْحَرْفِ - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا أَبُو حَيَّانَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً فَقَالَ ‏ ‏ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ وَهَلْ تَدْرُونَ بِمَ ذَاكَ يَجْمَعُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ فَيُسْمِعُهُمُ الدَّاعِي وَيَنْفُذُهُمُ الْبَصَرُ وَتَدْنُو الشَّمْسُ فَيَبْلُغُ النَّاسَ مِنَ الْغَمِّ وَالْكَرْبِ مَا لاَ يُطِيقُونَ وَمَا لاَ يَحْتَمِلُونَ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ أَلاَ تَرَوْنَ مَا أَنْتُمْ فِيهِ أَلاَ تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلاَ تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ ائْتُوا آدَمَ ‏.‏ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ يَا آدَمُ أَنْتَ أَبُو الْبَشَرِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ آدَمُ إِنَّ رَبِّي غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ نَهَانِي عَنِ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى نُوحٍ ‏.‏ فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُونَ يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى الأَرْضِ وَسَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ قَدْ كَانَتْ لِي دَعْوَةٌ دَعَوْتُ بِهَا عَلَى قَوْمِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى إِبْرَاهِيمَ صلى الله عليه وسلم ‏.‏ فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُونَ أَنْتَ نَبِيُّ اللَّهِ وَخَلِيلُهُ مِنْ أَهْلِ الأَرْضِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ إِبْرَاهِيمُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلاَ يَغْضَبُ بَعْدَهُ مِثْلَهُ ‏.‏ وَذَكَرَ كَذَبَاتِهِ نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُوسَى ‏.‏ فَيَأْتُونَ مُوسَى صلى الله عليه وسلم فَيَقُولُونَ يَا مُوسَى أَنْتَ رَسُولُ اللَّهِ فَضَّلَكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِتَكْلِيمِهِ عَلَى النَّاسِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ مُوسَى صلى الله عليه وسلم إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنِّي قَتَلْتُ نَفْسًا لَمْ أُومَرْ بِقَتْلِهَا نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى عِيسَى صلى الله عليه وسلم ‏.‏ فَيَأْتُونَ عِيسَى فَيَقُولُونَ يَا عِيسَى أَنْتَ رَسُولُ اللَّهِ وَكَلَّمْتَ النَّاسَ فِي الْمَهْدِ وَكَلِمَةٌ مِنْهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَاشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ عِيسَى صلى الله عليه وسلم إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ - وَلَمْ يَذْكُرْ لَهُ ذَنْبًا - نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم فَيَأْتُونِّي فَيَقُولُونَ يَا مُحَمَّدُ أَنْتَ رَسُولُ اللَّهِ وَخَاتَمُ الأَنْبِيَاءِ وَغَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى مَا قَدْ بَلَغَنَا فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَىَّ وَيُلْهِمُنِي مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ لأَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهْ اشْفَعْ تُشَفَّعْ ‏.‏ فَأَرْفَعُ رَأْسِي فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي أُمَّتِي ‏.‏ فَيُقَالُ يَا مُحَمَّدُ أَدْخِلِ الْجَنَّةَ مِنْ أُمَّتِكَ مَنْ لاَ حِسَابَ عَلَيْهِ مِنَ الْبَابِ الأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الأَبْوَابِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ لَكَمَا بَيْنَ مَكَّةَ وَهَجَرٍ أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப்பட்டது. அதில் (அவர்களுக்குப் பிடித்தமான) முன்னங்கால் பகுதி அவர்களுக்கு எடுத்துக்கொடுக்கப்பட்டது. அவர்கள் அதை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதியைத் தமது பற்களால் கடித்துவிட்டு, பிறகு கூறினார்கள்:

"மறுமை நாளில் நானே மனிதகுலத்தின் தலைவராவேன். அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? மறுமை நாளில் அல்லாஹ், முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே மைதானத்தில் ஒன்று திரட்டுவான். அப்போது அழைப்பவரின் குரல் அவர்கள் அனைவருக்கும் கேட்கும்; பார்வை அவர்கள் அனைவரையும் ஊடுருவிச் செல்லும்; சூரியன் (அவர்களுக்கு) மிக அருகில் வரும்.

அப்போது மக்கள் தங்களால் தாங்க முடியாத, சுமக்க முடியாத அளவுக்குத் துயரத்தையும் வேதனையையும் அடைவார்கள். அப்போது மக்கள் ஒருவருக்கொருவர், 'நீங்கள் இருக்கும் நிலையைப் பார்க்கவில்லையா? உங்களுக்கு நேர்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? உங்கள் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்துரை செய்பவரை நீங்கள் தேடமாட்டீர்களா?' என்று பேசிக்கொள்வார்கள்.

சிலர் சிலரிடம், 'ஆதம் அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, 'ஆதமே! நீங்கள் மனிதகுலத்தின் தந்தை; அல்லாஹ் உங்களைத் தன் கரத்தால் படைத்தான்; தன் உயிரில் இருந்து உங்களுக்குள் ஊதினான்; வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; எனவே உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கூறுவார்கள்.

அதற்கு ஆதம் (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான். மரத்தை நெருங்க வேண்டாமென அவன் என்னைத் தடுத்தான். நானோ அவனுக்கு மாறு செய்தேன். எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்! நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் வருவார்கள். 'நூஹ் அவர்களே! பூமியில் உள்ளவர்களுக்கு (ஆதமுக்குப் பின்) அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள் முதலாவதாவீர். அல்லாஹ் உங்களை 'நன்றியுள்ள அடியார்' (அப்துன் ஷகூரா) என்று அழைத்துள்ளான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு நூஹ் (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான். (உலகில் வாழ்ந்தபோது) என் சமுதாயத்திற்கு எதிராக நான் ஒரு பிரார்த்தனை (சாபம்) செய்துவிட்டேன். எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்! நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வருவார்கள். 'நீங்களே அல்லாஹ்வின் நபியும், பூமியில் உள்ளவர்களில் அவனது உற்ற நண்பரும் (கலீல்) ஆவீர். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு இப்ராஹீம் (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்' என்று கூறிவிட்டு, தாம் (மார்க்கத்திற்காகச்) சொன்ன பொய்களைக் குறிப்பிடுவார்கள். பிறகு, 'எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்! நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; மூஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் வருவார்கள். 'மூஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ் தனது தூதுத்துவங்களை வழங்கியும், (உங்களுடன்) பேசியதன் மூலமும் மக்கள் அனைவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு மூஸா (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான். நான் ஒரு உயிரைக் கொன்றுவிட்டேன்; (அவரைக் கொல்லும்படி) எனக்குக் கட்டளையிடப்பட்டிருக்கவில்லை. எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்! நீங்கள் ஈஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவர்கள் ஈஸா (அலை) அவர்களிடம் வருவார்கள். 'ஈஸாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; தொட்டிலில் இருக்கும்போதே மக்களிடம் பேசியவர்; மர்யம் அவர்களிடம் அவன் போட்ட அவனது வார்த்தையும், அவனிடமிருந்து வந்த ஓர் உயிரும் (ரூஹ்) ஆவீர். எனவே உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு ஈஸா (அலை), 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான். இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்' என்று கூறுவார்கள். (ஆனால்) அவர் (தமது) பாவம் எதையும் குறிப்பிடமாட்டார்கள். 'எனக்கு என் கவலையே போதும்! எனக்கு என் கவலையே போதும்! நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவர்கள் என்னிடம் வருவார்கள். 'முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; இறைத்தூதர்களில் இறுதி முத்திரை; அல்லாஹ் உங்களது முந்திய, பிந்திய பாவங்களை மன்னித்துவிட்டான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அப்போது நான் (இறைவனிடம்) செல்வேன். அர்ஷுக்கு (சிம்மாசனத்திற்கு) கீழே வந்து, என் இறைவனுக்குச் சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன். பிறகு அல்லாஹ், எனக்கு முன் வேறு யாருக்கும் அறிவித்திராத அவனது புகழுரைகளையும், அவனைப் போற்றும் அழகிய வார்த்தைகளையும் எனக்கு (வஹீயாக) அறிவித்து உணர்த்துவான். பிறகு, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள், தரப்படும்; பரிந்துரை செய்யுங்கள், ஏற்கப்படும்' என்று சொல்லப்படும்.

அப்போது நான் என் தலையை உயர்த்தி, 'என் இறைவா! என் சமுதாயமே! என் சமுதாயமே! (உம்மத்தீ! உம்மத்தீ!)' என்று சொல்வேன்.

அப்போது, 'முஹம்மதே! உங்கள் சமுதாயத்தில் விசாரணை இல்லாதவர்களைச் சொர்க்கத்தின் வாசல்களில் வலது வாசல் வழியாக நுழையச் செய்யுங்கள்! மற்ற வாசல்களிலும் அவர்கள் மக்களோடு கூட்டாக நுழைவார்கள்' என்று சொல்லப்படும்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தின் இரு கதவு நிலைகளுக்கு இடைப்பட்ட தூரமானது, மக்காவுக்கும் ஹஜருக்கும், அல்லது மக்காவுக்கும் புஸ்ராவுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றதாகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2434ஜாமிஉத் திர்மிதீ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ فَأَكَلَهُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً ثُمَّ قَالَ ‏ ‏ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ هَلْ تَدْرُونَ لِمَ ذَاكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ فَيُسْمِعُهُمُ الدَّاعِي وَيَنْفُذُهُمُ الْبَصَرُ وَتَدْنُو الشَّمْسُ مِنْهُمْ فَيَبْلُغُ النَّاسُ مِنَ الْغَمِّ وَالْكَرْبِ مَا لاَ يُطِيقُونَ وَلاَ يَحْتَمِلُونَ فَيَقُولُ النَّاسُ بَعْضُهُمْ لِبَعْضٍ أَلاَ تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلاَ تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ النَّاسُ بَعْضُهُمْ لِبَعْضٍ عَلَيْكُمْ بِآدَمَ ‏.‏ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ أَنْتَ أَبُو الْبَشَرِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلاَئِكَةَ فَسَجَدُوا لَكَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ آدَمُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ قَدْ نَهَانِي عَنِ الشَّجَرَةِ فَعَصَيْتُ نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى نُوحٍ ‏.‏ فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُونَ يَا نُوحُ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الأَرْضِ وَقَدْ سَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ أَلاَ تَرَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ لَهُمْ نُوحٌ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ قَدْ كَانَ لِي دَعْوَةٌ دَعَوْتُهَا عَلَى قَوْمِي نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى إِبْرَاهِيمَ ‏.‏ فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُونَ يَا إِبْرَاهِيمُ أَنْتَ نَبِيُّ اللَّهِ وَخَلِيلُهُ مِنْ أَهْلِ الأَرْضِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنِّي قَدْ كَذَبْتُ ثَلاَثَ كَذَبَاتٍ فَذَكَرَهُنَّ أَبُو حَيَّانَ فِي الْحَدِيثِ نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُوسَى ‏.‏ فَيَأْتُونَ مُوسَى فَيَقُولُونَ يَا مُوسَى أَنْتَ رَسُولُ اللَّهِ فَضَّلَكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلاَمِهِ عَلَى الْبَشَرِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنِّي قَدْ قَتَلْتُ نَفْسًا لَمْ أُومَرْ بِقَتْلِهَا نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى عِيسَى ‏.‏ فَيَأْتُونَ عِيسَى فَيَقُولُونَ يَا عِيسَى أَنْتَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ وَكَلَّمْتَ النَّاسَ فِي الْمَهْدِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ عِيسَى إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ ذَنْبًا نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُحَمَّدٍ ‏.‏ قَالَ فَيَأْتُونَ مُحَمَّدًا فَيَقُولُونَ يَا مُحَمَّدُ أَنْتَ رَسُولُ اللَّهِ وَخَاتَمُ الأَنْبِيَاءِ وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلاَ تَرَى مَا نَحْنُ فِيهِ فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَخِرُّ سَاجِدًا لِرَبِّي ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَىَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهُ وَاشْفَعْ تُشَفَّعْ ‏.‏ فَأَرْفَعُ رَأْسِي فَأَقُولُ يَا رَبِّ أُمَّتِي يَا رَبِّ أُمَّتِي يَا رَبِّ أُمَّتِي ‏.‏ فَيَقُولُ يَا مُحَمَّدُ أَدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لاَ حِسَابَ عَلَيْهِ مِنَ الْبَابِ الأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الأَبْوَابِ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ كَمَا بَيْنَ مَكَّةَ وَهَجَرَ وَكَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى ‏ ‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَأَنَسٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي سَعِيدٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَأَبُو حَيَّانَ التَّيْمِيُّ اسْمُهُ يَحْيَى بْنُ سَعِيدِ بْنِ حَيَّانَ كُوفِيٌّ وَهُوَ ثِقَةٌ وَأَبُو زُرْعَةَ بْنُ عَمْرِو بْنِ جَرِيرٍ اسْمُهُ هَرِمٌ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

(ஒரு முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (சமைக்கப்பட்ட) இறைச்சி கொண்டுவரப்பட்டது. ஆட்டின் முன்னங்கால் அவர்களுக்கு எடுத்துக்கொடுக்கப்பட்டது. அது அவர்களுக்குப் விருப்பமானதாக இருந்தது. அதிலிருந்து அவர்கள் ஒரு கதுப்பு கடித்தார்கள்.

பிறகு கூறினார்கள்:
"மறுமை நாளில் நானே மக்களின் தலைவராக இருப்பேன். அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? அல்லாஹ், முன்னோரையும் பின்னோரையும் (அனைவரையும்) ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அழைப்பவர் (அழைத்தால்) அனைவருக்கும் கேட்கும். பார்ப்பவரின் பார்வை அனைவரையும் ஊடுருவும். சூரியன் அவர்களை மிக நெருங்கிவிடும்.

அப்போது மக்களுக்குத் தாங்கமுடியாத, சகிக்கமுடியாத கவலையும் துன்பமும் ஏற்படும். மக்கள் (தங்களுக்குள்), 'உங்களுக்கு நேர்ந்திருப்பதை, நீங்கள் அடைந்திருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? உங்கள் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்துரை செய்யக்கூடிய ஒருவரை நீங்கள் தேடக்கூடாதா?' என்று பேசிக்கொள்வார்கள்.

சிலர் சிலரிடம், 'நீங்கள் ஆதம் அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். அவர்கள் ஆதம் அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனிதகுலத்தின் தந்தை; அல்லாஹ் உங்களைத் தன் கரத்தால் படைத்தான்; தன் (வசமுள்ள) உயிர்ப்பிலிருந்து (ரூஹிலிருந்து) உங்களுக்குள் ஊதினான்; வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; நாங்கள் இருக்கும் நிலையை, எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு ஆதம், 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் இதுபோன்று அவன் கோபப்பட்டதில்லை; இதற்குப் பிறகும் இதுபோன்று அவன் கோபப்படப்போவதில்லை. அந்த மரத்தை நெருங்க வேண்டாமென என்னைத் தடுத்தான்; நானோ மாறுசெய்தேன். எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! (நஃப்ஸீ! நஃப்ஸீ! நஃப்ஸீ!) நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; நூஹ்விடம் செல்லுங்கள்' என்று கூறுவார்.

அவர்கள் நூஹ்விடம் சென்று, 'நூஹ் அவர்களே! பூமியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்களே முதலானவர்; அல்லாஹ் உங்களை 'நன்றியுள்ள அடியார்' (அப்தன் ஷகூரா) என்று பெயரிட்டு அழைத்தான்; உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு நூஹ், 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் இதுபோன்று அவன் கோபப்பட்டதில்லை; இதற்குப் பிறகும் இதுபோன்று அவன் கோபப்படப்போவதில்லை. (உலகில்) நான் கேட்பதற்கென ஒரு பிரார்த்தனை இருந்தது; அதை என் சமுதாயத்திற்கு எதிராக நான் பயன்படுத்திவிட்டேன். எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; இப்ராஹீமிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்.

அவர்கள் இப்ராஹீமிடம் வந்து, 'இப்ராஹீம் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் நபியும், பூமியில் உள்ளவர்களில் அவனது உற்ற நண்பரும் (கலீல்) ஆவீர். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் இதுபோன்று அவன் கோபப்பட்டதில்லை; இதற்குப் பிறகும் இதுபோன்று அவன் கோபப்படப்போவதில்லை. நான் மூன்று பொய்கள் சொல்லியிருக்கிறேன்' என்று கூறி அவற்றை நினைவு கூருவார் - (அறிவிப்பாளர் அபூ ஹய்யான் அந்த மூன்று விஷயங்களையும் ஹதீஸில் குறிப்பிடுகிறார்) - 'எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; மூஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்.

அவர்கள் மூஸாவிடம் வந்து, 'மூஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; அல்லாஹ் தனது தூதுவத்தாலும், (உங்களுடன்) பேசியதாலும் மனிதர்களில் உங்களைச் சிறப்பித்தான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் இதுபோன்று அவன் கோபப்பட்டதில்லை; இதற்குப் பிறகும் இதுபோன்று அவன் கோபப்படப்போவதில்லை. நான் ஒரு உயிரைக் கொன்றுவிட்டேன்; ஆனால் அதைக் கொல்லும்படி எனக்குக் கட்டளையிடப்படவில்லை. எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; ஈஸாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்.

அவர்கள் ஈஸாவிடம் வந்து, 'ஈஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; மர்யமிடம் அவன் போட்ட அவனது வார்த்தை (கலிமா); அவனிடமிருந்து வந்த ஓர் உயிர் (ரூஹ்); தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசியவர் நீங்கள். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அதற்கு ஈஸா அவர்கள், 'என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் இதுபோன்று அவன் கோபப்பட்டதில்லை; இதற்குப் பிறகும் இதுபோன்று அவன் கோபப்படப்போவதில்லை' என்று கூறுவார் - அவர் (தம்) பாவம் எதையும் குறிப்பிடவில்லை - 'எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! எனக்கு என்ன நேருமோ! நீங்கள் வேறொருவரிடம் செல்லுங்கள்; முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்."

(நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்தார்கள்):
"அவர்கள் முஹம்மத் ஆகிய என்னிடம் வருவார்கள். 'முஹம்மத் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; நபிமார்களின் முத்திரை (இறுதித் தூதர்); உங்களுடைய முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான். உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்; நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்பார்கள்.

அப்போது நான் (இறைவனிடம்) செல்வேன்; அர்ஷுக்குக் கீழே வந்து, என் இறைவனுக்குச் சிரம் பணிந்து (ஸஜ்தாவில்) விழுவேன். பிறகு அல்லாஹ், எனக்கு முன் யாருக்கும் அறிவித்துத் தராத அவனது புகழாங்களையும், அழகான துதிகளையும் எனக்கு அறிவித்துத் தருவான்.

பிறகு, 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; கேளுங்கள், வழங்கப்படும்; பரிந்துரை செய்யுங்கள், ஏற்கப்படும்' என்று சொல்லப்படும்.

நான் என் தலையை உயர்த்தி, 'என் இறைவா! என் உம்மத் (சமுதாயம்)! என் இறைவா! என் உம்மத்! என் இறைவா! என் உம்மத்!' என்று கூறுவேன்.

அதற்கு அவன், 'முஹம்மதே! உங்கள் உம்மத்தில் விசாரணை இல்லாதவர்களைச் சொர்க்கத்தின் வாசல்களில் வலதுபுறம் உள்ள வாசல் வழியாக நுழையச் செய்யுங்கள்; மற்ற வாசல்களிலும் அவர்கள் மக்களுடன் கூட்டுச் சேர்வார்கள்' என்று கூறுவான்."

பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தின் வாசல் நிலைகள் இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம், மக்காவுக்கும் ஹஜருக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றது; அல்லது மக்காவுக்கும் புஸ்ராவுக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றது."

(இந்த ஹதீஸ் அபூ பக்ர் அஸ்-ஸித்தீக், அனஸ், உக்பா இப்னு ஆமிர் மற்றும் அபூ ஸயீத் ஆகியோரிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூ ஈஸா (திர்மிதி) கூறுகிறார்கள்: இது ஹஸன் ஸஹீஹ் ஆன ஹதீஸ். அபூ ஹய்யான் அத்தய்மீயின் பெயர் யஹ்யா இப்னு ஸயீத் இப்னு ஹய்யான், அவர் கூஃபாவைச் சேர்ந்தவர், நம்பகமானவர். அபூ ஸுர்ஆ இப்னு அம்ரு இப்னு ஜரீரின் பெயர் ஹரிம்.)
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
1866ரியாதுஸ் ஸாலிஹீன்
وعنه قال‏:‏ كنا مع رسول الله صلى الله عليه وسلم في دعوة، فرفع إليه الذراع، وكانت تعجبه، فنهس منها نهسة وقال‏:‏ أنا سيد الناس يوم القيامة، هل تدرون مم ذاك‏؟‏ يجمع الله الأولين والآخرين في صعيد واحد، فيبصرهم الناظر، ويسمعهم الداعي، وتدنوا منهم الشمس، فيبلغ الناس من الغم والكرب ما لا يطيقون ولا يحتملون ، فيقول الناس‏:‏ ألا ترون إلى ما أنتم فيه إلى ما بلغكم، ألا تنظرون من يشفع لكم إلى ربكم‏؟‏ فيقول بعض الناس لبعض‏:‏ أبوكم آدم، ويأتونه فيقولون‏:‏ يا آدم أنت أبو البشر، خلقك الله بيده، ونفخ فيك من روحه، وأمر الملائكة، فسجدوا لك وأسكنك الجنة، ألا تشفع لنا إلى ربك‏؟‏ ألا ترى ما نحن فيه، وما بلغنا‏؟‏ فقال‏:‏ إن ربي غضب غضباً لم يغضب قبله مثله، ولا يغضب بعده مثله، وإنه نهاني عن الشجرة، فعصيت، نفسي نفسي نفسي، اذهبوا إلى غيري، إذهبوا إلى نوح، فيأتون نوحا فيقولون‏:‏ يا نوح ، أنت أول الرسل إلى أهل الأرض، وقد سماك الله عبداً شكوراً، ألا ترى ما نحن فيه، ألا ترى ما بلغنا ألا تشفع لنا إلى ربك‏؟‏ فيقول‏:‏ إن ربي غضب اليوم غضباً لم يغضب قبله مثله، ولن يغضب بعده مثله، وإنه قد كانت لي دعوة دعوت بها على قومي، نفسي نفسي نفسي، اذهبوا إلى غيري، اذهبوا إلى إبراهيم فيأتون إبراهيم فيقولون‏:‏ يا إبراهيم أنت نبي الله وخليله من أهل الأرض اشفع لنا إلى ربك، ألا ترى ما نحن فيه‏؟‏ فيقول لهم‏:‏ إن ربي غضب اليوم غضباً لم يغضب قبله مثله، ولن يغضب بعده مثله، وإني كنت كذبت ثلاث كذبات، نفسي نفسي نفسي، اذهبوا إلى غيري، اذهبوا إلى موسى، فيأتون موسى، فيقولون‏:‏ يا موسى أنت رسول الله فضلك الله برسالاته وبكلامه على الناس، اشفع لنا إلى ربك ألا ترى ما نحن فيه‏؟‏ فيقول‏:‏ إن ربي قد غضب اليوم غضباً لم يغضب قبله مثله، ولن يغضب بعده مثله، وإني قد قتلت نفساً لم أومر بقتلها، نفسي نفسي نفسي، اذهبوا إلى غيري، اذهبوا إلى عيسى، فيأتون عيسى، فيقولون‏:‏ يا عيسى أنت رسول الله وكلمته ألقاها إلى مريم وروح منه ، وكلمت الناس في المهد ‎، اشفع لنا إلى ربك، ألا ترى ما نحن فيه‏؟‏ فيقول عيسى‏:‏ إن ربي غضب اليوم غضباً لم يغضب قبله مثله، ولن يغضب بعده مثله ولم يذكر ذنباً، نفسي نفسي نفسي، اذهبوا إلى غيري، اذهبوا إلى محمد صلى الله عليه وسلم ‏"‏‏.‏ وفي رواية‏:‏ ‏"‏فيأتوني فيقولون‏:‏ يا محمد أنت رسول الله وخاتم الأنبياء، وقد غفر لك ما تقدم من ذنبك وما تأخر، اشفع لنا إلى ربك، ألا ترى ما نحن فيه‏؟‏ فأنطلق، فأتي تحت العرش، فأقع ساجداً لربي، ثم يفتح الله علي من محامده، وحسن الثناء عليه شيئاً لم يفتح على أحد قبلي ثم يقال‏:‏ يا محمد ارفع رأسك، سل تعطه، واشفع تشفع، فأرفع رأسي، فأقول أمتي يارب، أمتي يا رب، فيقال‏:‏ يا محمد أدخل من أمتك من لا حساب عليهم من الباب الأيمن من أبواب الجنة وهم شركاء الناس فيما سوى ذلك من الأبواب‏"‏ ثم قال‏:‏‏"‏ والذي نفسي بيده إن ما بين المصراعين من مصاريع الجنة كما بين مكة وهجر، أو كما بين مكة وبصرى‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது அவர்களுக்கு (ஆட்டின்) முன்னங்கால் துண்டு எடுத்துத் தரப்பட்டது. அது அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது. அவர்கள் அதிலிருந்து ஒரு முறை கடித்தார்கள். பிறகு கூறினார்கள்:

“மறுமை நாளில் மனித குலத்தின் தலைவன் நான் ஆவேன். அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? (அன்று) அல்லாஹ், முன்னோர்களையும் பின்னவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அப்போது பார்ப்பவரின் பார்வை அவர்கள் அனைவரையும் எட்டும்; அழைப்பவரின் குரல் அவர்கள் அனைவருக்கும் கேட்கும். சூரியன் அவர்களுக்கு மிக அருகில் வரும்.

மக்களால் தாங்கவோ சகிக்கவோ முடியாத அளவு கவலையும் துயரமும் அவர்களை வந்தடையும். அப்போது மக்கள், “நீங்கள் இருக்கும் நிலையை, உங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? உங்கள் இறைவனிடம் உங்களுக்காகப் பரிந்துரை செய்யக்கூடிய ஒருவரை நீங்கள் தேடமாட்டீர்களா?” என்று (தங்களுக்குள்) பேசிக்கொள்வார்கள்.

மக்கள் சிலர் சிலரிடம், “உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, “ஆதமே! நீங்கள் மனித குலத்தின் தந்தை ஆவீர்கள். அல்லாஹ் தன் கரத்தால் உங்களைப் படைத்தான்; தன் ரூஹிலிருந்து உங்களுக்குள் ஊதினான்; வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியச் செய்தான்; உங்களைச் சொர்க்கத்தில் தங்கவைத்தான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை, எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், “என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான். அந்த மரத்தை நெருங்க வேண்டாமென அவன் எனக்குத் தடுத்தான்; நான் மாறுசெய்தேன். எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! நீங்கள் வேறு யாரிடமாவது செல்லுங்கள்; நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.

அவர்கள் நூஹ் (அலை) அவர்களிடம் வந்து, “நூஹ் அவர்களே! பூமியில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நீங்கள் முதலானவர். அல்லாஹ் உங்களை ‘நன்றியுள்ள அடியார்’ (அப்தன் ஷகூரா) என்று பெயரிட்டுள்ளான். நாங்கள் இருக்கும் நிலையை, எங்களுக்கு நேர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், “என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான். என் சமுதாயத்திற்கு எதிராக நான் செய்த பிரார்த்தனை (சாபம்) ஒன்று உண்டு. எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! நீங்கள் வேறு யாரிடமாவது செல்லுங்கள்; இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.

அவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வந்து, “இப்ராஹீம் அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதரும், பூமியில் உள்ளவர்களிலேயே அவனது உற்ற தோழரும் (கலீல்) ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், “என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்” என்று கூறிவிட்டு, தாம் சொன்ன மூன்று பொய்களைக் குறிப்பிடுவார். (அவை, ஸாரா (அலை) அவர்களைத் தன் சகோதரி என்று கூறியது, நட்சத்திரங்களைச் சுட்டிக்காட்டி நான் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறியது, சிலைகளை உடைத்தவர் பெரிய சிலைதான் என்று கூறியது போன்றவையாகும்.) (பிறகு), “எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! நீங்கள் வேறு யாரிடமாவது செல்லுங்கள்; மூஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.

அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் வந்து, “மூஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். அல்லாஹ் தனது தூதுத்துவத்தாலும், தனது உரையாடலாலும் மனிதர்களில் உங்களைச் சிறப்பித்துள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

அதற்கு அவர், “என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான். கொல்லும்படி எனக்குக் கட்டளையிடப்படாத ஒரு உயிரை நான் கொன்றுவிட்டேன். (அது ஃபிர்அவ்னின் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கப்தி மனிதரைக் கொன்ற நிகழ்வு.) எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! நீங்கள் வேறு யாரிடமாவது செல்லுங்கள்; ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.

அவர்கள் ஈஸா (அலை) அவர்களிடம் வந்து, “ஈஸா அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதரும், மர்யமிடம் அவன் போட்ட அவனது வார்த்தையும், அவனிடமிருந்து உருவான ஓர் ஆன்மாவும் ஆவீர்கள். தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசியிருக்கிறீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள்.

ஈஸா (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று கடும் கோபத்தில் இருக்கிறான்; இதற்கு முன் அவன் இதுபோன்று கோபப்பட்டதில்லை; இனிமேலும் இதுபோன்று கோபப்படமாட்டான்” என்று கூறுவார்கள். (தன்னுடைய பாவம் எதையும் அவர் குறிப்பிடவில்லை.) “எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! எனக்கு என் கவலை! நீங்கள் வேறு யாரிடமாவது செல்லுங்கள்; முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்.

(மற்றொரு அறிவிப்பில்: அவர்கள் என்னிடம் வந்து, “முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதரும், நபிமார்களில் இறுதியானவரும் ஆவீர்கள். உங்களின் முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் இருக்கும் நிலையை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்பார்கள்.)

அப்போது நான் சென்று அர்ஷுக்குக் கீழே என் இறைவனுக்குச் சஜிதா செய்வேன். அப்போது அல்லாஹ், எனக்கு முன் யாருக்கும் அறிவிக்காத அவனது புகழையும், அவனைப் போற்றும் அழகிய வார்த்தைகளையும் எனக்கு அறிவித்துக் கொடுப்பான்.

பிறகு, “முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்; கேளுங்கள், வழங்கப்படும்; பரிந்துரை செய்யுங்கள், ஏற்கப்படும்” என்று கூறப்படும். நான் என் தலையை உயர்த்தி, “என் இறைவனே! என் உம்மத்தினர்! என் இறைவனே! என் உம்மத்தினர்!” என்று கூறுவேன்.

அப்போது, “முஹம்மதே! உங்கள் உம்மத்தினரில் கேள்வி கணக்கு இல்லாதவர்களை சொர்க்கத்தின் வாசல்களில் வலது வாசல் வழியாக நுழையச் செய்வீராக! மற்ற வாசல்களிலும் அவர்கள் மக்களோடு கூட்டாக நுழைவார்கள்” என்று சொல்லப்படும்.”

பிறகு நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! சொர்க்கத்தின் இரு கதவு நிலைகளுக்கு இடைப்பட்ட தூரம், மக்காவுக்கும் ‘ஹஜர்’ நகருக்கும் அல்லது மக்காவுக்கும் ‘புஸ்ரா’ நகருக்கும் இடைப்பட்ட தூரத்தைப் போன்றதாகும்” என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)