حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ مَا مِنْ بَنِي آدَمَ مَوْلُودٌ إِلاَّ يَمَسُّهُ الشَّيْطَانُ حِينَ يُولَدُ، فَيَسْتَهِلُّ صَارِخًا مِنْ مَسِّ الشَّيْطَانِ، غَيْرَ مَرْيَمَ وَابْنِهَا . ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ {وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ }.
ஸயீத் பின் அல்-முஸய்யப் அறிவித்தார்கள்:
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: 'ஆதமுடைய சந்ததிகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும், அது பிறக்கும்பொழுது ஷைத்தான் தீண்டுகிறான். அதனால், ஷைத்தானின் தீண்டுதலால் குழந்தை பிறக்கும் நேரத்தில் உரக்க அழுகிறது; மர்யம் அவர்களையும் அவர்களுடைய குழந்தையையும் தவிர.'"
பிறகு அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், "இன்னும் நான் அவர்களுக்காகவும் அவர்களுடைய சந்ததிக்காகவும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" (3:36) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
மர்யமின் மகனையும் (ஈஸா (அலை) அவர்களையும்) அன்னாரது தாயாரையும் (மர்யம் (அலை) அவர்களையும்) தவிர, எந்தக் குழந்தையும் பிறக்கும்போது ஷைத்தானால் குத்தப்படாமல் இருப்பதில்லை. ஷைத்தானின் அந்தக் குத்தலினாலேயே அது அழத் தொடங்குகிறது.
பிறகு அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் விரும்பினால், "அவளுக்காகவும் அவளுடைய சந்ததிக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து நான் உன்னிடம் (அல்லாஹ்வே) பாதுகாப்புத் தேடுகிறேன்" (3:36) என்ற (திருக்குர்ஆன்) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.