அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மறுமை நாளில் (உருவத்தில்) பெரிய, பருமனான ஒரு மனிதர் வருவார். அல்லாஹ்விடம் அவர் ஒரு கொசுவின் இறக்கை அளவுக்குக் கூட எடை இருக்கமாட்டார் (அதாவது, எந்த மதிப்பும் இருக்காது). நீங்கள் (விரும்பினால்), 'ஃபலா னுகீமு லஹும் யவ்மல் கியாமாத்தி வஸ்னா' (மறுமை நாளில் அவர்களுக்கு நாம் எந்த எடையையும் ஏற்படுத்தமாட்டோம்) (திருக்குர்ஆன் 18:105) என்று ஓதிக்கொள்ளுங்கள்."