இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3209ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ مَا كُنَّا نَدْعُو زَيْدَ بْنَ حَارِثَةَ إِلاَّ زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ ‏:‏ ‏(‏ ادعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ ‏)‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

"நாங்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரழி) அவர்களை 'ஸைத் பின் முஹம்மத் (ஸல்)' என்றே அழைத்து வந்தோம்; ‘அவர்களை அவர்களுடைய தந்தையர் (பெயர்களுடன் சேர்த்தே) அழையுங்கள்; அதுவே அல்லாஹ்விடம் மிகவும் நீதியானது. (33:5)’ என்று குர்ஆன் வஹீ (இறைச்செய்தி)யாக அருளப்படும் வரை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)