حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. {يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ} قَالَ يَقُومُ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் "{யவ்ம யகூமுன் னாஸு லிரப்பில் ஆலமீன்}" (அகிலங்களின் இறைவன் முன்னிலையில் மனிதர்கள் நிற்கும் நாள்) (எனும் இறைவசனம் குறித்துக்) கூறினார்கள்:
"அவர்களில் ஒருவர், தமது காதுகளின் பாதி வரை தமது வியர்வையில் நிற்பார்."
இப்னு உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"{யவ்ம யகூமுன் நாஸு லிரப்பில் ஆலமீன்} (அகிலங்களின் இறைவனுக்காக மக்கள் நிற்கும் நாளில்)" அவர்களில் ஒருவர் தமது காதுகளின் பாதிவரை வியர்வையில் மூழ்கி நிற்பார்.
இப்னுல் முஸன்னா அவர்களின் அறிவிப்பில் "யகூமுன் நாஸு" (மக்கள் நிற்பார்கள்) என்று வந்துள்ளது; "யவ்ம" (நாளில்) என்பது குறிப்பிடப்படவில்லை.