حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ سَمِعْتُ شُعْبَةَ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} ". قَالَ وَسَمَّانِي قَالَ " نَعَمْ " فَبَكَى.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "அல்லாஹ் உங்களுக்கு 'நிராகரிப்பவர்கள் (ஸூரத்துல் பய்யினா 98)' என்பதை ஓதிக் காட்டுமாறு எனக்கு கட்டளையிட்டுள்ளான்" என்று கூறினார்கள். உபை (ரழி) அவர்கள், "அவன் (அல்லாஹ்) என் பெயரைக் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் உபை (ரழி) அவர்கள் அழ ஆரம்பித்தார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأُبَىٍّ. " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} ". قَالَ وَسَمَّانِي قَالَ " نَعَمْ ". فَبَكَى.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உபையி (பின் கஅப்) (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: "அல்லாஹ் உங்களுக்கு ஓதிக்காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்:-- ‘வேதக்காரர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள நிராகரிப்பவர்கள் (தங்கள் வழியை விட்டு) விலகுபவர்களாக இருக்கவில்லை.’ (சூரா 98)" உபையி (ரழி) அவர்கள், "அல்லாஹ் என் பெயரைக் குறிப்பிட்டுக் கூறினானா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். அதைக் கேட்டு, உபையி (ரழி) அவர்கள் அழுதார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், 'நிச்சயமாக மேலானவனும் புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ், நான் உங்களுக்கு குர்ஆனை ஓதிக் காண்பிக்குமாறு எனக்கு கட்டளையிட்டான்' என்று கூறினார்கள். அதைக் கேட்ட உபை (ரழி) அவர்கள், 'அல்லாஹ் என் பெயரை உங்களிடம் குறிப்பிட்டானா?' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உன் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்' என்று கூறினார்கள். அதன்பேரில் உபை (ரழி) அவர்கள் (மகிழ்ச்சியால்) கண்ணீர் சிந்தத் தொடங்கினார்கள்.