அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நரகவாசிகளில் இறுதியாக அதிலிருந்து வெளியேறுபவரை நான் அறிவேன். ஒரு மனிதர் அதிலிருந்து தவழ்ந்தபடி வெளியே வருவார். அவரிடம், 'சென்று சொர்க்கத்தில் நுழைவீராக' என்று கூறப்படும். (அப்போது) அவர் சொர்க்கத்தில் நுழைவதற்காக அங்கு செல்வார். ஆனால், (அங்குள்ள) இடங்களை ஏற்கெனவே மற்றவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதைக் காண்பார். அவரிடம், 'நீர் (நரகத்தில்) இருந்த காலத்தை உமக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்கப்படும். அவர் 'ஆம்' என்று கூறுவார். அவரிடம், 'விரும்பியதைக் கேளும்' என்று கூறப்படும். அவரும் தன் விருப்பத்தைக் கேட்பார். அவரிடம், 'நீர் விரும்பியது உமக்கு உண்டு; மேலும் இவ்வுலகத்தைப் போல் பத்து மடங்கு (வளங்களும்) உமக்கு உண்டு' என்று கூறப்படும். (அதற்கு) அவர் (இறைவனிடம்), 'நீ அரசனாக இருந்துகொண்டு என்னைப் பரிகாசம் செய்கின்றாயா?' என்று கேட்பார்." (இதைச் சொன்னபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்ததை நான் பார்த்தேன்.