ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவும் தமது படுக்கைக்குச் செல்லும் போது, தம் இரு உள்ளங்கைகளையும் இணைத்து அவற்றில் (லேசாக) ஊதுவார்கள். பிறகு அவற்றில் 'குல் ஹுவல்லாஹு அஹத்', 'குல் அஊது பிரப்பில் ஃபலக்' மற்றும் 'குல் அஊது பிரப்பின் னாஸ்' ஆகியவற்றை ஓதுவார்கள். பிறகு அவ்விரண்டாலும் தம் உடலிலிருந்து இயன்ற வரை தடவுவார்கள். தம் தலை, முகம் மற்றும் தம் உடலின் முன்பகுதியிலிருந்து ஆரம்பிப்பார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.