அபூ கத்தாதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருக்கும்போது இரவில் ஓய்வெடுக்கத் தங்கினால், அவர்கள் தமது வலது பக்கத்தில் படுத்துக் கொள்வார்கள்; மேலும், விடியலுக்கு முன் (ஓய்வுக்காக) தங்கினால், அவர்கள் தமது முன்கையை ஊன்றி, தமது உள்ளங்கையின் மீது தமது தலையை வைத்துக் கொள்வார்கள்."