மேற்கண்ட ஹதீஸ் அஃமஷ் (ரஹ்) வழித்தடத்தில் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: முதலில் என் தந்தை இதனை எனக்கு அபான் பின் தஃக்லிப் வழியாகவும், அவர் அஃமஷ் வழியாகவும் அறிவித்தார். பின்னர் நான் இதனை அஃமஷ் அவர்களிடமிருந்தே நேரடியாகச் செவியுற்றேன்.
அஃமஷ் (ரஹ்) அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாகவே (முன்னர் குறிப்பிடப்பட்ட அறிவிப்பாளர்கள்) அனைவரும் (முந்தைய ஹதீஸின் கருத்தைப்) போன்றே அறிவித்துள்ளனர். மிஞ்சாப் (ரஹ்) அவர்கள் இப்னு முஸ்ஹிர் வழியாகத் தமது அறிவிப்பில், ‘‘அஃமஷ் (ரஹ்) அவர்கள், அம்ரு பின் முர்ரா வழியாக ஷகீக் அவர்களிடமிருந்தும், அவர் அப்துல்லாஹ் (ரழி) அவர்களிடமிருந்தும் (முந்தைய ஹதீஸின் கருத்தைப்) போன்றே எனக்கு அறிவித்தார்’’ என்று கூடுதலாகக் குறிப்பிட்டுள்ளார்.