இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

681ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ لَمْ يَخْرُجِ النَّبِيُّ صلى الله عليه وسلم ثَلاَثًا، فَأُقِيمَتِ الصَّلاَةُ، فَذَهَبَ أَبُو بَكْرٍ يَتَقَدَّمُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحِجَابِ فَرَفَعَهُ، فَلَمَّا وَضَحَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا نَظَرْنَا مَنْظَرًا كَانَ أَعْجَبَ إِلَيْنَا مِنْ وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ وَضَحَ لَنَا، فَأَوْمَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ إِلَى أَبِي بَكْرٍ أَنْ يَتَقَدَّمَ، وَأَرْخَى النَّبِيُّ صلى الله عليه وسلم الْحِجَابَ، فَلَمْ يُقْدَرْ عَلَيْهِ حَتَّى مَاتَ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மூன்று (நாட்களாக) வெளியே வரவில்லை. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அபூபக்கர் (ரழி) அவர்கள் (இமாமத் செய்ய) முன்னே சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் திரையைத் தொட்டு அதை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் வெளிப்பட்டபோது, எங்களுக்குத் தென்பட்ட நபி (ஸல்) அவர்களின் முகத்தை விட அதிக மகிழ்ச்சியூட்டும் ஒரு காட்சியை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களை முன்னே செல்லுமாறு தம் கையால் சைகை செய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரையைத் தொங்கவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை (மீண்டும்) அவர்களைப் பார்க்க முடியவில்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح