حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ ذَكَرَ قَوْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ أَيَمَسُّ طِيبًا أَوْ دُهْنًا إِنْ كَانَ عِنْدَ أَهْلِهِ فَقَالَ لاَ أَعْلَمُهُ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், வெள்ளிக்கிழமை குளிப்பது தொடர்பாக நபி (ஸல்) அவர்களின் கூற்றைக் குறிப்பிட்டார்கள். அப்போது (அவர்களிடம் மாணவர் தாவூஸ் ஆகிய) நான், “(வெள்ளிக்கிழமை குளிப்பவர்) தம் குடும்பத்தாரிடம் நறுமணமோ அல்லது எண்ணெயோ இருந்தால் அதனைப் பூசிக் கொள்ள வேண்டுமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், “அது எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.