حَدَّثَنِي حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، وَعَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَقْبَلَتْ عِيرٌ يَوْمَ الْجُمُعَةِ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَثَارَ النَّاسُ إِلاَّ اثْنَا عَشَرَ رَجُلاً فَأَنْزَلَ اللَّهُ {وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا}
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு வெள்ளிக்கிழமையன்று, நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆ தொழுகையின் போது) இருந்தோம். அப்போது ஒரு வியாபாரக் கூட்டம் (மதீனாவிற்குள்) வந்தது. பன்னிரண்டு நபர்களைத் தவிர, மக்கள் அனைவரும் (நபியவர்களை விட்டுவிட்டு) அதனை நோக்கி விரைந்து சென்றுவிட்டனர். அப்போது அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்:
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையன்று நின்ற நிலையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது ஷாமிலிருந்து ஒரு வியாபாரக் குழு வந்தது. மக்கள் அதை நோக்கிச் சென்றுவிட்டனர். பன்னிரண்டு ஆண்களைத் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை. அப்போது ஜுமுஆ (அத்தியாயத்தில்) உள்ள, "அவர்கள் ஒரு வியாபாரத்தையோ அல்லது ஒரு வேடிக்கையையோ கண்டால், அதை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள்; உங்களை நின்ற நிலையில் விட்டுவிடுகிறார்கள்" எனும் இந்த வசனம் அருளப்பட்டது.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆவில்) இருந்தோம். அப்போது ஒரு வணிகக் கூட்டம் (மதீனாவிற்குள்) வந்தது. மக்கள் அதை நோக்கிச் சென்றுவிட்டனர். பன்னிரண்டு ஆண்களைத் தவிர வேறு யாரும் எஞ்சியிருக்கவில்லை. அவர்களில் நானும் ஒருவன். அப்போது அல்லாஹ், "(நபியே!) அவர்கள் வியாபாரத்தையோ அல்லது ஒரு கேளிக்கையையோ கண்டால், அதன்பால் சென்றுவிட்டு, உம்மை நின்ற நிலையில் விட்டுவிடுகின்றனர்" என்று தொடங்கும் (62:11 ஆவது) வசனத்தை இறுதி வரை அருளினான்.