இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
கபீஸா (ரழி) அவர்களின் தந்தை துவைப் (ரழி) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அறிவித்தார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், துவைபின் பொறுப்பில் குர்பானி ஒட்டகங்களை அனுப்பி வைப்பார்கள்; மேலும் கூறுவார்கள்:
"இவற்றில் ஏதேனும் ஒன்று (வழியில்) பலவீனமடைந்து, அது இறந்துவிடும் என்று நீங்கள் அஞ்சினால், அப்போது அதை அறுத்துவிடுங்கள். பிறகு அதன் செருப்பை அதன் இரத்தத்தில் தோய்த்து அதன் விலாப்புறத்தில் (அடித்து) அடையாளமிடுங்கள். ஆனால் நீங்களோ அல்லது உங்கள் பயணத் தோழர்களில் எவருமோ அதை உண்ணக்கூடாது."
துஐப் அல்-குஸாஈ (ரழி) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் (துஐப் அல்-குஸாஈ அவர்களுடன் மக்காவிற்கு) பலியிடுவதற்கான ஒட்டகங்களை அனுப்புவார்கள்; பின்னர் கூறுவார்கள்:
“அவற்றில் ஏதேனும் ஒன்று பாதிக்கப்பட்டு, அது இறந்துவிடும் என்று நீங்கள் அஞ்சினால், அதை அறுத்து, (பலிப்பிராணி என்பதற்கான அடையாளமாக அதன் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த) அதன் செருப்பை அதன் இரத்தத்தில் தோய்த்து அதன் விலாப்புறத்தில் அடியுங்கள். நீங்களோ அல்லது உங்களது பயணத் தோழர்களில் எவருமோ அதிலிருந்து எதையும் உண்ண வேண்டாம்.”