அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கால்நடை மந்தையைக் காக்கும் நாய் அல்லது வேட்டை நாயைத் தவிர வேறு எந்த நாயையும் வளர்ப்பவரின் (நற்)செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் (அளவு) குறைக்கப்படும்."
அப்துல்லாஹ் (பின் உமர் - ரலி) அவர்கள் கூறினார்கள்: "அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'அல்லது விவசாயத்திற்கான நாய்' என்றும் கூறினார்கள்."