அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் (தலைமைக்குக்) கட்டுப்படுவதிலிருந்து வெளியேறி, ஜமாஅத்திலிருந்து (முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மையிலிருந்து) பிரிந்து மரணிக்கிறாரோ, அவர் ஜாஹிலிய்யா (அறியாமைக்கால) மரணத்தை அடைந்துவிட்டார். யார் என் உம்மத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அவர்களில் நல்லவர், தீயவர் (என்ற பாகுபாடின்றி அனைவரையும்) தாக்கி, இறைநம்பிக்கையாளர்களைக் (கொல்வதைத்) தவிர்க்காமலும், ஒப்பந்தம் செய்தவர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றாமலும் இருக்கிறாரோ, அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர். யார் தெளிவற்ற ஒரு கொடியின் கீழ் போரிட்டு, குலப்பெருமைக்காக (மக்களை) அழைத்து, அல்லது குலப்பெருமைக்காகக் கோபம் கொண்டு, (அந்த நிலையில்) கொல்லப்படுகிறாரோ, அது ஜாஹிலிய்யா (காலக்) கொலையாகும்."