ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரியின் மகன் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடம்) கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (உர்வா, உமது தந்தை ஸுபைர், உமது தாய்வழிப் பாட்டனார் அபூபக்ர் ஆகிய) உமது இரு தந்தையரும் 'தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் பதிலளித்தவர்கள்' (எனும் 3:172ஆவது குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டவர்கள்) ஆவர்."
ஆயிஷா (ரழி) அவர்கள் என்னிடம் (உர்வாவிடம்) கூறினார்கள்: "உர்வாவே! உன்னுடைய இரு தந்தையரும் (உன்னுடைய தந்தை ஸுபைர் (ரழி) மற்றும் தாய்வழித் தாத்தா அபூபக்ர் (ரழி)), (உஹத் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்களின் அழைப்பிற்கு) செவிசாய்த்தவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள். (அவர்கள்) அபூபக்ர் (ரழி) அவர்களும் ஸுபைர் (ரழி) அவர்களும் ஆவார்கள்."