இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6910ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ،
عُثْمَانُ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم ‏ ‏ لَيْسَ أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ مَدَحَ نَفْسَهُ وَلَيْسَ أَحَدٌ
أَغْيَرَ مِنَ اللَّهِ مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ ‏ ‏ ‏.‏
அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: புகழை அல்லாஹ்வை விட அதிகம் விரும்புபவர் எவருமில்லை; இதனால்தான் அவன் தன்னைப் புகழ்ந்து கொண்டான். அல்லாஹ்வை விட அதிக ரோஷம் (தன் கட்டளைகள் மீறப்படுவதில் கோபம்) கொண்டவர் எவருமில்லை; இதனால்தான் அருவருக்கத்தக்க செயல்களை (விபச்சாரம் போன்ற பாவங்களை) அவன் தடை செய்துள்ளான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح