ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனவாசிகள் அங்கே உண்பார்கள்; பருகுவார்கள். ஆனால் அவர்கள் மலம் கழிக்கமாட்டார்கள்; மூக்குச் சிந்தமாட்டார்கள்; சிறுநீர் கழிக்கமாட்டார்கள். மாறாக, அவர்களது உணவு கஸ்தூரி வாசம் கமழும் ஏப்பமாக மாறிவிடும். சுவாசம் அவர்களுக்கு உள்ளுணர்வாக அமைந்திருப்பதைப் போன்றே, தஸ்பீஹ் மற்றும் தஹ்மீத் அவர்களுக்கு உள்ளுணர்வாக ஊட்டப்படும்."