அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் கணவர்) அபூ ஸலமா (ரழி) அவர்களிடம் வந்தார்கள். (அப்போது அபூ ஸலமா மரணமடைந்திருந்தார்.) அவருடைய கண்கள் (மேலே நோக்கியபடி) நிலைகுத்தியிருந்தன. உடனே நபி (ஸல்) அவர்கள் அவற்றை மூடிவிட்டு, "நிச்சயமாக உயிர் கைப்பற்றப்படும்போது, அதைப் பின்தொடர்ந்து பார்வையும் சென்றுவிடுகிறது" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) அவருடைய குடும்பத்தார் கூச்சலிட்டு (அழத்) தொடங்கினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களுக்கு எதிராக (தீயவற்றை) வேண்டாதீர்கள்; நல்லதைத் தவிர! ஏனெனில், நிச்சயமாக வானவர்கள் நீங்கள் கூறுவதற்கு 'ஆமீன்' சொல்கிறார்கள்" என்று கூறினார்கள்.