அபூ இப்ராஹீம் அல்-அன்சாரி அவர்கள், தமது தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: ஜனாஸா தொழுகையின்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பதை (அவரது தந்தை) கேட்டார்:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகையை நடத்தினார்கள். அப்போது (பின்வருமாறு) பிரார்த்தித்தார்கள்:
'யா அல்லாஹ்! எங்களில் உயிருடன் இருப்பவர்களையும், எங்களில் மரணித்தவர்களையும், எங்களில் சிறியவர்களையும், எங்களில் பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், எங்களில் பெண்களையும், எங்களில் இங்கு இருப்பவர்களையும், (இங்கு) இல்லாதவர்களையும் நீ மன்னிப்பாயாக! யா அல்லாஹ்! எங்களில் நீ யாரை உயிர் வாழச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் (இறைநம்பிக்கையுடன்) வாழச் செய்வாயாக! மேலும் எங்களில் யாரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை இஸ்லாத்தின் மீதே மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! (இந்த மையித்தின்) நற்கூலியை எங்களுக்குத் தடுத்துவிடாதே! மேலும் (இந்த மையித்தின் மரணத்திற்குப்) பின் எங்களை வழிதவறச் செய்துவிடாதே!'